ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் வங்கதேசத்தின் தாகாவில் ,ஆண்கள் அணிகளுக்கான ரீகர்வ்' பிரிவில் இந்தியா சார்பில் அடானு தாஸ், ராகுல், யாஷ்தீப் சஞ்சய் இடம் பெற்ற அணி பங்கேற்கிறது.காலிறுதியில் மலேசியாவை 6-0 என வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய அணி, இல்பாத், தஸ்டன், அலெக்சாண்டர் அடங்கிய கஜகஸ்தான் அணியை 5-3 என்ற கணக்கில்வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது. இந்தியாவின் தீபிக் ஷா, ஜோதி, பிரித்திகா அடங்கிய அணி ,பெண்களுக்கான காம் பவுண்டு அணிகள் பிரிவில் பங்கேற்றது. காலிறுதியில், 235-225 என வியட்நாம் (கிம் ஆன், நிகுயேன், பம் வான்) அணியை வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, வங்க தேசம் (போன்னா, குல்சும், புஸ்பிதா) மோதின.இதில் இந்திய அணி 234-227 என வென்று, பைனலுக்கு (நவ. 13) முன்னேறியது. இதில் தென் கொரியாவிடம் மோத உள்ளது. ஆண்கள் அணிதென்கொரியாவை (நவ. 14) சந்திக்க உள்ளது.
ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (11050 புள்ளி) 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார். இவர், ஏ.டி.பி., பைனல்ஸ் 3 தொடரின் லீக் போட்டியிலும் வெற்றி பெற்றால், ஆண்டு இறுதியில் வெளியாகும் ஏ.டி.பி., தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளலாம்.இத்தாலியின் ஜானிக் சின்னர் (10000) 2வது இடம். ஜெர்மனியின் ஸ்வெரேவ் (4960) 3வது இடம். செர் பியாவின் ஜோகோவிச் (4830) 4வது இடம்.அமெரிக் காவின் பென் ஷெல்டன் (3970) 5வது இடத் தில் உள்ளனர்.
தாய்லாந்தில் நடக்கவுள்ள பெண்களுக்கான (20 வயது) ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன், தகுதிச் சுற்றில் 33 அணிகள் பங்கேற்றன. 20 ஆண்டு களுக்கு பின் ஆசிய கோப்பையில் 'டி' பிரிவில் இடம் பெற்ற இந்தியா, 3 போட்டி யில், 2 வெற்றி, ஒரு 'டிரா' என 7 புள்ளிகளுடன், பட்டியலில் முதலிடம் பிடித்து,விளையாடும் வாய்ப்பை பெற்றது.தாய்லாந்தின் பாங்காக்கில், நேற்று அணிகளுக்கான பிரிவு ('டிரா') தேர்வு12 அணிகள் 3 பிரிவுகளாக நடந்தது. மொத்தம் பிரிக்கப்பட்டன. இதில் 6 ஆசியாவின் 'நம்பர்-1' முறை கோப்பை வென்ற, அணி, நடப்பு சாம்பியன் ஜப்பான், வலிமையான ஆஸ்திரேலியா, சீன தைபே அணிகள் இடம் பெற்றுள்ளன.இந்திய அணி 'குரூப் ஆப் டெத்' என்றழைக் கப்படும் 'சி' பிரிவில் இடம் பிடித்தது.
மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் ஜப்பானில், ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல்.3' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் 17-21, 21-19, 21-10 என ஜப்பானின் புஜிஹராவை வீழ்த்தி தங்கம் வென்றார்.இந்தியாவின் பிரமோத் பகத், மணிஷா ராம தாஸ் ஜோடி, கலப்புஇரட்டையர் 'எஸ்.எல். 3- எஸ். யு. 5' பிரிவு பைனலில் 21-19 என சகநாட்டை சேர்ந்த நிதேஷ் குமார், துளசிமதி முருகேசன் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. ஆண்கள் இரட்டையர் 'எஸ்.எல்.3-4' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி 21-17, 18-21, 21-16 என சகநாட்டை சேர்ந்த ஜெகதீஷ் தில்லி, நவீன் சிவகுமார் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இத்தொடரில் பிர 'மோத் பகத் 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார்.இந்தியாவின் நவீன் சிவகுமார் ,ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 4' பிரிவு பைனலில் , 21-14, 21-14 என சகவீரர் சுகந்த்தை வீழ்த்தி தங்கம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் 'எஸ். எச். 6' பிரிவு பைனலில்இந்தியாவின் கிருஷ்ணா நாகர் 23-20, 21-13 என அமெரிக்காவின் மைல்ஸ் கிரேஜெவ்ஸ்கியை தோற்கடித்து தங்கம் வென்றார் .பெண்கள் ஒற்றையர் 'எஸ்.யு. 5' பிரிவு பைன லில் இந்தியாவின் துளசி மதி முருகேசன் 21-15, - 21-15 என சகவீராங் கனை மணிஷாவை வீழ்த்தி தங்கத்தை வென்றார் . இத் தொடரில் இந்தியாவுக்கு 9 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என, 24 பதக்கங்கள் கிடைத்தது.
