25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வெள்ளித்திரை

Jun 13, 2024

48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி

இசை உலகையே மிரள வைத்த பாடகர் எஸ்.ஜானகிதான்.. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 17 மொழிகளில் 48,000 பாடல்களை பாடியுள்ள தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்றழைக்கப்படும் எஸ்.ஜானகிதான்.இளையராஜா போன்ற பெரும் இசையமைப்பாளர்களே பல முறை தனது பாடல்களை பாட எஸ். ஜானகியை பயன்படுத்தியிருக்கிறார்கள். இதை ஜானகியே பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார்.பொதுவாகவே பாடகர்களுக்கு திரையில் தோன்றும் நடிகர்களை போல பின்பற்றி பாடும் திறன் இருக்கும். இதில் பாடகர் பாலசுப்ரமணியம் நடிகர்களை அப்படியே பிரதிபலிப்பது போல பாடுவார். அதே போல் ஜானகியும் திரையில் தோன்றும் நடிகர்களுக்கு ஏற்றவாறே சிறப்பாக பாடுவார். அதனால்தான் தனிப்பாடல், இருவர் பாடல், குழு பாடல், தாலாட்டு என எதுவாக இருந்தாலும் அவரால் சிறப்பாக பாட முடிகிறது.இதுவே அவருக்கு2 வயது குழந்தையை போலவும்,20 வயது இளம்பெண்ணை போலவும்,60 வயது முதியவரை போலவும் பாட உதவுகிறது.அப்படி அவர் பாடிய பாடல்களுக்கு எத்தனையோ உதாரணம் கூறலாம்.இரண்டு வயது குழந்தை போல் பாடும் பாடலுக்கு உதாரணமாய்,'கண்ணா நீ எங்கே, வா வா நீ இங்கே' என்ற பாடலை கூறலாம்.இளம்பெண்ணை போல்'காதலின் தீபம் ஒன்று' பாடலை பாடியிருப்பார்.தனது இளம் வயதிலேயே1979 ஆம் ஆண்டில் வெளியான உதிரிப்பூக்கள் படத்தில்‘போடா போடா பொக்கை’ என்ற பாடலை முதியவர் குரலிலும் பாடியிருப்பார் எஸ். ஜானகி.இப்படி தனது வசீகர குரலால் அவர்48000த்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளதாக மதிப்பிடப்படுகிறது.அதுமட்டுமின்றி சிறந்த பாடகிக்கான தேசிய விருதை இதுவரை நான்கு முறை வென்றுள்ளார்.1977 - செந்தூரப் பூவே என்ற தமிழ் பாடல்1981 - எட்டுமானூரம்பலத்தில் என்ற மலையாளப் பாடல்1984 - வெண்ணெல்லோ கோதாரி அந்தம் என்ற தெலுங்குப் பாடல்1992 - இஞ்சி இடுப்பழகா என்ற தமிழ் பாடல்தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் ஒடிசா உள்ளிட்ட அரசுகளிடமிருந்து இதுவரை32 விருதுகளை வாங்கியுள்ளார் இவர்.மைசூர் பல்கலைக் கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும்2013ஆம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது அறிவித்தது. ஆனால், ஜானகி தன்னுடைய ரசிகர்கள் கொடுத்த அங்கீகாரமே போதும் என்று கூறி அதை நிராகரித்து விட்டார்.கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் தனது இசை மூலம் இடம்பிடித்த எஸ்.ஜானகியின் இசை வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பதை நாம் தெரிந்து கொண்டாலே அவரின் உழைப்பு என்ன என்பது புரிந்து விடும்.ஜானகியின் முழு பெயர் சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி ஜானகி. அவரது தந்தை சிஷ்டலா ஸ்ரீராமமூர்த்தி மற்றும் தாய் சத்யவதி. குண்டூர் மாவட்டத்தில் உள்ள பல்லபட்லா என்ற கிராமத்தில் தான்1938ஆம் ஆண்டில் ஜானகி பிறந்தார்.அவர் சிறு வயதில் இருந்து எந்த விதமான பாடலையும் பாடும் திறன் கொண்டவராக இருந்துள்ளார். அவர் இயல்பிலேயே எந்த ஒரு விஷயத்தையும் ‘போலச் செய்தல்’ திறன் கொண்டவர்.