ஒரு முறை நாயகன் படப்பிடிப்பின் அருகிலேயே, விஜயகாந்த் படப்பிடிப்பும் நடந்தது. அப்போது தக்காளி சாதம் தான் கொடுத்தனர்,மணிரத்னமே செய்யாததை செய்து காட்டி அசத்திய விஜயகாந்த். முதன் முதலாக படப்பிடிப்பில் இலை போட்டு சாப்பாடு வைத்தது கேப்டன் தான். வடை பாயசத்துடன் சோறு போட்டு அசத்தினார். கேப்டன் என்றால் ஒட்டு மொத்த திரையுலகமும் கொண்டாடும்.தன் உடல்நிலை பாதிப்பு காரணமாக சில நாட்களாக, இவர் ஓய்வில் இருந்து வருகிறார். கேப்டன் விஜயகாந்த்.குறித்து ஒரு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது, அதில் ராதாரவி, ரோபோஷங்கர், டி.சிவா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.அதில் பேசிய டி.சிவா, முதன் முதலாக படப்பிடிப்பில் இலை போட்டு, சாப்பாடு வைத்தது கேப்டன் தான் என்று கூறியுள்ளார்.
பழம்பெரும் நடிகை சாவித்திரி முன்னணி நடிகையாக புகழ்பெற்று விளங்கினார். ஒரு சமயம் இவர் வீட்டில் 100 பவுன் நகை காணாமல் போய்விட்டது. அந்த சமயத்தில் அவர் வீட்டில் பல ஆண்டுகள் பணிபுரிந்த பெண்மணியும், காணாமல் போய்விட்டார். உறவினர் அனைவரும் போலிசில் புகார் செய்யச் சொன்னார்களாம். ஆனால் அதற்கு நடிகை சாவித்திரி ஒப்புக் கொள்ள வில்லையாம். ஏன்? என்றால் போலீஸீக்குத் தெரிந்தால், விசாரணை என்ற பெயரில் வேலைக்காரியை கடுமையாக தண்டிப்பார்கள். என்னிடம் பல வருடங்கள் அன்புடன் நன்றாக வேலை செய்பவர்களை ,அப்படி என் முன்னே விசாரித்தால், என் மனசு தாங்காது. போனால் போகட்டும். விட்டு விடுங்கள். பலர் என்னை ஏமாற்றி, என்னிடம் உள்ள பொருள்களை கவர்ந்துள்ளனர். “100 பவுன் தானே ! விட்டு விடுங்கள்” என்று கூறியுள்ளார். இப்படி ஒரு நல்ல குணமுள்ள நடிகை .
2022 தீபாவளிக்கு வெளியிடும் திரைப்படங்கள் (24 அக்டோபர்)சர்தார்-கார்த்தி, லைலா, ராஷிகண்ணாபிரின்ஸ் - சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ்கார்த்தி, சிவகார்த்திகேயன் இருவரும் தற்போது தமிழ் சினிமாவின் மார்க்கெட்டில் உச்சத்தில் உள்ள நடிகர்கள் என்பதால் இருவரது படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.
விக்ரம், ஜெயராமன், கார்த்திக், ஜெயம்ரவி, திரிஷா, ஜஸ்வர்யாராய், சரத்குமார், பார்த்தீபன், பிரபு, விக்ரம் பிரபு, போன்ற பல நடிகர்களை வைத்து,லைகா நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தின் இசையமைப்பாளர் A.R.ரஹ்மான், திரைப்படத்திற்கே வராதவர்கள் கூட ஆர்வமுடன் ,இத் திரைப்படத்திற்கு திரளாக வந்து பார்வையிட்டு உள்ளனர். தமிழகத்தில் 158 கோடி கடந்த 9 நாட்களில் வசூல் செய்திருந்தது, (பாகுபலி 153 கோடி தான்) பாகுபலியின் வசூலை மிஞ்சி சாதனை படைத்துள்ளது பொன்னியின் செல்வன். மேலும் பல சாதனைகள் படைக்கப் போகும், பொன்னியின் செல்வனை பொறுத்திருந்து பார்க்கலாம். அமரர் கல்கி(சதாசிவம்). எழுதியிருந்த பொன்னியின் செல்வனின் மஹிமை, அதைப் படித்தவர்களுக்கு மட்டுமே புரியும். திரைப்படமாக்க முயற்சி செய்து, வெற்றி கண்ட டைரக்டர் மணிரத்தினத்தை பாராட்டியே ஆக வேண்டும். இப் படத்தின் மூலம் தமிழகத்தின் கல்கியின் புகழ் உலகெங்கும் நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
