பிரத்தியங்கிரா தேவி பத்ரகாளியின் அவதாரம் ஆவாள்.அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியாய் திகழ்கின்ற மஹா பிரத்தியங்கிரா தேவி சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணிலிருந்து 1000 சிங்க முகங்கள், 2000 கைகளுடன் தோன்றியவள்.கம்பீரமான விஸ்வரூபம். சிரசின் மேல் நிழற் குடையாக ஆதிசேஷன் இருக்கின்றது. அடியவருக்கு வாரி வழங்கும்4 திருக்கரங்கள் உள்ளன. கரங்களில் சூலம், கபாலம், பாசம், "என் பக்தன் இவன், இவனிடம் வராதே" என்று எதிரி எச்சரிக்கும் விதமாக டமருகம் திகழ்கின்றன.இவள் அபராஜிதா என்ற பெயர் பெற்றவள். அபராஜிதா என்றால்யாராலும் வெல்ல முடியாதது' என்று பொருள்.இவள் நரசிம்ம மூர்த்தியின் உக்கிரகத்தை விழுங்கி ஜெயித்தவள்பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்த நேரத்திலும் துன்பம் என்று அவளை சரணடைந்ததால், நாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து நம் துன்பங்களை தவிடு பொடி ஆக்கி, நம்மை எல்லையில்லா மகிழ்ச்சிக்கு கொண்டு செல்வாள்.செவ்வாய், வெள்ளி, ஞாயிறு வரும் ராகு காலம், அமாவாசை, பவுர்ணமியில் நடத்தப்படும் விசேஷ பூஜை, தேய்பிறை அஷ்டமி யாகம், நடுநிசி வேளை பிரத்தியங்கிரா தேவியை வழிபடக்கூடிய நேரம் ஆகும்.இந்த யாகம் நாம் நினைத்த காரியம் நிறைவேற வழிவகுக்கும்.ஒவ்வொரு மாத அமாவாசை அன்று காலை10 மணி முதல் பகல்1 மணி வரை தேவிக்கு செய்யப்படும் நிகும்பலா யாகம் எனப்படும் மூட்டை மூட்டையாக சில மிளகாயை யாகத்தீயில் கொட்டி யாகம் நடைபெறுகின்றன.தேவியின் சக்தியை காட்டும் விதமாக தீயில் போடப்படும் காய்ந்த மிளகாய் எந்த விதமான நெடியையும் ஏற்படுத்துவது இல்லை. எவருடைய கண்களுக்கும் எரிச்சல் ஏற்படாத அதிசயத்தை உலகில் வேறு எங்குமே காணமுடியாது. கைமேல் பலன் தருவாள்.மும்மூர்த்தி மனைவிகளான பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி போன்ற மூவரும் ஒன்று சேர்ந்து தமது சக்திகளை உள்ளடக்கிய வடிவமே பிரத்தியங்கிரா என்று புராணங்கள் கூறுகின்றது.மானாமதுரையில் ஸ்ரீ மகா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி ஆலயம் உள்ளது. இக்கோவில் அம்பாளைத் தவிர தனி மனிதர் யாருக்கும் மாலை மரியாதை ஏதும் அளிக்கப்படுவது இல்லை.கோவைக்கு அருகில் சிங்காநல்லூரில் சரபேஸ்வரர், பிரத்தியங்கரா தேவி கோவில் சிறப்பாக அமைத்துள்ளது. மிகவும் உக்கிரகமான முகத்துடன் காட்சி தரும் இவள் உருவம் பார்ப்பதற்கு பயங்கரமாக இருந்தாலும், கருணை உள்ளம் கொண்டவள்.“ஜெய் பிரத்தியங்கிரே, ஜெய் ஜெய் பிரத்தியங்கிரே” இந்த மந்திரம் அனைவரும் எளிதாக சொல்லக்கூடியது.காயத்ரீ மந்திரம்ஓம் அபரஜீதாய வித்மஹேபிரத்யங்கிராய தீமஹிதந்நோ உக்ர ப்ரசோதயாத்இம் மகாசக்தியை வணங்கினால் சத்ருபயம், வியாதி, தடைகள் விலகும். சுபிட்சமான வாழ்வு கிடைக்கும்.
