25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆன்மீகம்

Mar 22, 2024

Dwarakadhish Temple - துவாரகாதிஷ் கோயில்

துவாரகாதிஷ் கோயில் என்றும் அழைக்கப்படும் ஜகத் மந்திர் குஜராத்தின் மேற்கு கடற்கரையில் துவாரகாவில் அமைந்துள்ளது. இது கிருஷ்ணரின் மகன் வஜ்ரநாபாவால் சுமார்2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோவில் கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விஷ்ணுவின் எட்டாவது மற்றும் மிகவும் பிரியமான அவதாரமான ஸ்ரீ கிருஷ்ணர், துவாபர யுகத்தில் துவாரகா ராஜ்ஜியத்தை ஆண்டார். இந்த கட்டிடக்கலை அதிசயம் ஐந்து மாடி கட்டிடத்தில் வியக்க வைக்கும் எழுபத்திரண்டு தூண்கள் உள்ளன. இவை16 ஆம் நூற்றாண்டில் சாளுக்கிய கட்டிடக்கலை பாணியில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது .குஜராத்தில்அமைந்துள்ள துவாரகாதீசர் கோயில் நான்கு புனிதத்தலங்களில் ஒன்றாகும், மேலும் திருமாலின் 108திவ்யதேசங்களிலும்ஒன்றாகும்பெரியாழ்வார்,நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார்,திருமழிசையாழ்வார்,ஆண்டாள்ஆகிய5ஆழ்வார்களால்பாடல்பெற்றதலமாகும்.இந்தியாவின் நான்கு முக்கிய புனித யாத்திரைகளில் ஒன்றாகும். எனவே உங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த விஷ்ணு சிலையை தரிசித்து அமைதி மற்றும் அமைதியை அனுபவியுங்கள்.