பொன்னியின் செல்வனில் முக்கியமான கதாபாத்திரங்களில் யார் யார் நடித்திருக்கிறார்கள் என்பதை பற்றி நாம் பார்க்கலாம். பொன்னியின் செல்வன் கதை படித்திருப்பவர்களுக்குத்தான் இது புரியும் .சுந்தர சோழர் - பிரகாஷ் ராஜ் பெரிய பழுவேட்டரையர் - சரத்குமார்சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்ஆதித்த கரிகாலன் - விக்ரம்நந்தினி - ஐஸ்வர்யா ராய், மந்தாகினி தேவியாக வயதான ஊமச்சி பெண்ணாகவும் ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடித்துள்ளார். வந்தியத்தேவன் - கார்த்திகுந்தவை - த்ரிஷாஅருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி அருள்மொழி வர்மன், ராஜ ராஜ சோழன், பொன்னியின் செல்வன் என இந்த கதையின் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பூங்குழலி - ஐஸ்வர்யா லக்ஷ்மிஆழ்வார்க்கடியன் - ஜெயராம்பெரிய வேளாரராக- பிரபுபார்த்திபேந்திர பல்லவனாக - விக்ரம் பிரபுசேந்தன் அமுதனாக - அஸ்வின்ரவிதாசனாக - கிஷோர்,மலையாமானாக - லால்வீரபாண்டியனாக- நாசர்,சோமன் சாம்பவனாக - ரியாஸ் கான்மதுராந்தகனாக – ரகுமான்குடந்தை ஜோசியராக - மோகன் ராம்வானதியாக நடிகை - சோபிதா துலிபாலாமேலும், பல நடிகர்கள்,நடிகைகள் பல சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
காஷ்மீரரின் முதல் மல்டிபிளக்ஸ் திரையரங்கமான இதனை ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ்சின்ஹா இன்று திறந்து வைத்தார். பயங்கரவாத கும்பல் திரையரங்கஉரிமையாளர்களைஅச்சுறுத்தியதால் ஜம்மு காஷ்மீரில் கடந்த 1980 வரை செயல்பட்டு வந்த சுமார் 12 திரையரங்குகள்மூடப்பட்டன. பிறகு 1990களில் மீண்டும் திரையரங்குகளைதிறக்க முயன்ற போது பயங்கரவாதிகள்தாக்குதல் நடத்தி அதனை முறியடித்தனர். இதனால் நீண்ட வருடம் திரையரங்குகள்இல்லாமல் இருந்த இடத்தில் தற்போது 23 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் திரையரங்கு திறக்கப்பட்டுள்ளது அப்பகுதி இளைஞர்களிடம் வரவேற்பபை பெற்றுள்ளது. இந்த திரையரங்கில் முதல்படமாக பொன்னியின் செல்வன் மற்றும் இந்திபடம் விக்ரம் வேதா திரையிடப்படவுள்ளது. இதில் மொத்தம் 3 திரைகள்மற்றும் மொத்தம் 522 இருக்கைகளும் உள்ளன. 23 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் திரையரங்கு திறக்கப்பட்டுள்ளது
சிவக்குமார் வீட்டில் யாரும் காபி குடிக்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சூர்யா மற்றும் அவருடைய மனைவி ஜோதிகா இருவரும் பணத்திற்காக சன் ரைஸ் காபி விளம்பரத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிறார். அதிலும் சூர்யா அந்த விளம்பரத்திற்காக டப்பிங் பேச வந்தபோது, விளம்பரத்திற்கு கவிஞர் பா விஜய் பாடல் எழுத, இசையமைப்பாளர் கார்த்திக் ,சன் ரைஸ் காபி விளம்பரத்தில் சூர்யாவையே நான்கு வரி சிங்கிள்சை பாடவும் வைத்தார். படத்தை விட விளம்பரத்தில் ஆர்வம் காட்டி சூர்யாவும், முதன்முதலாக பாடி ரசிகர்களை ஆர்வத்துடன் பார்க்க வைத்தது குறிப்பிடத்தக்கது
இந்திய சினிமாவே எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும்மணி ரத்னம் இயக்கிய“பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என வெளிவர உள்ளது. அதில் முதல் பாகம் வருகிற 30 ஆம் தேதி வெளிவருகிறது“பொன்னியின் செல்வன்” நாவலை படமாக்குவதற்கு எம் ஜி ஆர் காலத்தில் இருந்தே பலரும் முயன்று தோற்றும் வந்திருக்கின்றனர்.தஞ்சை பெரிய கோவிலை கட்டியபோது ராஜ ராஜ சோழனிடம் நெருக்கமாக இருந்த கருவூர் சித்தர், அவரது திட்டத்திற்கு மாறாக மன்னர் கோயிலை கட்டியதாகவும் ஆதலால் அந்த கோயில் மேல் அவர் சாபம் விட்டதாகவும் ஒரு பழங்கதை இன்று வரை பரவி வருகிறது. இந்திரா காந்தியே ஒரு முறை தஞ்சை பெரிய கோவிலுக்குச் சென்று வந்த போது அதற்கு அடுத்த தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். அதே போல் கலைஞர் கருணாநிதி தஞ்சை பெரிய கோவிலில் விழா எடுத்த பிறகு அவர் அதன் பின் ஆட்சிக்கே வரவில்லை. இது போன்ற சம்பவங்களால் இந்த கதை மிகவும் பலமாக பரவ ஆரம்பித்தது. இதற்கு காரணமாக ராஜ ராஜ சோழன் மேல் உள்ள சாபம் தான் காரணம் என பல கதைகள் உலாவி வந்தன.