தனது தந்தையின் ஆசிரியர் வேலை காரணமாக கரீம்நகர் அருகே உள்ள சிரிசில்லாவில் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார் ஜானகி. அப்போதே இவர் சிறப்பாக சினிமா பாடல்களை பாடியதால், பலரும் இவரை பாட சொல்லிக் கேட்பார்களாம். குறிப்பாக இவரது சகோதரிகளும் நன்றாக பாடக் கூடியவர்கள்.இவர்களது குடும்பம் ராஜமுந்திரியில் இருந்தபோது, நாதஸ்வர வித்வான் கடவல்லி பைடிசுவாமியின் நிர்ப்பந்தத்தின் பேரில் ஜானகி ஒரு ஆண்டு இசை பயின்றார்.அவர் நேரடியாக இவருக்கு தியாகராஜ கீர்த்தனையை கற்றுக் கொடுத்துள்ளார்.ஒரு வருட இசைப்பயிற்சிக்கு பிறகு ஜானகி அந்த வகுப்புக்கு செல்லவில்லை. தனக்கு கர்நாடக இசையின் மீது ஆர்வம் இல்லை என்று கூறிய ஜானகி, இந்தி மற்றும் தெலுங்கு பாடல்களை சிறப்பாக பாடுவார்.லதா மங்கேஷ்கர் தான் இந்தி இசையில் தனக்கு குரு என்று ஜானகி கூறியுள்ளார். லதா பாடும் பாணி தன்னை கவர்ந்ததாகவும், அவரது பாடலான ராசிக் பல்மா பாடலை தொடர்ந்து பாடிக்கொண்டே இருப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கண்டசாலா, லீலா, சுசீலா ஆகியோரின் பாடல்களையும் அவர் விரும்பி பாடுவாராம்.தனது தந்தை இறந்த பிறகு ஜானகி தன்னுடைய சகோதரர்களுடன் ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார்.இவரது மைத்துனரான கரிமெல்லா நரசிம்ம ராவ் ஒரு சிறந்த இசைக்கலைஞர். அவரது மகன் கரிமெல்லா பாலகிருஷ்ண பிரசாத்தும் குறிப்பிடத்தகுந்த இசைக்கலைஞர் ஆவார்.தன் மைத்துனருடன் சேர்ந்து இசைக் கச்சேரிகளில் பங்கேற்று வந்த ஜானகியின் திறமை டாக்டர் சந்திரசேகரின் கவனத்தை ஈர்த்தது. இவர் ஒரு மிமிக்ரி கலைஞர். இவர்தான் ஜானகிக்கு ஏவிஎம் செல்ல சொல்லி சிபாரிசுக் கடிதம் வழங்கியது.அங்கு சென்று ஜானகி தனது குரல் வளமையை காட்டிய உடனேயே அவரை பாடகராக பணியமர்த்திக் கொண்டனர்.அப்படி ஜானகி முதன்முதலில் 1957 ஆம் ஆண்டில்"விதியுடன் விளையாட்டு" என்ற தமிழ் திரைப்படத்திற்காக பாடினார். டி சலபதி ராவ் இயக்கத்தில் பாடிய இந்தப் பாடல், படம் வெளியாகாததால் வெளியே வரவில்லை.அதன்பிறகு, அதே ஆண்டில் திலக் இயக்கிய"எம்.எல்.ஏ" என்ற தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு ஜானகிக்கு கிடைத்தது. இதில் பெண்டியாலாவின் இயக்கத்தில், கண்டசாலாவுடன் இணைந்து ஒரு பாடலை பாடினார் இவர்.பெயர் வாங்கிக் கொடுத்த பாடல்அதையடுத்து இவரை பிரபலமாக்கிய பாடல் எஸ்.எம்.சுப்பையா நாயுடு இயக்கிய சிங்கார வேலனே தேவா படத்தில்'சிங்கார வேலனே தேவா' என்ற பாடல்.அதில் நாதஸ்வரம் வாசித்த காரைக்குருறிச்சி அருணாச்சலம் தனக்கு போட்டியாக பாடல் பாட யாராவது இருக்கிறார்களா என்று சவால் விட்டார். இதனால் இந்த பாடலுக்காக லதா மங்கேஷ்கரையும் கூட அணுகியுள்ளார்கள்.ஆனால் இறுதியில் இந்த பாடலை ஜானகிதான் பாடினார். இந்த பாடலில் அவர் பாடுகையில் அவரது குரலும், நாதஸ்வரத்தின் இசையும் ஒன்றுபோல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தெலுங்கிலும்"நீலிலா படேடா தேவா" என்று இதே பாடலை அவரே பாடினார்.அப்போதிருந்து இசை உலகில் அவரது பயணம் உச்சத்திற்கு சென்றது.1957 முதல்2016 வரை பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ள எஸ் ஜானகி,2016 முதல் தான் பாடுவதை நிறுத்துவதாக அறிவித்து விட்டார்.பாடகி ஜானகி ​​டாக்டர் சந்திரசேகரின் மகன் வி.ராமபிரசாத்தை திருமணம் செய்து கொண்டார். அவர்1990 ஆம் ஆண்டில் இறந்துவிட்டார். இவர்களுக்கு முரளிகிருஷ்ணா என்ற ஒரு மகன் உள்ளார்.உண்மையில் அவர் பேசுவது அவ்வளவு நேர்மையானதாகவும், சுத்தமானதாகவும் இருக்கும்.