Mar 20, 2024

மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோர் ஆகியோர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், (19.03.2024) தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோர் ஆகியோர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்., I A S., அவர்கள்  தலைமையில் நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையமானது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் 2024-க்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி 16.03.2024 முதல் தேர்தல் முடியும் வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தல் நடத்திட பேருதவி புரிகின்றன. தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரம், தொழில் செய்பவர்கள் செயல்பட வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அச்சகங்கள், நகை அடகு பிடிப்போர் மற்றும் திருமணம், தங்கு விடுதிகளுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதன்படி, அச்சக உரிமையாளர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் போது பின்பற்ற வேண்டிய விவரங்கள்:1. மக்கள் பிரிநிதித்துவ சட்டம் பிரிவு 127 ஏ ன் கீழ் தேர்தல் காலங்களில் அச்சக உரிமையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.2. தேர்தல் சமயங்களில் அடிக்கப்படும் அனைத்து போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவை எவையாயினும் அது எந்த அச்சகத்தால் அடிக்கப்பட்டது என்ற விபரம் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.3. அச்சடிக்கப்பட உள்ள போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் வாசகங்கள் எவையும் இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகவோ அல்லது தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையிலோ அமையக் கூடாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.4. அவ்வாறு அச்சடிக்கப்படும் நோட்டிஸ், பேனர் நகல் ஒன்றுடன், ஒரு உறுதி மொழி படிவத்துடன் மாவட்ட நீதிபதி /மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அறிக்கை அனுப்பி வைத்திட வேண்டும்.5. அவ்வாறு அச்சடிக்கப்படும் நோட்டிஸ், பேனர் ஆகியன நகல் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டாலும் அதுவும் சம்பந்தப்பட்ட அச்சகத்தின் பிரசுரமாகவே கருதப்படும்.6. அச்சடிக்கப்பட உள்ள போஸ்டர், துண்டு பிரசுரம், பேனர் போன்றவற்றின் சரியான எண்ணிக்கையை குறிப்பிட்டு பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். மேற்படி எண்ணிக்கையினை கூட்டியோ அல்லது குறைத்தோ காட்டக் கூடாது.7. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 127  மீறி செய்படும் எந்த ஒரு அச்சக உரிமையாளர் மீதும்  ஆறு மாதம் மற்றும் இரண்டாயிரம் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன் அச்சக உரிமையும் ரத்து செய்யப்பட வாய்புள்ளது.கல்யாண மண்டபங்கள் மற்றும் இதர சமுதாயக்கூடங்களின் உரிமையாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான அறிவுரைகள்1. தேர்தல் காலங்களில் முன்பதிவு செய்யப்படும் நிகழ்ச்சிகள் அரசியல் சார்பானவை மற்றும் சார்பற்றவை பிரித்துக்கொள்ள வேண்டும்.2. அரசியல் சார்பான நிகழ்ச்சிகள் எனில் காவல்துறை மற்றும் பிற அனுமதிகள் முறையாக பெறப்பட்டுள்ளனவா என்பதை  உறுதி செய்து கொள்ள வேண்டும்.3. நிகழ்ச்சி நடத்துவதற்கு பெறப்படும் உண்மையான கட்டண தொகை தெரிவிக்கப்பட வேண்டும். கூட்டியோ அல்லது குறைத்தோ தெரிவிக்கக் கூடாது.4. அரசியல் நிகழ்ச்சிகளில் பணமோ அல்லது பரிசு பொருட்களோ விநியோகம் செய்வதை கண்காணிக்க வேண்டும். அவ்வாறான நிகழ்வுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கும், காவல்துறையினருக்கும் தெரிவித்திடல் வேண்டும்.5. தனியார் நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நபர்களுக்கு பணமோ, பரிசு பொருட்களோ போன்றவை இலவசமாக விநியோக்கப்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான இனங்கள் எதுவும் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்6. திருமண மண்டபங்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் மொத்தமாக சாப்பாடு, பிரியாணி போன்றவை தயாரிக்க அனுமதிக்க கூடாது.7. திருமண மண்டபங்களில் வாக்காளர்களை கவரும் விதத்தில் பரிசு பொருட்களை சேகரித்து வைக்கும் குடோனாக பயன்படுத்திட அனுமதி இல்லை.8. தனியார் நிகழ்ச்சி என்ற பெயரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நபர்களுக்கு மொய் என்ற பெயரில் பணமோ, பரிசு பொருட்களோ போன்றவை இலவசமாக விநியோக்கப்பட வாய்புள்ளது. அவ்வாறான இனங்கள் கண்காணிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.9. திருமண மண்டபங்களில் நாளது தேதியிலிருந்து தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.10. வாக்குபதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வெளியூர் நபர்களை மொத்தமாக தங்க அனுமதிக்க கூடாது.11. மேற்கண்ட நிபந்தனைளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்புள்ளது என்ற விபரம்  தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான அறிவுரைகள்:1. தங்கும் விடுதிகளில் நாளது தேதியிலிருந்து தேர்தல் முடியும் வரை செய்யப்பட்டுள்ள முன்பதிவு விபரங்களை அறிக்கையாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியரிடம்  உடனடியாக தெரிவிக்க வேண்டும்.2. வாக்குபதிவு நடைபெறும் நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னர் வெளியூர் நபர்களை மொத்தமாக தங்க அனுமதிக்க கூடாது.3. வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணமோ அல்லது பரிசு பொருட்களையோ பதுக்கும் விதத்தில் செயல்படுவோரை கண்டறிந்து உடனடியாக தகவல் தெரிவித்திடல் வேண்டும்.மேற்கண்ட நிபந்தனைளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்புள்ளது என்ற விபரம்  தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.வட்டிக்கு விடுவோர் நகை அடகுதொழில் புரிவோர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான அறிவுரைகள்1. எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் நகை அல்லது பத்திரத்தின் பேரில் கணிசமான ரொக்க தொகையினை வழங்கிடுவதற்கு முன்னர் அவர் அரசியல் அல்லது வேட்பாளர் தொடர்புடையவரா என அறிந்து கொள்ள வேண்டும்2. வாக்காளர்களை கவரும் விதத்தில் டோக்கன் விநியோகத்தின் மீது பணமோ அல்லது பொருளோ கொடுத்திடக் கூடாது3. வாக்காளர்களை கவரும் விதத்தில் ஏற்கனவே அடகு வைக்கப்பட்ட நகைகளை இலவசமாக திருப்பி தருவதோ அல்லது சிறிய நகைகளுக்கு அதிக அளவு பணம் தருவதோ கூடாது4. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள காலங்களில் நடைபெறும் அனைத்து நடவடிக்கைளும் வெளிப்படை தன்மையுடனும் உரிய விதிமுறைகளின் படியும் நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு இனங்களும் அதற்குரிய பதிவேட்டில் சரியாக பராமரிக்கப்பட்டு இருக்க  வேண்டும்.மேற்கண்ட நிபந்தனைளை மீறுவோர் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் உரிமை ரத்து செய்யப்படவும் வாய்புள்ளது என்ற விபரம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேற்சொன்ன விதிமுறைகளின் படி மக்களவைத் தேர்தல் நேர்மையாகவும் சுமூகமாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறும், நடைமுறைகளை மீறும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) மரு.பிர்தௌஸ் பாத்திமா மற்றும் அனைத்து திருமண மண்டபங்கள், அச்சக, தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் மற்றும் நகை அடகுதொழில் புரிவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Mar 15, 2024

Virupaksha Temple: - விருபாக்ஷா கோயில்:

