25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >>


சமீபத்திய நிகழ்வுகள்

Aug 17, 2026

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை.

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் திருக்கோவில் வித்யாதீர்த்தபுரம், இராஜபாளையம்.சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம்,ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை17.08.2026  திங்கள் கிழமை ,காலை 09.00 மணிக்குகணபதிஹோமம், தூர்வா ம்ருத்யுஞ்ஜய ஹோமம்காலை 10.45 மணிக்குபூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெறும்.ஆஸ்தீக மஹாஜனங்கள் திரளாக கலந்து கொண்டு இறையருளுக்கு பாத்திரர்களாகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இப்படிக்கு"குருபக்தமணி" பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைவர் - ஸ்ரீ சாரதா சமிதி, இராஜபாளையம் & ஸ்ரீவில்லிபுத்தூர். 

Aug 17, 2026

இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”.

இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம்இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”நூற்றாண்டு கண்ட இராஜபாளையத்தின் நூற்றுக்கு மேற்பட்ட சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் விழா (RFWA வின் 49வது நிகழ்ச்சி )15 ஆகஸ்ட் சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கொண்டாடப்பட்டது.அன்றைய சுதந்திர தினவிழாவில் 375 பேர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Aug 14, 2026

ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம்.

ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம் 12-08-2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வில் rotary சங்க தலைவர் Rtn. Priya Anand, உதவி ஆளுநர் Rtn. K.S. வெங்கட் ராஜா, Community Service chairman Rtn. Dr. M. ராதா, முன்னாள் தலைவர் Rtn. Ananthi, Rtn. Suresh Kumar மற்றும் Rtn. Lakshmi Narayanan ஆகியோர் கலந்துகொண்டு முகாமைச் சிறப்பித்தனர்.முகாமில் BMI மற்றும் உடல்நிலை பரிசோதனை, சர்க்கரை மற்றும் நாடித்துடிப்பு பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், ECG மற்றும் ECHO உள்ளிட்ட இருதயப் பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மொத்தம் 102 பயனாளர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.அனைத்து அமைப்புகளின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பாலும், மருத்துவக் குழுவினர் மற்றும் தன்னார்வலர்களின் அர்ப்பணிப்பான சேவையாலும் முகாம் வெற்றிகரமாக நிறைவுற்றது.

Aug 14, 2026

இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026

இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும்யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026VI முதல் VIII வரை"யானை - என் நண்பன்"IX முதல் XII வரை''காட்டின் பாதுகாவலன் யானை"கல்லூரி மாணவர்களுக்கு "யானைகள் சந்திக்கும் சவால்கள்”ஓவியப்போட்டிகள்ஆகஸ்ட் 13 மற்றும் 17ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. மாணவர்களுக்கு வாழ்த்துகள்!RTN.R. ஆனந்தி - நிறுவனர்நாற்று இலக்கிய அமைப்புRTN .  பிரியா ஆனந்த் - தலைவர் இராஜபாளையம் ரோட்டரி சங்கம். 

Aug 14, 2026

ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள்.

ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,இராஜபாளையம் ரோட்டரி சங்கமும், நாற்று இலக்கிய அமைப்பும் இணைந்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள் நடத்தினோம்.யானை என் நண்பன்,யானை காட்டின் பாதுகாவலன்,யானைகள் சந்திக்கும் சவால்கள் (கல்லூரி அளவில்) என வகைமைப் படுத்தினோம்.P.A.C.R. அம்மணி அம்மாள் பதின்மப் பள்ளி,கேசா டி மிர்,ஆனந்தா வித்யாலயா,நாடார் மெட்ரிக் மேனிலைப் பள்ளி , மற்றும் PACR . பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.யானைகளை நாம் நேசிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். அவற்றிற்கு இடையூறுகள் செய்யக் கூடாது என்று கூறி , போட்டிகளை தொடங்கி வைத்தோம். யானையின் நலமே காட்டின் வளம்.காட்டின் வளமே நாட்டின் உயர்வு - என்பதை நாம் எடுத்துக் கூற வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.ஒன்றிணைந்து செயல்படுவோம். சிறப்புறுவோம்.

Aug 04, 2026

ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு.