கணபதியை வணங்கி ஒரு செயலை செய்யத் தொடங்கினால், அச்செயல் வெற்றியாக முடியும். அதற்காகவே நாம் பிள்ளையார் சுழி போட்டு எழுதத் தொடங்குகிறோம். உலகில் முதன்முதலாக எழுத ஆரம்பித்தவரே விநாயகப் பெருமான்தான். வேத வியாசர் மகாபாரதத்தை சொல்லச்சொல்ல தன் தந்தத்தை உடைத்து எழுத்தாணியாக்கி எழுதியவர் பிள்ளையார்..பிள்ளையார் முன் நின்று அவரை வணங்கி, தலையில்3 முறை குட்டி, காதுகளைப் பிடித்தபடி தோப்புக் கரணம் போட்டு வணங்க வேண்டும். தோப்புக் கரணம் போடுவதற்கு ஒரு காரணமும் உண்டு. மகாவிஷ்ணுவின் ஸ்ரீ சக்கரத்தை பிடுங்கிக் கொண்டு அதை வாயில் போட்டுக் கொண்டார் விநாயகர். பலம் பொருந்திய விநாயகரிடம் இருந்த சக்கரத்தை மீட்க என்னன்னவோ முயன்றும் திருமாலுக்கு வெற்றி கிட்டவில்லை.இறுதியில் மகாவிஷ்ணு தோப்புக் கரணம் போட, அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தார் விநாயகர். எதிர்பார்த்தது போலவே வாயில் இருந்த சக்கரம் வெளியே வந்து விழுந்தது. மகாவிஷ்ணு சக்கரத்தை எடுத்துக் கொண்டார். இதைப்போலவே நாமும் தோப்புக் கரணம் போட்டு வழிபட்டால் வேண்டிய வளங்களை விநாயகர் தருவார் என்பது நம்பிக்கை.விநாயகர் வழிபாட்டில் அருகம்புல்லுக்கு தனி இடம் உண்டு. இதற்கும் ஒரு காரணம் உள்ளது. ஒருமுறை அனலாசுரன் என்ற அசுரனை விநாயகர் விழுங்கினார். வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன், மிக அதிகமாக அனலைக் கக்கினான். அந்த சூட்டைத் தணிக்க அருகம்புல்லை விழுங்கினார் விநாயகர். உடலுக்கு குளிர்ச்சி தரும் அருகம்புல், இதன் மூலம் விநாயகர் வழிபாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றது. பூவை விட, அருகம்புல் வைத்து பிள்ளையாரை வழிபடலாம்.முற்காலங்களில் சித்தர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமான மலை பகுதிகளில் வசித்து வந்தார்கள் மக்களுக்கு கல்வியும் மருத்துவமும் இலவசமாக அளித்து வந்தார்கள்.ஊருக்கு மாதம் இரண்டு முறை வந்து மக்களோடு தங்கி அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் தந்தார்கள். பௌர்ணமி அமாவாசை அடுத்து வந்த நான்காம் நாள் அதாவது சதுர் திதியில் ஊருக்கு வருவது வழக்கமாக இருந்தது. மக்கள் மூன்றாம் பிறையை பார்த்து காத்துக் கொண்டிருப்பார்கள் ஏனெனில் அடுத்த நாள் சித்தர்கள் ஊருக்கும் வரும் நாள் என்பதால்.சித்தர்கள் நினைவாகவே உருவாக்கப்பட்ட கடவுள்தான் விநாயகர். அதனால்தான் சித்தர் விநாயகர்- சித்தி விநாயகர் என அழைக்கப்படுகிறார். இன்று உள்ளது போல் நாள்காட்டி எல்லாம் அன்று இல்லை நிலவை வைத்தே நாளை கணித்தார்கள்.சித்தர்கள் ஊருக்கு வந்து அரச மர அடியில் அமர்ந்து மக்களை சந்தித்தனர். நீர் தேவையை பூர்த்தி செய்ய அம்மாதிரி அரசு மரங்களுக்கு அருகில் குளங்கள் வெட்டப்பட்டன.அரச மர அடியில் மக்களை வழிநடத்திய தால் இவர்கள் அரசர்கள் என அழைக்கப்பட்டனர். அரச மர அடியில் ஆட்சி செய்ததால் அரசாட்சி அரசாங்கம் என்ற சொற்கள் இன்றும் உள்ளது.அருகம்புல் போன்ற புல்களை கொண்டு வைத்தியம் பார்த்த சித்தர்கள் புல்லையார் என்று அழைக்கப்பட்டு அதுவே பின்பு பிள்ளையார் ஆனது.