கர்நாடக மாநிலத்தின் ஹம்பியில் தும்பபத்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ள விருபாக்ஷா கோயில், ஹம்பியில் உள்ள கோயில்களில் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில், சிவபெருமானுக்கு விருபாக்ஷா என்னும் பெயரில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.ஹம்பியின் துங்கபத்திரை ஆற்றின் கரையில் ஹேமகுடா மலை அடிவாரத்தில் விருபாட்சர் கோவில் அமைந்துள்ளது. கோவில் அருகிலேயே துங்கபத்ரா ஆறு செழிப்பாக ஓடுகிறது. ஹம்பியைச் சுற்றியுள்ள இடிபாடுகளின் நடுவே இக்கோவில் இன்னும் அழகாக உள்ளது. சுமார் 50 மீ. உயரத்தில் அமைந்துள்ள இக்கோவில்இராஜகோபுரத்தின் நிழல் ஒரு துழையின் வழியே இங்குள்ள ஒரு சுவற்றின் மேல் தலை கீழாகத் தெரிவது விந்தையிலும் விந்தையாகும்.ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில்யுனெஸ்கோ உலகப் பாரம்பரியக் களங்களில் (UNESCO World Heritage Site) ஒன்றாக உள்ளது. கோவில் திறந்திருக்கும் நேரம்: 9:00 AM – 1:00 PM 5:00 PM – 9:00 PMஹோஸ்பெட்டிலிருந்து11 கி.மீ தொலைவிலும்; மாவட்டத் தலைநகர் பெல்லாரியிலிருந்து62 கி.மீ. தொலைவிலும்; பட்டடக்கல்லு 108 கி.மீ. தொலைவிலும்; ஐஹோளே109 கி.மீ. தொலைவிலும்; பாதாமி118 கி.மீ. தொலைவிலும்; மாநிலத் தலைநகர் பெங்களூருவிலிருந்து339 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சாலை வழியாக ஹோஸ்பெட், பெல்லாரி மற்றும் பெங்களூருவிலிருந்து ஹம்பியை அடையலாம்..இக்கோவில் விருபாட்சருக்கும்(சிவனுக்கும்) பம்பாதேவி அம்மனுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. விருபாட்சருக்கு பம்பாபதி என்ற பெயர் உள்ளபடியால் இக்கோவில் பம்பாபதி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. பம்பா என்ற பெயர் மருவி ஹம்பி என்று அழைக்கப்படுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. விருபக்ஷர் விஜயநகரப் பேரரசர்களின் குலதெய்வமும் காவல் தெய்வமும் ஆவர். எனவே இக்கோவில் விஜயநகர அரச வம்சத்தவர்களால் புனிதம் மிக்க கோவிலாகக் கருதப்பட்டதுகருவறையில் விருப்பாக்ஷருக்கு எதிரே நந்தியம்பெருமானின்மூன்று சிலைகள் அமைந்துள்ளன. அக்காலத்தில்மூன்று தலை ஓர் உடலுடன் நந்தியம்பெருமான் அதீத சக்தியுடன் திகழ்ந்தாராம். மாலிக்காபூர் படையெடுப்பின் போதுநந்தியின் முகத்தையெல்லாம் சிதைத்து விட்டபடியால் மூன்று தனித் தனி நந்திகளைப் புதிதாக அமைத்துள்ளார்களாம்.பிராகரத்தைச் சுற்றி பாடலேஸ்வரர் முக்தி நரசிம்மர் மஹிஷாசுர மர்த்தினி முதலிய சன்னதிகள் பாதி சிதைந்த நிலையில் உள்ளன. இது மட்டுமின்றி சப்தமாத்ரிகா, சூரியநாராயணா, தரகேச்வரா, சரஸ்வதி, வித்யாரண்யா, பார்வதி, புவனேச்வரிஆகிய துணை தெய்வங்களுக்குச் சன்னதிகள் உள்ளன. இவற்றுள் பார்வதி மற்றும் புவனேச்வரி சன்னதிகள் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை ஆகும். வித்யாரண்யர் சிலை கி.பி.20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சபா மண்டபம் என்ற அரங்க மண்டபம் கிருஷ்ணராய தேவராயரால் கி.பி.1510 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்குச் சான்றாக பல விஜயநகர கட்டிடக்கலைக் கூறுகளை கொண்டு அமைந்துள்ளது. சங்கீத மண்டபம் சன்னதிக்கு எதிரே உள்ள56 தூண்கள் ஒவ்வொன்றும் தட்டினால் வெவ்வேறு இசைக் கருவிகளின் ஒலி வரும்படி கட்டப்பட்டுள்ளது. தூண்கள், கோவில் மடைப்பள்ளி, விளக்குத்தூண்கள், கோபுரங்கள் போன்ற எல்லா அம்சங்களும் பின்னாளில் சேர்க்கப்பட்டுள்ளன.

