ராஜபாளையம் - தென்காசிசாலையில் அரசு ஆஸ்பத்திரிகடந்த 1973-ம் ஆண்டு அடிக்கல்நாட்டப்பட்டு பின்னர் 1977-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த ஆஸ் பத்திரியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ராஜபாளையம், தளவாய்புரம், முகவூர்,புத்தூர்,இனாம்கோவில்பட்டி, சேத்தூர், தேவதானம்,கோவிலூர்,சொக்கநாதன்புத்தூர், தேவிபட்டினம், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், சத்திரப்பட்டி, அய்யனாபுரம்,சங்கரபாண்டியாபுரம் உள்பட 50-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இந்த ஆஸ்பத்திரி மூலம் பயன்பெற்று வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரி பொது மக்களின் வசதிக்காக கடந்த 2023-ம் ஆண்டு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. ரூ.40 கோடியில் 448 படுக்கை, 5 தளங்களுடன் அமைக்கப்பட்ட கட்டிடத்தில்,எலும்பு முறிவு, அறுவை சிகிச்சை அரங்கம், காது மூக்குதொண்டை பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, லேப் வசதி, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, பொது அறுவை சிகிச்சை பிரிவு, லிப்ட் வசதி, அதிநவீன விபத்து சிகிச்சை வசதி, அனைத்துப் பகுதிகளிலும் குடிநீர் தொட்டி ,கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என அனைத்து நவீன வசதிகளுடன் இந்தஆஸ்பத்திரி செயல்பட உள்ளது. பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் (வெள்ளிக்கிழமை ) முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் புதியகட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்.
விருதுநகர் வாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவினை முன்னிட்டு சுவாமி,வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை முதல் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குகாட்சி அளித்தார்.தொடர்ந்து மூலவருக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.தொடர்ந்து நேற்று மாலை திருக்கல்யாண வைபவம் நடைபெற் றது. நாளை தேரோட்ட நிகழ்ச்சி நடக் கின்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். ராஜபாளையம் செவல்பட்டி தெருவில் உள்ள ராஜகணபதி பாலமுருகன் கோவில், மொட்டமலை பாலதண்டா யுதபாணி கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது. வத்திராயிருப்பு காசி விசுவநாதர் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில், விரு துநகர் அருகே எல்லிங்கநாயக்கன் பட்டி ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், ஆமத்தூர் திருச்செந்திலாண்டவர் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று கோலாகலமாக - நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
திருவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை, பெங்களூரூவை சார்ந்த எனேபில் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி ஆகியவை இணைந்து விருதுநகர் மாவட்டம் வத்ராப் ஒன்றியம் கான்சாபுரம் கிராமத்தில் உள்ள நூலக வளாகத்தில் வைத்து மாற்றுத்திறனாளிகளை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்கான 10 நாட்கள் பயிற்சியை அளித்தது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோருக்கு தேவையான திறன்கள், பண்புகள் மற்றும் தொழில் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள், விலை நிர்ணயம் செய்தல், சந்தை படுத்துதல், மாற்றுத் திறனாளிகள் சந்திக்கும் தடைகள் மற்றும் சவால்களை, எதிர்கொள்ளும் விதம், தன்னம்பிக்கை வளர்த்தல், நிதி மேலாண்மை போன்ற பல கருத்துகள் வழங்கப்பட்டது. நிறைவு விழாவுக்கு சைமா அறக்கட்டளையில் இயக்குனர் ராஜகோபால் அவர்கள் தலைமை வகித்தார். கள ஒருங்கிணைப்பாளர் சித்ரா ஒருங்கிணைப்பு செய்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் சங்கரலிங்கம் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற 35 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி சான்றிதழ் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் தயாரித்த பின்னாயில், சோப்பாயில், வாசிங் ஆயில், வாசிங் பவுடர், ஊத்துபத்தி, தலைவலி தைலம், சாம்பூராணி, கண்திஷ்டி அகர்பத்தி மற்றும் குளியல் சோப்பு ஆகிய பொருள்களை கண்காட்சியாக வைத்திருந்தார்கள்.மேலும் இந்த நிகழ்வில் பயிற்றுனர்கள் சுவேதா, எனேபில் இந்தியா திட்ட அலுவலர் சுப்புராஜ், ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் தலைவர் சின்னத்தம்பி,ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் ரோட்டரி சங்கம் செயலாளர் முத்துவேல் ராஜா, கான்சாபுரம் சமூக ஆர்வலர் ராஜ்குமார், சொசைட்டி பாண்டியன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தர்கள். விருதுநகர் மாவட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவன பயிற்றுனார்கள் பாத்திமா, கணேசன் மற்றும் ரூபப்ரியா ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்தார்கள்.
.ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி நகரங்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு சில பகு திகளில் பலத்த வெடிசப்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனர்.நேற்றிரவு 9:08 மணிக்கு ஒரு நிமிடத்துக்கு ஒரு சில இடங்களில்,ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், குலாலர் தெரு,தன்யா நகர், அசோக் நகர், வன்னியம்பட்டி, செண்பகத்தோப்பு, நாச்சியார்பட்டி, கிருஷ் ணன் கோவில், செங்குளம், பாட்டக்குளம் உள்ளிட்ட ஏராளமான கிராமங்களில் ,லேசானஅதிர்வுகளும்,மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிராமங்களில் பலத்த வெடி சத்தத்துடனும் நில நடுக்கம் ஏற்பட்டது.பொது மக்கள் அச்சத்துடன்வீட்டிற்குள் இருந்து தெருக்களுக்கு வந்தனர். பல வீடுகளில் சுவரில் மாட்டி இருந்த போட்டோக்கள் கடிகாரங்கள் ஆடின. சில வீடுகளில் வாஷிங் மெஷின், பிரிட்ஜ் நகன்றதாக மக்கள் தெரிவித்தனர். சில மணித்துளிகள் வரை உணர்ந்த சத்தம் சிலருக்கு பூமிக்கு அடியில் பலத்த வெடிகுண்டு வெடித்தது போலவும், ஒரு சிலருக்கு கனரக வாகனம் செல்வது போலும், கேட்டதாக தெரிவித்தனர்.சிவகாசி அருகேபாறைப்பட்டி,துரைச்சாமிபுரம்,குவாரிபகுதியிலிருந்து,நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்,தரைமட்டத்திலிருந்து 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.
குழந்தை திருமணத்தைத் தடுத்து, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கம், ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை – விருதுநகர் மாவட்டம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பில் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.நிகழ்ச்சிக்கு, ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி வரவேற்புரை வழங்கினார்.மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி கி. திலகம் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். அவர் தனது உரையில், குழந்தை திருமணம் சமூக முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதாகவும், இதனை எதிர்க்க இளைஞர்கள் முன்வர வேண்டிய அவசியம் உள்ளதாகவும் வலியுறுத்தினார்.இதனைத் தொடர்ந்து, இராஜபாளையம் கற்பக விருக்சா பிரிட்டிலிட்டி ரிசர்ஸ் சென்டர் சார்பில் டாக்டர். உமா மகேஸ்வரி அவர்கள், “குழந்தை திருமணத்தைத் தடுத்திட சமூகத்தின் பங்கு” என்ற தலைப்பில் உரையாற்றினார். குழந்தை திருமணத்தால் ஏற்படும் உடல் மற்றும் மனநல பாதிப்புகள், இளம்வயது கர்ப்பம் காரணமாக மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட நிலையில் வரும் சிறுமிகள் சந்திக்கும் இன்னல்கள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.இராஜபாளையத்தைச் சேர்ந்த எழுத்தாளர், இலக்கியவாதி மற்றும் ராஜபாளையம் ரோட்டரி சங்கத்தின் கவர்னர் திருமதி ஆனந்தி அவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக சூழலுடன் குழந்தைகள் பழகும் விதம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் அதனால் ஏற்படும் வளர்ச்சி குறித்தும், பெண்கள் சாதனையாளர்களாக உருவாக வேண்டிய முயற்சிகள் குறித்தும் விளக்கினார்.விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் ஆற்றுப்படுத்துனர் திரு. ராஜேஷ் விமல் தாஸ் அவர்கள், குழந்தை திருமண சம்பவங்களில் புகார் அளிக்கும் வழிமுறைகள், சட்டப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகள், அதன் விளைவுகள், மாவட்ட அளவில் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், உதவி எண்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.இதனைத் தொடர்ந்து, திருமதி கயல்விழி, தலைமைக் காவலர், ராஜபாளையம் தெற்கு காவல் நிலையம் அவர்கள், குழந்தை திருமணத்தைத் தடுப்பதில் காவல்துறையின் பங்கு குறித்து எடுத்துரைத்தார்.வழக்கறிஞர் பா. ராஜகோபால், இயக்குனர், சைமா அறக்கட்டளை, ஸ்ரீவில்லிபுத்தூர் அவர்கள், குழந்தை திருமண தடுப்பு யுக்திகள் மற்றும் தொடர் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு வழிகாட்டினார். பேஸ்புக், வாட்ஸாப் போன்ற சமூக வலைதளங்களை விழிப்புணர்வு கருவியாக பயன்படுத்தி, குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கருத்துகளை எழுத்து நடையில் பகிர்வதன் மூலம், இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கு முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து, “குழந்தை திருமணத்தை எதிர்த்து நிற்போம்” என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டு, விழிப்புணர்வு போஸ்டர் வெளியிடப்பட்டது.நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.இந்த கருத்தரங்கில் 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று, குழந்தை திருமணத்தைத் தடுப்பதில் தங்களது பங்கை உறுதியாக ஏற்கும் வகையில் விழிப்புணர்வு பெற்றனர்.இந்த கருத்தரங்கின் ஒருங்கிணைப்பை திருவில்லிபுத்தூர் சைமா அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி. கலையரசி, திருமதி. கற்பகம் மற்றும் திருமதி. அழகு ராணி ஆகியோர் செய்திருந்தனர்.
