25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


ஆன்மீகம்

Feb 02, 2024

திருக்கச்சி அல்லது காஞ்சி  - வரதராஜ பெருமாள் கோயில்:

சிறப்பு வாய்ந்த அத்தி வரதர் உள்ள பெருமை பெற்ற திருத்தலம்.பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் இறைவனின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் சோழர்களால்11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது.இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள  திவ்ய தேசங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளஇந்தகோயில்சோழர்களால் இக்கோயிலில் பாஞ்ச ராத்திரம் ஆகமப்படி பூஜைகள் நடைபெறுகின்றன.அத்தி வரதர் எனப்படும்அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி சிறீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து, கோயிலின் வசந்த மண்டபத்தில் வைப்பர்.அவர் 48 நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார். இதில் முதல்24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து ஒரு மண்டல காலத்துக்குப் பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.

Jan 26, 2024

கைலாச கோயில்: Ellora

கைலாசா கோயில் இந்தியாவின் மிகப்பெரிய குடைவரைக் கோயில்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவின் எல்லோராவில் அமைந்துள்ளது. இது ஒரே பாறையைக் குடைந்துச் செதுக்கப்பட்ட கோயில் என்று கூறப்படுகிறது அதோடு பல்லவர்களின் கட்டிடக்கலையினைத் தடயங்களாக வைத்திருக்கிறது. வரலாற்று சான்றுகளின்படி இந்த கோயில் கி.பி8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.எல்லோரா கோவில் போல் தலை கீழாக கட்டப்பட்ட கோவில் ,தமிழர்களின் வியக்க வைக்கும் கட்டிடக் கலையை உணர்த்தும் கழுகுமலை வெட்டுவான். கோவில் .இந்த கைலாச நாதர் கோவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அவுரங்காபாத் மாவட்டத்தில், இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாக அமைந்துள்ளது. இது 2 கிலோமீட்டர் சுற்றுப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. ஹிந்து, புத்த மற்றும் ஜெயின் கோவில்கள் என்று மொத்தம் 34 கோவில்கள் அமைந்துள்ள எல்லோரா குகைகளில், கைலாச நாதர் கோவில் மிகப்பெரிய குகை கோவிலாகும்.ஒரே பாறையை குடைந்து கட்டப்பட்ட கைலாசநாதர் கோவில்இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பாறைகளில் இருந்து செதுக்கப்பட்ட கோவில்கள் இருந்தால் கூட, எந்தக் கோவிலுக்கும் இல்லாத அளவுக்கு கைலாசநாதர் கோவிலுக்கு தனிச்சிறப்பு இருக்கின்றது. இந்திய கட்டிடக்கலையின் பெருமைக்குரிய சான்றாக இருக்கும் குகை கோவில்களில் இறுதியாக வடிவமைக்கப்பட்ட கோவில் கைலாசநாதர் கோவில் தான் அடையாளத்தை இது சுமந்திருக்கிறது. கைலாச நாதர் கோவிலுக்குப் பிறகு, பாறையைக் குடைந்து எந்தக் கோவிலும் உருவாக்கப்படவில்லை.

