25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆன்மீகம்

May 17, 2024

திருடர்கள் பலமுறை திருடிச்செல்ல முயற்சித்தும் திரும்பவும் தன்னுடைய கோயிலுக்கே வந்து சேர்ந்த ஒரு தெய்வச் சிலை

இந்தியாவின் கேரள மாநிலம், கன்னூர் மாவட்டத்தில் உள்ள முழங்குன்னு என்னும் இடத்தில் இருக்கும் பழைமையான கோயில்தான் மிருதங்க ஷைலேஸ்வரி திருக்கோயிலாகும். பரசுராமர் உருவாக்கிய108 கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலுக்கு மிருதங்க ஷைலேஸ்வரி என்று பெயர் வரக் காரணம், மிருதங்கம் இந்தியாவின் பழைமையான ஒரு இசைக் கருவியாகும். விநாயகப் பெருமான், நந்திகேஸ்வரர் ஆகியோரிடம் இந்த மிருதங்கம் இருப்பதை பார்த்திருப்போம். மிருதங்கத்தை கடவுளின் தேவ வாத்தியம் என்று கூறுவார்கள். வானிலிருந்து மிருதங்க வடிவிலான எரிகல் ஒன்று இந்த இடத்தில் வந்து விழுந்ததாகவும், அந்தக் கல்லில் அம்பிகையின் சக்தியை பரசுராமர் உணர்ந்ததால் இங்கேயே அந்த அம்பிகைக்கென்று ஒரு கோயிலை எழுப்பினார் என்பது புராணக்கதை.மிருதங்க ஷைலேஸ்வரி கோயிலில்தான் கதகளி நடனம் உருவானதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் சக்தி தேவி காளியாகவும், சரஸ்வதியாகவும், மகாலட்சுமியாகவும் மூன்று வடிவில் காட்சி தருகிறார். இக்கோயிலில் இருக்கும் தேவி சிலையின் மதிப்பு 1.5 கோடியாகும். இக்கோயிலுக்கு எந்தக் காவலும் கிடையாது என்பதால் திருடர்களுக்கு இச்சிலையை திருடிச்செல்வது என்பது எளிதானது.1979ம் ஆண்டு முதல் முதலில் இந்த தேவி சிலையானது திருடுபோனது. எனினும், திருடர்கள் சிறிது தூரத்திலேயே இச்சிலையை போட்டுவிட்டு சென்று விட்டனர். அதற்கான காரணம் தெரியவில்லை. சிலையும் கோயிலுக்குத் திரும்ப எடுத்துச் செல்லப்பட்டது.சில வருடங்கள் கழித்து இரண்டாவது முறையாக இந்தச் சிலை திருடப்பட்டது. இந்த முறை போலீசால் எதையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. எனினும், கோயில் தேவஸ்தானத்திலிருந்து சிலை வெகுதொலைவு சென்றுவிட்டதாகவும் நிச்சயமாக42 நாட்களுக்குள் கிடைத்துவிடும் என்று கூறினார்கள். அவர்கள் கூறியது போலவே சிலை42வது நாள் பாலகாட்டின் அருகில் உள்ள நெடுஞ்சாலை தமிழ்நாட்டிற்கு பக்கத்தில் கிடைத்தது. இந்த முறை ஒரு கடிதம் அதனுடன் இருந்தது. இந்த சிலை மிருதங்க ஷைலேஸ்வரி கோயிலை சேர்ந்தது. இதற்கு மேல் எங்களால் இந்தச் சிலையை எடுத்து செல்ல முடியவில்லை என்று எழுதியிருந்தது.மூன்றாவது முறையாக கர்நாடகாவை சேர்ந்த திருடர்கள் இந்தச் சிலையை வயநாடு வழியாக கடத்திச்செல்லும்போது ஒரு லாட்ஜில் இச்சிலையை வைத்து அதற்கு பூ சாத்தி, தீபம் ஏற்றி பூஜை செய்துள்ளனர். பிறகு அவர்களே போலீசாருக்கு போன் செய்து சிலை இருக்கும் லாட்ஜ் பற்றி தகவல் சொல்லி, வந்து சிலையை எடுத்துச் செல்ல சொல்லிவிட்டு சென்று விட்டனராம்.சில காலம் கழித்து வேறு ஒரு திருட்டில் இரண்டாவது மற்றும் மூன்றாவதாக தேவியின் சிலையை திருடிய திருடர்கள் போலீசிடம் மாட்டிக்கொள்ள அவர்களிடம்,‘எதற்காக பாதியிலேயே மிருதங்க ஷைலேஸ்வரி சிலையை விட்டுவிட்டு சென்றீர்கள்’ என்று போலீஸ் கேட்டதற்கு இருவருமே ஒரே மாதிரியான பதிலையே கூறினார்கள். அதாவது அந்தச் சிலையை கடத்தி சென்றுக்கொண்டிருக்கும்போது அந்தத் திருடர்களுக்கு,‘தாங்கள் யார்? எதற்காக இந்தச் சிலையை கடத்திச் செல்கிறோம்? எங்கே எடுத்துச் செல்ல வேண்டும்?’ என்பது போன்ற நினைவுகள் அனைத்தும் மறந்து போய்விட்டதாம்.இதனால் பயந்துபோன அந்தத் திருடர்கள் இந்தச் சிலையை பாதியிலேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்களாம். இன்னாள் வரை இக்கோயிலுக்கு எந்தப் பாதுகாப்பும் கிடையாது. எனினும் இத்தகைய மதிப்புமிக்க சிலையை யார் திருடி சென்றாலுமே தேவியின் சிலையானது தன்னுடைய கோயிலுக்கே திரும்ப வந்து சேர்ந்துவிடுவது ஆச்சர்யமான விஷயம். இது தேவியின் மகிமைதான் என்று அங்கிருக்கும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இத்தகைய செய்திகளை கேட்கும்போது அதிசயம் மிக்க இந்தக் கோயிலை ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் தோன்றுகிறது அல்லவா?

