25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உலக சுற்றுலா தின விழா - 2022
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக சுற்றுலா தின விழா - 2022

ஆண்டுதோறும்  உலகம் முழுவதும் செப்டம்பர் 27 ஆம் நாள் உலக சுற்றுலா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உலக சுற்றுலா தினம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு உலக சுற்றுலா தினத்தை தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தினம் நடத்துவதற்கு அனுமதித்துள்ளது. 
  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரையின்படி விருதுநகர் மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும்  விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி (தன்னாட்சி) வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து இவ்வாண்டு உலக சுற்றுலா தினம் 27-09-2022 - ல் கொண்டாடப்பட்டது. 
   இந்நிகழ்வில் உலக சுற்றுலா தின இவ்வாண்டின் கருப்பொருளான  “சுற்றுலா மறுசிந்தனை” என்ற தலைப்பில் விருதுநகர்; மாவட்டத்தில் அமைந்துள்ள வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி (தன்னாட்சி) வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை இணைந்து மாணவியர்களுக்கிடையே கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, வினாடி வினா நிகழ்ச்சி  27-09-2022 அன்று காலை 10.00 மணிக்கு  நடைபெற்றது. 
      மேலும், சுற்றுலா தொழிலில் “சுற்றுலா மறுசிந்தனை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கல்லூரி புரவலர் கல்லூரி முதல்வர் சு.மா.மீனாராணி மற்றும் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை முனைவர் செ.நாகஜோதி அவர்கள், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி (தன்னாட்சி)  திரு.ந.அன்பரசு, மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர்(முகூபொ) அவர்கள், சிறப்பு பங்கேற்பாளர்கள் குயின்ஸ் திரு.R.தங்கபாண்டியன் ஹோட்டல் நிர்வாகி, அருப்புக்கோட்டை அவர்கள் மற்றும் திரு.R.ராஜாபவளம் நாராயணன் நிர்வாக இயக்குனர், Coral Travels wings,  விருதுநகர் அவர்கள், சிறப்புரை முனைவர்.எ.அப்சரா சலித்மேரி சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை துறை மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை அவர்கள் உட்பட இக்கல்லூரி மாணவியர்கள்  கலந்து  கொண்ட   கருத்தரங்கம் நடைபெற்றது.  
 உலக சுற்றுலா தினம் தொடர்பாக  மூலம் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு முதல்; மூன்று இடங்களை பிடித்த மாணவியர்களுக்கு இன்று(27-09-2022) விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் மற்றும்  பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வரலாற்றுத்துறை மற்றும் தமிழ்த்துறை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News