25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வெள்ளித்திரை

Jun 27, 2024

தென்னிந்தியர்கள் பற்றி கமென்ட் ஸ்ருதிஹாசன் கோபம்

நடிகை ஸ்ருதிஹாசன், சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடியபோது, ​​ஒரு ரசிகர் 'தென்னிந்திய பாஷையில் ஏதாவது சொல்லுங்களேன்' எனக் கேட்டார். இதற்கு ஸ்ருதி "தென்னிந்தியர், வட இந்தியர் என்று கேட்பதே ஒருவிதமான இனவாதம்தான். தென்னிந் தியர்களை பார்த்து இட்லி, தோசை, சாம்பார் என கிண்டலடிப்பது சரியல்ல. அப்படி சொன்னால் போடா என்று நான் தென்னிந்திய பாணியில் சொல்லி விடுவேன்" எனக் கூறினார். சமீபத்தில் அம்பானி மகன் திருமண விழாவில் நடிகர் ஷாருக்கான். தெலுங்கு நடிகர் ராம்சரணை, இட்லி, வடை, ' என அழைத்தது சர்ச்சையானது. சாருக்ஹானை  பார்த்து ரோட்டி, பாவ் பாஜி என்று கூப்பிடவா? அது  சரியல்ல .

Jun 27, 2024

வயதானவரை தள்ளிவிட்ட சம்பவம் : மன்னிப்பு கேட்ட நாகார்ஜுனா

“குபேரா” படத்தில் தனுஷூம், நாகார்ஜூனாவும் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்புக்கு செல்ல விமான நிலையம் இவர்கள் வந்தனர். அப்போது வயதான ரசிகர் ஒருவர் நாகார்ஜூனாவை நெருங்கிச் சென்றார். அவரை இழுத்து கீழே தள்ளினார் பவுன்சர் ஒருவர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் நாகார்ஜூனா, "இப்படி நடந் திருக்கக் கூடாது. அந்த ஜென்டில்மேனிடம்   மன்னிப்பு கேட்கிறேன். எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Jun 27, 2024

ஒரே நாளில் ராஷ்மிகாவின் இரு படங்கள் ரிலீஸ்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக 'புஷ்பா 2' படத்தில் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. ஆக., 15ல் வெளியாக இருந்த இந்த படம் டிச., 6க்கு தள்ளிப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வந்தது. இதே தேதியில் ஹிந்தியில் விக்கி கவுசல் உடன் ராஷ்மிகா நடித்து வரும் 'ஷவா' படத்தையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Jun 27, 2024

ஏஜ.. தொழில்நுட்பத்தில் பவதாரிணி குரல்'

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் 'தி கோட்'. "சின்ன சின்ன கண்கள்" என்ற இரண்டாவது பாடலை வெளியிட்டனர். இதை விஜய்யும், மறைந்த பாடகி பவதாரிணியும் பாடினர். ஏஐ தொழில்நுட்பத்தில் பவதாரிணியின் குரலை பயன் படுத்தி பாட வைத்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் வெளியிட்ட பதிவில், "இந்த பாடல் எனக்கு ஸ்பெஷலானது. இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்பாடல் உருவாக்கத்தின் போது உடல் நலம் தேறிய பின் பவதாரிணி பாடினால் நன்றாக இருக்கும் என,நானும்,  வெங்கட் பிரபுவும் எண்ணினோம். ஆனால் ஒரு மணி நேரம் கழித்து அவர்  இறந்த செய்தி வந்தது.அவரது குரலை இப்படி பயன்படுத்துவேன் என  நினைக்கவில்லை. எனது இசை குழுவிற்கும், இதை சாத்தியப்படுத்திய அனைவருக்கும் நன்றி "என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Jun 27, 2024

இன்று வெளியாகும் கல்கி 2898AD

            MOVIE                            வெளியாகும்  DATE கல்கி 2898 AD -                         27 th  ஜூன் 2024, எமகாதகன்   -                                 5 th ஜூலை 2024, இந்தியன் - 2   -                           12 th  ஜூலை 2024,  அமரன்             -                                  ஆகஸ்ட் 2024 

Jun 20, 2024

'கல்கி 2898 ஏடி' பட விழா ஐதராபாத்திற்கு மாற்றம்

தயாரிப்பாளரான அஸ்வினி தத், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பான் இந்தியா படம் கல்கி 2898 ஏடி, படத்தின் இசை வெளியீட்டு விழாவை சந்திரபாபுவின் கனவு நகரான அமராவதியில் நடத்த திட்டமிட்டார். அஸ்வினி தத். நடந்து முடிந்த ஆந்திர சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுஆட்சியைஅமைத்தது..ஆனால்அடிப்படைவசதிகள்உள்ளிட்டவற்றைகாரணம்காட்டிபிரபாஸ்அங்குவேண்டாம் ,ஐதராபாத்திலேயே நடத்துங்கள் என கூறிவிட்டார்.