May 17, 2024

காசிக்கு சமமான ஆறு சிவத்தலங்கள்

அருள்நலம் சார்ந்த சான்றோர்கள் சிவனருட் செல்வர்கள், நாயன்மார்கள் ஆகியோர் சிவத் தலங்கள் தோறும் சென்று வழிபாடு செய்துள்ளார்கள். அப்பெரு மக்கள் உணர்த்திய, தமிழ்நாட்டில் காசிக்கு சமமான ,ஆறு சிவத்தலங்களைக் குறிப்பிட்டுள்ளார்கள்.அந்த ஆறு சிவத்தலங்கள்1. திருவெண்காடு2. திருவையாறு3.மயிலாடுதுறை4. திருவிடைமருதூர்5. திருச்சாய்க்காடு6.ஸ்ரீவாஞ்சியம்காசிக்கு சமமான ஆறு ஆலயங்கள்.

May 10, 2024

நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

 முருகன் என்றதும் நம் நினைவிற்கு வருவது அறுபடை வீடுகள்தான். அதைத் தவிர, பழைமையான மற்றும் சக்தி வாய்ந்த முருகன் கோயில்கள் இருந்தாலும், அவை குறித்தான தகவல்கள் பலருக்கும் அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாகப்பட்டினம் மாவட்டம், எட்டுக்குடி என்னும் திருத்தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோயில் 14ம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதரின் பாடல்கள் மூலமாகவே பிரபலமடைந்தது. இத்தலம் காவடி எடுக்கும் திருவிழாவிற்கு மிகவும் பெயர் போனதாகும். இங்குள்ள முருகன் வள்ளி, தெய்வானையுடன் மயில் மேல் அமர்ந்து காட்சி தருகிறார். இந்த மூவரும் அமர்ந்திருக்கும் மயிலுக்கு தரையிலிருந்து ஆதாரம் அதன் இரண்டு கால்கள் மட்டுமே.பெரும்பாலான கோயில்களில் முருகன் அமர்ந்திருக்கும் மயிலானது வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால், எட்டுக்குடியில் மட்டும் மயில் இடது பக்கம் திரும்பியிருக்கும். இது கந்த புராணத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எட்டுக்குடி முருகன், சிக்கல் முருகன், எண்கண் முருகன் ஆகிய மூன்று சிலையையும் ஒரே சிற்பியே செதுக்கினார் .ஒரு சமயம் நாகப்பட்டினத்தின் அருகில் சிற்பி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் அழகிய முருகன் சிலை ஒன்றை செதுக்கினார். அப்போது ஆட்சியில் இருந்த பராந்தக சோழன் அந்தச் சிலையின் அழகில் மயங்கி இதுபோன்று இன்னொரு சிற்பத்தை அந்த சிற்பி வடித்துவிட கூடாது என்பதற்கு அவரது இரு கைகளில் உள்ள கட்டை விரலை வெட்டி விடுகிறான். இதனால் வருத்தமடைந்த சிற்பி அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று விடுகிறார். சிற்பி மிகவும் கடுமையாக முயற்சித்து இன்னொரு சிலையை வடிக்கிறார். அதை அந்த ஊரை ஆண்ட குறுநில மன்னன் பார்க்கிறான். அந்த சிலையில் ஒளி வீசுகிறது. மயிலுக்கு உயிர் வந்து பறந்து செல்கிறது. அதை பார்த்த அரசன் அதை‘எட்டிப்பிடி’ என்று ஆணையிடுகிறான். அந்த மயிலை காவலர்கள் எட்டிப்பிடிக்கும்போது மயிலின் கால் சிறிதளவு உடைந்து விடுகிறது. பறந்துக்கொண்டிருந்த மயில் அந்த இடத்திலேயே சிலையாக மாறிவிடுகிறது.இந்த,‘எட்டிப்பிடி’ என்னும் வார்த்தைதான் நாளடைவில்,‘எட்டுப்பிடி’ என்றும் பின்பு எட்டுக்குடி என்றும் ஆனது. அதுவே பிற்காலத்தில் ஊரின் பெயராக மாறியது. அந்த சிற்பி வடித்த இன்னொரு சிலையை எண்கண் என்னும் இடத்தில் வைத்தார். சிற்பி முதலில் வடித்த சிலையை சிக்கலிலும், இராண்டாவது வடித்த சிலையை எட்டுக்குடியிலும் வைத்தார். இந்த மூன்று தலங்களில் உள்ள முருகன் சிலையும் ஒரே முகச்சாயலை கொண்டிருக்கும்.எட்டுக்குடி முருகன், பக்தர்கள் தன்னை எந்த கோலத்தை நினைத்து வழிபடுகிறார்களோ அந்தக் கோலத்திலேயே அவர்களுக்குக் காட்சி தரக்கூடியவர். குழந்தையாக நினைத்துப் பார்த்தால் குழந்தை வடிவிலும், இளைஞனாக நினைத்து பார்த்தால் இளைஞன் வடிவிலும், வயதானவராக நினைத்துப் பார்த்தால் வயோதிக தோற்றத்திலும் உயிரோட்டமாகக் காட்சி தருகிறார்.சித்திரா பௌர்ணமியன்று இக்கோயிலில் விசேஷ வழிபாடு உண்டு. கோயிலின் முன்பு அமைந்திருக்கும் சரவண பொய்கையின் நீரில் கைப்பட்டாலே பாவம் தீரும் என்று நம்பப்படுகிறது. குழந்தைகளின் பயந்த சுபாவம் நீங்க, திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறப்பாக இருக்க இந்த எட்டுக்குடி முருகனை வேண்டினால் நிறைவேறும் என்று நம்பப்படுகிறது.