ராஜபாளையம் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் சங்கரன்கோவில் மெயின் ரோடு நெருக்கடியால் பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் வாகனங்களும் தென்காசி ரோட்டில் இருந்து செல்லும் வாகனங்களும் ஒதுங்க வழி இன்றியும், தாமிரபரணி குடிநீர் பாதாள சாக்கடை இணைப்புக் குழாய் தோண்டி பதித்ததினால் பாதிப்பு காரணமாக நெரிசல் ஏற்பட்டு பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வந்தன.பெரியாதிகுளம் ஓடையில் அகலப்படுத்தும் புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டை 7 மீ., இருந்து 10 மீ. பணிக்காக ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டது.ஓடையில் அனுமதி இன்றி போடப் பட்ட 45 பாலங்கள் அகற்ற நோட்டீஸ் வழங்கியும், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆக்கிரமிப்புகள் குறித்து அளவிடு செய்யாமல் பணிகள் நடைபெறுகிறது. இதனால் கண்மாய்க்கு வரும் நீர் வழி பரப்பு பாதிக்கப்படுவதுடன் முறைகேடு நடைபெறுவதாக சந்தேகம் எழுகிறது. வெளிப் படைதன்மை இல்லாததால் விவசாயிகள் பாதிக்கிறோம்.பெரியாதிகுளம் ஓடை பணிகளில் ராஜபாளையம்சங்கரன்கோவில் மெயின் ரோடு விரிவாக்கத்தில், பாரபட்சமாக நடந்து வருவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
சேத்துார் அடுத்த தேவதானம், கோவிலுார் சுற்றுப் பகுதியில் சாஸ்தா கோயில் நீர் தேக்கத்தை ஆதாரமாக வைத்து 10க்கும் மேற் பட்ட கண்மாய் ஒட்டி ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் விவசாயம் நடந்து வருகிறது.அறுவடை பணிகள் தொடங்கியதால் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்க வேண்டும் என விவசாயிகள் சார்பில், அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கோவிலுார், தேவதானம் பகுதியில் மண்டல அதிகாரி சென்னை உள்ளிட்ட விவசாய சங்கத்தினர் முன்னிலையில், நேற்று நேரடி நெல் கொள்முதல் தொடங்கியது.
தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகள் பாதிப்பு ஏற்படுத்தி வருவதால் விலை அதிகரித்தும் ,பலனின்றி வழி தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். 27 ஆயிரம்ஏக்கர்தென்னைசாகுபடி ,விருதுநகர் மாவட்டத்தில்மேற்குதொடர்ச்சிமலையைஒட்டியராஜபாளையம், வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.தென்னையை தாக்கும் சுருள் வெள்ளை ஈக்கள், சமீப காலமாக அதிகரித்து பரவ தொடங்கியது. இவற்றிற்கு சுலபமாக பரவுவதற்கு வறட்சிக் காலம் வழி வகுத்ததுடன் ,வெள்ளை நிற ஈக்களின் குஞ்சுகள் இலைகளுக்கு பின்னால் ஒட்டியிருந்து சாறு உறிஞ்சுகிறது. மரங்களின் வளர்ச்சியை பாதித்ததோடு, விளைச்சலும் 30 சதவீதம் வரை குறைந்துள்ளது ..உழவு, உரம், பராமரிப்பு செலவு என சாகுபடி செலவு அதிகரித்து வரும் நிலையில் சமீபத்தில் விலை அதிகரித்தும் விளைச்சல் குறைந்ததால் அதன் பலன் முழுமையாக விவசாயிகளை சென்று சேரவில்லை. ஒரு சில விவசாயிகள் தடுப்பு. முறைகளை முறையாக கையாண்டும் மற்ற பகுதிகளில் இருந்து மீண்டும் பரவுவதால் இதை கட்டுப் படுத்தும் வழிமுறை தெரியாமல் பாதித்து வருகின்றனர்
தமது பணியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மற்றும் அவர்களின் நலனைக்கருதி 56 ஆண்டுகளாக பொங்கல் விளையாட்டு விழாவை நடத்தி வருகிறோம். நாளது 15.01.2026 ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நமது மில்ஸின் எதிர்புறம் அமைந்துள்ள ஊழியர்கள் மனமகிழ் மன்ற விளையாட்டு அரங்கில் வைத்து இவ்வாண்டு இந்த விழா கொண்டாடப்படுகிறது. நமதுசேர்மன் : உயர்திரு. P.R. வெங்கட்ராம ராஜா அவர்கள்கலை நிகழ்ச்சிகளையும், விளையாட்டுப் போட்டிகளையும் துவக்கி வைத்து நமது ராம்கோ குழுமத்தைச் சேர்ந்த ராஜபாளையம் ஸ்பின்டெக்ஸ்ட், ராஜபாளையம் டெக்ஸ்டைல்ஸ், ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் - பேப்ரிக் டிவிசன், ஸ்ரீ விஷ்ணுசங்கர் மில் லிமிடெட், ஸ்ரீ ராம்கோ ஸ்பின்னர்ஸ், சந்தியா ஸ்பின்னிங் மில் லிமிடெட், ராஜபாளையம் டெக்ஸ்டைல் லிமிடெட் ஆலைகள் மூலமாக நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், மேலும் ஆலையில் நீண்ட காலம் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சர்வீஸ் அவார்டும். கடந்த ஆண்டில் ஊதிய இழப்பு இல்லாமல் பணிசெய்த தொழிலாளர்களுக்கு வருகைப்பதிவு பரிசுகளும் வழங்குவார்கள்.1. 5,10,15, 20, 25, 30, 35, 40 ஆண்டுகள் சர்வீஸ் பூர்த்தி செய்துள்ள 786 தொழிலாளர்களுக்கு ரொக்கப்பரிசுடன் சர்வீஸ் அவார்டு.2. கடந்த ஆண்டு தவறாமல் பணிக்கு ஆஜராகி பணி செய்த 4559 தொழிலாளர்களுக்கு வருகைப்பதிவு பரிசுகள்.3. சிறந்த நூற்பாலைக்கான Excel Award.4. ஜப்பானிய வழிமுறைகளான 5S, TPM, TQM நடைமுறைப்படுத்தியதற்கான விருதுகள்.
முதல் முறையாக தமிழகத்தில் வடகிழக்கு ஆசிய பகு திகளில் அதிகம் வசிக்கும் ப்ளைன்டிவ் குயிலின் ஆண் பாலினம், ராஜபாளையத்தில் பறவை ஆர்வலர்களாய் அடையாளம் காணப்பட்டுள்ளது. ப்ளைன்டில் குயில்கள் வடகிழக்கு, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள, இந்தப் பறவைகள் சோகமான, ஏக்கமான குரல் காரணமாகவே ப்ளைன் டிவ் குயில் என அழைக் கப்படுகிறது. ஆண்பறவை சாம்பல் நிற தலை, உடல், வயிற்று பகுதி ப்ரவுன் நிறம், சிவப்புக் கண் என ”இது தனித்துவத்துடன் உள்ளது. தென் கிழக்கு பகுதியான சீனாவில் இனப்பெருக்கம்செய்யும் இவை பிரினியாக்கள், சிஸ்டிகோலாக்கள், தையல்சிட்டுகள், தேன் சிட்டுகளின் கூடுகளில் முட்டையிடும். இந்தியாவில் ஓடிசா, சத்தீஸ்கர் பகுதிக்கு குளிர்காலங்களில் வலசைவரும். 2026 ஜன. 4ல் ராஜபா ளையத்தை சேர்ந்த பறவை ஆர்வலரான ராஜூஸ் கல் லூரி நேச்சர் கிளப்பை சேர்ந்த விஷ்ணு சங்கர், அவரது குழுவினர், இதில் ஆண் பறவையை அடை யாளம் கண்டுள்ளனர்.