Jun 13, 2024

கல்கி படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர்

 பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு அடுத்தடுத்த படங்கள் மிகப்பெரிய தோல்வியை கொடுத்து தற்போது வரை ஒரு வெற்றிக்காக போராடும் அளவிற்கு தள்ளி விட்டது.அந்த வகையில் நாக் அஸ்வின் இயக்கத்தில் தற்போது கல்கி 2898 ஏ.டி என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதில் இவருக்கு வில்லனாக உலக நாயகன் கமலஹாசன் நடித்திருக்கிறார். இவர்களுடன் சேர்ந்து அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், துல்கர், ராணா, திசா பதானி போன்ற ஏகப்பட்ட நடிகர்கள் ஒன்றாக சங்கமித்திருக்கிறார்கள்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை வைஜேந்தி மூவிஸ் தயாரித்திருக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த மாதம் 27ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இந்திய சினிமாவையே புரட்டிப் போடும் அளவிற்கு ஒரு சரித்திரத்தை படைக்கப் போகிறது.அதாவது ஆரம்பத்தில் விஷ்ணுவை காட்டி இந்த உலகின் கடைசி நகரம் காசி என சொல்லும் ஒரு சிறுவனின் குரலோடு தொடங்குகிறது. ட்ரெய்லரில் பார்க்கும் பொழுது பிரபாஸின் கதாபாத்திரம் ரொம்பவே சீரியஸாக இல்லாமல் நகைச்சுவை கலந்த பாணியில் இருப்பதாக தெரிகிறது.ஆக மொத்தத்தில் ட்ரெய்லரை பார்க்கும்பொழுது படம் போர் அடிக்காத வகையில் ஒரு தரமான படமாக இருக்கும்.

Jun 06, 2024

வடிவேலுவின் காமெடிக்களை பார்த்து கோமாவில் இருந்து மீண்ட சிறுமி!! 

