25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


விளையாட்டு (SPORTS)

Oct 15, 2025

இரண்டு போட்டிகள் கொண்ட  கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் , இந்தியா வெற்றி பெற்றது.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் , இந்தியா வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்றது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது.இரண்டாவது டெஸ்ட் டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 518/5 ரன்னுக்கு 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 390 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. நேற்று ஐந்தாவது நாள்ஆட்ட முடிவில் ,இந்திய அணி இரண்டாவது இன்னிங் சில் 124/3 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Oct 15, 2025

செய்னா நேவல் பாட்மின்டன் இருந்து  விலக உள்ளார் .

.கடந்த 2012, லண்டன் ஒலிம்பிக்ஒற்றையரில் வெண்கலம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் பாட்மின்டனில் பதக்கம்வென்ற முதல் இந்தியரானார், வீராங்கனை செய்னா நேவல் 35.. அடுத்து உலக சாம்பியன்ஷிப் அரங்கில் 2015 (வெள்ளி), 2017 ல் (வெண்கலம்) பதக்கம் வென்றார்.2015ல் வெளியான உலக பாட்மின்டன் தரவரிசையில் 'நம்பர்-1' இடம் பிடித்தார். காமன் வெல்த் விளையாட்டில் 2 முறை (2010, 2018) தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றவர். பாட்மின்டனில் இருந்து விலகஉள்ளார் .எதிர்காலத்தில் பயிற்சியாளராக வருவது குறித்து முடிவெடுக்கவில்லை. விளையாடுவதை விட இது கடினமானது. தினமும் 10 முதல் 15 மணி நேரம் மைதானத்தில் நின்று, மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்," என்றார்

Oct 14, 2025

இந்திய பெண்கள்  அணி ஆசிய கால்பந்து போட்டியில் வெற்றி.

ஆசிய கால்பந்து 10வது சீசன், பெண்களுக்கான (17 வயதுக்கு உட்பட்ட)  2026ல் சீனாவில் (ஏப்.30மே17) நடக்கஇருக்கும் தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடக்கின்றன.இந்திய அணி 'ஜி' பிரிவில் உஸ்பெகிஸ் தான், கிர்கிஸ்தானுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் அணி, இந்திய கிர்கிஸ்தானை சந்தித்தது. முதல் பாதி 1-1 என சமனில் முடிந்தது.இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண் டாவது பாதியில் 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் இந்திய அணி கேப்டன் ஜுலன் நாங்மய்தெம் (90+1), ஒரு கோல்அடித்து ,முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

Oct 14, 2025

சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர்.

சர்வதேச சாலஞ்ச் பாட்மின்டன் தொடர்துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன் (தமிழகம்) அர்ஜுன் (கேரளா) ஜோடி, ஜப்பானின்யுடோநோடா, ஷுன்யாஓடாஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை இந்திய ஜோடி 21-13,. தொடர்ந்து இரண்டாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, 21-6 என வசப்படுத்தியது. 29 நிமிடம் மட்டும் நடந்த பைனலில் இந்திய ஜோடி 21-1 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.இந்தியவின் ஹரிஹரன் அம்ச கருணன், திரீஷா ஜோடி, இந்தோனேஷியாவின் நாஹ்யா முக்யிபா, நவாப் ஜோடியை  கலப்பு இரட்டைய பிரிவு பைனலில் சந்தித்தது. இந்திய ஜோடி 52 நிமிடம் நடந்த பைனலில் 21-14, 18– 21, 21-11 என வென்று கோப்பை வென்றது.

Oct 14, 2025

சர்வதேச ஸ்குவாஷ்சாலஞ்சர் பி.எஸ்.ஏ., அரங்கில் ஜோஷ்னா வென்ற 11வது கோப்பை. ஜோஷ்னா 'சாம்பியன் 

 சர்வதேச ஸ்குவாஷ் சாலஞ்சர் பி.எஸ்.ஏ., தொடர் ஜப்பானில் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகத் தரவரிசையில் 117வது இடத்திலுள்ள இந்தியாவின் 39 வயது ஜோஷ்னா சின்னப்பா, இத்தொடரின் 'நம்பர்-3' அந்தஸ்துபெற்ற எகிப்தின் ஹயா அலியை எதிர் கொண்டார்.முதல் செட்டில் 11-5  , 2  வது செட்டில்  11-9 , ஜோஷ்னா,மூன்றாவது செட்டில்  ஹயா அலி (11-5) வென்றார். 4வது செட்டை ஜோஷ்னா 11-8 என ஜோஷ்னா கைப்பற்றினார்.போட்டியி ன் முடிவில் ஜோஷ்னா 3-1 (11–5,11-19, 5-11, 11-8) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.

