15 ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி - வடிவேலு வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. பென்ஸ் மீடியா தயாரிப்பில் சுந்தர் சி இயக்கி நடிக்கும் திரைப்படத்திற்கு கேங்கர்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. வடிவேலுலின் 63ஆவது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு, ஃபர்ஸ்ட்லுக் வெளியிட்டுள்ளது. கைப்புள்ள, வீரபாகு மாதிரி சிங்காரம் என்ற கேரக்டரில் இப்படத்தில் வடிவேலு நடித்து இருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது
ஜீனி படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன் வெளியாகியது.ஜெயம் ரவி ஒரு அலாவுதீன் பூதத்தைப்போல் தோற்றம் அளித்துள்ளார்.
விஜய் டிவியில் பிக் பாஸை தொகுத்து வழங்க விஜய் சேதுபதிக்கு ரூ .50 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸை முன்பு தொகுத்து வழங்கிய கமல், படங்களில் நடிக்க இருப்பதை. சுட்டிக்காட்டி விலகினார். இதையடுத்து, கமல்ஹாசனுக்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். கமலுக்கு ரூ .120 கோடி சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது
கோழிப்பண்ணை செல்லதுரை' ரிலீஸ்சீனு ராமசாமி இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள படம் 'கோழிப் பண்ணை செல்லதுரை'. முக்கிய வேடத்தில் யோகிபாபு நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக் கின்றன. சில தினங்களுக்கு முன் இதன் டீசர் வெளியானது. எதார்த்த படைப்பாக உருவாகி உள்ள இந்த படம் செப்., 20ல் ரிலீஸாகிறது என சீனு ராமசாமி அறிவித்துள்ளார். 'வேட்டையன்' இசை வெளியீடு ஞானவேல் இயக்கத்தில் ரஜினி, அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரி யர் நடிப்பில் தயாராகி உள்ள படம் 'வேட்டையன்'. அக்., 10ல் ரிலீஸாக உள்ள நிலையில் இப்படத் தில் இருந்து 'மனசிலாயோ' என்ற முதல்பாடலை விரைவில் வெளியி டப் போவதாக இசையமைப்பாளர் அனிருத் அறிவித்துள்ளார். அதோடு செப்., 20ல் படத்தின் இசை வெளியீட்டு விழாவை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.மாளவிகாவின் ஹிந்தி படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு . மலையாள நடிகை யான மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவை தாண்டி பிறமொழிகளிலும் நடிக்கிறார். ஏற்கனவே ஹிந்தியில் ஒரு படத்தில் நடித்தி ருப்பவர் இப்போது 'யுத்ரா' என்ற படத்தில் நடித்துள்ளார். சித்தாந்த் சதுர்வேதி நாயகனாக நடிக்க, ரவி உத்யவார் இயக்கியுள்ளார். அதிரடி ஆக்க்ஷன் கதையில் உருவாகி உள்ள இந்த படம் செப்., 20ல் ரிலீஸ் என புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.சட்டம் என் கையில்' ரிலீஸ்நகைச்சுவை நடிகராக இருந்த சதீஷ் சமீப காலமாக நாய் சேகர், கான்ஞ்சுரிங் கண்ணப் பன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து வரவேற்பை பெற்று வருகிறார். அடுத்து சச்சி இயக்கத்தில் 'சட்டம் என் கையில்' எனும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். வித்யா பிரதீப் நாயகியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற பணிகள் நடந்து வரும் சூழலில் செப்., 20ல் படம் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.'நந்தன் ரிலீஸ்உடன்பிறப்பே படத்திற்கு பின் மீண் டும் சசிகுமாரை வைத்து நத்தன் என்ற படத்தை ஈ.ரா. சரவணன் இயக்கி உள்ளார். சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளனர். படப்பி டிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கும் நிலையில் செப்., 20ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர், சென்ட்டிமென்ட் கலந்த ஆக்க்ஷன் படமாக உருவாகி உள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்கார நடிகை இதுவரை 900 கோடி ரூபாய் சொத்து மதிப்புடையவர் மற்றும் 10,500 புடவைகள், 750 ஜோடி பாதணிகள்,91 கடிகாரங்கள் மற்றும்1250 கிலோ வெள்ளி மற்றும்28 கிலோ தங்கம் போன்ற சொகுசுப் பொருட்களை வைத்திருந்தார். அது ஐஸ்வர்யா, தீபிகா, பிரியங்கா, ரேகா அல்ல.ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா இன்று பணக்கார இந்திய நடிகைகளில் ஒருவராக இருந்தாலும், அவர்களின் செல்வம் கடந்த காலத்தில் இருந்த ஒரு சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிடுகையில் மங்குகிறது.60 மற்றும்70 களில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவை ஆண்ட ஜெயலலிதா, இன்றைய பெண் நட்சத்திரங்கள் எவரையும் விட அதிக சொத்து மதிப்பைக் கொண்டிருந்தார்,.