Mar 08, 2024

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பள்ளியறை பூஜை தரிசனம்

சிவாலயங்களில் தினசரியும் இரவு நேரத்தில் கோயில் நடை சாற்றப்படுவதற்கு முன் நடைபெறுகின்ற பூஜை பள்ளியறை பூஜை. சுவாமியையும் அம்பாளையும் பள்ளியறையில் ஊஞ்சலில் ஒருசேர அமர வைத்து ஆராதனை செய்து தாலாட்டுப் பாடி பூஜை செய்வார்கள். இந்த பள்ளியறை பூஜையை தரிசனம் செய்தால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பலன்கள் கிடைக்கும்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி பங்கேற்கப் போகிறார். இந்த பூஜையில் பங்கேற்று அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்தால் பல்வேறு சிறப்புகள் தேடி வரும். சிவன் சக்தி ஐக்கியத்தை உணர்த்தும் இந்த பள்ளியறை பூஜையை தம்பதிசமேதராககாண்பவர்களின்குடும்பங்களில்ஒற்றுமைஅதிகரிக்கும்.எல்லா கோவில்களையும் போல, மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும்போல பள்ளியறை அம்மன் சன்னதியில் இருக்கிறது. இரவு அர்த்த ஜாமத்தில் மல்லிகை பூவால் கூடாரம் அமைத்து வெண்தாமரைகளால் மீனாட்சியின் பாதங்கள் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டால் அம்மனை அலங்கரித்து கிடைக்கும் அன்னையின் திருக்காட்சி காண கண்கோடி வேண்டும்.இரவு பள்ளியறைக்கு சுந்தரேஸ்வரரின் வெள்ளிப் பாதுகைகள் ஸ்வாமி சன்னதியில் இருந்து பள்ளியறை வரும். பாதுகைகள் வந்த பின் அன்னைக்கு விசேஷ ஆரத்தி அதாவது மூக்குத்தி தீபாராதனை நடக்கிறது. உள்ளே இருக்கும் பெரும்பாலான வண்ணம் வெள்ளை. எனவேதான் அன்னையின் மூக்குத்தியை மிக தெளிவாக தரிசிக்க முடியும். அத்தோடு மூன்று வகையான தீபங்கள் காட்டப்படும் அதில் கடைசி தீபம் அம்மனின் முகத்திற்க்கு மிக அருகில் காட்டுவார்கள். அவ்வாறு காட்டப்படும் போது மிக தெளிவாக அம்மனின் திருமுகத்தினை தரிசிக்கலாம். மீனாட்சியின் மாணிக்க மூக்குத்தியை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைக்கும். மூன்றாவது தீபாராதனைக்குப் பிறகு அன்னையின் சன்னதியில் திரை போடப்படும். அவ்வாறு திரையிட்ட பின்னர் அன்னையின் மூக்குத்தி பின்புறமாக தள்ளப்பட்டு விடும்.மூக்குத்தியானது ஒரு செயினுடன் இணைக்கப்பட்டு அந்த செயினின் இன்னொரு பகுதி அம்மனது பின்புறத்தில் இணைக்கப்பட்டு இருக்கும். இவ்வாறு செய்த பிறகே அன்னையின் சார்பாக அன்றைய கட்டளைக்கான பட்டர் ஈசனை வரவேற்று பள்ளியறைக்கு எழுந்தருளச் செய்வார்.அதாவது மூலஸ்தானத்தில் இருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு பாதபூஜை செய்து பள்ளியறைக்கு அழைத்துச் செல்வதாக ஐதீகம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் இந்த பள்ளியறை பூஜை பார்க்கப் பார்க்கத் திகட்டாத காட்சியாகும் பள்ளியறை பூஜை சிவ சக்தி ஐக்கியத்தை உணர்த்துவதால் இந்த தரிசனத்திற்கு சிறப்பு அதிகம். கணவன் மனைவி ஒற்றுமைக்கு மதுரை மீனாட்சி கோவிலில் தினமும் நடைபெறும் பள்ளியறை பூஜையை தரிசித்தால் நல்ல பயனைக் கொடுக்கும் என்பதும் மீனாட்சி கோவிலில் மறைந்துள்ள பள்ளியறை பூஜை தரிசன ரகசியமாகும். பள்ளியறை பூஜைக்கு பல்லக்கில் சிவன் நகர்வலம் வரும் போது சிவபுராணம் படிக்க வேண்டும். பள்ளியறை பூஜையை தினம் தினம் தரிசனம் செய்தாலே வளமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம். பள்ளியறை பூஜைக்கு பல்லக்கு தூக்கி சுமக்கும் பாக்கியம் பெற்றவர்கள் ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிபதிகளாக மாறுவார்கள். பள்ளியறை பூஜையில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வேலை அல்லது தொழில் செய்து வருபவர்கள் ஒரு வருடம் வரை தினமும் பள்ளியறை பூஜையை தரிசித்து வருவதன் மூலமாக வேலையில் இருந்த பிரச்சினைகள் விலகிவிடும். தொழிலில் படிப்படியான வளர்ச்சியைக் காணலாம். பள்ளியறை பூஜைக்கு பூக்கள் கொடுப்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். பள்ளியறை பூஜைக்கு நெய், நல்லெண்ணெய் கொடுப்பவர்களுக்கு கண் பிரச்சினைகள் தீரும் என்பது நம்பிக்கை. பள்ளியறை பூஜையிலும், அதன் நிறைவுப் பகுதியிலும் அன்னதானம் செய்பவர்கள் தொழிலில் அமோக வளர்ச்சியை அடைவர். பல மடங்கு லாபம் அவர்களைத் தேடி வரும்.