May 03, 2024

இந்திய கோவில்களில் வியப்பில் ஆழ்த்தக்கூடிய சிற்பக்கலை

‘காலத்திற்கேற்ப மாற்றம்’ என்று சொல்லப்படுவது போல நம்முடைய ஆடை, அணிகலன், தொழில்நுட்பம் என்று நம் வாழ்வில் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றம் பெண்களுக்கும் பொருந்தும். எல்லாவற்றிலும் மார்டனாக மாறிய பெண்கள் முடியையும் ஃபெதர் கட், லேயர் கட் என்று வெட்டிக்கொண்டார்கள். இருப்பினும் தலைப்பின்னி பூ வைத்து பாரம்பரியமாக இருக்க பிடிக்காத பெண்கள்உண்டா? எந்த காலக்கட்டமாக இருந்தாலும், நிறைய முடி இருக்கும் பெண்களை பார்த்தால் சற்று பொறாமை வரத்தான் செய்யும்.இப்படி பெண்களை பார்த்து பெண்களே பொறாமை படக்கூடிய விஷயத்தை சிற்பமாக வடித்து வைத்திருக்கிறார்கள் தமிழக சிற்பிகள்.எத்தனை கலைநயம், எத்தகைய நேர்த்தி, பார்த்து கொண்டேயிருக்கலாம் என்று தோன்றும் அழகு, இடுப்புக்கு கீழ் வரை செல்லும் கூந்தல், அதை பின்னி போட்டிருக்கும் அழகு. அத்துடன் தலையிலே இருக்கும் அணிகலன்கள் என்று ஒரு சிற்பமே உயிர்பெற்று பெண்ணாக நிற்பது போல தோன்றுகிறது.இந்த சிற்பம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பூவரக சுவாமி கோவிலிலே தான் உள்ளது. அடுத்து பார்க்கவிருக்கும் ஆப்டிக்கல் இலூசன் சிற்பம் உங்களை நிச்சயமாக பிரமிப்பில் ஆழ்த்தும் என்பதில்  சந்தேகமில்லை. கர்நாடக மாநிலத்தில் ஹரிஹரேஸ்வரர் கோவிலில் உள்ள ஒரு சிற்பம் தான் நம்மை ஆச்சர்யப்படுத்தியது, இந்த சிற்பத்திற்கு தலை ஒன்று தான். ஆனால் உடல்கள்5 உள்ளது. இது கிருஷ்ணரின் சிலை என்று கூறப்படுகிறது. ஒரு தலைக்கு ஐந்து உடல்கள் இருந்தாலும், தலையை எந்த உடலுடன் பொருத்தி பார்த்தாலும் சரியாகவேயிருக்கும். இத்தனைக்கும் ஐந்து உடல்களும் வெவ்வேறு நிலையில் இருக்கும். எனினும் சரியாக பொருந்துவது போல வடிவமைத்த சிற்பியை கலைநயம்,, நேர்த்தியை நினைத்து வியந்து , பார்த்து கொண்டேயிருக்கலாம் இக்கோவில்12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. கோவில்களில் வடிவமைக்கப் பட்டிருக்கும் சிலைகளைக் காணும் போது, சிற்பிகள் வடித்தது சிலையா இல்லை உயிர் உள்ள மனிதர்களா? என்று தோன்றும் அளவிற்கு  அவ்வளவு தத்ரூபமாக இருக்கும்.இதுபோன்ற எண்ணற்ற அதிசய சிற்பங்கள் இந்தியா முழுதும் உள்ள கோவில்களில் அமைந்திருக்கிறது. இவற்றையெல்லாம் பொறுமையாகவும், நிதானமாகவும் ரசிக்க நேரமிருப்பவர்கள் கண்டிப்பாக இதுபோன்ற சிற்பங்களை ரசிப்பதற்கென்றே ஒரு பயணம் மேற் கொள்ளலாம் .

May 03, 2024

அபிஷேகம் செய்த .சுடுநீர் குளிர்ந்தநீராக மாறும் அதிசயக் கோயில்!

இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும்,.  பழம்பெருமை பேசும் கோயில்களும், அதிசயங்களும் நம்மைப் பெருமைக்குள்ளாக்குவது மட்டுமல்லாமல், வியக்கவும் வைக்கிறது. அப்படிப்பட்ட ஆச்சர்யப்படுத்தும் கோயில்தான் கர்நாடக மாநிலம், ராய்சூர் மாவட்டத்தில் தேவதுர்கா தாலுகாவில் காப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் தன்னுள் பல அதிசயங்களை அடக்கி வைத்துள்ளது என்று கூறலாம்.இந்தக் கோயில்800 வருடங்கள் பழைமையானதாகும். இக்கோயிலைக் கட்டியவர் கல்யாண சாளுக்கியர் ஆவார். இக்கோயிலில் ஹனுமன் சிலையும் இருக்கிறது..இதில் பழைமையானது லக்ஷ்மி வெங்கடேஸ்வரர் சிலையாகும். ஸ்ரீ ராகவேந்திர சுவாமி இக்கோயில் சிலையை நேரடியாக சென்று தரிசித்திருக்கிறார்..இக்கோயில் மிகவும் பிரபலமாகும். பெருமாளுக்கு நித்யப்படி பூஜைகள் தினமும் நடைபெறுகின்றன. வைணவத் திருவிழாக்களும் கொண்டாடப்படுகின்றன. இங்கே மண்சாளம்மனை கிராமத்துக் கடவுளாக மக்கள் கும்பிடுகிறார்கள். மண்சாளம்மன் 3 அடி உயர சிலையாக இங்கே காட்சி தருகிறார். மண்சாளம்மன் பார்வதி தேவியின் அவதாரம் என்று கூறப்படுகிறது.இக்கோயில் அருளும் ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஷ்வரர் திருச்சிலைக்கு செய்யப்படும் அபிஷேகத்தின்போது நிகழும் அதிசயத்தைக் காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். இச்சிலைக்கு வெந்நீரால் செய்யப்படும் அபிஷேக நீர், கீழே இறங்கும்போது குளிர்ந்த நீராக மாறிவிடுகிறதாம். இச்சிலைக்கு சுடுநீரால் அபிஷேகம் செய்யும்போது, நீர் தலையிலிருந்து கால்களை அடையும்போது குளிர்ந்து விடுகிறது. கால்களில் இருக்கும் நீர் குளிர்ச்சியாகவும், தலை இன்னும் சூடாகவே இருப்பதாகக் கூறுகிறார்கள். இதுவே வயிற்றிலிருந்து நீரை ஊற்றி பார்த்தால் சுடுநீராகவே இருக்கிறதாம். ஆனால், தலையிலிருந்து ஊற்றினால் மட்டுமே குளிர்ந்த நீராக மாறுகிறது.இந்த அதிசயத்தை சிலர் முழுமனதுடன் நம்புகிறார்கள். இன்னும் சிலரோ இதற்கான விளக்கத்தைத் தேடுகிறார்கள். இந்த சிலை வடிவமைக்கப்பட்ட கல்லிற்கு அதை சுற்றியுள்ள வெப்பநிலையை மாற்றக்கூடிய குணமுள்ளதாக சிலர் நம்புகிறார்கள்.அதிசயங்கள் நிறைந்த கோயில்கள் இந்தியாவில் எத்தனையோ உள்ளன. அந்த வகையில் இதுவும் ஒன்றாகும். நிறம் மாறும் லிங்கம், அபிஷேக நெய்யை வெண்ணெய்யாக மாற்றும் அதிசயம் என்று இதுபோன்ற பல அதிசயம் கொண்ட சிலைகள் உள்ளன. இத்தகைய அதிசய கோயிலையும், அதில் ஏற்படும் அதிசய நிகழ்வையும் காண்பதற்காகவே இக்கோயிலுக்கு ஒருமுறையாவது சென்று லக்ஷ்மி வெங்கடேஸ்வரர் தரிசனத்தைப் பெற்றுத் திரும்புவது மிகவும் விசேஷமாகும்.

