ஆலங்குடி - குரு கும்பகோணத்தில் இருந்து 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.திருநாகேஸ்வரம் - ராகு கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.திங்களூர் - சந்திரன்கும்பகோணத்தில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.சூரியனார் கோயில் - சூரியன்கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.கஞ்சனூர் - சுக்கிரன்கும்பகோணத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.வைதீஸ்வரன் கோயில் -செவ்வாய் கும்பகோணத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.திருவெங்காடு - புதன் கும்பகோணத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது.கீழ் பெரும்பள்ளம் - கேதுகும்பகோணத்தில் இருந்து 57 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.திருநள்ளார்-சனி கும்பகோணத்தில் இருந்து 55 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.
ஆடி செவ்வாய்க்கிழமை அன்று அவ்வை நோன்பு இருக்கும் பெண்கள் அனைவரும் ஒரு வீட்டில் கூடுவார்கள். அங்கு குழந்தைகளை தவிரவேறு ஆண்கள் இருக்கக்கூ டாது. 10 மணிக்கு மேல் பூஜை தொடங்குவார்கள் . வயதில் முதிர்ந்த பெண்மணிகள் அவ்வையார் கதைகள்,அம்மன் கதைகள் கூறுவார்கள், பிறகு பூஜை தொடங்குவார்கள் இதில் உப்பில்லாத கொழுக்கட்டை பிரசாதமாக நெய்வேத்தியம் செய்யப்படும். இதை ஆண்கள் சாப்பிடக்கூடாது. இந்த பூஜை எல்லாம் முடிந்து மறுநாள் காலையில் தான் ஆண்கள் வீட்டுக்கு வரலாம்.சகலநன்மைகளும்தரும்இந்தவிரதம், தமிழகத்தின்தெற்குபகுதியில்ஆடிமாதம்செவ்வாய்க்கிழமைகளில் கொண்டாடப்படுகிறது .
ஆடித்தபசு, ஆடிப் பௌர்ணமி - ஜூலை 21 (ஞாயிறு) ஆடி 05 ஆடி கிருத்திகை - ஜூலை 29 (திங்கள்) ஆடி 13 ஆடிப்பெருக்கு - ஆகஸ்ட் 03 (சனி) ஆடி 18 ஆடி அமாவாசை - ஆகஸ்ட் 04 (ஞாயிறு) ஆடி 19 ஆடிப்பூரம்-ஆகஸ்ட் 07 (புதன்) ஆடி 22 நாக சதுர்த்தி - ஆகஸ்ட் 08 (வியாழன்) ஆடி 23 கருட பஞ்சமி, நாக பஞ்சமி - ஆகஸ்ட் - 09 ( வெள்ளி) ஆடி 24 வரலட்சுமி விரதம் - ஆகஸ்ட் 16 ( வெள்ளி ) ஆடி 31
கார்த்திகை - கார்த்திகை தீபம் ரோகிணி - கிருஷ்ண ஜெயந்தி திருவாதிரை -ஆருந்திர தரிசனம் திருவோணம் - ஒணம் பண்டிகை புனர்பூசம் - ஸ்ரீராமர் ஜெயந்தி பூசம் - தைப்பூசம் உத்திரம் - பங்குனி உத்திரம் விசாகம் - வைகாசி விசாகம் அவிட்டம் - ஆவணி அவிட்டம் மூலம் - பிட்டுத்திருவிழா மகம் - மாசி மகம்
வருகிற ஆடி மாதம் 7ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடத்து வருகின்றன.ஆண்டுதோறும் ஆடிமாதம் ஆண்டாள் பிறந்த நட்சத்திரத்தன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடக்கும். இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா வருகிற 30-த்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.. இதையடுத்து ஆகஸ்டு மாதம் 3-ந்தேதி கருட சேவை நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா வருகிற 2-ந்தேதி ஆடிப்பூரத்தன்று நடைபெறுகிறது. இதற்காக ஆண்டாள் கோவில் முன்பு பிரமாண்ட பந்தல்.,கீழரத வீதியில் நிற்கும் தேருக்கு அலங்கார பணிகள் தீவிரமாக நடக்கின்றன. தேர் வலம் வரும் நான்கு ரத வீதிகளிலும் நெடுஞ்சாலை துறையினர் சாலைகளின் தரம் குறித்து ஆய்வு செய்தனர். தேரோட்ட திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.
