இயக்குனர் ரவிச்சந்திரன் 'கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்தவேளை' கடைசியாக 2019ல் 'நட்பதிகாரம்' படத்தை இயக்கினார். அதன்பின் படங்கள் இயக்காமல் இருந்தவர் இப்போது இசையமைப்பாளராகி உள்ளார். "முதன் முதலாய்" என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இதில் பிரபுதேவாவின் மகன் ரிஷி நாயகனாக, கியாரா வாசுதேவன் நாயகியாக நடித்துள்ளனர். இந்த பாடலை ஜி.வி., பிரகாஷ் பாடி உள்ளார்.
சிவாஜி படத்தில ரஜினிக்கு 1 ரூபா கொடுத்து இத வெச்சு பொழச்சுக்கோ என சொல்லியிருப்பாரு.ஆன நிஜத்தில தன்னோட மனைவிக்காக ஹைதராபாத்திலுள்ள ஒட்டுமொத்த 175 ஏக்கர் நிலத்தையும் கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு எழுதி கொடுத்தவர் சுமன்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த 'அனிமல்' படம் ஆயிரம் கோடிவசூலித்தது. 2 ம் பாகத்திற்கு 'அனிமல் பார்க் என பெயர் வைத்துள்ளனர்.. ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடிப்பதால் , 'அனிமல் பார்க்' டைட்டில் வைத்துள்ளேன்". 'அனிமல் 2' படப்பிடிப்பு 2027 ஜூனில் துவங்கும் என்றார்.
குழந்தைகள் தொடர்பான கதையில் உருவாகும் ,லால் சலாம் படத்திற்கு பின் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கும் படத்திற்கு 'டெக்ஸ்லா' என பெயரிட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஆகிய மொழிகளிலும் படத்தை வெளியிட உள்ளனர். படத்தின் அறிமுக வீடியோவை மணிரத்னம், ரிஷப் ஷெட்டி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
ரோஜின் தாமஸ் இயக்கி,அனுஷ்கா அறிமுகமாகும் மலையாள படத்தில் கத்தனார். ஜெயசூர்யா, வினித், சாண்டி, உள்ளிட்ட பலர் நடிக்க, சிறப்பு வேடத்தில் மோகன்லால், பிரபுதேவா நடித்துள்ளனர்.. இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியாகிறது. அதற்கு ஏற்ப இதன் டிரைலரையும் 6 மொழிகளில் வெளியிட்டுள்ளனர். மர்மங்கள், திகில் கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ளது.
தொடர்ந்து 10 வருஷங்களாக ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்காக இன்ஸுரன்ஸ் பணத்தை கட்டீட்டு வரார் நடிகர் சூர்யா சார்..! ஒவ்வொரு நடிகருக்கும் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவாகும் இந்த இன்ஸுரன்ஸை முழுமையாக அவரே கட்டீட்டு வரதில்லாம, அவர்களது குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்புச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டு உதவி செய்துவருகிறார் என ஸ்டண்ட்மாஸ்டர் சில்வா அறிவித்துள்ளார்.
மார்ச் 19ல் ரிலீசாக திட்டமிட்டிருந்த யஷ்-ன் 'டாக் 'சிக்' படம் தள்ளிவைக்கப்பட்டதால் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தை ஒரு வாரம் முன்பே 19ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர் .பவன் கல்யாண் நடித்த, ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'உஸ் தாத் பகத்சிங்' படம் மார்ச் 26ல் ரிலீஸ் என அறிவித்திருந்தனர்.. படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத், பின்னணிக்கு தமன் இசையமைக்கின்றனர். நாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா நடித்துள்ளனர்.
ராஜ்மோகன் இயக்க, யோகி பாபு கதையின் நாயகனாக நடித்து ராஜ்மோகன் இயக்க, உள்ள படம் 'அர்ஜுனன் பேர் பத்து'. இது யோகிபாபுவின் 300வது படமாகும். இதன் டீசரை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட் டார். காமெடியிலிருந்து விலகி கொஞ்சம் சீரி யஸான கதையில் யோகிபாபு நடித்துள்ளார்.யோகிபாபுவின் சரக்கு வாக னம் திருடு போகிறது. கதையின் பின்னணி போலீஸில் புகார் அளிக்க ,அது தங்களது வண்டி என பலர் புகார் அளிக்கின்றனர்.. விவரம் தெரிந்த நாளில் இருந்தே எனக்குக் கடவுள் பக்தி அதிகம் ஷூட்டிங் இல்லை என்றால் நான் கோயிலுக்கு தான் போவேன், இது வெறும் நம்பிக்கை என்று மட்டும் அல்ல கடவுள் இருக்கிறார், நான் அவர் பின்னாடி ஓடுகிறேன், எங்கள் குடும்பமே ஆன்மீகக் குடும்பம் தான் நடிகர் யோகி பாபு.
தமிழ் படங்களின் வெளியீடு இருவாரங்களாக தேர்வுகள், தேர்தல் அறிவிப்பால் குறைந் துள்ளது. கடந்தவாரம் 'யூத்" படம் மட்டும் வெளியான நிலையில், இந்தவாரம் மார்ச் 27ல் ஜிவி பிரகாஷின் 'ஹேப்பி ராஜ் படமும், புதுமுகங்களின் 'காணாத சுடர், தி டார்க் சாத்தான்' ஆகிய 3 படங்கள் ரிலீஸாகின்றன
பிப்., 27ல் வெளியான படம் "தாய் கிழவி,சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முதன்மை வேடத்தில் நடித்த, இந்த படம் ஆரம்பம் முதலே வசூலை குவித்து 25 நாட்களில் ரூ.75 கோடி வசூலித்துள்ளது. இளம் நடிகைகள் கிளாமராக நடித்து செய்ய முடியாத வசூல் சாதனையை சீனியர் நடிகை ஒருவர், கிழவி வேடத்தில் நடித்து முத்திரை பதித்துள்ளார்.