சரஸ்வதி பூஜை
புராணங்கள் அடிப்படையில் மகிஷாசுரன் என்ற அசுரனிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக மூன்று தேவியர்களும் ஒன்பது நாட்கள் தவமிருந்து இறுதியில் மூவரும் இணைந்து ஒரே தேவியாக உருவெடுத்து மகிஷாசுரன் என்ற அசுரனை அழித்து மகிஷாசுரமர்த்தினியாக காட்சியளித்தனர். இதனையே நவராத்திரி நமக்கு உணர்த்துகிறது
நவராத்திரியின் இறுதி நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பூஜையை இரவு நேரத்தில் பூஜித்து வழிபடுவதே சிறந்தது. இந்த 8 நாட்களும் விரதமிருந்து பூஜித்து வழிபடுவது இறுதி நாளாகிய சரஸ்வதி பூஜை அன்று நிறைவேறும் என்பது ஐதீகம்.இங்கு சரஸ்வதியின் அருகில் கல்வி மற்றும் இறை வழிபாடு சார்ந்த புத்தகங்களையும், விஸ்வகர்மாவின் பக்கத்தில் நமது தொழில் சார்ந்த கருவிகளையும் வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு பூஜை செய்ய வேண்டும்.
பின் சர்க்கரை பொங்கல், கடலை போன்ற நெய்வேத்யங்கள் சாத்தி இறைவனுக்கு தூப தீபம் காட்டி நமக்கு தெரிந்த மந்திரங்களை ஓதியும், கடவுள் பக்தி பாடல்களைப் பாடியும் மற்றும் 16 பேறுகளையும் வேண்டியும் இறைவனை தியானித்து அம்மன் அருளை அனைவரும் பெற வாழ்த்துகிறோம்.
0
Leave a Reply