25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆன்மீகம்

Jul 21, 2023

.தமிழகத்தில் விநாயகர் வழிபாட்டு வரலாறு

சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதியார் நரசிம்மவர்மப் பல்லவனின்படைத்தலைவராகப் படையுடன் சென்று சாளுக்கிய மன்னனின் வாதாபிஎன்னும் தொன்னகரைத் துகளாக்கி, அங்கிருந்த கணபதியைக் கொண்டுவந்து தாம் வழிபட்ட திருச்செங்காட்டங்குடியில் நிறுவினார். இவருக்குவாதாபி கணபதி என்று பெயர்.தமிழ் நாட்டின் சிறப்பு எங்கு பார்த்தாலும்பிள்ளையார் கோவில்கள் இருப்பதேயாகும். கோயில் என்று பெயர்வைத்துக் கூரையும் விமானமும் போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும்என்பது கூட இல்லாமல் அரசமரத்தடி,குளக்கரை, முச்சந்தி, நாற்சந்தி,தெருமுனை என வானம் பார்த்த அமர்ந்திருக்கும் ஒரே சுவாமி பிள்ளையார் தான்.

Jul 14, 2023

நாகலிங்க மலர்

இது இயற்கையாக வரும்ஒரு அபூர்வ மலர் . சிவலிங்கம் மலரின் மையப்பகுதியில் உள்ளது சிவலிங்கத்தின்மீதுநாகம் படமெடுப்பது போன்றஅமைப்பாக உள்ளது. சிவலிங்கபூஜைக்கு உதவும் பொருட்களில்நாகலிங்கப் பூவுக்கும் முக்கியப்பங்கு உண்டு.. சிவலிங்கபூஜைக்கு உதவும் பொருட்களில்வில்வம், தாமரை, செவ்வரளிபோல நாகலிங்கப் பூவுக்கும்முக்கியப் பங்கு உண்டு.நாகலிங்கப் பூவுக்கு21 ரிஷிகள்தங்களுடைய தவ ஆற்றல்களைஅளித்துள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த 21 ரிஷிகளும், ‘மாத்ருகாரிஷிகள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். நாகலிங்கப்பூவைத் தொடவேண்டும் என்றால், சிவ பஞ்சாட்சரத்தை 1001 முறைசொல்லிய பின்னரே தொடவேண்டும். நாகலிங்கப் பூவை கையில்எடுத்தப் பின்னர்,21 பேருக்குஅன்னதானம் செய்ய வேண்டும்.அப்படி21 பேருக்கு அன்னதானம்செய்யும் போது,21 மாத்ருகாரிஷிகள் சூட்சுமமாக அந்தஅன்னதானத்தைப் பெற்றுக்கொள்வதாக நம்பிக்கை.அதன் பிறகு தான்நமது கையில் இருக்கும்நாகலிங்கப் பூவை சிவலிங்கத்தின்தலையில் வைக்க வேண்டும்;இப்படிச் செய்தால் மட்டுமேநாகலிங்கப் பூவால் சிவலிங்கத்திற்குபூஜை செய்த புண்ணியம்நமக்குக் கிட்டும்.நாகலிங்கப் பூவை ஈசனுக்குசாற்றி வழிபட்ட பிறகு,அது வாடியப் பின்னரும்கூட, நாம் குளித்துவிட்டுத்தான் அதனை எடுக்கவேண்டும். வாடிய நாகலிங்கப்பூவை எடுத்து ஓடும்ஆற்றில் போட்டு விடவேண்டும். அல்லது கடலில்போட வேண்டும். நாகலிங்கப்பூவையே சிவலிங்கமாக எண்ணிவீட்டில் தினமும் பூஜைசெய்யலாம். இப்படி ஒருவழிபாட்டு முறை கலியுகத்தின்ஆரம்ப காலத்தில் பின்பற்றப்பட்டுவந்ததாக சொல்லப்படுகிறது.. சிவலிங்கத்திற்குசாற்றிய நாகலிங்கப் பூவை,பிரசாதமாக பெற்றுக்கொண்டு வீட்டிற்குகொண்டு வரவேண்டும். நமதுவீட்டுப் பூஜை அறையில்சுவாமி படத்தின் முன்பாகஅதனை வைத்துக்கொள்ள வேண்டும்.நீண்டகாலமாக இருக்கும் நோய்தீரவோ அல்லது நீண்டகாலமாகஇருக்கும் குறைபாடுகள் நீங்கிடவோமனதார வேண்டிக் கொள்ளவேண்டும். நமது நோய்தீரும் வரை தினமும்வேண்டிக்கொண்டு சிவமந்திரங்கள் அல்லதுதேவாரப் பாடல்கள் பாடிவழிபட வேண்டும். நமதுவேண்டுதல்கள் நிறை வேறியபிறகு, நாகலிங்கப் பூவைஓடும் நதி அல்லதுகடலில் போடலாம். அதுவரைஅது எவ்வளவு காய்ந்துபோனாலும், அதற்கு நமதுவேண்டுதலை நிறைவேற்றும் சக்திஉண்டு.