 காமெடிநடிகர் வடிவேலு  என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு நாளும் அவரின் எதோ ஒரு காமெடி டைலாக்கை சொல்லாம,நாம் அந்த தினத்தை கடந்து விட முடியாது.  தனது நகைச்சுவையால் தமிழ் சமுதாயத்தில் இரண்டற கலந்து விட்டார் அவர் மீது தனிப்பட்ட முறையில் பலர் பலவிதமான விமர்சனங்களை வைத்தாலும், அவர் ஒரு ஒப்பற்ற நடிகர் என்பதில் யாருக்குமே மாற்றுக்கருத்திருக்காது. அப்படியான வடிவேலுவின் காமெடி ஒரு பெண்ணை கோமாவில் இருந்து விழிக்க செய்துள்ளது கோமாவில் இருந்த 11 வயது சிறுமியின் டாக்டர் அவரது பெற்றோரிடம் இக்குழந்தைக்கு என்ன ரொம்ப புடிக்கும் என கேட்க, பெற்றோர்கள் அவளுக்கு வடிவேலு காமெடிக்களை விரும்பி பார்ப்பால் என கூறியிருக்கிறார்கள். உடனே வடிவேலுவின் காமெடி காட்சிகளை அச்சிறுமிக்கு போட்டுக்காட்ட டாக்டர் அறிவுறுத்த, சுமார் 40'க்கும் மேற்பட்ட காமெடி காட்சிகளை பெற்றோர்கள் சிறுமிக்கு போட்டுக் காட்டி இருக்கிறார்கள். அதன் விளைவாக சிறுமி, கோமாவில் இருந்தும் மீண்டு வந்துள்ளார். அதனை தொடர்ந்து சிறுமி மற்றும் அவளது பெற்றோர்கள், வடிவேலுவை நேரில் பார்த்து நன்றியும் தெரிவித்து உள்ளனர். 

Jun 06, 2024

கோர்ட் படத்தின் லொகேஷன் மாற்றப்பட்ட நிலையில், பிரபுதேவாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது .

ஏஜிஎஸ் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் விஜய், பிரசாந்த், மோகன், அஜ்மல், சினேகா, லைலா, திரிஷா மற்றும் மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தில் பிரபுதேவாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கையில் துப்பாக்கி எல்லாம் வைத்துக்கொண்டு விஜயின் டீமில் அவர் இருக்கும் புகைப்படம் போஸ்டராக வெளியானது.வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் கோட் படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இருந்து கேரளாவுக்கு மாற்றப்பட்டது யாருக்கு நல்லது இல்லையோ பிரபுதேவாவுக்கு நல்ல விஷயமாக மாறியுள்ளதுகேரளாவில் தற்போது கோர்ட் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கே சென்ற பிரபுதேவா சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். இந்நிலையில், அனுஷ்கா நடித்து வரும் மலையாள திரைப்படமான கத்தனார் நடிக்கும் வாய்ப்பு பிரபுதேவாவுக்கு அமைந்துள்ளது. அதன் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் தற்போது புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.கோர்ட் படத்தின் லொகேஷன் மாற்றப்பட்ட நிலையில், அதுவும் பிரபுதேவாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டது என படக்குழுவினரே பேசி வருகின்றனர்.

Jun 06, 2024

தன் வீட்டு பூஜை அறையில் நடிகர் ரஜினிகாந்த் புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கிறார் நடிகர் லிவிங்ஸ்டன். காரணம்? .