Mar 06, 2024

மஹாசிவராத்திரி அன்று  சிவனின் ஆசி பெற இந்தச்  செடிகளை வீட்டில் நடுங்கள்

மகாசிவராத்திரி மார்ச் 8th2024 அன்று கொண்டாடப்படுகிறது.மஹாசிவராத்திரிஅன்று சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணம் நடந்ததாக ஒரு மத நம்பிக்கை உள்ளது.சிவபெருமானையும், அன்னை பார்வதியையும் வழிபடுவதும், சதுர்த்தசி அன்று விரதம் இருப்பதும் மரபு.சிவபெருமானின் ஆசீர்வாதத்தைப் பெற , மஹாசிவராத்திரியின் போது சில சிறப்பு தாவரங்களை வீட்டில் நட்டு வையுங்கள்.இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது. மேலும், வீட்டில் சந்தோஷமும், நிம்மதியும், செழிப்பும் நிலைத்து இருக்க உதவுகிறது.வீட்டில் ஊமத்தம் செடியை நடுவதால் மகிழ்ச்சியும் செழிப்பும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.சிவபெருமான் வில்வம் இலைகளை விரும்புபவர். ஜோதிட சாஸ்திரப்படி, இந்த செடியை வீட்டின் வடக்குதெற்கு திசையில் நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது.சிவலிங்கத்தின் மீது வில்வ இலைகளை சமர்பிப்பதன் மூலம், சிவபெருமான் மகிழ்ச்சியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தை பரிபூரணமாக வழங்குவார் என்பது நம்பிக்கை.சிவபெருமானுக்கும் வன்னி செடி மிகவும் பிடித்தமானது. அத்தகைய சூழ்நிலையில், மஹாசிவராத்திரியின் போது, நீங்கள் வீட்டில் ஒரு வன்னி மர செடியை நடலாம்.சிவபெருமானை மகிழ்விக்க, பூஜையின் போது வன்னி இலைகள் மற்றும் மலர்களை அர்ப்பணிக்க வேண்டும் என்பது சிவனின் விருப்பம் ஆகும்.     

Mar 01, 2024

கேதார்நாத்கோயில்

கேதார்நாத்கோயில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் என்னும் பகுதியில் இருந்துசுமார் 223 கி.மீ தூரத்தில் 11,755 அடி உயரத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் உள்ள கர்வால் இமயமலையின் எல்லையில் அமைந்துள்ளது. கோயிலானது கடுமையான தட்ப வெட்ப நிலையைக்கொண்டுள்ளதால் ஏப்ரல் மாதத்தின் இறுதியில் (அக்ஷ்ய திரிதியில்) இருந்து நவம்பர் மாதத்தின்கார்த்திகை பௌர்ணமி (இலையுதிர் காலத்தின் முழு நிலவு) வரைஎன ஆறு மாதங்கள் மட்டுமேதிறந்திருக்கும்.மற்ற மாதங்களில் கோயிலின்சிலைகளைக் குப்தகாசியின் உகிமத் என்னும் இடத்திற்குக்கொண்டு சென்று வழிபடுவது நடைமுறையாகஉள்ளது. இக்கோயிலை அடைய 14 கி.மீ. நடைப்பயணமாகவோ அல்லது குதிரைவண்டியிலோ அல்லதுபல்லக்குச் சேவைகளின் மூலமாகவோ மேற்பகுதிக்குச் செல்ல வேண்டும்.மகாபாரதப்போரின் விளைவாக பாண்டவர்கள் தன்உறவினர்களையும் ஏராளமான உயிர்களையும் கொன்றதால் தங்களுக்கு ஏற்பட்ட பாவங்களிலிருந்து விடுவித்துக்கொள்ள சிவ பெருமானைத் தேடிஒரு பயணத்தை மேற்கொண்டனர். இறுதியாகஅவர்கள் கேதார்நாத் பகுதியில் வந்தடைந்த போது அங்கு ஒருபெரிய அளவிலான காளை எருமையைக்கண்டார்கள். அந்த எருமையானது பீமனுடன்சண்டையிட்டது. அச்சண்டையில் பீமன் அந்த எருமையின்வாலைப்பிடித்துஇழுத்துசண்டையிட்டபோதுஅந்தஎருமைஇரண்டாகபிரிந்தது.