கபில முனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் தங்கி சிவபூஜை செய்ய நினைத்தார். இப்பகுதியில் பசுக்கள் தானாக பால் சுரந்து வந்த காரணத்தினால் மணல் முழுவதும் வெண்ணிறமாக காட்சியளித்தது. முனிவர் இந்த வெண்ணிற மணலை எடுத்து லிங்கம் அமைத்து வழிபாடு செய்தார்.ஒருமுறை அந்த வழியாக வந்த மன்னனது குதிரையின் கால் குளம்பு, மணல் லிங்கத்தின் மீது பட்டு லிங்கம் பிளந்து விடுகிறது. வருந்திய முனிவர் பிளவுபட்ட லிங்கத்தை எடுத்துவிட்டு வேறு லிங்கம் பிரதிஷ்டை செய்ய நினைத்த போது, இறைவன் பார்வதி சமேதராக காட்சி தந்து,“முனிவரே! பசுவின் பால் கலந்த வெண்ணிற மணலில் செய்த லிங்கம் பிளவுபட்டிருந்தாலும் அதை அப்படியே பிரதிஷ்டை செய்து விடுங்கள். காமதேனுவே பசுவடிவில் இங்கு வந்து பால் சொறிந்துள்ளது. எனவே இந்த லிங்கத்தை வழிபடுபவர்கள் சகல செல்வங்களும் அடைவார்கள்” என்றார் இறைவன்.இன்றும் கூட இக்கோவிலின் லிங்கம் வெண்ணிறமாகவே உள்ளது என்பது சிறப்பம்சமாகும். குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.திருக்கழிப்பாலை தலத்தில் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்குகிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வான்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில், தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து, தென்கிழக்குத் திசையில் சுமார்5 கி.மீ. தொலைவிலுள்ள, சிவபுரி என்றும்திருநெல்வாயில்என்றும்வழங்கும்மற்றொறு சிவஸ்தலத்தில்இருந்து தெற்கே தனி ஆலயத்தில் தனது மற்ற பரிவார தேவதைகளுடன் தற்போது எழுந்தருளியுள்ளார்.திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தல் உள்ள சிவத்தலமாகும். இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 4வது தலம் ஆகும்.
ஓம் நமசிவாய , திருச்சிற்றம்பலம்எல்லாம் வல்ல சிவகாமி அம்மை உடனுறை நடராஜப் பெருமான், அப்பர் பெருமான் மற்றும் வள்ளல் பெருமானுடைய அருளாணைக்கிணங்க யோகி ஆடலரசன் அய்யா அவர்கள் நிறுவியுள்ள சைவ சன்மார்க்க எஜுகேஷனல் டிரஸ்ட் வழங்கும் 7 நாட்கள் இலவச தசகாரிய வாசி யோக ஆன்லைன் வகுப்புகள் வருகின்ற வெள்ளிக்கிழமை (1/9/2023) அன்று துவங்க உள்ளது.வகுப்பு நடைபெறும் நேரம்:- 8pm to 9pm.வகுப்பை பற்றிய மேலும் விபரங்களை பெறுவதற்கு எங்களை - 8675371212 என்றஎண்ணில்வாட்ஸ்அப்மூலமாகவோ,நேரடியாகவோ தொடர்பு கொள்ளலாம்.நன்றி. வணக்கம்.நிர்வாக குழு:-யோகி ஆடலரசன் ஐயா அவர்களின் சன்மார்க்க யோக சேவை இயக்கம் மற்றும் வாகீசர் தசகாரிய வாசியோக சாகா கல்வி பயிற்சி மையம். திருக்கோவிலூர். Cell - 8675371212.
