25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


வெள்ளித்திரை

May 16, 2024

ஜெயராம் மகள் மாளவிகா திருமணம்

நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா திருமணம் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது.நவனீத் கிரிஷ் என்பவருடன் மாளவிகாவிற்கு கூர்கில் நிச்சயம் நடைபெற்றது.நவ்னீத் கிரிஷ் லண்டனில் சார்டட் அக்கவுண்டண்டாக வேலை பார்த்து வருகிறார்.அவரும் மாளவிகாவும் காதலித்து வந்த நிலையில், அவர்களின் திருமணம் இன்று இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது.

May 16, 2024

கார்த்தியின்25வதுதிரைப்படத்தை முன்னிட்டு25சமூகசெயற்பாட்டாளர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், நிதியுதவி.இது உதவி அல்ல நன்றிக்கடன்

கார்த்தியின்25வதுதிரைப்படத்தை முன்னிட்டு25சமூகசெயற்பாட்டாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், நிதியுதவி தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ரூ 1 லட்சம் வீதம் ரூ25 லட்சமும், மருத்துவமனைகளுக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.25 லட்சமும், 25 நாட்களுக்கு சுமார்25,000 பேர் பசியாற்ற ரூ25 லட்சம் என ரூ.1 கோடி வழங்க உள்ளார் நடிகர் கார்த்திஇது ஒரு நடிகன் செய்யும் உதவி அல்ல தன்னை வளர்த்த சமூகத்திற்கு ஒரு மனிதன் செலுத்தும் நன்றிக்கடன்.பாராட்டலாம், இவரை போல அனைவரும் வந்தால் மகிழ்ச்சி.

May 16, 2024

மணிகண்டனின் லவ்வர் திரைப் படம்

 காலா,  ஜெய் பீம், குட் நைட் படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகர் மணிகண்டன் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும்“லவ்வர்.“ திரைப் படத்தில் கௌரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்டோர்முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். குட் படத்தின்மாபெரும் வெற்றியை தொடர்ந்துமணிகண்டன் நடிப்பில் வெளிவரவிருக்கும்லவ்வர் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில்அளவுகடந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. பிரபு ராம் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.இந்நிலையில், லவ்வர் படத்தின்விமர்சனம் வெளியாகியுள்ளது. படம் பார்த்தவர்கள், தங்களதுவிமர்சனங்களை சமூக வலைத்தளத்தில்பதிவு செய்துள்ளனர். மணிகண்டன்- கௌரி பிரியா இருவரும் கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தி போகிறார்கள்.Possessiveவான ஒரு காதலராக சிறப்பாக நடித்துள்ளார் மணிகண்டன். மேலும் கண்ணா ரவிஉள்பட மற்றவர்களின் நடிப்பும் நன்றாக இருந்தது.அறிமுகஇயக்குனர் பிரபு ராம் கதை சொன்ன விதம் சூப்பர். குறிப்பாககிளைமாக்ஸ் காட்சி நன்றாகஇருந்தது. கண்டிப்பாக பார்க்கவேண்டிய மாடர்ன் லவ் காலகட்ட திரைப்படம்லவ்வர். திரைக்கதை தொய்வுஇல்லாமல் நகர்கிறதுஆனால், இரண்டாம் பாதி இன்னும் கூட விறுவிறுப்பாக இருந்திருக்கலாம். காதலர் தினத்திற்குஏற்ற ஒரு திரைப்படம். படத்திற்குமிகப்பெரிய பலத்தை ஷான் ரோல்டன் தனது இசையின் மூலம் சேர்கிறார்.மிகவும் நெருக்கமானஇளைஞர்களை கவரும் கதைக்களமாகஅமைத்துள்ளது லவ்வர்.