Jan 19, 2024

திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில்

தினமும் ஐந்து முறை நிறம் மாறக்கூடிய சிவலிங்கம், வண்டு துளைத்த லிங்கம், உலகை சமநிலைப் படுத்த அகஸ்தியர் தென் திசைக்கு வர அவருக்கு கல்யாண சுந்தரராக திருமண காட்சியை காட்டிய திருத்தலம் என பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்ட தஞ்சாவூர், திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் திருநல்லூர் பஞ்சவர்ணேசுவரர் கோயில் விபரம்மூலவர் - கல்யாண சுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்)அம்மன்/தாயார் - கிரிசுந்தரி, கல்யாணசுந்தரிஉற்சவமூர்த்தி - கல்யாண சுந்தரேஸ்வரர்விருட்சம் - வில்வம்தீர்த்தம் - சப்தசாகரம்புராணபெயர் - திருநல்லூர்அமைந்துள்ளஇடம்: தஞ்சாவூர் நல்லூர்கோயில் திறக்கும் நேரம் - காலை 7.30 மணி முதல் நண்பகல் 12 வரைமாலை 5.30 மணி முதல் இரவு 8 வரைஇந்ததிருக்கோயில் அப்பர், சம்பந்தர் பாடல்பெற்ற சிவாலயம் ஆகும். அமர்நீதிநாயனாரை ஆட்கொண்டதும், அப்பருக்கு திருவடி சூட்டிய பெருமைகொண்டது. தேவாரப் பாடல் பெற்றதிருத்தலம். இந்த கோயில் தஞ்சை - கும்பகோணம் சாலையில் திருநல்லூரில் அமைந்துள்ளது.கோயில்முன் குளமும், ஐந்து நிலைகள் கொண்டராஜ கோபுரம் உள்ளது. கோயில்வெளிப்பிரகாரத்தில் நதவனம், மடப்பள்ளி, விநாயகர், நடராஜர் சன்னதி, மகாகாளியம்மன் சன்னதி, கன்னி விநாயகர், முகுசுந்த லிங்கம், சங்குகர்ணன் லிங்கம், சுமதி லிங்கம், வருணலிங்கம், விஷ்ணு லிங்கம், பிரமலிங்கம் ஆகிய சிற்பங்கள் உள்ளன.மூலவர் அமைந்திருக்கும் பஞ்சவர்ணேஸ்வரர் சிலைக்கு பின் இருக்கும் கல்யாண சுந்தரர் சிலை சுதை சிற்ப வடிவில் உள்ளன.சுதை - சுண்ணாம்பு, களிமண் உள்ளிட்டவை கலந்து செய்யப்பட்ட விக்ரகம்.சப்தஸ்தானம் எனும் ஏழுர்த்தலங்களில் திருநல்லூர், திருப்பாலைத்துறை, மட்டியான்திடல், பாபநாசம்,கோவிந்தக்குடி, ஆவூர், மாளிகைத்திடல், ஆகிய தலங்களாகும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்தில் வழிபடுவது சிறப்பு. சுகப்பிரசவம் நடக்க இந்த கோயிலில் கர்ப்பிணிப் பெண்கள் வழிபாடு நடத்துகின்றனர். அதே போல் நினைத்த காரியம் சித்தி அடைய வழிபட வேண்டிய சிறப்பான கோயில் இதுவாகும்.ஆதிசேஷணுக்கும், வாயு பகவானுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையின்போது கயிலை மலையிலிருந்து வாயுவால்வீசி எரியப்பட்ட இரு சிகரங்களில் ஒன்றுதான் இந்த ஆலயம் அமைந்துள்ளது. மற்றொரு சிகரம் சுந்தரகிரி எனப்படுகிறது.அப்பர் என அழைக்கப்படும், குந்தி தேவி பூஜித்து பேறுபெற்ற திருத்தலம்.முசுகுந்தன் இந்திரனிடமிருந்து பெற்ற திருவாரூரில் தற்போதுஇருக்கும் தியாகராஜ பெருமானை, இந்த தலத்தில் மூன்றுநாட்கள் வைத்து பூஜித்து, பின்னர்திருவாரூரில் பிரதிஷ்டை செய்தார்.லிங்கத்தின்மீது துளைகள்.பிருங்கு முனிவர்வண்டு வடிவில் வந்து இறைவனைவழிபட்ட ஆலயம்.வண்டு வடிவில்இறைவனை வலம் வந்து வழிபட்டார். இதன் காரணமாக இந்த சிவலிங்கத்தின்மீது சில துளைகள் காணப்படுகின்றன.திருவெண்டுறை என அழைக்கப்படும் திருவண்டுதுறைவண்டுறை நாதர் கோயிலின் வரலாறும்இதையே கூறுகின்றது.இங்கு வில்வ மரத்தடியில் இறைவன் சுயம்புவாக தோன்றினார்.பொன் நிறமாக இருக்கும் சிவலிங்கம், தினமும் வெவ்வேறு வேளைகளில் ஐந்து நிறங்களில் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார்.தாமிர நிறம், இளஞ்சிவப்பு, பொன்னிறம், உருகிய தங்க நிறம், நவரத்தின பச்சை என மாறி மாறி காட்சி தந்து அருள் தருவதால் இவருக்கு பஞ்சலிங்கேசர் என பெயர் பெற்றுள்ளார்.இந்த கோயிலில் அமர்நீதி நாயனாருக்கும், அவரின் குடும்பத்தினருக்கும் முக்தி கிடைத்த திருத்தலம். இது குறித்த பிரதிமைகள் கற்சிலைகளும், செப்பு சிலையும் உள்ளன.இங்கு சோழர் கால 22 கல்வெட்டுகள், ஒரு முஹய்சரர் கல்வெட்டு என 23 கல்வெட்டுகள் உள்ளன.