பிரிந்த எருமையின் முன் பகுதியானது நேபாளத்தில் உள்ள சிபாடோல் என்னும் பகுதியில் விழுந்தது அந்த பகுதி தற்போது டோலேஷ்வர் மகாதேவ் கோயிலாக உள்ளது. அந்த எருமையின் பின்பகுதி விழுந்த இடம் கேதார் பகுதியாகும் அதுவே தற்போது கேதரேஸ்வரர் ஆலயமாக மாறியுள்ளது. அந்த சண்டையின் இறுதியில் கேதார்நாத் பகுதியில் சிவபெருமான் ஒரு முக்கோண வடிவ லிங்கமாக பாண்டவர்களின் முன்பு தோன்றினார். பீமன், தாம் சிவனுடன் சண்டையிட்டோம் என்பதை உணர்ந்து மிகுந்த வருத்தத்திற்கு உள்ளாகி சிவபெருமானிடம்மன்னிப்புகேட்டார்.பாண்டவர்களின் பாவத்தைப் போக்கிய சிவபெருமான் கேதரேஸ்வரராக பாண்டவர்களிடம் என்னுடைய பக்தர்கள் இங்கு பக்தியோடு வந்து தரிசனம் செய்தால் என் அருளைப் பெறுவார்கள் என்று கூறி மறைந்தார்.முதன்முதலில் இந்த இடத்தில் கோயிலை அமைத்த பெருமை இங்கு தவம் செய்த பாண்டவர்களையே சாரும். அதன் பிறகு இந்த கோயில் அர்ஜுனனின் பேரன் ஜனமேஜயா என்பவரால் மேலும் பிரமாண்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டது. தற்போது அமைந்துள்ள கட்டிட அமைப்பானது கி.பி8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரரின் வருகையின் போது கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஆராய்ச்சியாளர்களின் லிச்செனோமெட்ரிக் டேட்டிங் செயல்முறை மூலம் நிறுவுவது என்னவென்றால் இந்த கோயில் கிபி14 ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்திலிருந்து1748 ஆம் ஆண்டு வரை பனி காலத்தின் உக்கிரமான வீரியத்தால் சுமார் நான்கு நூற்றாண்டுகள் பனி முழுவதும் சூழ்ந்து இக்கோயிலானது மூடப்பட்டிருந்தது.தரையிலிருந்து ஆறு அடி உயர மேடையில் இந்த கோயிலானது கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கோயில் சுமார்85 அடி உயரமும்187 அடி நீளமும்80 அடி அகலமும் கொண்டது. கோயிலின் சுவர்கள்12 அடி தடிமன் கொண்டவையாகவும் வலுவான கற்களைக் கொண்டும் கட்டப்பட்டுள்ளன. இந்த கோயிலில் கர்ப்பக்கிரகமும் ஒரு மண்டபமும் உள்ளன. மேலும் முன்புறத்தில் நந்தி சிலை அமைந்துள்ளது.கோயில் அமைந்துள்ள பகுதியானது செங்குத்தான பாறைகள் நிறைந்ததாகவும் மற்றும் பனிப்பாறைகள் சூழப்பட்டதாகவும் உள்ளது. ஆதிசங்கரர் இந்த கேதார்நாத்தில் தான் மகா சமாதி அடைந்தார் என்றும் கூறப்படுகிறது. கோயில் வளாகத்தின் பின்னால் அவருடைய சமாதிக்கு ஒரு சன்னதியும் உள்ளது.இமய மலையின் எல்லையில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் பல இயற்கை சீற்றங்களைக் கண்டுள்ளது. ஆனாலும் இந்த கோயிலைச் சிறு துரும்பும் அந்த சீற்றங்களால் அசைக்க முடியவில்லை.

