மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் இந்தியா 24 பதக்கங்களை வென்றது.
மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் ஜப்பானில், ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல்.3' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் 17-21, 21-19, 21-10 என ஜப்பானின் புஜிஹராவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இந்தியாவின் பிரமோத் பகத், மணிஷா ராம தாஸ் ஜோடி, கலப்புஇரட்டையர் 'எஸ்.எல். 3- எஸ். யு. 5' பிரிவு பைனலில் 21-19 என சகநாட்டை சேர்ந்த நிதேஷ் குமார், துளசிமதி முருகேசன் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது.
ஆண்கள் இரட்டையர் 'எஸ்.எல்.3-4' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி 21-17, 18-21, 21-16 என சகநாட்டை சேர்ந்த ஜெகதீஷ் தில்லி, நவீன் சிவகுமார் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இத்தொடரில் பிர 'மோத் பகத் 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார்.
இந்தியாவின் நவீன் சிவகுமார் ,ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 4' பிரிவு பைனலில் , 21-14, 21-14 என சகவீரர் சுகந்த்தை வீழ்த்தி தங்கம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் 'எஸ். எச். 6' பிரிவு பைனலில்இந்தியாவின் கிருஷ்ணா நாகர் 23-20, 21-13 என அமெரிக்காவின் மைல்ஸ் கிரேஜெவ்ஸ்கியை தோற்கடித்து தங்கம் வென்றார் .
பெண்கள் ஒற்றையர் 'எஸ்.யு. 5' பிரிவு பைன லில் இந்தியாவின் துளசி மதி முருகேசன் 21-15, - 21-15 என சகவீராங் கனை மணிஷாவை வீழ்த்தி தங்கத்தை வென்றார் . இத் தொடரில் இந்தியாவுக்கு 9 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என, 24 பதக்கங்கள் கிடைத்தது.
0
Leave a Reply