Jan 19, 2024

அயோத்தி  ராமர் கோவிலில் மைசூரு சிற்பி வடித்த விக்ரகம் பிரதிஷ்டை

 கர்நாடகாமாநிலம் மைசூருவை சேர்ந்த சிற்பக் கலைஞர் அருண் யோகிராஜ் வடித்த குழந்தை ராமர் விக்ரகம், அயோத்திராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளதாக ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச்செயலர் சம்பத் ராய் தெரிவித்தார்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜன.22ல் நடக்கிறது.இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுசெயலர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம்நேற்று கூறியதாவது:கும்பாபிஷேகத்துக்கான சடங்குகள் இன்று முதல் துவங்கி ஜன.21 வரை நடக்கின்றன. கோயில்கருவறையில் பிரதிஷ்ட்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் விக்ரகம் ஜன.18ல் கருவறையில் வைக்கப்பட்ட து.கர்நாடகாவின் மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடித்த குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.இந்த சிலை 150 - 200 கிலோ எடை உடையது. கருவறைக்குள் வைக்கப்படும் விக்ரகத்திற்கான சடங்குகள் முடிந்து ஜன. 22 மதியம் 12:20 மணிக்கு ராமர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யும் சடங்கு துவங்கி1:00 மணிக்குநிறைவடையும்.தற்போது வழிபாட்டுக்காக கோயில் வளாகத்திற்குள் வைக்கப்பட்டுள்ளராமர் விக்ரகமும்,கருவறைக்குள் இடம் பெறும், என்றார்.

Jan 12, 2024

திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர்

‘ஒவ்வொரு ஆண்டிலும் நமது வாழ்க்கையில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்து விடாதா?’ என்று ஏங்குவோர் பலர் உண்டு. அப்படி உங்கள் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்பட நீங்கள் சென்ற தரிசிக்க வேண்டிய திருத்தலம் திருப்பட்டூர் பிரம்ம தேவர் திருக்கோயில். இக்கோயில் சென்று பிரம்ம தேவரை வணங்கினால் உங்கள் வாழ்வில் நல்ல திருப்பம் ஏற்படும் என்பது உறுதி.படைப்புத் தொழிலை புறக்கணித்து அகங்காரத்துடன் இருந்த பிரம்மாவை அடக்குவதற்காக சிவபெருமான் அவருடைய ஒரு தலையை கிள்ளி பதவியையும் பறித்தார். தனது தவறை உணர்ந்த பிரம்மா, பூமியில் பல தலங்களில் லிங்கங்0களை பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டு குளிர்வித்தார். அவ்வாறாக ஒரே இடத்தில் பன்னிரண்டு சிவலிங்கங்களை ஸ்தாபித்து சிவபெருமானை வணங்கி, தான் இழந்த படைப்பு தொழிலுடன் மீண்டும் பதவியைப் பெற்ற திருத்தலம்தான் திருப்பட்டூர் என்கிறது புராண வரலாறு.இங்குள்ள ஈசன், பிரம்மபுரீஸ்வரர் என்று திருப்பெயரில் அருள்புரிகிறார். அவருக்கு அருகிலேயே தனிச் சன்னிதியில் பிரம்ம தேவர் மிக பிரம்மாண்டமான திருவுருவத்துடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சம்பத்துகளில் ஒன்றான பதவியை பிரம்மாவுக்கு அருளியதால் இங்குள்ள அம்பிகை, பிரம்ம சம்பத் கௌரி என்று அழைக்கப்படுகிறாள். தனது தலையெழுத்தையே ஈஸ்வரன் அருளால் இங்கு மாற்றிக்கொண்ட பிரம்மாவின் மடியில் நமது ஜாதகத்தை வைத்து நம்பிக்கையுடன் வேண்டினால் தலையெழுத்து திருத்தி அமைப்பார் என்பது நம்பிக்கை.குருவுக்கு அதிபதி பிரம்மா என்பதாலும், வாழ்க்கையை மங்களகரமாக மாற்றி அமைத்துத் தருபவர் என்பதாலும் இங்கு மஞ்சள் பிரசாதமே பிரதானமாகிறது. பிரம்மாவுக்கும் மஞ்சள் நிற வஸ்திரமே அணிவிக்கப்படுகிறது. மேலும், தங்கள் வேண்டுதல்கள் நிமித்தம் பக்தர்களும் மஞ்சள் காப்பு செய்கின்றனர். தேவர்களின் பிரம்ம முகூர்த்தம் என சொல்லப்படும் மார்கழி பிரம்ம முகூர்த்தத்தில் இக்கோயில் வந்து பிரம்மாவை வழிபடுவது சிறப்பு.பிராகாரத்தில் யோகக் கலையை மனிதர்களுக்கு அறிமுகம் செய்த பதஞ்சலி முனிவரின் அதிஷ்டானம் உள்ளது. மன அமைதிக்காக தியானம் செய்வதற்கு தியான அரங்கமும் இங்கு உள்ளது. வியாக்ரபாதர் வழிபட்ட காசி விஸ்வநாதர் ஆலயம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. புலியின் கால்களைப் பெற்ற அவர் உருவாக்கிய தீர்த்தத்திற்கு புலிப்பாய்ச்சி தீர்த்தம் என்று பெயர்.பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகிலேயே தமிழகத்திலேயே எங்கும் இல்லாத சிறப்பாக சுவடி ஏந்திய அரங்கேற்ற அய்யனார் எனும் மிகப்பெரிய கல் கோயில் உள்ளது. பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்குச் செல்பவர்கள் அருகிலிருக்கும் இந்த சிறப்புமிக்க ஆலயங்களுக்கும் சென்று வந்தால் முழுமையான பலன்களைப் பெறலாம்.திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து29 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில். திருச்சி, சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இங்கு செல்ல பேருந்து வசதி உண்டு.

