ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சிமலையையொட்டி உள்ள விவசாய நிலங்களில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் அதிக அளவிலான மாம்பழ விளைச்சல் இருக்கும். இந்த மா விளைச்சலை நம்பி விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர். இதில் சப்பட்டை, பஞ்சவர்ணம் போன்ற மாம்பழங்கள் மிகுந்த சுவை உடையது. ராஜபாளையத்தில் மாம்பழ வரத்து அதிகரித்து, சந்தைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் கிளிமூக்கு, சப்போட்டா, மற்றும் கானாரூஸ் வகைகள் உள்ளிட்ட சுவையான மாம்பழங்கள் அதிகளவில் விற்பனைக்குக் குவிந்துள்ளன.நடுத்தரமாம்பழங்கள்ஒருகிலோரூ.70க்கும், நன்குவிளைந்தமாம்பழம்கிலோரூ.100க்கும்விற்பனைசெய்யப்படுகிறது. ராஜபாளையத்தில் விளையக்கூடிய மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும், அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் மாம்பழத்தை வாங்கி செல்கின்றனர்.
புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்காண சித்திரை திருவிழா கடந்த 21-ந் தேதி பூக்குழி திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங்கியது.தினமும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் பல்வேறு அலங்காரத்துடன் சுவாமிஊர்வலம் நடைபெற்றது. 10-வது நாள் திருவிழாவான பூக்குழி திருவிழாநேற்று நடை பெற்றது. கோவிலில் பக்தர்கள் அழகு குத்துதல், அக்னி சட்டி முளைப்பாரி ஊர்வலம்சென்றனர். பின்னர் காப்பு கட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களைசெலுத்தினர்.மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள், இதையடுத்து மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது பின்னர் அம்மன் சப்பரம் உலா வந்து பூக்குழி திடலை அடைந்தது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். துணை போலீஸ் சூப்பிரண்டு பசினா பீவி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
புத்தகங்களுக்கான கண்காட்சி ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் நடந்து வருகிறது. மதுரை மீனாட்சி புக் ஷாப், - பிரதர்ஸ் மீடியா பிரை வேட் லிட் இணைந்து 5 ஆயிரம் தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.மே 5 வரை கண்காட்சி தினசரி காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரைநடக்கிறது. அனுமதி இலவசம். ஞாயிறும் விற்பனை உண்டு. இங்கு தாமரை பிரதர்ஸ்மீடியா பிரைவேட் லிட் புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி கிடைக்கும். உலக அளவில் நாம் வியக்கும் சான்றோர்களின் வாழ்வில் மாற்றம் என்பது புத்தகங்களை வாசித்ததில் இருந்து தொடங்கியுள்ளது.புத்தகங்களை தேடி வருவது என்பது ஒவ்வொரு முறை புதிய அனுபவம். டிஜிட்டல் பத்திரிகைகளில் இந்த வாசிப்பின் சுவை கிடைக்காது. வாழ்க்கை அனுபவங்களில் கிடைக்காத உண்மைகளும் புதிய உலகங்களையும் புத்தகங்களில் இருந்து கண்டு வருகிறோம். எண்ணங்கள் நேர் பெறுவதற்கு புத்தகங்களே காரணம். உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும். நல்ல புத்தகங்களை தேடி வாசிப்பதால் உற்சாகம் பெறுவதோடு சரியான முடிவுகளை எடுக்க துணை புரியும். முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும்.
ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 42வார்டுகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை தேக்கி வைத்து வாரம் ஒரு முறை ஒவ்வொரு பகுதியாக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அய்யனார் கோவில் ஆற்று பகுதியில் லேசான மழை பெய்ததால் அந்த தண்ணீரை குடிநீர் தேக்கத்திற்கு நகராட்சி பணியாளர்கள் ஏற்றிபராமரித்து வருகின்றனர். தற்போது போதிய மழை இல்லாததால் குடிநீருக்கு தேவையான தண்ணீர் குறைந்து வருகிறது.நீர்த்தேக்கத்தின் அளவு 22 அடியாகும். மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரப் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தற்போது 6-வது மைல் குடிநீர் தேக்கத்தில்தற்போது 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. தண்ணீர் குறைந்து வருகிறது.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு ,விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில், வெயிலுகந்தம்மன் கோயில், சொக்கநாதர் கோயில், வாலசுப்பிரமணிய சுவாமி கோயில், ரெங்கநாதசுவாமி கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை 6:00 மணிக்கு ஆண்டாள்கோயிலில் நடை திறக்கப்பட்டு ஆண்டாள், ரெங் கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை சீனிவாச பெருமாள், பழனி ஆண்டவர், பெரிய மாரியம்மன் கோயிலில், உள்ளூர் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் பல்வேறு நகரங்களைச்சேர்ந்த 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காலை முதல்கடுமையாக சுட்டெரித்த வெயிலினால் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல்பெரிதும் அவதிப்பட்டனர். 8- th april மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில்பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்நிலவியது.பஞ்சு மார்க்கெட் நேருசிலை, பழைய பஸ் நிலையம், சங்கரன்கோவில் முக்கு, புதிய பஸ் நிலையம், காந்திசிலை ரவுண்டானா, ரெயில்வே பீடர் ரோடு வரை தொடர்ந்து மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.சத்திரப்பட்டி, தளவாய்புரம், சேத்தூர், தேவதானம், கோவிலூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று இரவு 7:00 மணிக்கு ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது.இக்கோயிலில் மார்ச் 24 ல் கொடியேற்றத்துடன் திருக்கல்யாண திருவிழா துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம், எழுந்தருளலும், இரவு வீதியுலாவும் நடந்தது. ஒன்பதாம் திருநாளான இன்று காலை 7:20 மணிக்கு செப்பு தேரோட்டமும், இரவு 7:00 மணிக்குஆடிப்பூர பந்தலில் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாணமும் நடக்கிறது.அப்போது ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்துநேற்று மாலை பட்டு, மங்கலப் பொருட்கள் கொண்டு வரப்பட்டது.. பின்னர் மாடவீதிகள் சுற்றி வந்து, ஆண்டாள் சன்னதியில் பட்டு சமர்ப்பிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர். இன்று இரவு நடக்கும் திருமணத்தின் போது ஆண்டாளுக்கு இந்த பட்டு சாற்றப்படுகிறது.
இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா.நாள் : 01.04.2026 புதன்கிழமை, காலை 10.00 மணிஇடம் : 120/16, இராஜாஜி ரோடு, ஸ்ரீவில்லிபுத்தூர். திறந்து வைப்பவர்: Dr.P.V.ஜவஹர்லால் அவர்கள் -President IMA - ராஜபாளையம் கிளை.முன்னிலை : Dr.K.பால்சாமி அவர்கள் - President ,IMA - ஸ்ரீவில்லிபுத்தூர்.Dr.T.சுப்பிரமணியன் அவர்கள் - Secretary, IMA - ஸ்ரீவில்லிபுத்தூர்.Dr.G.அமலச்சந்திரன் அவர்கள் - Treasurer,IMA - ஸ்ரீவில்லிபுத்தூர்.Dr.S.ராமநாதன் அவர்கள் - State Council Member,IMA - ஸ்ரீவில்லிபுத்தூர். அனைவரும் வருகைதந்து விழாவினைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம். அன்புடன்.Dr.G.P. கிருஷ்ண சைதன்யா, Dr. R.மதுரிகா, Dr.J.ராஜேஷ், Dr.M.அனிதாதங்கள் நல்வரவை விரும்பும் :Dr.G.பார்த்தசாரதி , Dr.சரஸ்வதி பார்த்தசாரதி.
கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட,ராஜபாளையத்தில் செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர் நடவடிக்கைஎடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ராஜபாளையம் சாலைகளில் கண் கூசும் ஒளியை அனைத்து வாகனங்களிலும் பொருத்தி செல்வ தால் எதிர்வரும் வாகனங்கள் அதிக வெளிச்சம் காரணமாக மோதி விபத்திற்கு உள்ளாவது அதிகரித்துள்ளது.போக்குவரத்து இன்ஸ்பெக்டர்கள் விஜயகாந்த், அருள் சேகர் தலைமையிலான போலீசார் காந்தி சிலை ரவுண்டானா பகுதிகளில் சோதனை செய்து,.ஆட்டோ, வேன் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான சிகப்பு, நீல நிற விளக்குகள்பொருத்திய வாகனங்களுக்கு மீறல் காரணமாக வழக்குப்பதிந்து ரூ.5 ஆயிரம்அபராதம் விதித்துள்ளனர்.வாகன ஓட்டுநர்கள் முகப்பில் பொருத்தப்பட் டுள்ள கண் கூசும் வண்ண விளக்குகளை தாமாகவே அகற்றிக் கொள்ள வேண்டும். மீறுபவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவ டிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு ராஜபாளையம் கோதண்டராமசாமி கோயில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.நேற்று காலை 9:00 மணிக்கு மேல் கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடந்து கொடியேற்றத்துடன்துவங்கி மகா தீப ஆராதனை காட்டப்பட்டது. மார்ச் 24ல் திருக்கல்யாணம்நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா சீனிவாச ராஜா தலைமையில்நிர்வாகிகள் செய்திருந்தனர். 10 நாள் திருவிழாவில் தினமும் சிம்ம, அனுமந்த, சேஷ, கருட, குதிரை வாகனங்களில் சுவாமி காட்சி அளிப்பார்.