Apr 26, 2024

மகாபலிபுரம் என்றும் அழைக்கப்படும் மாமல்லபுரம்

உலகின் மிகப்பெரிய விரிகுடாக்களில் ஒன்றான வங்காள விரிகுடாவின் கரையோரத்தில், கடல் மற்றும் அதன் இயற்கையாக நிகழும் பாறை அமைப்புகளிலிருந்து உத்வேகம் பெறும் ஒரு கோயில் வளாகம் உள்ளது. கம்பீரமான கடற்கரைக் கோயில்.இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள சிறிய நகரமான மாமல்லபுரத்தில் கடலுக்கு அருகில் அமைந்துள்ளது. மூன்று தனித்தனி சன்னதிகள் கொண்ட இந்த வளாகம் பல்லவ மன்னன் இரண்டாம் நரசிம்மவர்மன் இரண்டாம் ராஜசிம்ஹாவின் ஆதரவின் கீழ் கட்டப்பட்டது, அவர் கிபி 700 இல் அரியணையில் ஏறி சுமார் இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இந்தியாவின் ஆரம்பகால வரலாற்றில் ஒரு முக்கியமான துறைமுக நகரமாக இருந்தது மற்றும் பல்லவ ஆட்சியாளர்களின் ஆதரவின் கீழ் கலை நடவடிக்கைகளுக்கான முக்கிய மையமாக வளர்ந்தது. மாமல்ல("பெரிய போர்வீரன்" என்று பொருள்படும்) என்ற அடைமொழியை எடுத்துக் கொண்ட முதலாம் நரசிம்மவர்மன், கிபி630 இல் தொடங்கி சுமார்38 ஆண்டுகள் ஆட்சி செய்தார், மேலும் மாமல்லபுரத்தில் குகைக் கோயில்கள், ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் பெரிய சிற்பங்கள் உட்பட ஏராளமான பாறை வெட்டப்பட்ட நினைவுச்சின்னங்களுக்கு நிதியுதவி செய்தார். கற்பாறைகள். பல்லவ மன்னர்கள் முதன்மையாக சிவபெருமானை வழிபடும் அதே வேளையில், பிற இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் மற்றும் பிற மத மரபுகள் போன்றவற்றை உருவாக்குவதையும் ஆதரித்தனர்., கோயில் கட்டிடக்கலையை இரண்டு பள்ளிகளாகப் பிரிக்கலாம்: நாகரா , அல்லது வட இந்திய பாரம்பரியம், மற்றும்  திராவிடஅல்லது தென்னிந்திய கட்டிடக்கலை. நாகரா மற்றும் திராவிடக் கோயில்கள் இரண்டும் ஒரு முக்கிய சன்னதியைக்( விமானம் ) கொண்டுள்ளது, இது கிராப கிரிஹா (அதாவது"கருப்பை அறை") என்று அழைக்கப்படும் உள் கருவறையைக் கொண்டுள்ளது இது ஷிகாரா எனப்படும் பிரமிடு கோபுரத்தால் உச்சியில் உள்ளது .செல்வாக்கை தெளிவாக வெளிப்படுத்துகிறது. பாறை வெட்டப்பட்ட கோயில்கள் பெரிய பாறைகளால் கட்டப்பட்டன, கலைஞர்கள் வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் ஒரே நேரத்தில் பாறைகளை மேலிருந்து கீழ் வரை செதுக்குவார்கள்.,கட்டிடக்கலை வடிவமாக, பல்லவ கட்டிடக்கலையின் இரண்டு கட்டிடக்கலை கட்டங்களின் உச்சக்கட்டத்தில் அமைந்துள்ள கடற்கரைக் கோயில் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது: இது பாறை வெட்டப்பட்ட அமைப்புகளிலிருந்து சுதந்திரமாக நிற்கும் கட்டமைப்பு கோயில்களுக்கு முன்னேற்றத்தை நிரூபிக்கிறது, மேலும் முதிர்ந்த திராவிட கட்டிடக்கலையின் அனைத்து கூறுகளையும் காட்டுகிறது. இது சிவன் மற்றும் விஷ்ணு இருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்ட புனித இடங்களுடன் மத நல்லிணக்கத்தைக் குறிக்கிறது, மேலும் பல்லவ அரசியல் மற்றும் பொருளாதார வலிமையின் முக்கிய அடையாளமாகவும் இருந்தது.புராணத்தின் படி, கடலில் உள்ள மாலுமிகள் மற்றும்வணிகர்கள் கோயிலின் சிகரங்களை தொலைவில் இருந்து கண்டறிந்து, வளமான துறைமுக நகரமான மகாபலிபுரத்திற்கு தங்கள் வருகையைக் குறிக்க அந்த கம்பீரமான கோபுரங்களைப் பயன்படுத்தலாம். இந்த வழியில், கோயில் சிவன் மற்றும் விஷ்ணு கடவுள்களுக்கான இல்லமாக மட்டுமல்லாமல், நிலப்பரப்பின் அம்சமாகவும், பெரிய பல்லவ மன்னர்களின் ஆதிக்கத்தின் சின்னமாகவும் இருந்தது.