May 16, 2024

சமூக ஆர்வலர் ராகவா லாரன்ஸ்

நடிகராகவும், டான்ஸ் மாஸ்டர்,இயக்குனர் சமூக ஆர்வலர்என்று பல முகத்தைக்கொண்ட ராகவா லாரன்ஸிடம்உதவி கேட்டு ஒருமாணவன் சில தினங்களுக்குமுன்பு வீடியோ வெளியிட்டுஇருந்த நிலையில் ,மாணவனின்  வீட்டிற்கேசென்று ராகவா லாரன்ஸ்இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.அந்தமாணவனின் படிப்பு செலவைஇனி நான் ஏற்றுக்கொள்கிறேன்என்று வீட்டிற்குசென்று லாரன்ஸ் சொல்லஅந்த மாணவன் மற்றும்அவருடைய குடும்பத்தினர்கண் கலங்க நன்றிகூறி இருக்கிறார்.அந்த வகையில் சமூகவலைதளத்தை திறந்தாலே லாரன்ஸ்செய்யும் உதவிகள் வீடியோதான் இப்போது இணையத்தில்குவிந்து கொண்டிருக்கிறது.எந்த எதிர்பார்ப்பும்இன்றி ராகவா லாரன்ஸ்பலருக்கு உதவி செய்துகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில்குழந்தைகளின் படிப்பு செலவுக்காகஉதவி கொண்டிருந்தலாரன்ஸ் அதைத்தொடர்ந்துமுதியோரின் அடிப்படை வசதிகள், கணவனை இழந்த பெண்களுக்குஉதவிகள் என்று அடுத்தடுத்துதன்னுடைய உதவிகளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்... தன்னிடம் வரும் மனுக்களுக்குதகுந்த உதவிகளை செய்துவரும் லாரன்ஸ் எளிமையின்சிகரமாக இருப்பதை பார்த்துபலரும் பாராட்டி அவரைவாழ்த்தி வருகிறார்கள்.சில தினங்களாக அவருடையவீடியோஸ் இணையத்தில்வேகமாக பரவி வருகிறது.அதில் ஒரு வீடியோவில்கிராமத்தில் ஏழைகளுக்குடிராக்டர் கொடுக்க போனலாரன்ஸ் மாஸ்டர் ஒருதோட்டத்தில் சாப்பிட்டுவிட்டு புல் தரையில்ஒரு துணியை மட்டும்விரித்து அதில் படுத்துதூங்குவதை பார்த்து பலர்வியந்து போய் விட்டார்கள்.நடிகர், இயக்குனர், டான்ஸ்மாஸ்டர் என்று பலதிறமைகள் வைத்தும் கஷ்டப்பட்டுஎவ்வளவு பணம் சம்பாதிச்சும்இவருடைய எளிமை இப்போதுபலரையும் இவரை போலவேசேவை செய்ய தூண்டிக்கொண்டிருக்கிறது.விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கிய ராகவா லாரன்ஸ்'சேவையே கடவுள்' என்ற பெயரில் அறக்கட்டளையை நடிகர் ராகவா லாரன்ஸ் துவங்கியுள்ளார்"கடன்சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது வேதனையை ஏற்படுத்தியதால், அவர்களுக்கு டிராக்டர் வழங்க முடிவெடுத்தேன்" என்று நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.. இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லையாடி வருகை புரிந்த நடிகர் ராகவா லாரன்ஸுக்கு அங்குள்ள பொதுமக்கள், ரசிகர்கள், மாணவ மாணவிகள், பெண்கள் ஆகியோர் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அவருடன் புகைப்படம் எடுக்க முயன்றனர்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ்,"விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்வதாக வரும் செய்திகள் தன்னை மிகுந்தவேதனைக்குள்ளாக்கியது. இதனை போக்கும் வகையில் விவசாயிகளுக்காக, உபகரணங்கள் வழங்க முடிவு செய்து மாநிலம் முழுவதும் வழங்கி வருகிறேன். இங்கு வழங்கி உள்ளடிராக்டரை அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.. அது எனக்கு பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

May 16, 2024

+2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த தனுஷ் மகன் யாத்ரா..

நடிகர் தனுஷின் மகன்யாத்ரா12ஆம்வகுப்பு பொதுதேர்வு எழுதிஇருந்தார். இந்தமுடிவுகள் திங்கள்கிழமையான நேற்று வெளியானது. இதில்யாத்ரா நல்லமதிப்பெண்கள் எடுத்துள்ளதாகஇணையத்தில் தகவல்ஒன்று வைரலாகிவருகிறது. எனினும்இது குறித்தஅதிகாரப்பூர்வ தகவல்கள்இன்னும் வெளியாகவில்லை.: தன்னைவிட இரண்டு வயது குறைந்தவரான தனுஷை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். மகன்களுக்காக இருவரும் சேர்ந்துவிடுவார்கள் என்று எதிர்பார்த்தநிலையில், அண்மையில் இருவரும் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடி உள்ளனர். அப்படி அப்பா, அம்மாவின் விவகாரத்து ஒருபுறம் சென்று கொண்டு இருக்க, தனுஷின் மூத்த மகன் யாத்ரா பிளஸ் டூ பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது., அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. 

