சமீபத்தில் வெளியான 'வித் லவ்' படம் மலையாள நடிகையான அனஸ்வரா ராஜன் நடிப்பில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனால் அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகி ,மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தலா இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். இன்னும் பல பட வாய்ப்புகள் அவரைத் தேடி வருகிறதாம்.
திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத் வேத மந்திரங்களில், கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட 'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு'என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. ஆனால் அதையே தான் நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று கண்ணதாசன் எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது.
காளிதாஸ் 2, "கார்மேனி செல்வம், கெஸ்ட், , லீடர், மரகத மலை, நீளிரா," ஆகிய 6 படங்கள் ஏப்.,3ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீசெந்தில் என்பவர் இயக்கி ,பரத் நடிப்பில் 'காளிதாஸ்' படம் வரவேற்பை பெற்றது. 7 ஆண்டுகளுக்கு பிறகு இதே கூட்டணியில் இதன் 2ம் பாகம் உருவாகி, சாம் சி.எஸ் இசையமைக்க, நடிகைகள் பவானி ஸ்ரீ, அபர்ணதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.. முதல் பாகம் போலவே புலனாய்வு திரில்லரில் உருவாகியுள்ள இப்படம் ஏப்.3ல் ரிலீசாகிறது.
இயக்குனர் ரவிச்சந்திரன் 'கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு, சந்தித்தவேளை' கடைசியாக 2019ல் 'நட்பதிகாரம்' படத்தை இயக்கினார். அதன்பின் படங்கள் இயக்காமல் இருந்தவர் இப்போது இசையமைப்பாளராகி உள்ளார். "முதன் முதலாய்" என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இதில் பிரபுதேவாவின் மகன் ரிஷி நாயகனாக, கியாரா வாசுதேவன் நாயகியாக நடித்துள்ளனர். இந்த பாடலை ஜி.வி., பிரகாஷ் பாடி உள்ளார்.
சிவாஜி படத்தில ரஜினிக்கு 1 ரூபா கொடுத்து இத வெச்சு பொழச்சுக்கோ என சொல்லியிருப்பாரு.ஆன நிஜத்தில தன்னோட மனைவிக்காக ஹைதராபாத்திலுள்ள ஒட்டுமொத்த 175 ஏக்கர் நிலத்தையும் கார்கில் போரில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு எழுதி கொடுத்தவர் சுமன்.
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்த 'அனிமல்' படம் ஆயிரம் கோடிவசூலித்தது. 2 ம் பாகத்திற்கு 'அனிமல் பார்க் என பெயர் வைத்துள்ளனர்.. ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடிப்பதால் , 'அனிமல் பார்க்' டைட்டில் வைத்துள்ளேன்". 'அனிமல் 2' படப்பிடிப்பு 2027 ஜூனில் துவங்கும் என்றார்.
குழந்தைகள் தொடர்பான கதையில் உருவாகும் ,லால் சலாம் படத்திற்கு பின் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கும் படத்திற்கு 'டெக்ஸ்லா' என பெயரிட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஆகிய மொழிகளிலும் படத்தை வெளியிட உள்ளனர். படத்தின் அறிமுக வீடியோவை மணிரத்னம், ரிஷப் ஷெட்டி உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
ரோஜின் தாமஸ் இயக்கி,அனுஷ்கா அறிமுகமாகும் மலையாள படத்தில் கத்தனார். ஜெயசூர்யா, வினித், சாண்டி, உள்ளிட்ட பலர் நடிக்க, சிறப்பு வேடத்தில் மோகன்லால், பிரபுதேவா நடித்துள்ளனர்.. இந்த படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் வெளியாகிறது. அதற்கு ஏற்ப இதன் டிரைலரையும் 6 மொழிகளில் வெளியிட்டுள்ளனர். மர்மங்கள், திகில் கலந்த அதிரடி படமாக உருவாகி உள்ளது.
தொடர்ந்து 10 வருஷங்களாக ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் நடிகர்களுக்காக இன்ஸுரன்ஸ் பணத்தை கட்டீட்டு வரார் நடிகர் சூர்யா சார்..! ஒவ்வொரு நடிகருக்கும் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் செலவாகும் இந்த இன்ஸுரன்ஸை முழுமையாக அவரே கட்டீட்டு வரதில்லாம, அவர்களது குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் படிப்புச் செலவுகளையும் ஏற்றுக் கொண்டு உதவி செய்துவருகிறார் என ஸ்டண்ட்மாஸ்டர் சில்வா அறிவித்துள்ளார்.
மார்ச் 19ல் ரிலீசாக திட்டமிட்டிருந்த யஷ்-ன் 'டாக் 'சிக்' படம் தள்ளிவைக்கப்பட்டதால் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தை ஒரு வாரம் முன்பே 19ல் ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர் .பவன் கல்யாண் நடித்த, ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் 'உஸ் தாத் பகத்சிங்' படம் மார்ச் 26ல் ரிலீஸ் என அறிவித்திருந்தனர்.. படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத், பின்னணிக்கு தமன் இசையமைக்கின்றனர். நாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா நடித்துள்ளனர்.