Oct 14, 2025

விளையாட்டு போட்டிகள் 14th OCTOBER 2025

 பெண்களுக்கான இந்தியன் ஓபன் கோல்ப் தொடர் ஹரியானாவில்  நடந்தது.இந்தியாவின் ஹிட்டாஷீபக்சி, 283 'ஸ்டிரோக்' பெற்று, மூன்றாவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை பிரனவி (284) 4வது இடம் பெற்றார். சிங்கப்பூரின் ஷனான் (281), இங்கிலாந்தின் அலைஸ் (282) முதல் இரு இடம் பெற்றனர்.பிரைம் வாலிபால் லீக், நான்காவது சீசன் இந்தியாவின் ஐதராபாத்தில் நடக்கிறது.மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டி யில் ஆமதாபாத் அணி 3-2 என்ற (9:15, 7:15, 15:9, 15:11, 15:8) கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் டில்லி அணி 3-0 என (15:11, 15:9, 15:11) கேரளா (கோழிக் கோடு) அணியை வென்றது. இன்று ஓடென்ஸ் நகரில் டென்மார்க்ஓபன் பாட்மின்டன் தொடர் துவங்குகிறது. இந்தியா சார்பில் ஆண்கள் ஒற்றையரில் லக்சயா சென், ஆயுஷ் ஷெட்டி, பெண்கள் ஒற்றையரில்அன்மோல், ஆண்கள் இரட்டையரில் ச சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி களமிறங்குகின்றனர்.

Oct 13, 2025

இந்தியாவின் ஜோஷ்னா ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் அரையிறுதிக்கு முன்னேறினார்.

சர்வதேச ஸ்குவாஷ் தொடர்  ஜப்பானில், பெண்கள் ஒற்றை யர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, எகிப்தின் நார்டைன் கராஸ் மோதினர். சிறப்பாக  ஆடிய ஜோஷ்னா 3-0 (11–8, 15-13, 11–9) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை யிறுதிக்குள் நுழைந்தார். எகிப்து வீராங்கனை ராணர் இஸ்மாயிலை ஜோஷ்னா, எதிர் கொள்கிறார். 

Oct 13, 2025

ஓபன் ஸ்குவாஷ் தொடரில் அபே சிங் வெற்றி.

ஓபன் ஸ்குவாஷ் தொடர்  அமெரிக்காவில், சிலிக்கான் வேலியில் ,முதல் சுற்றில் இந்தியாவின் அபே சிங் 3-0 (12-10, 11-7, 13-11) என, எகிப்தின் கரீம் எம் ஹம்மாமியை வீழ்த்தினார். இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் மற்றொருமுதல் சுற்றுப் போட்டியில் 0-3 (3-11, 5-11, 9-11) என எகிப்தின் கரீம் எல்டோர்கியிடமும் , இந்திய வீரர் ரமித் டான்டன் 2-3 (10-12, 11-5, 11-4, 9-11, 8-11) ஹங்கேரியாவின் பாலாஸ் பர்காஸிடம் தோல்வியடைந்தனர்.

Oct 13, 2025

சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசன் இந்தியா 2வது வெற்றி .

 மலேசியாவில், 21 வயதுக்கு உட்பட்டோருக்கான ,சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கி 13வது சீசனில்  . 'நடப்பு சாம்பியன்' பிரிட்டன், இந்தியா, ஆஸ்திரேலியா உள் ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா, நியூசிலாந்து  அணிகள் நேற்று நடந்த லீக் போட்டியில் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு அர்ஷ்தீப் சிங் (2வது நிமிடம்), சுனில் (15வது அராய்ஜீத் சிங் (26வது) தலா ஒரு கோல் அடித்து ,முதல் பாதி முடிவில் இந்திய அணி 3-0 என முன்னிலையில் இருந்தது.இந்தியாசார்பில் ரோமன் குமார் (47வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். ஆட்டநேரமுடிவில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று ,2வது வெற்றியை பதிவு செய்தது.

Oct 13, 2025

விளையாட்டு போட்டிகள் 13 th OCTOBER 2025

உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் அசாமின்கவுகாத்தியில், (தனிநபர், இரட்டையர்) இன்று துவங்குகிறது. இந்தியா சார்பில் உன்னதி ஹூடா, தன்வி சர்மா, ரக் ஷிதா ஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.டில்லி பாதி மாரத்தான் ஓட்டத்தில் இந்தியா சார்பில் அபிஷேக் பால் (1:04.17), 8 (1:11.23) முதலிடம் பிடித்தனர்.கென்யாவின் அலெக்ஸ் மடாடா (59.50 நிமிடம், ஆண்கள்), லிலியன் கசாய்ட் ரெங் கெருக் (1:07.20, பெண்கள்) சாம்பியன் பட்டம் வென்றனர்.உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப், 'ஸ்கீட்' பிரிவில்ஏதென்சில் இந்திய வீராங்கனை ரைசா தில்லான், 16வது இடம் பிடித்தார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் பாவ்தேக் சிங் கில், 38வது இடம் பிடித்தார்.ஆசிய அக்குவாடிக்ஸ் சாம்பியன்ஷிப் ஆமதாபாத்தில், பெண்களுக்கான வாட்டர் போலோ போட்டியில் 8வது இடம் பிடித்த இந்தியா, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெற்றது. ஆண்கள், பெண்கள் பிரிவில் சீனா தங்கம் வென்றது.

1 2 ... 61 62 63 64 65 66 67 ... 136 137

AD's



More News