Mar 01, 2024

பழனி முருகன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

மாசி மகத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி பழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டு மாசி மகத்தையொட்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் உள்ள பாரவேல் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களை சங்குகளில் வைத்து உலக நலன், அமைதி மற்றும் விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர் யாகபூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் உச்சிக்காலத்தில் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

Feb 23, 2024

கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் ஆலயம்

கும்பேசுவரர் கோயில் தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில்சோழர்களால் சிவனுக்காக கட்டப்பட்ட இந்த கோயில் அமைந்துள்ளது. இது சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மகாமகம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோயில்30,181 சதுர அடி(2,803.9 சதுர மீட்டர்) பரப்பளவுடையது. மேலும்1300 ஆண்டுகள் பழமையானது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் இங்கு சிறப்பாககொண்டாடப்படுகிறது.  பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி இறைவன் தந்த அமுதகலசம் தங்கியதால் இத்தலம் கும்பகோணம் எனப் பெயர் பெற்றதென்பது தொன்நம்பிக்கை. கும்பத்தில் இருந்த அமுதத்தினின்றும் வெளிப்பட்டவராதலால், இக்கோவிலில் குடிகொண்டுள்ள இறைவன் கும்பேசர் என அழைக்கப்படுகிறார். இவ்வரலாற்றைக் கும்பகோணத் தலபுராணம் கூறுகிறது. பிரளய காலத்தில் மிதந்துவந்த அமுத கும்பத்தின் மூக்கின் வழியே அமுதம் பரவியதால் குடமூக்கு என்று சொல்லப்படும் இக்கோயில் ஏற்பட்டது. அமுத குடத்தை அலங்கரித்திருந்த பொருள்களான மாயிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல், முதலிய பொருள்கள் காற்றினால் சிதைக்கப்பட்டு, அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய்க் காட்சியளித்தன. அவை தனிக்கோயில்களாக விளங்குகின்றனஇத்தலத்து இறைவன் ஆதிகும்பேஸ்வரர், அமுதகும்பேஸ்வரர், அமுதேசர் என அழைக்கப்படுகிறார். உலகிற்கு ஆதிகாரணமாகிய பராபரம் கும்பத்தில் இருந்து தோன்றியதால் ஆதிகும்பேசுவரர் என்றும், நிறைந்த அமுதத்திலிருந்து உதித்ததால் அமுதேசர் என்றும் அழைக்கப்படுகின்றார். திருஞானசம்பந்தர் தாம் பாடிய பதிகத்தில் இறைவனை குழகன் என்றும் காட்டுகின்றார். சிவபெருமான் வேடர் உருவத்தில் தோன்றி அமுத கும்பத்தை அம்பால் எய்தபோது கிராதமூர்த்தி என்ற(வேடர்) பெயரைப் பெற்றார். மகா பிரளயத்திற்குப் பிறகு படைப்புத் தொழிலை பிரம்ம தேவன் தொடங்குவதற்கு, இறைவர் இத்தலத்தில் எழுந்தருளி லிங்கத்துள் உறைந்து சுயம்பு வடிவானவர்.இத்தலத்து இறைவி மங்கள நாயகி, மந்திர பீடேசுவரி, மந்திரபீட நலத்தள், வளர்மங்கை என அழைக்கப்படுகிறார். தம்மை அன்போடு தொழுவார்க்குத் திவ்விய மங்களத்தை அருளும் மாட்சியமையால் மங்களநாயகி என்றும், சக்திபீடங்களுள் ஒன்றான மந்திரபீடத்தில் விளங்குவதால் மந்திர பீடேசுவரி என்றும், தம் திருவடிகள் அடைந்தவர்களுக்கு மந்திரபீடத்தில் இருந்து நலம் தருதலால மந்திரபீட நலத்தள் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தம்மை வணங்குவோருடைய நோய்களைப் போக்கச் செய்வதால் நோயறுக்கும் பரை என்றப் பெயரும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தர் இத்தல அம்பாளை வளர்மங்கை என தேவாரப்பதிகத்தில் குறிக்கின்றார். இறைவன் திருச்செங்கோட்டுத்தலத்தில் தம்முடைய சரீரத்தில் பாதியை அம்பாளுக்கு அளித்தது போன்று, இத்தலத்தில் தம்முடைய 36,000 கோடி மந்திர சக்திகளையும் அம்பாளுக்கு வழங்கியதால் அம்பாள் மந்திரபீடேசுவரியாகத் திகழ்கின்றாள். அத்துடன் தமக்குரிய36,000 கோடி மந்திர சக்திகளையும் சேர்த்து, இந்தியாவிலுள்ள சக்திபீடங்களுக்கும் முதன்மையான சக்திபீடமாகி,72,000கோடி சக்திகளுக்கு அதிபதியாக அருள்பாலிக்கின்றாள். அம்பாளின் உடற்பாகம் பாதநகம் முதல் உச்சிமுடி வரை51 சக்தி வடிவ பாகங்களாகக் காட்சியளிக்கின்றன. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளனர். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை இத்தலத்தைப் பற்றி திருக்குடந்தைப்புராணம் என்ற நூலை எழுதியுள்ளார்.இக்கோயிலில் உள்ள விநாயகர், சுப்ரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகள் தேரில் எழுந்தருளி இரு நாள்கள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.1988க்குப் பிறகு இந்த ஐந்து தேர்களும் சேதமடைந்து ஓடாமல் இருந்தன. கடந்த2002 முதல் ஆண்டுதோறும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.இக்கோயிலின் உட்பிரகார வாயிலின் நிலைக்காலில் காணப்படுகின்ற செவ்வப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்திய(விக்கிரம ஆண்டு ஆடி மாதம்22ஆம் நாள் எழுதப்பட்ட) கல்வெட்டு அமைந்துள்ளது. 