பூந்தோட்ட காவல்காரன் திரைப்படத்தில் சின்ன வேடத்தில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் லிவிங்ஸ்டன். அதன் பின் வில்லன் வேடம் ஏற்று நடித்தவர் தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். பின்னர் சுந்தர புருஷன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.அஜித் குமார் நடிப்பில் வெளியான கன்னி ராசி திரைப்படத்தில் திரைக்கதை எழுதினார். தற்போது கணிசமான படங்களில் குண சித்திரவேடத்தில் நடித்து வருகிறார். கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான லால் சலாம் படத்தில் அவரின் நண்பராக நடித்திருக்கிறார்..நடிகர் ரஜினிகாந்த் என்னதான் சூப்பர்ஸ்டாராக இருந்தாலும்,. எப்போதுமே தன்னுடன் இருப்பவர்களுக்கு தொடர்ச்சியாக உதவி செய்து வருவார். அப்படி அவர் லிவிங்ஸ்டனின் வாழ்க்கைக்கே ஒளி சேர்த்து இருக்கிறார். அந்த சமயத்தில் லிவிங்ஸ்டன் மனைவி ஜெஸ்ஸி இருதயராஜுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. ஏற்கனவே நிறைய கடன்களில் இருந்தவர் மனைவியின் மருத்துவ செலவுக்காக ரொம்பவே திண்டாடி விட்டாராம். அதை தன்னுடைய சக நண்பர்களுடன் லால் சலாம் ஷூட்டிங்கில் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.இதை உதவி இயக்குனர்கள் மூலம் அறிந்த ரஜினி காந்த் உடனே லிவிங்ஸ்டனை அழைத்து எதுவும் கேட்காமல் அவர் கையில் 15 லட்சம் ரூபாயை கொடுத்து மனைவியின் சிகிச்சையை துரிதப்படுத்த வேண்டும் என கூறி இருக்கிறார். கடன்கள் பல இருந்தாலும் அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்தார்.நான் உன் அண்ணனாக தான் இதை செய்கிறேன். மறுக்காமல் வாங்கிக் கொள் என வலியுறுத்தி ரஜினிகாந்த் திணித்திருக்கிறார். பின்னர் தான் லிவிங்ஸ்டனுக்கே விஷயம் தெரிந்ததாம். ரஜினி இப்படி யாருக்கும் தெரியாமல் நிறைய பேருக்கு உதவிகள் செய்வாராம். தன் வலது கை செய்வதை இடது கைக்கு தெரியாமல் இன்னமும் பார்த்துக்கொண்டிருக்கிறார்.என் வீட்டு பூஜை அறையில் அவரின் புகைப்படத்தை மாட்டி வைத்திருக்கிறேன். என் பிள்ளைகள் கூட நம் அம்மா இன்று இருப்பதற்கு காரணம் ரஜினி சார் தான் என பெருமையாக கூறிக் கொள்வதையும் தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

May 30, 2024

ஸ்ரீதேவி வாங்கிய பிரம்மாண்டமான முதல் வீடு

நடிகை ஸ்ரீதேவி பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். அவர் பாலிவுட்டில் போனி கபூர் என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும், அவர் தமிழ்நாட்டில் சென்னையில் அவருக்கென்று ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.ஸ்ரீதேவி மறைந்த பிறகு, அவர் வாழ்ந்த அந்த வீட்டை மீண்டும் புணரமைத்தார் போனி கபூர். முன்பை விட பிரம்மாண்டமாய் மாற்ற பட்ட இந்த வீட்டை வாடகைக்கு விட முடிவு செய்து ஏர்பிஎன்பி என்ற தளத்தில் வெளியிட்டுள்ளார் அவரது மகளான ஜான்வி .அம்மாவை போலவே ஜான்வி படங்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டு, தற்போது பாலிவுட்டில் இருந்து தெலுங்கிற்கு நடிக்க கமிட் ஆகியுள்ளார். ஸ்ரீதேவி இங்கிருந்து பாலிவுட் வரை சென்று கலக்கினார். அவரது மகளான ஜான்வி பாலிவுட்டில் இருந்து தென்னிந்தியாவில் கலக்குவார் என்று எதிர்பார்க்க படுகிறது.இந்த வீட்டை மீண்டும் பெரிய செலவில் புதுப்பித்துள்ளார்கள். வீட்டில் கலை பொருட்கள், ஓவியங்கள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளார் போனி கபூர். இவர் ஒரு தயாரிப்பாளர் என்பதால் இவரின் சென்னை அலுவலகத்தையும் இங்கேயே வைத்துள்ளார்கள்.இந்த வீட்டில் தங்க வருபவர்களுக்கு தென்னிந்திய உண்வுகள் பரிமாறப்படும். மேலும் ஆந்திர பிரியாணி முதல் தோசை வரை மெனுக்கள் வைத்துள்ளார்கள். மேலும் காலையில் அழகான கடற்கரை காட்சியுடன் யோகா பயிற்சியும் வழங்கப்படும் என ஜான்வி அந்த தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்த வீட்டில், அழகான நீச்சல் குளம் மற்றும் சோபாக்கள் என அனைத்தும் பிரம்மாண்டமாக வடிவமைத்துள்ளார்கள்.மேலும்வீட்டின்முன்புறம்பெரியதாமரையில்செயற்கையானநீர்வீழ்ச்சிஅமைத்துவருபவர்களைகவரும்வகையில்செய்துள்ளார்கள்.பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த இந்த வீடு இப்போது முழுவதும் தயாராகி உள்ளது. இந்த வீட்டில் தங்க குறிப்பிட்ட அளவில் மட்டுமேஅனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பிரம்மாண்ட வீடு சென்னை இ சி ஆரில் உள்ள அக்கரை என்ற இடத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