Jan 05, 2024

சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர்

தாயின் கருவில் இருந்து வராததால், இந்த அவதாரத்தை‘அவசரத் திருக்கோலம்‘ என்பர்.‘நாளை என்பது நரசிம்மனுக்கு கிடையாது’ என்று குறிப்பிடுவர். திருமாலின் கையிலுள்ள சக்கரத்தைசக்கரத்தாழ்வார்' என்பர். பக்தர்களின் துன்பம் தீர்க்க திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக நீங்கும் என்பது ஐதீகம். பக்தனான பிரகலாதனைக் காக்க திருமால் நரசிம்மராக அவதரித்தார்..துன்பத்தில் இருந்து விடுபட்டு உடனடியாக நற்பலன் உண்டாக சக்கரத்தையும், நரசிம்மரையும் ஒருசேர வழிபடுவது சிறப்பு.இதன் அடிப்படையில் கோவில்களில் சக்கரத்தாழ்வாரையும், நரசிம்மரையும் முன்னும் பின்னுமாக வைத்து சன்னிதி எழுப்புவர்.ஸ்ரீமகாவிஷ்ணுவின் எல்லா அவதாரங்களிலும் உடன் இருந்து தீமைகளை அழித்தவர் சுதர்சனர் எனும் சக்கரத்தாழ்வார். காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கு சம்ஹாரத்தில் உதவி புரியும் திருவடிவே சுதர்சனர். எனவே இவரை வணங்கினால் எல்லா அச்சங்களும் நீங்கி நலமான வாழ்வைப் பெறலாம் என்பது நம்பிக்கை. நித்ய சூரியான சுதர்சனர் வாழ்வில் ஒளி தருபவர்  வராக அவதாரத்தில் மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். நரசிம்ம அவதாரத்தில் நரசிம்மரின் கை நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர். வாமன அவதாரத்தில் சுக்கிராச்சாரியாரின் கண்களைக் குத்தி பின்னமாக்கியவர் தர்ப்பை வடிவத்தில் இருந்த இவர்தான் என்கிறது புராணம். ராம அவதாரத்தில் அவரது வில்லில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார். பரசுராமர் அவதாரத்தில் அவரது ஏர்க் கலப்பையாக ஸ்ரீசுதர்சனர் இருந்தார். கிருஷ்ண அவதாரத்தில் சக்கரமாக இருந்து காத்தார்.மனம் ஒன்றி வழிபடும் பக்தர்களுக்கு எல்லா காலமும் அபயம் அளிக்கும் ஸ்ரீசுதர்சன சக்கரம், அச்சங்களை அகற்றக்கூடியது. ஸ்ரீசுதர்சனரை வழிபடுவதும் ஸ்துதி பாடுவதும் சிறப்பான பலன்களைத் தரும் என்பார்கள். சனிக்கிழமை காலையில் சுதர்சனரை சூரிய வடிவாகவே எண்ணி வழிபடலாம். அன்றைய சூரிய நமஸ்காரத்தை சுதர்சன ஆராதனையாக செய்யலாம்.