ஆடி 05ம் தேதி 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதீச்வர அனந்த ஸ்ரீ விபூஷித ஜகத்குருஸ்ரீ சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள். ஸ்ரீஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ ஸ்வாமிகள்அவர்களின் பரமானுக்ரஹத்துடன் ஸ்ரீ சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் இராஜபாளையம் கிளை ஸ்ரீ சாரதாம்பாலயத்தில் பகவான் ஸ்ரீ வியாஸருக்கு சிறப்பு பூஜைகள் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெற உள்ளது.காலை 10.40 மணிகுருவந்தனம், கணபதி பூஜை, ஸங்கல்பம் புண்யாஹவாசனம், புருஷ ஸூக்த விதான பூஜை காலை 11.40 மணி, தீபாராதனை, ப்ரசாதம்,மேற்கண்ட பூஜைகளில் ஆஸ்தீக மஹாஜனங்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ வியாஸர், ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஆகியோர்களின் அனுக்ரஹத்திற்கு பாத்திரர்களாகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.இப்படிக்கு பி.ஆர். வெங்கட்ராம ராஜா தலைவர் ஸ்ரீ சாரதா சமிதி, இராஜபாளையம் & ஸ்ரீவில்லிபுத்தூர்
சிவபெருமான் வீற்றிருக்கும் முக்கியமான தலங்களில் ஒன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம். இந்தக் கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில், ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ளது, பாதாள லிங்கம். இங்கு 'பாதாள லிங்கேஸ்வரர்" என்ற பெயரில் இறைவன் லிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்த சிவலிங்கத்தை தரிசனம் செய்ய, சில படிகள் பாதாளத்தில் இறங் கிச் சென்று வழிபட வேண்டும். இந்த சிவலிங்கத்திற்கு முன்பாக நந்தி சிலையும் இருக்கிறது. ஆன்மிக மற்றும் ஞானத்திற்கான தேடலுடன் திருவண்ணாமலைக்கு வந்தவர், ரமண மகரிஷி. அவ ருக்கு மரணம் பற்றிய எண்ணம் உண்டானபோது, இங்குள்ள பாதாள லிங்கத்தின் சன்னிதியில் சென்று வழிபட்டார். அங்கு ஒரு புற்று இருந்தது. அதற்குள் சிவயோகி ஒருவர் இருப்பதை உணர்ந்த அவர், அங்கேயே தவத்தில் அமர்ந்து ஞானம் அடைந்ததாக சொல் லப்படுகிறது.மரண பயத்தை போக்கும் இந்த பாதாள லிங்கமும், கிரிவலப் பாதையின் மலைக்கு பின்புறம் அமைந்த அடி அண்ணாமலை என்ற பெயரில் அமைந்த தனி ஆலயத்தில் உள்ள சிவலிங்கமும் விசேஷமானது. இந்த இரண்டு லிங்கங்களையும் மனமுருக வழி பட்டால், மரணபயம் விலகும், மன நிறைவு உண்டாகும்.
.விபூதி எப்படி கோயிலில் வாங்க வேண்டும் இடது கை கீழ் இருக்க வலது கை மேலே வைத்து அதில் வாங்க வேண்டும்.மீண்டும் இடது கைக்கு விபதியை மாற்றாமல் அப்படியே நெற்றியில் பூசிக் கொள்வது நல்லது 3.வயதில் குறைந்தவர்கள் கரத்திலிருந்து விபதியை நேரடியாக எடுத்து பூசக்கூடாது விபூதியை போர்வைக்கு மாற்றி அதிலிருந்து எடுத்து விட்டுக் கொள்ளலாம் விபதியின் மகத்துவம் பல மடங்கு முக்கியம் என்று கூறி இருக்கிறார் .
பாஞ்சஜன்யம் என்பது ஒரு அபூர்வமான சங்கு!பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கைகளில் இருப்பதும் பாஞ்சஜன்யம் என்னும் சங்கு தான்! இந்த பாஞ்சஜன்யம் என்பது ஒரு சங்கில் 4 சங்கங்கள் இருக்கும்!மொத்தத்தில் ஐந்து சங்குகள்!ஆகவே பாஞ்சஜன்யம் என்பார்கள். இந்த படத்தில் காணும் சங்குக்குள் நான்கு சங்குகள் இருக்கின்றன!.இது மிக மிக அபூர்வமானது! எனவே பாஞ்சஜன்யம் என்று அழைக்கப்படுகிறது!இந்த சங்கின் நுனியிலும் அடியிலும் விளிம்பிலும் தங்க வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. சங்கின் நுனியில் ரத்தினங்கள் கொண்டு அழகு படுத்தப்பட்டுள்ளது.இப்படிப்பட்ட அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியின் ஆலயத்தில் அன்னையின் அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. .இந்த சங்கு மைசூர் சமஸ்தான மன்னர்களால் மைசூர் சாமுண்டீஸ்வரி அன்னைக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது!!
திருப்பாற்கடலை அசுரர்களும் தேவர்களும், கடையும்போது, அதில் இருந்து நஞ்சு வெளியானது. வெளிவந்த நஞ்சினால் தேவர்களும், அசுரர்களும் இ றக்க ஆரம்பித்தனர்.இதைக் கண்ட சிவபெருமான் தேவர்களையும் அசுரர்களையும் காக்கும் பொருட்டு அந்த நஞ்சை உண்டார். எனவே சிவபெருமான் நஞ்சுண்ட காலமே பிரதோஷ காலமாகும்