May 30, 2024

அஜித்தின்  “குட் பேட்அக்லி” சூட்டிங்துவங்கும் முன்பே விற்றுத்தீர்ந்தது

 நடிகர் அஜித்குமாரின்விடாமுயற்சி சூட்டிங் தொடர்ந்துதள்ளி போய் வருகிறது.இந்தப் படத்தின் சூட்டிங்மே மாதம் முதல் வாரத்தில் துவங்கஉள்ளதாக கூறப்பட்ட சூழலில்ஷூட்டிங் மேலும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து தன்னுடையஅடுத்த படமான குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கைமுன்னதாகவே அதாவது மே மாதம்10ம்தேதியே துவங்க அஜித் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின்முதல்கட்ட சூட்டிங் ஐதராபாத்தில்ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்துவங்குவதற்கான ஏற்பாடுகள் தற்போதுமுழுவீச்சில் நடந்து வருகிறது.இந்த படத்தின் ஷூட்டிங்முன்னதாக ஜூன் மாதத்தில்துவங்கவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் விடாமுயற்சிசூட்டிங் தொடர்ந்து தள்ளிப்போவதால் இந்த படத்தைமுன்னதாகவே துவங்கலாம் என்று அஜித் திட்டமிட்டுஅதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. ஆதிக் ரவிச்சந்திரன்இயக்கத்தில் உருவாக உள்ளதுகுட் பேட் அக்லி.இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு பட நடிகை ஸ்ரீலீலாஇணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஆனால் அவர் அஜித்துக்குஜோடியாக இல்லாமல் படத்தில்இணைய உள்ள மற்றொருஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கஉள்ளதாக கூறப்பட்டுள்ளது.குட் பேட் அக்லி படத்தில்  அஜித்திற்குஜோடியாக மீனா அல்லதுசிம்ரன் இணையலாம் என்றும்அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும்கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்தஅதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே இந்த படத்தின் சூட்டின்துவங்குவதற்கு முன்னதாகவே இந்த படத்தின் வெளிநாட்டுஉரிமையை படத்தை தயாரித்துவரும்மைத்ரி மூவி மேக்கர்ஸ்நிறுவனம், 22 கோடி ரூபாய்க்குபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்குவிற்றுள்ளதாக தற்போது தகவல்கள்வெளியாகி உள்ளன. அஜித்திற்குசர்வதேச அளவில் மிகப்பெரியமார்க்கெட் காணப்படும் சூழலில்அவரது படத்தின் வெளிநாட்டுஉரிமை விற்றுள்ளது பெரிய விஷயம் இல்லை என்று கோலிவுட்தரப்பில் கூறப்பட்டுள்ளது.தயாரிப்பு தரப்பின் வேலைகளில்தலையிடாமல் அஜித் நடந்துக்கொண்டு வருவது தயாரிப்புதரப்பில் அவருக்கு மிகப்பெரியநன்மதிப்பை பெற்றுத் தந்து வருகிறது. அஜித்தின்துணிவு படம் கடந்த ஆண்டு ஜனவரியில்வெளியான சூழலில் அவரது அடுத்தப்பட ரிலீசுக்காகரசிகர்கள் காத்திருக்கின்றனர். 