Jul 07, 2023

.சண்டி சேவாலயம் ( "சண்டி ஹோமம்" )

.சண்டி சேவாலயம் என்றால்  ,தேவிக்கு மங்கள சண்டிகா என்கிற ஒரு பெயரும் உண்டு. தூர்க்கையின்அருளை பெறுவதற்கு செய்யப்படும் ஒரு ஹோமம் தான் "சண்டி ஹோமம்"எனப்படும்.இந்த ஹோமம் செய்வதற்கு பல வருடங்கள் ஹோமபூஜை செய்வதில் அனுபவம் பெற்ற ' 9 வேதியர்களை கொண்டுசெய்யப்படுவதால் நிச்சயமான பலன்களை ஹோம பூஜைசெய்பவர்களுக்கு தருகின்றது. உங்கள் சார்பாக  கோயிலிலோ, ஹோமம் செய்வதற்கான பொருட்கள் மற்றும் இன்ன பிற ஏற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும் உணவேதும் அருந்தாமல் இருந்து ஹோமத்தில் கொள்ள வேண்டும் தேவியானவள் அண்டத்தை காப்பதில் சிறந்த தாயாக விளங்குகின்றார். அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி.. சண்டி ஹோமம் என்பது ஒரு அற்புதமான ஹோமம். ஆடி வெள்ளிக்கிழமை ஆடி பௌர்ணமியை முன்னிட்டும் உலக நன்மைக்காகவும்சண்டி ஒரு கடுமையான மற்றும் சக்தி வாய்ந்த தெய்வம். அனைத்து வாழ்வாதாரங்களையும் ஆதியிலிருந்து அளிக்க கூடிய ஒரு தெய்வம் சண்டி. இந்த மகா சண்டி ஹோமம் நடத்துவதின் மூலம் சாபங்கள் பலிகள் தடைகள் ஆகியவை அகலும்.தேவியானவள் அண்டத்தில் உள்ள தன்னுடைய குழந்தைகளை காக்கவும் அவர்களுக்கு ஏதேனும் தீய சக்திகளின் இடர்பாடுகள் ஏதேனும் இருந்தால் துன்பத்திலிருந்து நீக்கி நன்மை சேர்ப்பாள்.செல்வம், செல்வாக்கு, ஆரோக்கியம் மன நிம்மதி ஆகியவை கிடைக்க ஆசிர்வதிக்கபடும். சண்டி தேவிக்கு பெண்கள் வழிபாடு செய்வது மிக சிறப்பாக கருதப்படுகிறது. அசுரர்களை அழிக்க பல்வேறு வடிவங்களை எடுத்து இருக்கும் தேவி தான் சண்டி. சண்டி ஹோமம் என்பது ஒரு அற்புதமான ஹோமம்.பில்லி, சூன்யம், செய்வினை, பொறாமை போன்றவற்றை அகற்றுவதற்கும், கோபத்தைக் குறைப்பதற்கும், ஜாதகரீதியிலான தோஷங்களைக் களைவதற்கும், கிரகப் பெயர்ச்சியால் ஏற்படும் தோஷங்களுக்குப் பரிகாரமாகவும், மாத்ரு பித்ரு தோஷம் அகலுவதற்கும்,கெட்ட சகவாசங்கள் நம்மை விட்டு நீங்குவதற்கும், விஷ ஜந்துக்கள் நம்மைத் தாக்காமல் இருப்பதற்கும், திருஷ்டி தோஷத்தில் இருந்து மீள்வதற்கும் செய்யப்படுகிறது. துர்கா ஹோமத்தில் ஸ்ரீ மகா சண்டி ஹோமம் இடம்பெறுகிறது.

