ரீகர்வ், காம்பவுண்டு பிரிவில் இந்திய அணிகள்ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப், பைனலுக்கு முன்னேறின.
ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் வங்கதேசத்தின் தாகாவில் ,ஆண்கள் அணிகளுக்கான ரீகர்வ்' பிரிவில் இந்தியா சார்பில் அடானு தாஸ், ராகுல், யாஷ்தீப் சஞ்சய் இடம் பெற்ற அணி பங்கேற்கிறது.
காலிறுதியில் மலேசியாவை 6-0 என வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்திய அணி, இல்பாத், தஸ்டன், அலெக்சாண்டர் அடங்கிய கஜகஸ்தான் அணியை 5-3 என்ற கணக்கில்வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தது.
இந்தியாவின் தீபிக் ஷா, ஜோதி, பிரித்திகா அடங்கிய அணி ,பெண்களுக்கான காம் பவுண்டு அணிகள் பிரிவில் பங்கேற்றது. காலிறுதியில், 235-225 என வியட்நாம் (கிம் ஆன், நிகுயேன், பம் வான்) அணியை வென்றது. அடுத்து நடந்த அரையிறுதியில் இந்தியா, வங்க தேசம் (போன்னா, குல்சும், புஸ்பிதா) மோதின.
இதில் இந்திய அணி 234-227 என வென்று, பைனலுக்கு (நவ. 13) முன்னேறியது. இதில் தென் கொரியாவிடம் மோத உள்ளது. ஆண்கள் அணிதென்கொரியாவை (நவ. 14) சந்திக்க உள்ளது.
0
Leave a Reply