Dec 29, 2023

அம்பர்நாத் கோயில்

இந்தியா உயர்ந்த கட்டிடக்கலைகளையும் கோயில்களையும் கொண்ட நாடு 100 ஆண்டுகள் பழமையான இந்திய கோயில்கள் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த கோயில் சிவனுக்காகக் கட்டப்பட்டது. இந்த கோயில் அம்பரீஸ்வரர் சிவன் கோயில் என்றம் அழைக்கப்படுகிறது. இது கி.பி. 1060 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனை ஷிலஹாரா மன்னர் சித்தராஜா அவர்களால் கட்டிடப்டபட்டது என்றும் அவருடைய மகன் மும்மனி அவர்களால் புதுப்பிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது ஆனால் புராணக்கதைகளோ இதனைப் பாண்டவர்கள் ஒரே கல்லில் கட்டியதாய் கூறுகிறது.அம்பர்நாத் தின்ஷிவ் மந்திர் இந்தியாவின் மகாராஷ்டிராவில் மும்பைக்கு அருகில் உள்ளஅம்பர்நாத்தில் இன்றும் வழிபடப்படும் 11 ஆம் நூற்றாண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்துக் கோயிலாகும் இது அம்ப்ரேஷ்வரர் சிவன் கோயில் என்றும், இது புராதன சிவாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இது அம்பர்நாத் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கு 2 கிலோ மீட்டர் தொலைவில் பிருந்தாவனம், வால்துனி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வழக்கத்திற்கு மாறாக சரணாலயம் அல்லது கர்பக்ரிஹா பூமிக்குக் கீழே உள்ளது. மண்டபத்திலிருந்து சுமார் 20 படிகள் கீழே சென்றடைகிறது. மேலும் மேல உள்ள சிகாரா கோபுரம் திடீரென மண்டபத்தின் உயரத்திலிருந்து சிறிது சிறிதாக நிறுத்தப்படுவதால் வானத்தை நோக்கி திறக்கப்பட்டுள்ளது மேலும் அது ஒருபோதும் முடிக்கப்படவில்லை. இது பூமிஜா வடிவில் உள்ளது வானத்தை குறிக்கும் அம்பர்நாத் என்ற பெயர் குறிப்பிடுவதால் இங்குள்ள சிகரம் வானத்தை குறிக்கும் வாய்ப்பும் உள்ளது சமஸ்கிருதத்தில் அம்பர் என்பது வானம் எனவே இங்குள்ள சிகரம் என்பது வானம், இதனால் கோபுரம் திடீரெனநிற்காமல்இருந்திருக்கலாம் மண்டபத்தில் மூன்று மண்டபங்கள் உள்ளன.

Dec 22, 2023

சமயபுரம் மாரியம்மன் கோயில்

 தமிழகத்தில்திருச்சிக்குவடக்கேகாவிரிவட கரையிலிருந்து சுமார்15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மாரியம்மன் கோயில்.தற்போது, சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம் கண்ணனூர் என அழைக்கப்படுகிறது. இவ்விடம் கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.சுமார்400 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கண்ணனூர் மாரியம்மன் கோயில் இன்று,”சமயபுரம் மாரியம்மன்” கோயிலாக மாறி புகழ்பெற்று விளங்குகிறது.    மூலவரானமாரியம்மன் எட்டு கைகளுடன், தலை மாலை கழுத்தில், சர்ப்பக் கொடையுடன், ஐந்து அசுரர்களின் தலைகளைத் தன் காலால் மிதித்து தனது சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் படி இருக்கிறார்.பெருவளை வாய்க்கால் மற்றும் மேற்கே உள்ள மாரி தீர்த்தம்(தெப்பக்குளம்) இக்கோயிலின் தீர்த்தங்களாகும். இக்கோயிலின் தல மரம் வேப்ப மரமாகும்.அம்மனை வழிபட தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலத்தவரும், பிற நாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் சித்திரைத் தேர்த்திருவிழா, ஆடி வெள்ளி, பூச்சொரிதல் விழா போன்ற விழாக்காலங்களிலும் கூட்டம் அதிகமாகிறது. ஆடி மாதத்தில் எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் இருக்கும். குறிப்பாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Dec 15, 2023