May 30, 2024

கமல் ஹாசன் தயாரிக்கும் “அமரன் “ படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் 

ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் தான் அமரன். இப்படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் சிவா. மேலும் சாய் பல்லவி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸுடன் முதல் முறையாக  இணைந்துள்ள  சிவகார்த்திகேயன்திரைப்படம் எஸ்.கே23. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னடத்தில் வெளிவந்த ஏழுகடல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ருக்மிணி தான் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.இந்த நிலையில், இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து டான் எனும் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் சிபி சக்ரவத்தி.இப்படத்திற்குபின் இவர் ரஜினியைவைத்து இயக்க போகிறார்என கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இப்படியிருக்க மீண்டும் சிவகார்த்திகேயனைவைத்து இயக்கப்போகிறாராம் சிபி. அதற்கானவேலைகள் தற்போது நடைபெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

May 23, 2024

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை பிரியங்கா சோப்ரா

பாலிவுட்டில் மட்டுமல்லாமஸ் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை பிரியங்கா சோப்ரா தான். ஃபோர்ப்ஸின் அறிக்கையின்படி, பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்கு ரூ.40 கோடி வரை சம்பளம்அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பான சிட்டாடல் வெப் சீரிஸுக்கு ரூ40 கோடி சம்பளம் பெற்றதாககூறப்படுகிறதுஇந்தியாவில்,அவர் ஒரு படத்திற்கு ரூ.14.20 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.ஆலியா பட், கரீனா கபூர்,  அனுஷ்கா ஷர்மா மற்றும் ஐஸ்வர்யா ராய் பச்சன் என அனைவரும் 10 முதல் 20 கோடி வரை சம்பளம்.

May 23, 2024

தமிழ் சினிமாவில் 50 கோடி வசூல் பார்த்த தமிழ் சினிமாவின் முதல் ஹீரோ

தமிழ் திரையுலகில் சமீப காலமாக ரூ.100 கோடி700 கோடி வரை படங்கள் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால் முன்பெல்லாம் கோடிகளில் வசூல் செய்யும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.அந்த வகையில்,2004 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் முதன் முதலில் ரூ.50 கோடி வசூல் பார்த்த நடிகர் ,தரணி இயக்கத்தில்2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. தெலுங்கில் மகேஷ் பாபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ஒக்கடு திரைப்படத்தை கில்லி என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தனர்.விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடித்த இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் ஹிட் அடித்தது.திரைக்கதை, வசனம், பாடல், ஆக்ஷன் காட்சிகள் என ஒட்டுமொத்த படத்தையும் விஜய் ரசிகர்கள் கொண்டாடினார்கள்.2004 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிற தான் தொலைக்காட்சியில் வெளியானது. அந்த அளவிற்கு இந்த படம் திரையரங்குகளில் நீண்ட நாள் ஓடியது.8 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரூ.50 கோடி வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது. அப்போதைய காலகட்டத்தில் ரூ.50 கோடி வசூல் என்பது தமிழ் சினிமாவில் பிரம்மிக்க வைக்கும் வசூலாக இருந்தது.கில்லி படத்தில் நடித்ததன் மூலம், முதன் முதலில் தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூல் பார்த்த முதல் நடிகர் என்ற பெருமையை பெற்றார் நடிகர் விஜய்.20 வருடங்கள் கழித்து தற்போது கில்லி படம் ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும்320 திரையரங்குகளில் கில்லி திரைப்படம் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 2 ... 6 7 8 9 10 11 12 ... 25 26

AD's



More News