Apr 19, 2024

Jagatpita Brahma Temple - ஜகத்பிதா பிரம்மா கோயில்

படைப்புக் கடவுள் பிரம்மா உயிரினங்களை படைக்கும்போதே அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தலை எழுத்தை எழுதி அனுப்புகிறார் எனப் புராணங்கள் கூறுகின்றன. சிவனின் அடி முடி காணும் போட்டியில் இவர் பொய் சொன்னதால், இவரது தலையெழுத்தை சிவன் தீர்மானித்தார். கோவில் இல்லாக் கடவுளாக இருக்கும்படி சபித்தார். ஆனாலும் ஒரு சிலப் பகுதிகளில் பிரம்மாவுக்கு சிவன் கோவில்களில் சிறிய அளவில் சன்னிதிகள் உண்டு. குறிப்பாக, தென்னகத்தில் இவறுக்கென சிறிய அளவிலான கோவில்கள் சில காணப்படுகின்றன. இப்படி ஒருசில கோவில்களிலேயே காணப்படும் பிரம்மாவிற்கு என பெரிய அளவிலான கோவில் ஒன்றும் உள்ளது, ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்த கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. வடஇந்திய மாநிலங்களில் ராஜஸ்தானின் சுற்றுலாத் தலங்களிலேயே தற்போது பிரசிதிபெற்றிருப்பது புஷகர் நகரம். இங்கேதான் பிரம்மாவிற்கான பழம்பெரும் கோவில் உள்ளது.ராஜஸ்தானின் அஜ்மேர் நகருக்கு அருகே உள்ள ஊர்தான் புஷ்கர். புஷ்கர கோவிலின் மூலவரே பிரம்மா தான். இந்தப் புஷ்கர் நகரில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் பெரியளவிலான திருவிழா கொண்டாடப்படுகிறது.இந்தப்புஷ்கர்நகரில்பிரம்மாண்டமான ஓர்ஏரியும்உண்டு.இதுசர்வதீர்த்தங்களுக்கும்ராஜாவானபுஷ்கரர்எனபக்தர்களால்போற்றப்படுகிறது இந்த கோயில் பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகச் சில கோயில்களில் ஒன்றாகும்.பிரம்மா, யாகம் செய்வதற்காக இடம் தேடி அலைந்தபோது, ஓரிடத்தில் சிந்தனையில் மூழ்கியிருந்தார். அப்போது அவருடைய கையில் இருந்த மலர் தரையில் விழுந்து ஏற்பட்ட அழுத்தத்தால் மூன்று இடங்களில் நீரூற்று பீறிட்டது. அவற்றில் தோன்றியதுதான் புஷ்கர் ஏரி, மத்திய புஷ்கர் ஏரி, கனிஷ்ட புஷ்கர் ஏரி என்ற மூன்று தீர்த்தங்களை உருவாக்கியது. அவற்றில் ஒன்று தான் பிரம்மா வேள்வி செய்த புஷ்கர். புனிதமாகக் கருதப்படும் புஷகர் ஏரியில் 52 படித்துறைகள் உள்ளன. இங்கு பக்தர்கள் எந்த நேரமும் புனித நீராடுவார்கள்.புஷ்கர் பகுதியில் நான்முகன் உலக நன்மைக்காக ஒரு யாகம் செய்ய திட்டமிட்டார். அதற்கு முன்னதாக யாகத்தை கொடியவர்களிடமிருந்து காக்க வடக்கே நீலகிரியையும், தெற்கே ரத்னகிரியையும், கிழக்கே சூர்யகிரியையும், மேற்கே சோன்சூர் என மலைகளை அரணாக அமைத்து யாகத்தையும் செய்து முடித்தார். யாகத்தில் பிரம்மாவின் மனைவியான சரஸ்வதி தேவி ஆஹூதி தரவேண்டிய நேரம் நெருங்கியமு. சரஸ்வதி தேவியோ அவ்விடத்தில் இல்லை. அவரின்றி இந்த கடுமையான யாகம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக அங்கிருந்த காயத்ரியை திருமணம் செய்து தனது யாகத்தை நிறைவு செய்தார் பிரம்மா. இதனிடையே அங்கு வந்த சரஸ்வதியோ கடுங்கோபத்தில் பிரம்மாவிற்கு இவ்வுலகில் வேறெங்குமே வழிபாடு இருக்கக் கூடாது என சபித்தார். மேலும் திருமணமான ஆண்கள் இத்தலம் வந்து வழிபட்டால் தோஷங்ம கொள்வார்கள் என்றும் சபித்தார். ஆனால், பிரம்மாவுக்கு புஷ்கரைத் தவிர வேறெங்கும் வழிபாடு இருக்காது என்றும், புஷ்கருக்கு வந்து வழிபடும் ஆண்களுக்கு எந்த தோஷமும் ஏற்படாது என்றும் சரஸ்வதியின் சாபத்தைச் சற்றே மாற்றியமைத்தார் காயத்ரிதேவி. இதனால் மேலும் கோபமடைந்த சரஸ்வதி அந்த இடத்தைவிட்டு வெளியேறி ரத்னகிரி மலையில் சாவித்ரி ஜர்னா என்னும் நீரூற்றாக உருவெடுத்து உள்ளது.புஷ்கரில் அமைந்துள்ள பிரம்மா கோவில் சிறப்பு நிறத்தில், கோபுர‌ங்களுடன் fட்சியளிக்கிறது. நுழைவுவாயிலில் நான்முகனின் வாகனமான அன்னம் அழகுடன் காட்சியளிக்கிறது. மூலவர் கருவறையில் பிரம்மா, காயத்ரி தேவியுடன் அருள்பாலிக்கிறார். பிரம்மா ஆலயத்தின் பின்புறம் உள்ள மலையின் மீது சரஸ்வதிக்கான கோவில் உள்ளது.ராஜஸ்தானில் இருந்து தெகனா - பெருந்தா சாலை வழியாக சுமார் 79 கிலோ மீட்டர் பயணித்தால் புஷ்கர் பிரம்மா கோவிலை அடையலாம். லம்போலய் சாலை வழியாக பயணித்தால் 114 கிலோ மிட்டர் பயணிக்க வேண்டும். மாநிலத்தில் பிரசித்தாமன ஆன்மீகத் தலம் என்பதால் எப்பகுதியில் இருந்தும் இக்கோவிலுக்கு வர பேருந்து வசதிகளும், தனியார் போக்குவரத்து வசதிகளும் உள்ளது. இதனருகே ஜெய்பூர் விமான நிலையம் சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவிலும், அஜ்மேர் ரயில் நிலையம் சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

