மலையாள நடிகை மமிதா பைஜூ, தமிழில் முழு கவனம் செலுத்தி வரு கிறார். இந்தாண்டு அவரது முதல் தமிழ் படமாக விஜயுடன் நடித்த 'ஜனநாயகன்' சென்சார் பிரச்னையால் தாமதமாகிறது. விரைவில் வெளியாகும் என்கின்றனர். இதற்கிடையே அவர் நடித்த 'கர' ஏப்.30ல் ரிலீசாகிறது. அவர் நாயகியாக நடித்துள்ள சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', விஷ்ணு விஷாலின் 'இரண்டு வானம்' படங்களும் ரிலீசாக உள்ளன.
தனுஷ் நடித்த 'கர' படம் ஏப்.30ல் ரிலீசாகிறது. இப்பட விழாவில் பேசிய தனுஷ், "அடுத்து ராஜ்குமார் பெரிய சாமி, மாரி செல்வராஜ், தமிழரசன் பச்சமுத்து என 3 இயக்குனர்கள் எனக்காக காத்திருக்கின்றனர். இதில் 'வட சென்னை 2' படமும் இருக்கிறது. இந்த படங்களை எல்லாம் முடித்துவிட்டு தான், புதிய படம் இயக்குவது பற்றி மீண்டும் யோசிக்க வேண்டும்" என்றார்.
இயக்குனர் ராம்குமார் பால கிருஷ்ணன் இயக்கத்தில்'பார்க்கிங்', சிம்புவின் 49வது படம், ரஜினியின் படம் ஆகியவை பேச்சுவார்த்தையில் இருந்து பின்னர் கைவிடப் பட்டது. தற்போது சிம்புவுக்கு கூறிய அதே கதையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். சாய் அபயங்கர் இசையமைக்க, மலையாள நடிகர் திலீப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மே 1ல் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால், பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள படம் 'பேட்ரி யாட்'. ரிலீசாகிறது. இதில் மோகன்லால் வேடத்தில் நடிக்க முதலில் சுரேஷ் கோபியை வைத்து தான் கதை எழுதினாராம் இயக்குனர் மகேஷ் நாராயணன். மம்முட்டியிடம் கதை சொன்னபோது அவர்தான் மோகன்லாலை பரிந்துரைத்த பிறகு, மோகன்லால் இப்படத்தில் நடித்துள்ளார்.
1993 ரிலீசான 'கல்நாயக்' படம் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்து ஹிட்டானது. சுபாஷ் கை இயக்கியிருந்தார். 33ஆண்டுக களுக்கு பிறகு தற்போது 'கல் நாயக் ரிட்டன்ஸ்' என்ற பெயரில் இதன் 2ம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. ' இப்படத்தையும் அதே இயக்குனர் இயக்க, விரைவில் படப்பிடிப்பை துவங்குகின்றனர்.
மே 2ல் புதுப் படங்கள் 8 வாரங்களுக்கு பிறகான ,ஒடிடி வெளியீடு, நடிகர்கள் வருவாய் பகிர்வு அடிப்படையில் நடிப்பது போன்றவற்றை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதற்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்தத்திற்கு ஆதரவில்லை எனத் தெரிவித்துள்ளன. அனைத்து தரப்பும் பேச்சு வார்த்தையில் ஈடுபடுமாஅல்லது எதிர்ப்பை மீறி வேலை நிறுத்தம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேட்டன் ஆர். கே இயக்க,காஜல் அகர்வால் நாயகியாக நடித் துள்ள ஹிந்தி படம் 'தி இந்தியா ஸ்டோரி'. ஷ்ரேயாஸ் தல்படே நாயகனாக நடித்துள்ளார். படத்தின் மையக்கரு 'இந்திய விவ சாயத்தில் கலக்கப்படும் விஷம்' என்பதுதான் .தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வரும் ஜூலை 24ல் படம் வெளியாகிறது. இயக்குனர் சேட்டன் இன்றைய பார்வையாளர்களுக்கு பொருத்தமான, சிறந்த திரை வெளியீடாக இப்படம் இருக்கும் என்கிறார்..
இயக்குனர் சக்திவேல் படம் பற்றி கூறியதாவது "ஒரே நாளில் நடக்கும் கிரைம் கதை. ஒரு வீட்டில் திடீரென நடக்கும் கொலை, அதில் மூன்று பேர் சந்திக்கும் பிரச்னைகளை திரில்லர் பாணியில் சொல்லும் படம் இது" என்றார். நடிகை சாக்ஷி அகர்வால் கதையின் நாயகியாக நடிக்கும் படம் 'தீயோர் கூடம்'.டேனியல் ஆனி போப், வையாபுரி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
கங்கை அமரன், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் 2வது மகன் தர்ஷன் நடித்திருக்கும் படம் பாலசந்திரன் இயக்கத்தில், 'லெனின் பாண்டியன்'. நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை ரோஜா இதில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. கிராமத்து கதையில் மணல் கொள்ளை, போலீசின் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை பின்னணியாக கொண்டு படத்தை எடுத்துள்ளனர்.
நிவின்பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் ராம் இயக்கத்தில் 'ஏழு கடல் ஏழு மலை'. படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டன. படத்தின் பிஸினஸ் முடியாததாலும், பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்றதாலும் ரிலீஸ் தள்ளிப்போனது. துபாயை சேர்ந்த நிறுவனத்தினர் ,இந்த படத்தின் உரிமையை பெற்று ,அடுத்த மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.