நம் வீட்டுக்கு மகாலட்சுமியை அழைத்து இரண்டு நாள்கள் தங்க வைத்து ஒவ்வொரு வீட்டிலும் செல்வ வளத்தை பெருக்க பூஜைகள் செய்வது தான் வரலட்சுமி பூஜை.வரலட்சுமி விரதத்தை ஆதியில் தேவலோகப் பெண்கள் கடைப்பிடித்ததாகவும் பின்பு சித்திர நேமி என்னும் பெண் அறிந்து தன் துயர் நீங்கப் பெற்றார் என்றும் புராணங்கள் சொல்கின்றன. சாருமதி என்னும் பெண்ணின் கனவில் வரலட்சுமி தாயார் தோன்றி வரலட்சுமி விரத முறைகளை உபதேசித்து அதைக் கடைப்பிடிக்குமாறு கூறினார் என்றும் அன்றுமுதல் இந்த விரதம் பூலோகத்தில் அனைவராலும் கடைப்பிடிக்கப் படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.ஆதி சங்கரர் பிட்சையின்போது நெல்லிக்கனியை தானமாகப் பெற்று தானமிட்ட பெண்மணியின் தரித்திரம் நீங்கும் வண்ணம் கனகதாரா ஸ்தோத்திரம் பாடியது ஒரு துவாதசி திதி. ஏகாதசி திதி அன்று விரதம் இருந்தவர்கள் துவாதசி திதி அன்றுதான் பாரனை முடித்து உணவு உட்கொள்வர். ஏகாதசி அன்று பெருமாளை வழிபட்டு கூடவே துவாதசி அன்று வரலட்சுமியையும் வழிபடக் கிடைத்திருக்கும் அற்புதமான நாள் இந்த ஆண்டு வரலட்சுமி விரதம்.வழக்கமாக வரலட்சுமி நோன்பு, ஆடி மாதம் பௌர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையில் கடைப்பிடிக்கப்படும். வெள்ளிக்கிழமை என்றாலே மகாலட்சுமி வழிபாட்டு மிகவும் உகந்தநாள். பெருமாள் வாசம் செய்யும் இடம் பாற்கடல். அந்தப் பாற்கடலைக் கடைந்தபோதுதான் மகாலட்சுமி தேவி அவதரித்தார்.:பொதுவாகவே விரதங்கள் என்பவை குடும்பங்களில் வழிவழியாகக் கடைப்பிடிக்கப்படுபவை. குடும்பத்தில் இல்லாத விரதங்களைக் கைக்கொள்ளும் வழக்கம் நம் மரபில் இல்லை. பெண்கள் திருமணமான பிறகு பிறந்தவீட்டில் கடைப்பிடித்த விரதங்கள் பலவற்றைப் புகுந்த வீட்டில் கடைப்பிடிக்கும் வழக்கம் இல்லாமல் இருந்தால் அவற்றை விட்டுவிடுவார்கள். ஆனால், அவ்வாறு புகுந்தவீடு, பிறந்த வீடு என்ற பேதமின்றி யாரும் கடைப்பிடிக்கலாம் என்னும் விதியை உடையது வரலட்சுமி விரதம்.எந்த நோன்பையும்விட வரலட்சுமி நோன்பு மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் நம் இல்லத்துக்குக் கொண்டுவரும். ஆண்டு முழுவதும் வீட்டில் ஆரோக்கியத்தையும் செல்வச்செழிப்பையும் வரமாகத் தரும் நோன்பு இது. இதனால், கணவன் மனைவி இடையே நல்ல அன்பும் அந்நியோன்யமும் நிறைந்திருக்கும் என்பது ஐதிகம்..ஓம் கமலாயை நம:ஓம் ரமாயை நம:ஓம் லோக மாத்ரே நம:ஓம் விச்’வ ஜநந்யை நம:ஓம் மஹாலட்சுமியை நம:ஓம் க்ஷீராப்தி தநயாயை நம:ஓம் விச்வஸாக்ஷிண்யை நம:ஓம் சந்தரசோதர்யை நம:ஓம் ஹரிவல்லபாயை நம:என்னும் ஒன்பது நாமங்களைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும். பின்பு வரலட்சுமி தேவியை வணங்கிவிட்டுக் கையில் சரடு கட்டிக்கொள்ள வேண்டும். சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் மூத்த பெண்கள், மாமியாரிடம் கட்டிக்கொள்வது விசேஷம். தனிக்குடித்தனத்தில் இருப்பவர்கள் கணவன் கையால் கட்டிக் கொள்ளலாம். மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டிக்கொள்வோம்.