Apr 12, 2024

லிங்கராஜா கோயில்

ஒடிசாவின் புவனேஷ்வரில் உள்ள இந்த ஆலயம் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். கலிங்க கட்டிடக்கலையின் சின்னமான இந்த கோயில் 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது, பின்னர் பதினொன்றாம் நூற்றாண்டில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இது சிவபெருமானுக்காக கட்டப்பட்ட கோயில் ஆகும்.புவனேஸ்வர் கோயில் நகரத்தின் மிகப்பெரிய மற்றும் மிகவும் புனிதமான ஆலயம் லிங்கராஜ் கோயில். இந்த கோயில் ஹரிஹரருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, அதாவது இது ஹரி(விஷ்ணு) மற்றும் ஹராசிவன்) ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த வழிபாட்டுத் தலத்தில்8 அடி விட்டம் மற்றும்8 அங்குல உயரம் கொண்டதாக நம்பப்படும் சுயம்பு(சுயரூபமான) சிவலிங்கம் உள்ளது. ஒரு கட்டிடக்கலை அதிசயம், லிங்கராஜ் கோயில் அம்சமாகும்; இருப்பினும், அதை இந்துக்கள் மட்டுமே பார்வையிட முடியும்.இந்துக்கள் அல்லாதவர்கள் இந்த அற்புதமான பழங்காலக் கட்டமைப்பைப் பார்ப்பதற்காக வளாகத்திற்கு வெளியே ஒரு தளம் கட்டப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள், ஆனால் அதன் வளாகத்தில் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடப்படும் மகாசிவராத்திரி மற்றும் அசோகாஷ்டமி போன்ற பண்டிகைகளில் இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.கலிங்க கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட இந்த கோவில், கோவிலின் சுவர்களில் நேர்த்தியாக செதுக்கப்பட்ட சிற்பங்களை கொண்டுள்ளது. ஒரு பெரிய பரப்பளவில் பரவியுள்ள இந்த கோவில் வளாகத்தில்150 சிறிய கோவில்களும் உள்ளன. பிரதான கருவறையின் கோபுரத்தின் உயரம் மிகவும் உயரமானது மற்றும் தூரத்திலிருந்து பார்க்க முடியும்.வரலாற்றுக் கணக்குகளின்படி, லிங்கராஜ் கோயில்11 ஆம் நூற்றாண்டில் சோம்வன்ஷி மன்னராக இருந்த ஜஜாதி கேஷாரி என்பவரால் கட்டப்பட்டது. இருப்பினும், கோயிலில் உள்ள சுயம்பு சிவலிங்கம்7ஆம் நூற்றாண்டில் கூட வழிபட்டதாக ஒரு நம்பிக்கை உள்ளது. புராண ஆய்வுகளின்படி, இந்த கோவிலின் பெயர் பிரம்ம புராணத்தில் உள்ளது, இது பிரம்மா கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பண்டைய இந்து வேதமாகும். சன்னதியின் ஒரு சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், இது இந்து மதத்தின் இரண்டு பெரிய பிரிவுகளான ஷைவம் மற்றும் வைஷ்ணவம் ஒன்றிணைவதைக் குறிக்கிறது.இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி, அசோகாஷ்டமி, சந்தன் யாத்திரை போன்ற விழாக்கள் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகின்றன. இவற்றுள் மகாசிவராத்திரி மிக முக்கியமானது; இது இந்து நாட்காட்டியின் பால்குன் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள்..பல பக்தர்கள் பகல் முழுவதும் விரதம் இருந்து இரவில் அதை உடைப்பார்கள், கோயிலின் மேல் ஒரு மகாதீபம்(பெரிய ஒளிரும் மண் விளக்கு) எழுப்பப்பட்ட பிறகு.சந்தன் யாத்திரை என்பது21 நாள் திருவிழாவாகும், இது அக்ஷய திரிதியாவின் புனித நாளில் தொடங்குகிறது. இந்த திருவிழாவின் போது,தெய்வங்களின் சிலைகள் பிந்து சரோவருக்கு எடுத்துச் செல்லப்பட்டு, சப்பா எனப்படும் அழகாக அலங்கரிக்கப்பட்ட குறுகிய படகுகளில் தண்ணீரில் ஊர்வலம் செய்யப்படுகிறது. பின்னர் சிலைகள் சந்தன் (சந்தனக் கட்டை) மற்றும் தண்ணீரால் புனிதப்படுத்தப்படுகின்றன.லிங்கராஜரின் வருடாந்திர கார் திருவிழா அல்லது ரத யாத்திரை அசோகாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி சைத்ரா மாதத்தின் (மார்ச்/ஏப்ரல்) எட்டு நாளில் இது மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது, ​​லிங்கராஜரின் சிலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ராமேஸ்வர் கோயிலுக்கு(மௌசி மா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது) கொண்டு செல்லப்படுகிறது. பிந்து சரோவரில் சடங்கு ஸ்நானத்திற்குப் பிறகு, நான்கு நாட்களுக்குப் பிறகு, தெய்வத்தின் சிலை லிங்கராஜ் கோயிலுக்கு மீண்டும் கொண்டுவரப்படுகிறது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

Apr 05, 2024

துர்கா கோயில் ஐஹொளெ ( Durga Temple Aihole )