திருப்புனவாசல் விருத்தபுரீசுவரர் கோவில்

அருள்மிகு பெரியநாயகி சமேத விருத்தபுரீஸ்வரர் திருக்கோவில் [பழம்பதிநாதர்].தமிழத்திலேயே மிக அதிக சுற்றளவுள்ள ஆவுடையாருடன் கூடிய லிங்கம் புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில்திருப்புனவாசல் பழம்பதிநாதர் கோவில் காலை06:00 மணி முதல்11:30 மணி வரை, மாலை04:00 மணி முதல் இரவு07.30 மணி வரை திறந்திருக்கும். OMஎன்ற பிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாமல், செய்த தவறுக்காக பிரம்மா படைக்கும் தொழிலை இழக்க வேண்டியதாயிற்று. பார்வதியின் அறிவுரைப்படி, பூலோகத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து, மீண்டும் தனது தொழிலைப் பெற பூஜை செய்து வந்தார்.லிங்க அபிஷேகத்திற்காக தீர்த்தம் ஒன்றை உருவாக்கினார். பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் என்பதால்“பிரம்ம தீர்த்தம்” என்ற பெயர் ஏற்பட்டது. நான்கு முகங்களைக் கொண்டவர் என்பதால், லிங்கத்தின் நான்கு பகுதிகளிலும் சிவமுகத்தை உருவாக்கினார். இது சதுர்முக லிங்கம் எனப்பட்டது. இந்த லிங்கமே இங்கு வழிபாட்டில் இருந்தது.பிற்காலத்தில், இரண்டாம் சுந்தர பாண்டியன், சோழநாட்டு பாணியையும், பாண்டியநாட்டு பாணியையும் கலந்து ராஜகோபுரமும், விமானமும் மிக உயரமாக அமைக்கப்பட்ட ஒரு கோவிலை எழுப்பினான். மூலஸ்தானத்தில் பிரமாண்டமான ஆவுடையாருடன் கூடியலிங்கம்பிரதிஷ்டைசெய்யப்பட்டது.இவரை“விருத்தபுரீஸ்வரர்”எனஅழைத்தனர். விருத்தம் என்றால் பழமை. எனவே இவர் பழம்பதிநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். பிரம்மாவே வணங்கிய தலம் என்பதால், இது மிகப்பழமையான ஊராகக் கருதப்படுகிறது. சுந்தரர் இத்தலத்திற்கான தனது பதிகத்தில் இத்தலத்தை பழம்பதி என்று குறிப்பிடுகிறார்.கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் வலப்பக்கம் சூரிய, பைரவர் சந்நிதிகளும், இடபக்கம் சந்திரன் சந்நிதியும் மேற்கு நோக்கியுள்ளன. சபாமண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் கருவறையில் இறைவன் கிழக்கு நோக்கி தனி சந்நிதியில் காட்சி தருகிறார்.இக்கோவிலில் உள்ள நந்தியும் ஆவுடையாரும்(லிங்க பீடம்) மிகவும் பெரியதாக உள்ளது.பாண்டிய நாட்டில் உள்ள14 சிவஸ்தலங்களும் இங்கு இருப்பதாக ஐதீகம். அதற்கேற்ப கோவிலுக்குள்14 சிவலிங்கங்கள் இருக்கின்றன. திருப்புனவாசல் தலத்தைத் தரிசித்தால், மற்ற தலங்களுக்குச் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருப்புனவாசலில் இருந்து சுமார்7 மைல் தூரத்துக்கு எமன் மற்றும் எமதூதர்கள் எவரும் உள்ளே வரமுடியாது என்பதும் ஐதீகம்.மஹாவிஷ்னு, பிரம்மா, இந்திரன், சூரியன், சந்திரன், எமதர்மன், வசிஷ்டர், அகத்தியர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். அம்மனுக்கு எதிரில் குடவறை காளி சன்னதி உள்ளது. கடும் உக்கிரத்துடன் வீற்றிருக்கும் குடைவரைக் காளிதேவியை கண்ணாடி வழியே தரிசிக்கலாம்.இத்தலம் நான்கு யுகத்திலும் நான்கு பெயர்களுடன் இருந்ததாகக் கருதப்படுகிறது. எனவே, நான்கு தல விருட்சங்கள் இருந்துள்ளன. எல்லோராலும் ஒதுக்கப்படும் கள்ளியும் இங்கு தல விருட்சமாக உள்ளது என்பதில் இருந்து, இறைவன் வெறுக்கக் கூடியவற்றையும் ஆட்கொள்பவர் என்பது வெளிப்படுகிறது.கிருதயுகத்தில் வஜ்ரவனம், இந்திரபுரம் என்ற பெயருடன் சதுர கள்ளியையும், திரேதாயுகத்தில் பிரம்மபுரம் என்ற பெயருடன் குருந்தமரத்தையும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயருடன் மகிழ மரத்தையும், கலியுகத்தில் பழம்பதி என்ற பெயருடன் புன்னை மரத்தையும் தல விருட்சமாக கொண்டுள்ளது. இவை நான்கும் நான்கு வேதங்களாக வணங்கப்படுகின்றன. நான்கு வேதங்களும் பூசித்த பெருமை உடையது இத்தலம்.இத்தலத்தின் தீர்த்தமாக இலக்ஷ்மி தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், இந்திரதீர்த்தம், சக்கர தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், சிவகங்கைத் தீர்த்தம், கல்யாண தீர்த்தம், வருணதீர்த்தம் மற்றும் கோவிலுக்குத் தென்புறம் ஓடும் பாம்பாறு ஆகிய 10 தீர்த்தங்கள் உள்ளன. .சீமந்தம் செய்யும் போது முதல் வளையலை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்தும் வழக்கமும் இருக்கிறது. இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வரை பிரசவ ஆஸ்பத்திரி கிடையாது. காளியின் அருளால் வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆகி விடுவதாக கூறுகிறார்கள்.வைகாசி விசாகம்11 நாள். வைகாசி விசாகத்தன்று மூலவரின் மீது சூரிய ஒளிக்கதிர்கள் பட்டு சூரியபூஜை நடக்கிறது.