Jun 30, 2023

திருசெந்தூர் முருகன்

திருசெந்தூர் மூலவருக்கு தினமும்தூய வெள்ளை நிற ஆடையே அணியப்படுகிறதுதிருச்செந்தூரில் வீரபாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார்இதனால்இத்தலத்துக்கு வீரபாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு.திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரபாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.மூலவர் சுப்பிரமணியருக்கு தினமும் தூயவெள்ளை நிற ஆடையேஅணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள்அணிவிக்கப்படும்.மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது உள்ளே சென்றால் முருகன் பூசித்த பஞ்சலிங் கங்களைக் காணலாம். அறைக்கு பாம்ப றை என்றும் ஒரு பெயர்உண்டு திருசெந்தூர் கோவிலில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது .இந்தகுகைக்கு முன்பு உள்ள கந்தன் மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் .

Jun 23, 2023

நீடித்த பிறை தரிசனம்,நீடுலக வாழ்வு தரும்

மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் மூர்க்கனும் அறிவு பெறுவான்.நான்கு பிறை தொடர்ந்து தரிசித்தால் நம்வினை நாசமாகும்.ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால்ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம்தடையின்றி நடக்கும்.ஏழு பிறை தொடர்ந்து தரிசித்தால் ஏற்பட்டகடன் தீரும்.பத்து பிறை தொடர்ந்து தரிசித்தால் பாரில்புகழ் ஓங்கும்.வருடம் முழுவதும் பிறை தொடர்ந்து தரிசிக்க வம்ச விருத்தியாகும்.நீடித்த பிறை தரிசனம், நீடுலக வாழ்வு தரும்(முக்திப்பேறு)

Jun 23, 2023

"ஸ்ரீ நாறும்பூநாதர் " கடையார்ச்சுனம் சுயம்பு மூர்த்தி

200 வருடங்கள் பழமையானது இந்த ஆலயம். இத்தல அம்பாளின் திருநாமம் கோமதியம்மாள் என்பதாகும். அர்ச்சுனம்' என்பது மருத மரத்தைக் குறிக்கும். மருத மரத்தில் சிவபெருமான் எழுந்தருளிய தலங்கள் அர்ச்சுனத் தலங்கள்" எனப் போற்றப்படுகின்றன. 'தலையார்ச்சுனம்' என்பது ஸ்ரீசைலம், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் 'இடையார்ச்சுனம்" என்றும், 'மத்தியார்ச்சுனம்* என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வரிசையில் திருநெல்வேலி மாவட்டம் *திருப்புடைமருதூரில் உள்ள ஸ்ரீநாறும்பூநாதர் கோவில், கடையார்ச்சுனம்' என்று போற்றப்படுகிறது. 1200 வருடங்கள்பழமையான இந்த ஆலயத்தில், மூலவர் ஸ்ரீநாறும்பூநாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் 

Jun 16, 2023

“ திருநாவுக்கரசர்” ஈசனே கொடுத்த பட்டம்

திரு நாவுக்கே அரசன் என்று அந்த  ஈசனே கொடுத்த பட்டம் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசு நாயனார் சைவ சமயக் குரவர்கள் நால்வரில்மற்றும் தேவார மூவர்களில்,வேளாளர்' குல நாயன்மார்.இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின்தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர். இவர் இறைவனைதொண்டு வழியில்வழிபட்டமைகுறிப்பிடத்தக்கதாகும்.சமணசமயத்தைச்சேர்ந்தமன்னன்மகேந்திரபல்லவன்திருநாவுக்கரசரைப்பலவிதங்களில்துன்புறுத்தினான்.அத்துன்பங்களைத் திருநாவுக்கரசர் இறைவன் அருளால்  வென்றார் நாயன்மார்களில் பல்வேறு பெயர்களைக் கொண்டவர் இவர். இயற்பெயர், மருணீக்கியார். சமண சமயத்தைத் தழுவிய போது கொண்ட பெயர்-தருமசேனர் .நாவுக்கரசர், திருநாவுக்கரசர் - தேவாரப் பாடல்களைப் பாடியமையால் பெற்ற பெயர்-திருநாவுக்கரசர். திருஞானசம்பந்தர் அன்போடு அழைத்தமையால் வந்த பெயர்-அப்பர் .உழவாரத் தொண்டர் - சிவாலயங்களை தூய்மை செய்யும் பணியைச் செய்தமையால் பெற்ற பட்டப்பெயர்-உழவாரத் தொண்டர். தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் பெற்ற பட்டப்பெயர்-தாண்டகவேந்தர் -