வடக்குகர்நாடகாவின்ஐஹொளெவில்அமைந்துள்ளஇந்தகோயில்விஷ்ணுமற்றும்சிவனுக்குஅர்ப்பணிக்கப்பட்டுள்ளது,இதுசாளுக்கியர்களால்7அல்லது8ஆம்நூற்றாண்டுகளில்கட்டப்பட்டது.இங்கு‘துர்கா’என்றால்‘பாதுகாவலர்’என்றுபொருள்.ஐஹொளெவில் உள்ள துர்கா கோயிலுக்கு தெற்கே அமைந்துள்ள இந்த சிவன் கோயில் ஐந்தாம் நூற்றாண்டில் சாளுக்கியர்களால் கட்டப்பட்டது, இது லாட்கான் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு காலத்திற்கு முன்பு லாட்கான் என்ற நபரின் இல்லமாக இருந்தது. இது ஐஹொளெவின் மிக பழமையான கோயில்.ஐஹொளேவில் இருக்கும் இந்த கோயில் தற்போது துர்கை கோயில் என்று அழைக்கப்பட்ட போதிலும் இது சூர்யதேவனுக்காகவே எடுக்கப்பட்டுள்ளது. உருது மொழியில் துர்கம் என்றால் “அணுக முடியாத”. என்று பொருள் கூறப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்தே மலை மீது கட்டப்பட்டுள்ள கோட்டைகள் துர்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு அருகே பழைய கோட்டையின் சுவடுகள் இருப்பதால் இரண்டையும் இணைத்து துர்கம் கோயில் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவே காலப்போக்கில் துர்கை கோயில் என மாறியுள்ளது. கஜபிருஷ்ட அமைப்பில் கருவறை கட்டப்பட்டுள்ளது. கஜம்யானை: பிருஷ்டம்பின்புறம். யானையின் பின்புறத்தை போன்ற அமைப்பில் கட்டப்படுவது, தமிழில் இதை தூங்கானைமாடக் கோயில் என்று கூறுவார். இந்த கோயிலின் காலம் 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என கணிக்கப்பட்டு உள்ளது. கிடைக்கப்பெற்ற கல்வெட்டு ஒன்றின் மூலம் இந்த கோயில் சூர்யதேவனுக்காக “குமார” என்பவரால் கட்டப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. கருவறைக்கு மேல் சிதைந்த விமானம் காணப்படுகிறது. நாகர வகை விமானம் என இதை வகைப்படுத்தியுள்ளனர். முகமண்டபம், மகாமண்டபம், கருவறை ஆகியவற்றை கொண்டு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. முக மண்டப தூண்களில் நிறைய புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையைச்சுற்றி வர உள்ளேயே பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் தேவகோட்டங்களில் சிற்பங்கள், கல் சாளரங்கள் காணப்படுகின்றன. இதை ஜாலம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. தேவகோஷ்ட சுவர்களில் இருந்து சரிந்த கூரை பகுதியை தாங்கி நிற்கின்றன. வாதாபிகுடைவரையில் இருபத்து போலவே இங்கேயும் மச்ச சக்கரம், நாகராஜனின் சிற்பம் காணப்படுகிறது. வடகிழக்கில் ரிஷபாந்திகர் ( இடப அணுக்கர் ). தெற்கில் நரசிம்ம அவதாரம். தென் மேற்கில் கருடனின் மேல் அமர்ந்திருக்கும் விஷ்ணு. வட மேற்கில் வராகமூர்த்தி. வடக்கில் மஹிஷனை வதம் செய்யும் தேவி. வட கிழக்கில் ஹரிஹர மூர்த்தி என ஆறு தேவகோட்டச் சிற்பங்கள் இங்கே காணப்படுகிறது. சில கோட்டங்கள் வெற்றிடமாகவும் உள்ளன. தேவகோட்டங்களுக்கு இடையே உள்ள சுவர் பகுதியில் ஜாலங்கள் உள்ளது. தென் கிழக்கில் ஸ்வஸ்திக் சின்னம், தாமரைமலர். தெற்கில் செவ்வக வடிவ ஜாலத்தின் நடுவே பூக்கள், தென் மேற்கில் எட்டு ஆரங்கள் கொண்ட சக்கரம். வட மேற்கில் பன்னிரு ஆரங்கள் கொண்ட சக்கரம். வடக்கில் சதுர வடிவங்கள் போன்ற ஜாலங்கள் காணப்படுகின்றன. அலங்கரிக்கப்பட்ட கருவறை நுழைவு வாயிலின் இரு மருங்கிலும் சிற்பங்கள் காணப்படுகின்றன. கருவறையில் மூலவர் காணப்படவில்லை.ஐஹொளெவில் உள்ள துர்கா கோயிலுக்கு தெற்கே அமைந்துள்ள இந்த சிவன் கோயில் ஐந்தாம் நூற்றாண்டில் சாளுக்கியர்களால் கட்டப்பட்டது, இது லாட்கான் கோயில் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது ஒரு காலத்திற்கு முன்பு லாட்கான் என்ற நபரின் இல்லமாக இருந்தது. இது ஐஹொளெவின் மிக பழமையான கோயில்.

Mar 29, 2024

முந்தேசுசுவரி தேவி கோயில் (The Mundeshwari Devi Temple)

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இருக்கும் ஒரு கோவிலாகும். இம்மாநிலத்தின் கைமூர் மாவட்டத்தில் உள்ள கவுரா என்ற பகுதியில் இருக்கும் முந்தேசுவரி மலையில் இக்கோவில் அமைந்துள்ளது.இது பீகாரில் உள்ள மிகப் பழமையான கோயில்களில் ஒன்றாகும், இது சிவன் மற்றும் அவரது மனைவி பார்வதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கணக்கின்படி இந்த ஆலயம் கிபி108 ஆம் காலகட்டத்தைச் சேர்ந்தது. இது உலகில் பயன்பாட்டிலுள்ள பழமையான கோயிலாகவும் கருதப்படுகிறது இறைவன் சிவன் மற்றும் சக்தியை வழிபடும் புனித தலமாக அர்பணிக்கப் பட்டுள்ள இக்கோவில் இந்தியாவின் மிகவும் பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.பண்டைய காலத்திலிருந்து இன்றும் கூட செயல்பட்டுவரும் மிகப்பழமையான கோவில் என்றும் இதைக் கருதுகிறார்கள்.இக்கோவில் கி.பி.625 ஆம் ஆண்டு கட்டப்பட்டதென இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் அமைத்த தகவல்பலகை தெரிவிக்கிறது.இதை உறுதிபடுத்தும் வகையில் கி.பி.625 ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. இந்திய தொல்பொருள் ஆய்வுமையம் இக்கோவிலை ஒரு பழங்கால நினைவுச் சின்னமாக 1915 ஆம் ஆண்டு முதல் பாதுகாத்து வருகிறதுபாட்னா, கயா அல்லது வாரணாசி ஆகிய ஊர்களின் சாலை வழியாக முந்தேசுவரி கோவிலைச் சென்றடைய முடியும் மோகனியாபாபுவா சாலை இரயில் நிலையம் கோயிலுக்கு அருகில் உள்ள இரயில் நிலையமாகும். இந்த இரயில் நிலையத்திலிருந்து22 கிலோமீட்டர் தொலைவை சாலை வழியாகக் கடந்து கோயிலை அடையலாம். வாரணாசி நகரத்திலுள்ள லால் பகதூர் சாசுத்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம், இக்கோயிலுக்கு மிக அருகிலுள்ள விமான நிலையமாகும். இவ்விமான நிலையம் கோயிலிலிருந்து 102 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News