உலக கோப்பை செஸ் 11வது சீசன் கோவாவில் , 4வது சுற்றுக்கு இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஹரிகிரிஷ்ணா பிரக்ஞானந்தா, பிரனவ் முன்னேறினர். 'நடப்புஉலக சாம்பியன்' இந்தியாவின் குகேஷ் 3வது சுற்றில் தோல்வியடைந்தார்.நேற்று, 3வது சுற்றுக்கான 'டை பிரேக்கர்' நடந்தது. இதில் தமிழகத்தின் கார்த்திக் வெங்கடராமன், ருமேனியாவின் போக்டன்-டேனியல் டீக் மோதினர். முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டியில் கார்த்திக் வெற்றி பெற்றார். முடிவில் கார்த்திக் 2.5- 1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று 4வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்தியா சார்பில் 5 பேர் நான்காவது சுற்றுக்கு முன்னேறினர்.
டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் ,சவுதி அரேபியாவின் ரியாத் நகரில், உலகின் 'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்ற ,ஒற்றையர் பிரிவுபைனலில், உலகின் 'நம்பர்-1' பெலா ரசின் அரினா சபலென்கா, 6வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய ரிபாகினா, 'டை பிரேக்கர்' வரை சென்று 2வது செட்டை 7-6 என கைப்பற்றினார்.ஒரு மணி நேரம், 47 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ரிபாகினா 6-3, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.
23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டி சென்னைநேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. ஆசிய நாடுகளைச் சேர்ந்த 35-100 வயதுடைய 3,500க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.போட்டிகள் நேற்று நிறைவுற்றன. இந்தியா 260 தங்கம், 253 வெள்ளி, 277 வெண்கலம் என மொத்தம் 790 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.இரண்டாவது இடத்தை இலங்கை (39 தங்கம், 50 வெள்ளி, 39 வெண்கலம்), மூன்றாவது இடத்தை தாய்லாந்து (39-தங்கம், 26 வெள்ளி, 11 வெண்கலம்) பெற்றன.
தமிழக மாஸ் டர்ஸ் தடகள சங்கம், இந்திய தடகள கூட் டமைப்பு, சார்பில், 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப், சென்னை, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் 20க்கும்அதிகமான ஆசிய நாடுகளைச் சேர்ந்த, 35 வயது முதல் 100 வயது வரை உள்ள, 3,500க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். 14 பிரிவுகளில்போட்டி நடக்கின்றன.நேற்று இரண்டாவது நாளில் பல்வேறு பிரிவுகளில் 100 மீ., ஓட்டம் நடந்தன. இந்தியாவின் ஜஸ்பிந்தர் சிங் பாஜ்வா 55 வயதுக்கு மேற்பட்டோர் 100 மீ., தடை ஓட்டத்தில் (15.69 வினாடி) தங்கம் வென்றார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் தம்பல் ஷர்மா (13.26, + 65 வயது), விஜயன் (14.37, + 70), மணச்சந்த் சிங் (15.73, +75), தங்கம் வென்றனர்.இரண்டாம் நாள் முடிவில், இந்திய ஆண்கள் (69 தங்கம், 70 வெள்ளி, 69 வெண்கலம்), பெண்கள்அணி(59+68+72) மொத்தம் 128 தங்கம் உட்பட 407 பதக்கங்களை வென்றது.
செஸ் உலககோப்பை 11வது சீசன் கோவாவில் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன் குகேஷ், அர்ஜுன் உட்பட 10 இந்திய வீரர்கள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.நேற்று மூன்றாவது சுற்றின் முதல் போட்டி நடந்தது. இந்திய வீரர் அர்ஜுன், உஸ்பெகிஸ்தானின் ஷம்சிதினை சந்தித்தார். அர்ஜுன், 30வது நகர்த்தலில் வெற்றி பெற்று, 1.0-0 என முன்னிலை பெற்றார். இன்று இரண்டாவது போட்டியை 'டிரா' செய்தால், நான்காவது சுற்றுக்கு முன்னேறலாம்.இந்தியாவின் ஹரிகிருஷ்ணா, முதல் போட்டியில் பெல்ஜியத்தின் டேனியலை 1.0-0 வென்று என முன்னிலை பெற்றார். இந்திய வீரர் பிரனவ், லிதுவேனியாவின் திதாசை 102வது நகர்த்தலில் வென்றார். குகேஷ், ஜெர்மனியின் பிடரெரிக்கை சந்தித்தார். குகேஷ், 34 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். கடந்த உலக கோப்பை தொடரில் பைனலில் பங்கேற்ற, இந்தியாவின் பிரக்ஞா னந்தா, ஆர்மேனியாவின் ராபெர்ட்டை எதிர்கொண் டார்.பிரக்ஞானந்தா, 30 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.
தேசிய சப்-ஜூனியர் கால்பந்து தொடர் இந்தியாவில் நடக்கிறது. தமிழக அணி 'டையர்-2'ல் 'டி' பிரிவில் புதுச்சேரி, மத்திய பிரதேசத்துடன் இடம் பெற்றுள்ளது. முதல் போட்டியில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தியது.சத்தீஷ்கரில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் தமிழகம், புதுச்சேரி அணிகள் மோதின. இப்போட்டியில் தமிழக அணி 15-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, அடுத்த கட்ட சுற்றுக்கு தகுதி பெற்றது.