இன்றைய இந்திய பணக்கார நடிகைகள்ஐஸ்வர்யா ராய் இன்று830 கோடி ரூபாயுடன் இந்தியாவின் பணக்கார நடிகையாக உள்ளார், தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும்500 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளனர்1997ல் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.900 கோடி என அதிகாரிகள் மதிப்பிட்டபோது,ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு இருந்ததை விட இது இன்னும் குறைவு.1948 ஆம் ஆண்டு பிறந்த ஜெயராம் ஜெயலலிதா,1961 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கி,60 களின் நடுப்பகுதியில் முன்னணி வேடங்களில் பட்டம் பெற்றார்..ஜெயலலிதா ஆட்சி செய்த போது திரையுலகம்60 களின் நடுப்பகுதியில் இருந்து1980 வரை, ஜெயலலிதா ஒரு சூப்பர் ஸ்டாராகவும், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், தெலுங்கு படங்களிலும் பாலிவுட்டிலும் பிரபலமானவர்.1980 இல், அவர் தனது திரைப்பட வாழ்க்கையை இடைநிறுத்தி அரசியலில் இறங்கினார். 1991 முதல்2016 வரை ஐந்து முறை தமிழக முதல்வராக பதவி வகித்தார்.1997ஆம் ஆண்டு ஜெயலலிதா சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடத்தியபோது. அதிகாரிகள்10,500 புடவைகள்,750 ஜோடி காலணிகள்,91 கைக்கடிகாரங்கள் மற்றும் 1250 கிலோ வெள்ளி மற்றும்28 கிலோ தங்கம் என பட்டியலிட்டுள்ளனர்.ஜெயலலிதா தனது68வது வயதில்2016 டிசம்பரில் காலமானார்
லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் “கூலி” என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதில் ஸ்ருதி ஹாசன், ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது படத்தில் நடித்து வரும் நடிகர்களின் அறிவிப்பை படக்குழுவினர் வெளி யிட்டு வருகின்றனர். அந்தவகையில் தயாளாக மலையாள நடிகர் சவுபின் சாகிர், சைமனாக தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா ஆகியோர் நடிப்பதை அவர்களின் முதல் பார்வையுடன்' அறிவித்துள்ளனர்.சென்னை லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 177-வது படத்துக்கு “கூலி” என தலைப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பான டைட்டில் அறிமுக விடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.5- 16 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் தங்க கட்டிகளையும் நகைகளையும், சிலைகளையும், தங்க வாட்ச்களையும் கொள்ளையர்கள் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்க, அவர்களிடம் ரஜினி உள்ளே வருவதாக தகவல் சொல்லப்படுகிறது. அடுத்து கதவின் இடையிலிருந்து ரஜினியின் கண்கள் தெரிகிறது கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு எதிரிகளை அடித்து துவம்சம் செய்தபடி, உள்ளே வருகிறார் .தங்க நகைகள் மட்டும் கலரிலும் ,மற்றவை ப்ளாக் அன்ட் வொயிட்டிலும் படமாக்கப்பட்டுள்ளது.
உலக சினிமா வரலாற்றில் என்டிஆர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர் ஜெயலலிதா என ஐந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை ஆச்சி மனோரமா அவர்கள் மட்டும் தான் .
இயக்குனராக இருந்து நடிகராக மாறியதற்காக கிடைக்கும் படங்களில் எல்லாம் நடிக்காமல், சமீப காலமாக நல்ல கதை அம்சம் கொண்ட படங்களை ,தேர்தெடுத்து நடித்து வரும் சசிகுமார் என்னும் எதார்த்த நடிகர், “அயோத்தி”, “கருடன்” படத்தை தொடர்ந்து 'நந்தன்" படத்தில் வித்யாசமான லுக்கில் நடிக்கும் சசிகுமார்.
பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து தென்னிந்திய நடிகைகள் அறிமுகமாகி வருகின்றனர். 'ஜவான்' படத்தின் வாயிலாக நயன்தாரா இந்தியில் அறிமுகமானார். மேலும் ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோரும் பாலிவுட்டில் ஏற்கனவே நுழைந்துள்ளனர். இந்த லிஸ்டில் தற்போது சாய் பல்லவியும் இணைந்துள்ளார். தனது முதல் இந்தி அறிமுக படத்திலே சீதையாக நடிக்கும் வாய்ப்பு சாய் பல்லவிக்கு கிடைத்துள்ளது.
நடிகை சௌகார் ஜானகி மற்றும் அவங்களோட மகள், பேத்தி, கொள்ளு பேத்தி, எள்ளு பேத்தி அரிய புகைப்படம்எள்ளு பேத்தி எடுத்து ஐந்து தலைமுறையை பார்த்த ஒரே தமிழ் நடிகை செளகார் ஜானகிஅவர்கள் மட்டும்தான் .