Jun 20, 2024

இயக்குனர் முத்தையா படத்தில் விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக்

 கிராமத்து ஸ்டைலில் ஆக்ஷன் படமாக இயக்குனர் முத்தையா தற்போது தனது மகனை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். அடுத்து விக்ரம் பிரபு ,கவுதம் கார்த்திக் ஆகியோரை இணைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இதுவும் கிராமத்து ஸ்டைலில் ஆக்ஷன் படமாக உருவாகிறது. இவர்கள் ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் நடித்துள்ளனர். 1988-ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அக்னி நட்சத்திரம் படத்தில் விக்ரமின் தந்தை பிரபு, , கவுதமின் தந்தை கார்த்திக் ஆகியோர் எதிரும் புதிருமாக நடித்தனர். அதே போன்ற தொரு வேடத்தில் இவர்கள் நடிக்க உள்ளனர்..

Jun 20, 2024

ரீரிலீஸ் ஆகும் மணிச்சித்திரதாழ்

பி.வாசு இயக்கத்தில்  ஓராண்டு ஓடிய படம் சந்திரமுகி ,ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு உள்ளிட்டோர் நடித்து ஓடிய படத்தின் மூலக்கதையே மலையாளத்தில் வெளியான மணிச்சித்திரதாழ் தான். 1993-ல் மோகன்லால் சுரேஷ் கோபி, ஷோபனா நடித்தனர். பாசில் இயக்கினார். இந்தப்படம் ஹிட்டாக தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ரீமேக்காகி வரவேற்பை பெற்றது. இப்போது மணிச்சித்திதாழ் படத்தை 31 ஆண்டுகளுக்கு பின் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி மலையாளத்தில் ஜீலை மாதம் ரீரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

Jun 20, 2024

இயக்குனர் அட்லிக்கு நிறைய பாலிவுட் பட வாய்ப்பு

இயக்குனர் அட்லிக்கு ஷாருக்கான் நடித்த ஜவான் படம் ரூ.1000 கோடி வசூலை கடந்த பின் அட்லிக்கு நிறைய பாலிவுட் பட வாய்ப்பு வருகிறது. ஆனால் அவர் தெலுங்கில் அல்லு அர்ஜீன் நடிக்க ஒரு படத்தை இயக்க இருந்தார். இந்தப்படம் இப்போது டிராப் ஆகிவிட்டதால் அடுத்து சல்மான் கானை இயக்க தயாராகி வருகிறார். ஏற்கனவே அவரிடத்தில் ஒரு கதை சொல்லி ஒகே வாங்கிவிட்டார் அட்லி. சல்மான்கான், அட்லி புதிய கூட்டணி .

Jun 13, 2024

 சினிமாவை விட்டு விலகி குன்னூரில் குடியேற  ஆசைப்படும்  நடிகர் அமீர்கான்

பாலிவுட் திரையுலகில் உச்சநட்சத்திரமாக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடிப்பில் கடைசியாக லால் சிங் சத்தா என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆனது. கடந்த2022ம்ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பாரஸ்ட் கோம்ப் என்கிற ஹாலிவுட் படத்தை தழுவி எடுக்கப்பட்டு இருந்தது. இதில் நாக சைதன்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வி அடைந்தது.லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பின்னர் சில வருடங்கள் சினிமாவில் இருந்து ரெஸ்ட் எடுக்க முடிவெடுத்த அமீர்கான் அதன்பின் எந்த படத்திலும் நடிக்க கமிட் ஆகவில்லை. இதனிடையே அண்மையில் அவரது மகள்ஐராகானின் திருமணமும் நடைபெற்றது. அதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர்.நடிகர் அமீர்கான் கடந்த சில மாதங்களாக சென்னையில் தான் வசித்து வந்தார். அவரது தாயார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை எடுத்து வந்ததால் அவருக்காக சென்னையில் குடியேறினார் அமீர்கான். நடிகர் விஷ்ணு விஷாலின் வீட்டில் தான் சிலமாதங்கள் அமீர்கான் வசித்து வந்தார்.நடிகர் அமீர்கானுக்கு சொந்தமாக மும்பையின் பந்த்ரா பகுதியில் பலகோடி மதிப்பில் சொகுசு பங்களா இருந்தாலும் அவருக்கு குன்னூரில் சொந்த வீடுவாங்கி குடியேற வேண்டும் என்பது கனவாக இருக்கிறதாம். இதுகுறித்து கடந்த1994ம்ஆண்டு அளித்த பேட்டியில் மனம்விட்டு பேசி இருக்கிறார் அமீர்கான்.அதன்படி அவர் கூறியதாவது“நான் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டால் என்னுடைய மனைவி ரீனா தத்தா மிகவும் சந்தோஷப்படுவார். நடிப்பதை நிறுத்திவிட்டால் என்ன செய்வீர்கள் என்கிற கேள்விக்கு பதிலளித்த அமீர் கான், குடும்பத்தினருடன் குன்னூருக்கு சென்று புது வாழ்க்கையை தொடங்குவேன் என கூறிஇருக்கிறார். மேலும் அதுவாழ்ந்த சிறந்த இடம் எனகூறி உள்ள அமீர், தான்அங்கு சொந்தமாக வீடுவாங்குவது பற்றியும் யோசித்து வருகிறேன். அதுஎன் நீண்டநாள் கனவு என்றும் தெரிவித்துள்ளார். மும்பையில் கோடிகோடியாய் சொத்து வைத்திருந்தும் நடிகர் அமீர்கான் குன்னூரில் குடியேற ஆசைப்படும் தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் அமீர்கான், சினிமாவை விட்டு விலகிவிட்டு குன்னூரில் செட்டிலாக ஆசைப்படுவதாக கூறி இருக்கிறார்.

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 25 26

AD's



More News