Jun 09, 2023

திருப்பதி ஸ்ரீனிவாசனின் தாயார்  வகுளாதேவி

திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்..திருமலை ஏழுமலையானுடைய சிலை, நவீன கால மெஷின் பாலீஷ்போட்ட சிலைகளைப் போலவே, ஆதிகாலந்தொட்டு அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். கருங்கல்சிலைகளில், இந்தஅளவு மினுமினுப்பான சிலை, இந்த சிலையாகத்தான் இருக்கக்கூடும். திருமலை ஏழுமலையானுடைய சிலையிலுள்ள சிற்பசாஸ்திர நுட்பங்கள், சிற்பக்கலை வல்லுநர்களுக்கே, அதிசயமாகவும், ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கின்றன உலகிலேயே அரிதான ஒற்றைக்கண் நீலம் என்ற அரிய ரத்தினக்கல், ஏழுமலையான் கோவிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயாகும்..திருமலை ஏழுமலையானுக்குரிய நித்யானுஷ்டான பூஜை கைங்கர்யங்களை வரையறுத்துக் கொடுத்தவர் ஶ்ரீராமானுஜர் ஆவார்.திருப்பதி அன்னதான மண்டபத்திற்கு நேராக இருக்கும் வகுளா தேவி அங்கு நடைபெறும் அன்னதானத்தை, அன்னதான மண்டபத்திலிருக்கும் சிறு துவாரத்தின் மூலம் மேற்பார்வையிடுவதாக ஐதீகம்திருப்பதி வெங்கடேஸ்வரரை தனதுமகன் போல பாவித்து அவரை அன்புடன் பார்த்துக் கொண்டவர் வகுளா தேவி அம்மன் ஆவாள்.குடும்பத்தில் ஒற்றுமையும்,அன்பும், திருமண வாழ்வு இன்பமாகஅமையவும்,குணத்திலும்,ஞானத்திலும் சிறந்து விளங்கும் நல்ல குழந்தைகள் பிறக்கவும்,தாயுள்ளம் கொண்ட வகுளாதேவியை நாமும் வழிபட நமக்கு நல்ல குழநதைகள்  பாக்கியம் கிட்டும்.எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும்.

Jun 02, 2023

அன்ன பூரணியின் அருள்

தனஞ்செயன் தன்னை அன்ன  தோஷம் பீடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான்.முனிவர் ஒருவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று உபசரித்தார்.தனஞ்செயனுக்கு அந்த உணவு அற்பமாகக் தோன்றியது. எனவே சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். முனிவர்  அப்படி அன்னத்தை அவமானப் படுத்தியதாலேயே ,இப்போது இப்படி இருக்கிறாய்.அன்ன பூரணியை அடைந்து ஆராதித்தால் அன்ன பூரணியின்  அருள் குறைவின்றி கிடைக்கும் என்றார்.  எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், திருமகளும் குடியேறுவாள்.

May 26, 2023

சிவபெருமானுக்கு பிடித்தமான   வில்வ இலை

அகில உலகத்தை காத்து ரட்சிக்கும் தெய்வமாக திகழ்பவர் சிவபெருமானே. சிவபெருமானுக்கு பிடித்தமான பொருளாக கருதப்படுகிறது வில்வ இலை. பல வகையான வாசனை மிகுந்த மலர்களை படைப்பதை விட வில்வ இலையை நாம் சிவபெருமானுக்கு படைப்பதால் அவர் பல மடங்கு சந்தோஷம் அடைவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த வில்வ இலையை நாம் மூன்று இலைகள் கொண்ட காம்பு இருப்பது போல் படைக்க வேண்டும். வில்வ இலை வாடினாலும் அதன் மகத்துவம் குறையாது என்பதால் ஒருமுறை படைத்த அதே வில்வ இலையை மறுநாளும் நாம் படைக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. படைப்பதற்கு முன்பாக அந்த இலையை சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு படைக்க வேண்டும். இவ்வாறு நாம் செய்வதன் மூலம் நம் வீட்டில் இருக்கக் கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும்.சிவபெருமானுக்கு பிடித்த நெய்வேத்தியங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தேன். சுத்தமான தேனை சிவபெருமானுக்கு நெய்வேத்தியமாக படைப்பதன் மூலம் நம்முடைய மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் நீங்கி தூய மனம் பெறுவோம். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் ஏற்படும். இந்த தேனை பூஜை முடிந்த பிறகு அனைவருக்கும் பிரசாதமாக வழங்க வேண்டும்.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 16 17

AD's



More News