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்குச் சென்று முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் செலுத்தினர். புதுமணத் தம்பதியினர் கோயில்களில் சிறப்பு பூஜை செய்தனர். அம்மன் கோயில்களில் பெண்கள் மாங்கல்யக் கயிறு மாற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.ஆடிப்பெருக்கு நாளில் புதிய முயற்சிகளைத் தொடங்குவது வளர்ச்சியையும் வளத்தையும் தரும் என்ற நம்பிக்கையின்படி, பலர் பத்திரப்பதிவு, புதிய தொழில்கள் தொடங்குதல், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் வாங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.வீடுகளில் பலர் தங்களது தோட்டங்களில் காய்கறி விதைகளை நட்டனர். விவசாயிகள் இறைவனை வழிபட்டு சாகுபடி பணிகளைத் தொடங்கினர்.ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில், பச்சமடம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Aug 01, 2026

தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி.

ராஜபாளையம் சமத்துவபுரம் அருகே, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.80 கோடி மதிப்பில் மூன்று மாடிகளுடன் 864 அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டு, 2025-ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன. இங்கு குடியேறி 15 மாதங்கள் கடந்தும் அலைபேசி சிக்னல் கிடைக்காததால் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.அலைபேசியில் பேசவோ, அழைப்புகளைப் பெறவோ முடியாததால், ஒவ்வொரு முறையும் குடியிருப்பிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரதான சாலைக்குச் சென்று சிக்னல் தேட வேண்டிய நிலை இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மற்றும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.குடியிருப்புவாசி பிரபா கூறுகையில், "எங்கள் பகுதியில் அலைபேசி டவர் சிக்னல் முற்றிலும் இல்லை. பேச வேண்டுமென்றால் பிரதான சாலைக்கு சென்று அலைபேசியை உயர்த்திப் பிடித்து சிக்னல் தேட வேண்டிய நிலை உள்ளது. அவசர நேரங்களில் ஆம்புலன்ஸை கூட தொடர்புகொள்ள முடியவில்லை. மலைப்பகுதிகளில்கூட தொடர்பு வசதி உள்ள நிலையில், நகர்ப்புற குடியிருப்பில் 15 மாதங்களாக தொடர்பு எல்லைக்கு வெளியே வாழ்ந்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Jul 31, 2026

வயல் தின விழா.

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வயல் தின விழா நடைபெற்றது. இதில் நெல் சாகுபடியில் உர மேலாண்மை, இலை வண்ண அட்டை பயன்பாடு, மண்வள அட்டை மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பாக விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Jul 06, 2026

ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா

 ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா நடைபெற்றது.சங்கத் தலைவர் ஆர். வெங்கட்ராமராஜா தலைமை வகித்தார்.செயலாளர் வெங்கடேஸ்வர ராஜா விருந்தினரை அறிமுகம் செய்தார். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் அமைச்சருக்கு மனமார்ந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டது.விழாவில் அமைச்சரிடம் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு வழங்கப்பட்டது:முன்னாள் சென்னை மாகாண முதல்வரும், முன்னாள் ஒடிஷா மாநில கவர்னருமான பி.எஸ். குமாரசாமி ராஜா அவர்களின் திருவுருவப் படத்தை சட்டசபையில் திறக்க வேண்டும்.தற்போது முடங்கியுள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும்.நகராட்சியில் உயர்த்தப்பட்டுள்ள வரி விதிப்புகளைக் குறைக்க வேண்டும்.ராஜபாளையம் மாஸ்டர் பிளான் - 2041 திட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.நிகழ்வின் நிறைவாக, சங்கச் செயலாளர் நாராயணசாமி நன்றி கூறினார்.

Jul 02, 2026

ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் .

ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.நிகழ்ச்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமம், பூர்ணா ஹுதி தீபாராதனை, முதல் காலயாக சாலை பூஜைகளை தொடர்ந்து நேற்று காலை 9:00 மணிக்கு வேத கால பாராயணம் 2ம் யாக பூஜைகளுக்கு பின் விநாயகர், சப்த கன்னி மார், பெருமாள், லாட சன்னாசி, கருப்பசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் மகா தீப ஆராதனை நிகழ்ச்சி நடந்தது. அன்ன தானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கன்னிமார் கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 21 22

AD's



More News