திருநள்ளாறுக்கும் குச்சனூருக்கும் போகமுடியலியா? கவலையைவிடுங்கள் பழநியில்இருக்கிறார் சனிஸ்வரன்! .நவகிரகங்களில் ஒருவர். சனிபகவான். சனியின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட பலரும் பரிகாரம் செய்வதற்குத் திருநள்ளாறு குச்சனூர் ஆகிய தலங்களுக்குச் செல்வது வழக்கம். அங்கு சென்றிட இயலாதவர்கள் முருகனின் மூன்றாம் படைவீடான பழநி திருஆவினன்குடியில் உள்ள சனீஸ்வரனை வழிபட்டு திருநள்ளாறு, குச்சனூருக்கு நிகரான பலனைப் பெறலாம்தமிழ்நாட்டிலேயே ஒற்றைச் சனிக்கான தனிக்கோயில் பழநியில் மட்டுமே உள்ளது. சனீஸ்வரனின் திருவுருவச் சிலையானது. புடைப்புச் சிற்பமாக இல்லாமல் முழுவுருவச் சிலையாக உள்ளது காக்கை வாகனத்துடன், நின்றகோலத்தில், கிழக்குநோக்கி முருகனுக்கு எதிர்திசையில் அமைந்துள்ள சிறப்பு உடையது இத்தலம்திருநள்ளாறு,குச்சனூர்சனீஸ்வரன்தலங்களுக்குஇணையாகப்பழநிஆவினன்குடிதலமும்சிறப்புடையதுஎன்பதால்தென்மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.காக்கை வாகனத்துடன்,நின்றகோலத்தில், கிழக்குநோக்கி முருகனுக்கு எதிர்திசையில்அமைந்துள்ள சிறப்பு உடையது இத்தலம் இக்கோயிலுக்கு வருபவர்கள்முதலில் முருகனை வழிபட்டுபின்னர் சனிஸ்வரனைத் தரிசிக்கவேண்டும். வடைமாலை சாத்தியும், எள் சாதம் படைத்தும், எள்முடிச்சுகளை தலையைச்சுற்றிநெருப்பில் இட்டும் விளக்கேற்றியும்இங்கு வழிபடுகிறார்கள். சனீஸ்வரனுக்கு உகந்தகோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. ஆலயங்களில் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருமேனியைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம்தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கைஎனவே தான்‘கோடி நன்மைகள் தரும் ஆடி வெள்ளி’ அன்று தேடிச்சென்று வழிபட வேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும். அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் செல்வநிலை உயரும். எட்டுவகை லட்சுமிக்கும் இனிய விழா எடுப்பது ஆடி மாதமாகும்.. துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகை.ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் பொங்கல் வைத்து வபாடு நடத்துவர். அந்தவருடம் முழுவதும் குலம் சிறக்க குடும்பத்தோடு பொங்கல் வைப்பதை காணலாம். திருமயிலை முண்டக கண்ணியம்மன், திருவேற்காடு மாரியம்மன், சமயபுரம், நார்த்தாமலை, மற்றும் பல மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.கன்னியாக்குமரி, திருவானைகாவல் அகிலாண்டேஸ்வரி ஆகிய ஸ்தலங்களில் ஆடி வெள்ளி கிழமைகளில் விடியற்காலை3 மணி முதல் வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.ஆடி வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரத்தில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, தெய்வங்களை வழிபடுவது சிறப்பு. அன்றையதினம் ஆலயங்களில் குத்து விளக்கு பூஜை நடைபெறும். அப்போது சுமங்கலிப் பெண்களுக்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், ஆகியவற்றோடு ரவிக்கைத் துணியும் வைத்துத் தருவது நலம் தரும். ஆடி வெள்ளியன்று மகாலட்சுயை வழிபட்டால் நிறைந்த செல்வம் இல்லம் தேடி வரும் என்பது நம்பிக்கை. ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் மேற்கொள்ளப்படுகிறது.ஆடி வெள்ளியன்றுநாகதேவதைக்குபால்தெளித்துவிசேஷபூஜைசெய்வார்கள்.பராசக்தியின்ஒன்பதுஅம்சங்களை(சர்வபூதசமனி,மனோன்மணி,பலப்பிரதமணி,பலவிகாரணி,கலவிகாரணி,காளி,ரௌத்ரி,ஜேஷ்டை,வாமை)ஒன்பதுசிவாச்சார்யர்கள், ஒன்பது வகை மலர்களால்ஒரேசமயத்தில்அர்ச்சிக்கும்“நவசக்தி அர்ச்சனை’ நடைபெறும்.ஆடிவெள்ளியில்“சண்டிஹோமம்’போன்றசக்திஹோமங்களும்செய்வார்கள். மொத்தத்தில் இந்த ஆடி மாதம் பெண்கள் மற்றும் பெண் தெய்வங்களில் பலம் ஓங்கிநிற்க்கும் மாதம். அம்பிகையைவெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால், நல்லகாரியங்கள் இல்லத்தில் நடைபெற வழி பிறக்கும் என்பதை அனுபவத்தில் காணலாம்.