Dec 08, 2023

ஸ்ரீ காளஹஸ்தி காளத்தியப்பர் கோவில்

காலை05:00 முதல்12:00 மணி, மாலை05:00 முதல்09:00 வரை, செவ்வாய், புதன் மற்றும் வியாழன் நாட்களில் காலை06:00 மணி முதல் இரவு09:00 மணி வரை திறந்திருக்கும்..மாசித்திருநாள்,திருகார்த்திகை,வெள்ளிக்கிழமை,தோறும் ஊஞ்சல் விழா, பொங்கல், மகா சிவராத்திரி  10நாட்கள் உற்சவம். திருத்தேர் பவனி. சிவராத்திரி இரவு .நந்திசேவை தரிசிறப்பு, சிவராத்திரியில் மலை வலம் வரும் விழா.முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்:“வாயுதேவனே, நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்”. போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன. கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. கோவிலின் நுழைவுவாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும்,60 அடி உயரமுடைய, ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதன் அருகே பலிபீடமும், நந்தியும் உள்ளன.:இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது வாயு(காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். இது ராகு, கேது தலம் என்பதால் கோவிலை வலம் வருவதும் எதிர்வலமாகவேஅப்பிரதட்சிணமாகவே சுற்றி வர வேண்டும். பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன.இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. விதிவிலக்காக சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள். அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது.கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேசுவரருக்கு ஒரு கோவில் உள்ளது. அதையடுத்து மலையை வெட்டி செதுக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. அதற்கு மணி கர்ணிகா கட்டம் என்று பெயர். இங்குதான் காசியில் உள்ள மணிகர்ணிகா கட்டத்தில் விசுவநாதர் அருளியதுபோல, பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதி அருளினார் என்று ஒரு கதை வழங்கி வருகிறது.அதனால் இன்றும் அந்திம திசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்திற்கு கொண்டுவந்து வலப்பக்கமாக ஒருக்களித்துச் சாய்த்துக் கிடத்தினால் சாகிறபொழுது உடல் திரும்பி வலக்காது வழியாகவே உயிர் பிரியும் என்று கூறுகிறார்கள்.சுவாமி புறப்பாடு வடக்கு கோபுரவாயில் வழியாகவே நடைபெறும். முன்காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில் நீராடிவிட்டு கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார்.ராகு, கேது சர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள், இத்தலத்திற்கு வந்து ராகு தோஷம் நீங்கவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரளமாக வராத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 16 17

AD's



More News