ராஜ ராஜ சோழன் சம்பந்தமாக எதை தொட்டாலும் அது தோல்வியிலேயே முடியும் என ஒருபழங்கதை பரவியது. இந்த நிலையில் தான் கடந்த2008 ஆம் ஆண்டு மணி ரத்னம்“பொன்னியின் செல்வன்” நாவலை படமாக்குவதற்கான பணிகளை தொடங்கினார். ஆனால் அந்த பணி தொடராமல் போனது. மணி ரத்னம் மீண்டும்“பொன்னியின் செல்வன்” பணிகளை தொடங்கினார். ஆனால் அதன் பின் அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டதாக செய்திகள் வந்தது.இதனை தொடர்ந்து கடந்த2019 ஆம் ஆண்டு ஆண்டு ஒரு வழியாக“பொன்னியின் செல்வன்” பணிகள் தொடங்கியது. ஆனால் அதன் பின் கொரோனா தொற்று பரவி படப்பிடிப்பு பணிகள் முடங்கியது.கொரோனா ஊரடங்கு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டப் பின், மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி தற்போது திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது.இந்த நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தில் பணியாற்றிய வசன கர்த்தா ஜெயமோகன்“படப்பிடிப்பின் போது தனக்கு எதாவது நேர்ந்துவிட்டால் யார் இந்த பணியை தொடர வேண்டும் என முடிவு செய்து தான் படப்பிடிப்பையே தொடங்கினார் மணி ரத்னம். ஒரு போர் வீரன் போருக்கு போவது போல் தான் இத்திரைப்படத்தை இயக்கினார். கிட்டதட்ட சாவை நோக்கி, போய்க்கொண்டிருப்பது போல் எல்லாத்துக்கும் தயாராக இருந்தார்” என கூறினார்.எனினும் யாரும் இதுவரை சாதிக்காத செயலை தற்போது மணி ரத்னம் சாதித்து விட்டார் என ரசிகர்களும் திரையுலக வட்டாரங்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.
விளம்பரப் படங்களில் நடிக்ககார்ப்ரேட் நிறுவனங்கள் பலவும் கோடிக்கணக்கில் நடிகர் நடிகைகளுக்கு சம்பளத்தை கொடுக்கின்றனர்.. தங்களுக்குப் பிடித்த பிரபலங்கள் சொல்கிறார்கள் என்றுரசிகர்களும், உடல் நலத்திற்கு தீங்கான ஒருசில உணவுப் பொருட்களை விரும்பி வாங்குகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும் இது போன்ற எந்த விளம்பரங்களிலும் நடிக்காமல் ரசிகர்களின் நலனை மட்டுமே கருதுகிறார். பிரபல கார் நிறுவனம் ஒன்று சூப்பர் ஸ்டாரை தங்களது கார் விளம்பரத்தில் நடிக்க சொல்லி 200 கோடி கொடுத்துநடிக்க சொல்ல.அதை ஏற்க மறுத்த ரஜினி, ரசிகர்கள்தான் முக்கியம் என்று சொல்லிவிட்டார். எந்த விளம்பரங்களிலும் நடிக்காமல் ரசிகர்களின் நலனை மட்டுமே கருதுகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
கேப்டன், பொன்னியின் செல்வன், லத்தி என 2022, செப்டம்பர் மாதம் தமிழில் வெளியாகும் ஆர்யா, ஐஸ்வர்யா லட்சுமி, சிம்ரன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் கேப்டன் வெளியாகும் ப்ரித்விராஜ், நயன்தாரா, அஜ்மல் அமிர் என பலர் நடித்திருக்கும் கோல்டு திரைப்படம்.அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கோல்டு வெளியாகும் பிரம்மாஸ்திரம் (முதலாம் பாகம்: ஷிவா) ரன்பிர் கபூர், அமிதாப் பச்சன், நாகர்ஜுனா என இந்திய பிரபலங்கள் பலர் இணைந்து .அயன் முகேர்ஜி இயக்கத்தில் வெளியாகும் .கணம் சர்வானந்த், ரித்து வர்மா, அமலா நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு தயாரிக்க, இயக்குனர் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் .கணம் வெளியாகும் ...வெந்து தணிந்தது காடு , சிலம்பரசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் . இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில்..வெளியாகும் .