ஏகலைவனின் இருப்பிடத்தில் துரோணரைப்போலவே ஒரு சிலை இருப்பதைக் கண்டார். அந்தசிலைக்கு எதிரே வில்லுடன் நின்று கொண்டிருந்த ஏகலைவனைபார்த்துஉனக்குவில் வித்தையை கற்றுதந்தது யார்? என்றுகோபத்துடன் கேட்டார். அதற்குஏகலைவன். நீங்கள் தான்.ஆனால் நீங்கள் நேரில்வந்து எனக்கு கற்றுத்தரவில்லை. நீங்கள் ஆசிவழங்கி என்னுள் இருந்துகற்று தந்தீர்கள் என்றான்அர்ஜுனனை சிறந்த வில் வீரனாக ஆக்குவேன் என்றுதான் கூறியது. நினைவுக்குவந்தது. உடனே துரோணர் ஏகலைவனை நோக்கி, எனக்குகுரு தட்சினையாக உனதுவலதுகைக் கட்டை விரலைத்தா என்று கேட்டார்உடனே ஏகலைவன் ஒருகணம் கூடதாமதிக்காமல் கத்தியைஎடுத்து தனது வலதுகை கட்டை விரலைவெட்டி எடுத்து துரோணரிடம் கொடுத்தான் ஏகலைவனின் செயலைப்பார்த்துக்கொண்டிருந்த அர்ஜுனன் அதிர்ச்சிஅடைந்தான் .
சிதம்பரம், காசி, திருக்காளத்திவரிசையில். முக்கியமான4 ஆவதுதலமாகத் திருவாலவாய்உள்ளது. இந்த நகரம்புராண காலத்தில் திருவாலவாய்என்று அழைக்கப்பட்டுள்ளது இந்தத்தலத்தின்பெயரைக் கேட்டதுமே பேரின்பநிலை கிடைக்கும். அதனால்சிவபெருமானுடைய முக்திதலங்களுள் ஒன்றாகவும் இத்தலம்கருதப்படுகிறது. இத்தலத்தினைச்'சிவன் முக் திபுரம்'என்றும் அழைக்கின்றனர்இத்தலம், முக்கியமானசிவத்தலமாக மட்டும் இல்லாமல்அம்பிகையின்51 சக்தி பீடங்களுள்.ஒன்றுமாகும். இதனை, இராசமாதங்கி சியாமள பீடம் என்று அழைக்கின்றனதென் திரு ஆலவாய் கோயில் என்பது மதுரைமாநகரில் தெற்கு மாசி வீதியில் அமைத்துள்ள மீனாட்சி அம்மன் உடனுறை சிவபெருமான் கோயில்ஆகும்.
காசிக்கு வந்த தனஜ்செயன்,விரதம் இருந்து அன்னபூரணியின்அருள் பெற்றான்.. உனக்குஅருள் பாலிக்க நான்காசிக்கே வருகிறேன். ஈசனின்ஆலயத்துக்குத் தென்புறம்எனக்கு ஒருகோயில் எழுப்பினால், நான் அங்கு வந்துஅமர்கிறேன் என்றாள். அதனால் வற்றாத செலவத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்தஅன்னபூரணி ஆலயம். இந்த விரதத்தை யார்மேற்கொண்டாலும் அவர்களுக்குஅன்னத்துக்கு குறைவிருக்காது. நாமும் அன்ன பூரணியின்அருள் பெறுவோம் .