May 09, 2024

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்

தென் திரைப்படங்கள் மட்டுமல்ல, அதன் நட்சத்திரங்களும் அந்தஸ்தில் வளர்ந்துள்ளன. இதேபோல், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நட்சத்திரங்களும் இந்தி திரையுலக நட்சத்திரங்களுடன் இணைந்துள்ளனர். பான் இந்தியா படங்களின் வளர்ச்சியே இந்திய சினிமா வரலாற்றில் வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் கமல்ஹாசன் இன்று தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர். அறிக்கைகளின்படி, கமல்ஹாசனின் நிகர மதிப்பு சுமார்$70 மில்லியன்(ரூ450 கோடி) ஆகும். தற்போது ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் கமல்ஹாசனும் இடம்பெற்றுள்ளார்.பாக்ஸ் ஆபிஸ் பொறுத்தவரை ரஜினிகாந்துக்கும், தளபதி விஜய்க்கும் இடையே போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு நடிகர்களும், தமிழ் பணக்கார நடிகர்கள் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளனர். ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு சுமார்450 கோடி என்றும், விஜய்யின் சொத்து மதிப்பு 410 கோடி என்றும் கூறப்படுகிறது.100 கோடிக்கு மேல் நிகர மதிப்புள்ள மற்ற சூப்பர் பணக்கார தமிழ் நட்சத்திரங்களில் அஜித் குமார் (ரூ 350 கோடி), சூர்யா (ரூ 300 கோடி), கார்த்தி (ரூ 110 கோடி), தனுஷ் (ரூ 160 கோடி), மற்றும் மாதவன் (ரூ 115 கோடி) ஆகியோர் இந்த பட்டியலில் அடங்குவார்கள்.இவர்களை விட கமல்ஹாசன் மேலே இருக்கக் காரணம், விக்ரம்(மட்டும்400 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது) போன்ற சொந்த வெற்றிப் படங்களைத் தயாரித்த அவரது படத் தயாரிப்பு நிறுவனத்தின் வெற்றிதான். இது ரஜினிகாந்த் மற்றும் விஜய் போன்றவர்களை முறியடிக்க உதவியது என்றே சொல்லலாம்.பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் அமிதாப் பச்சன் நடித்துள்ள நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படமான கல்கி 2898 AD இல் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். இந்தியன்2, மணிரத்னத்தின் தக் லைஃப் ஆகிய படங்கள் விரைவில் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவர உள்ளது.

May 09, 2024

வெறும் 3 நிமிட பாடலுக்காக அவருக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கிய ஊர்வசி ரவ்துலா

.பல வருடங்களாக சினிமாவில் நடிகர்களை விட நடிகைகளுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது என்று கூறப்பட்டு வந்த நிலையில், சமீப காலத்தில் நடிகைகளும் நடிகர்களுக்கு இணையாக சம்பாதிக்க தொடங்கி உள்ளனர். தற்போது திரிஷா, நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகள் ஒரு படத்திற்கு ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகின்றனர். இவர்களையெல்லாம் மிஞ்சும் வகையில் ஒரு நடிகை வெறும் 3 நிமிட பாடல் காட்சியில் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்  ஊர்வசி ரவ்துலா.பாலிவுட்டில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வருகிறார் ஊர்வசி ரவ்துலா. கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறி பரபரப்பை கிளப்பிய இவர், பாலிவுட் மட்டுமல்லாது கோலிவுட், டோலிவுட் போன்ற தென்னிந்திய திரையுலகிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம்‘தி லெஜண்ட்’. படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஊர்வசி..தி லெஜண்ட் படத்தில் ஹீரோயினாக நடிக்க படக்குழு முதலில் அணுகியது நடிகை நயன்தாராவை தான். ஆனால் அவரோ எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டதால், அவருக்கு இணையான சம்பளத்தை கொடுத்து ஊர்வசி ரவ்துலாவை அப்படத்தில் நடிக்க வைத்ததாக கூறப்படுகிறது. லெஜண்ட் படத்திற்கு பின்னர் தற்போது தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 109-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஊர்வசி., அவர் ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய விவகாரம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ராம் பொத்தினேனி நடிப்பில் வெளிவந்த ஸ்கந்தா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ,வெறும்3 நிமிட பாடலுக்காகஆடி ரூ.3 கோடி சம்பளமாகவாங்கி இருக்கிறார் .நயன்தாரா, திரிஷா கூட இந்த அளவுக்கு சம்பளம் வாங்காத நிலையில், ஊர்வசி ரவ்துலா இந்த அளவுக்கு அதிக சம்பளம் வாங்கி உள்ளது தென்னிந்திய திரையுலகில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது

May 09, 2024

40 வயதிலும் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் திரிஷா

தமிழில்மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம் ஆகியமொழி திரைப்படங்களிலும்நடிக்கிறார். மேலும்பாலிவுட்பக்கமும் கவனம்செலுத்த துவங்கியுள்ளார். திரிஷா40 வயதாகியும்20 ஆண்டுகளாகதிரையுலகில் பயணித்துமார்க்கெட்டில் உச்சத்தில்இருக்கும் திரிஷாவிஜய்யின் Goat திரைப்படத்திலும்ஒரே ஒருபாடலுக்கு நடனமாடியுள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.பிஸியானநடிகையாக மாறியுள்ள திரிஷா, தற்போது ஒரு படத்தில்நடிக்க ரூ.12 கோடி வரைசம்பளம் வாங்கிவருவதாக தகவல்வெளியாகியுள்ளது. தென்னிந்தியஅளவில் அதிகம்சம்பளம் வாங்கிநடிகை திரிஷாதான் எனகூறுகின்றனர்., சம்பளவிஷயத்தில் நடிகைஐஸ்வர்யா ராய்யைதிரிஷா மிஞ்சிவிட்டார்என தகவல்கூறப்படுகிறது. ஐஸ்வர்யாராய் ஒருபடத்தில் நடிக்கரூ. 10 கோடிமுதல் ரூ. 12 கோடி வரைசம்பளம் வாங்கிவருகிறாராம்.ரூ. 776 கோடி சொத்துமதிப்பு வைத்திருக்கும்ஐஸ்வர்யா ராய், இந்தியாவின் பணக்காரநடிகை எனஅழைக்கப்படுகிறார். ஆனால்,சம்பள விஷயத்தில்அவருக்கு இணையாகதற்போது திரிஷாவந்துவிட்டார் எனதிரை வட்டாரத்தில்பேசப்பட்டு வருகிறது.நடிகை திரிஷா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தனர் 

May 02, 2024

 ஹரி - விஷால்  கூட்டணியில் “ரத்னம் “திரைப்படம்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஷால் மார்க் ஆண்டனி வெற்றியை தொடர்ந்து நடித்துள்ள திரைப்படம் ரத்னம். கமர்ஷியல் கிங் என தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இயக்குனர்களில் ஒருவரான ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார்.இதுவரை ஹரி- விஷால் கூட்டணியில் தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய படங்கள் வந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே வரவேற்பை ரத்னம் படம் பெறுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஷாலுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, கவுதம் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.இந்த நிலையில், ரத்னம் திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் வெளிவந்த முதல் நாளில் ரூ. 3 கோடி வரை வசூல் செய்துள்ளது . 

May 02, 2024

கில்லி ரீ ரிலீஸ் சாதனை படைத்தது

விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் 2004-ம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. 20 வருடத்திற்கு பிறகு கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ள போதும், இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் ஈர்ப்பு சற்றும் குறையாததால், படத்தை தியேட்டரில் ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகின்றனர். இப்படம் ரீ ரிலீஸ் ஆன அனைத்து தியேட்டரிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடிக்கொண்டு இருக்கிறது.இருபது ஆண்டுகளுக்கு முன் தியேட்டரில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து திரையில் சக்கை போடு போட்ட திரைப்படங்களை மீண்டும் கையில் எடுத்து ரீ ரிலிஸ் செய்ய தொடங்கியுள்ளது தமிழ் சினிமா. இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் தொடர்ச்சியாக பழைய படங்கள் ரீ ரிலிஸ் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆளவந்தான், முத்து, வாரணம் ஆயிரம், 3, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது விஜய், த்ரிஷா கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ளதுஇருபது  ஆண்டுகள் கழித்தும் இப்படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் பலரும் குடும்பமாக சென்று படத்தை பார்த்து ரசித்து வருகின்றனர். இப்படி இப்படத்திற்கு வரவேற்பு கிடைத்து வருவதால் வசூல் ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட முதல் நாளிலே 4 கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்து ரீ ரிலீஸ் செய்த படங்களில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்து இருக்கிறது கில்லி.இப்படம் உலகளவில் ரூ. 24 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்றும், படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கடந்த நிலையிலும், இப்படத்தின் வசூல் குறையாததால், கில்லி திரைப்படம், 50 கோடி வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கில்லி திரைப்படத்தை இயக்கிய தரணி மற்றும் அப்படத்தின் இசையமைப்பாளரான வித்யாசாகர் கில்லி படம் ஓடும் திரையரங்கிற்கு சென்று படத்தை கண்டு மகிழ்ந்தனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 25 26

AD's



More News