Feb 16, 2024

Chennakesava Temple - சென்னக்கேசவ ஆலயம்

கர்நாடக மாநிலத்தின் பேளூரில் யாகாச்சி ஆற்றங்கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இது ஹோசளப் பேரரசினால் 10 மற்றும் 11ஆம்நூற்றாண்டுக்குஇடையில்ஹோய்சாலமன்னனான விஷ்ணுவர்த்தனனால்  கட்டப்பட்டது‌.இம்மன்னர் பஞ்ச நாராயண ஆலயங்கள் அமைத்தவர் விஷ்ணு பகவானுக்காக உருவாக்கப்பட்டஇந்தகோயில்சோப்புக்கல்லினால் கட்டப்பட்டதுவிஜயநாராயணர் கோயில் என முன்னர் அழைக்கப்பட்ட சென்னகேசவர் கோயில், ஹோய்சாலப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய பேளூரில், யாகாச்சி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சென்னகேசவர் என்பது அழகிய கேசவர் எனப் பொருள்படும். இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், ஹாசன் மாவட்டத்திலுள்ள, ஹாசன் நகருக்கு 40 கிமீ தொலைவிலும், பெங்களூரில் இருந்து 220 கீமீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது கட்டப்பட்டதன் காரணம் தொடர்பாக வரலாற்றாளர்களிடையே பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. விஷ்ணுவர்தனனின் போர் வெற்றியைக் குறிக்கவே இது கட்டப்பட்டது என்னும் கருத்தே பெரிதும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற கருத்தாக உள்ளது. இக் கோயில் வளாகத்தின் தலை வாயிலில் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் கட்டப்பட்ட இராசகோபுரம் அமைந்துள்ளது. ஆலயத்தின் கட்டட நுணுக்கத்தை வெளிப்படுத்தும் தூணாக இது உள்ளது. நாற்பது அடி உயர கற்கம்பம், பீடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது. கற்கம்பத்திற்கும் பீடத்திற்கும் இடையே இடைவெளியுள்ளது. ஒரு பக்கமிருந்து பார்த்தால் மறுபக்கம் தெரியும். ஒரு தாளை மடித்து இடைவெளியில் விட்டு வெளியே அம்மூலையிலும் எடுக்க முடியும். ஆனால் கற்கம்பம் பீடத்தோடு ஒட்டாமல் நிற்பது புரியாத விதமாக உள்ளது.இத்திருக்கோயிலின் முன்மண்டபத்தில் கண்ணாடி அலமாரியில் பசவபட்டணர், சஸ்லே ஹள்ளி எனும் ஊர் செருப்பு தைப்பவர்கள் காணிக்கையாக வைத்துள்ள செருப்பு உள்ளது. இந்த செருப்பு நாலடி நீளத்தில் இரண்டடி உயர்த்தில் உள்ளது..இவர்கள் கனவில் பெருமாள் வந்து செருப்பு தேய்ந்து விட்டது வேறு செருப்பு தைத்துத் தர வேண்டும் என்று கூறும் போது கிராம மக்கள் ஊரில் பொது இடத்தில் குங்குமத்தைப் பரப்புவார்கள். அதில் பெருமாளின் பாதம் பதியும் எனவும் அந்த அளவுக்கு செருப்பு தைத்துக் கொணர்ந்து பெருமாளுக்கு காணிக்கையாக வைப்பார்களாம்.இவ்வாறு அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட செருப்புகள் இன்னமும் உள்ளன.

Feb 09, 2024

சோம்நாத் கோயில்

ஏழாம் நூற்றாண்டில் சிவனுக்காக கட்டப்பட்ட இந்த ஆலயம் குஜராத்தில் அமைந்துள்ளது. இது பனிரெண்டு ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாகும். முதன்முதலில் இந்த கோயில் ஷியுனா மரபினரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் பலமுறை அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் சீரமைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இறுதியாக பிரபல மன்னர் கஜினி முகமதுவால் கி.பி1024ஆம் ஆண்டு சிதைக்கப்பட்டதுசோமநாதர் கோவில், கிருஷ்ணர் தனது லீலாவை முடித்துவிட்டு, பின்னர் சொர்க்கவாசலுக்குச் சென்ற இடமாக நம்பப்படுகிறது. சோமநாத்தில் உள்ள முதல் சிவன் கோவில் கடந்த காலத்தில் அறியப்படாத நேரத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. சோம்நாத் கோவில் சிறந்த கட்டிடக்கலை மாதிரியாகும். கஜினி முகமதுவால் ஆப்கானிஸ்தானுக்கு எடுத்துச் செல்லப்பட்ட சோமநாதர் கோயிலின் சந்தனக் கதவுகளை ,மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவர1842 ஆம் ஆண்டில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் லார்டு எல்லன்பரோ(LordEllenborough) முயன்றார்.இதனால் ஆங்கிலேயரின் பலவிதமான கண்டனங்களும் தமது தாய்நாட்டின் மதத்திற்கு துரோகம் செய்வதாகவும், சிவலிங்க வழிபாட்டுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.ஏழாம் முறையாகவும், இறுதியாகவும், விடுதலை பெற்ற இந்தியஅரசின்   உள்துறைஅமைச்சரும்துணை பிரதமராக இருந்த சர்தார்வல்லபாய்பட்டேலும் உணவு அமைச்சராக இருந்த கேஎம்முன்ஷியும்(KannaiyalalMaaanekialMunshi) இணைந்து பொது மக்களிடம் நிதி திரட்டி, சோமநாதரின் ஆலயத்தை மீண்டும் கட்டத் துவங்கினர். முதலில் பழைய சோமநாதபுரம் கோயில் இடிபாடுகளை அக்டோபர் மாதம்,1950இல் அகற்றினர். சோமநாதபுரம் கோயிலை இடித்துக் கட்டிய இடத்தில் இருந்த மசூதியை சில மைல் தூரத்திற்கு அப்பால் இடம் மாற்றி அமைத்தனர். சோமநாதபுர கோயிலைப் மறுநிர்மாணம் செய்ய மே மாதம்1951ல், இந்தியகுடியரசுதலைவர் டாக்டர். இராஜேந்திரப்பிரசாத்தலைமையில், புதிய கோயிலுக்கு அஸ்திவாரக்கல் நடப்படும் விழா நடைபெற்றது. புதிதாக கட்டப்பட்ட சோமநாதரின் ஆலயம் சங்கர்தயாள்சர்மாதலைமையில் சனவரித் திங்கள்1ஆம் நாள்,1995ஆம் ஆண்டு பொது மக்களின் வழிபாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.  

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News