25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Aug 21, 2023

கருவேப்பிலை நீண்ட நாள் வாடாமல் இருக்க

சாதம் வெள்ளையாகவும், உதிரியாகவும் வர, அரிசி ஊற வைக்கும் போது சில ஐஸ்கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.  கருவேப்பிலை நீண்ட நாள் வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, கருவேப்பிலையை தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரை கெட்டு போகாது.தேங்காய் எடுக்க சிரமமாக இருந்தால், தேங்காய் தொட்டியை அடுப்பில் வைத்து லேசாக வாட்டி எடுத்தால், தேங்காய் எளிதாக எடுக்க வரும்.மழைக்காலங்களில் உப்பில் நீர் சேராமல் இருக்க, பிளாஸ்டிக் சீட் போட்டு அதன் மேல் உப்பை கொட்டி வைத்தால் உப்பில் நீர் சேராது.வாழைப்பூ சுத்தம் செய்யும் போது கையில் எண்ணெய் தடவி கொண்டால் கையில் காரை ஒட்டாது.குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் காரம் குறைந்துவிடும்.

Aug 18, 2023

ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க 

பாதாமின் தோலை ஈசியாக உரிக்க, பாதாமில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி ஒரு நிமிடம் ஊற வைத்தால் பாதாமின் தோல் எளிதாக உறிந்து வரும்.வீட்டில் செய்யும் ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்க ஊறுகாயில் சிறிதளவு குக்கிங் வினிகர் சேர்த்து கலந்து வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும்.தோசை பொன்னிறமாக வர, இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை உற்றினால் தோசை மொறு மொறுவகவும், பொன்னிறமாகவும் இருக்கும்.ஏலக்காயை பொடியாக அரைக்க ஏலக்காயுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து பொடி செய்தால் ஏலக்காய் பொடியாக அரைத்து விடும்.மெதுவடை மொறு மொறு என்று இருக்க, உளுத்தம் பருப்புடன் சிறிதளவு பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் மெதுவடை மொறுமொறுப்பாக இருக்கும்.

Aug 12, 2023

வெண்டைக்காய் காரக்குழம்பு ருசியாக இருக்க...

வெண்டைக்காய் காரக்குழம்பு என்றாலே அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். ஆனால் அது இன்னும் கூடுதல் சுவையை கொடுக்க, வெண்டைக்காயை முதலில் 2 டேபிள்ஸ்பூன்எண்ணெயில் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.அதிலிருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி சுருள வதங்கிவிடும். அதன் பின்பு. நீங்கள் காரக் குழம்பில் சேர்த்தால் குழம்பின் ருசியே அலாதியாக மாறும்.வெந்தயக்கீரை சமைக்கும் போது சிறிது வெல்லம் கலந்து சமைத்தால், கீரையின் கசப்பு சுவை நீங்கும்.கடலைமாவில் சிறிது தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவைத்து தேய்த்து கழுவினால் சமையல் மேடையில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்கி சுத்தமாக மாறிலிடும்.வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்புத் தூளை தடவிக் கொண்டால், கைகளில் பிசுபிசுப்பு இல்லாமல் இருக்கும்.வெங்காய பக்கோடா மொறு மொறுவென்று வர மாவுடன் சிறிது வறுத்த கடலைப் பருப்பை மிக்ஸியில் அரைத்து சேர்த்துக் கொண்டால் மிகவும் ருசியாக இருக்கும்.இட்லிக்கு அரிசி ஊற வைக்கும் போது அரிசியை நன்கு களைந்து விட்டு வெது வெதுப்பான வெந்நீரில் அரிசியை ஊற வைத்தால் இட்லி பூப்போல இருக்கும்.கோதுமை ரவையை ஒரு கப் ஊறவைத்து, மிக்ஸியில் அரைத்து, அத்துடன் அரை கப் உளுந்தையும் சேர்த்து இட்லிக்கு அரைப்பது போல நைஸாக அரைத்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இட்லி செய்தால் வித்தியாசமான சுவையாக இருக்கும்.

Aug 11, 2023

ரசம் சுவையாக இருக்க ....

கத்திரிக்காயைச் சமைக்கும்போது ஒரு ஸ்பூன் கெட்டித் தயிரை ஊற்றினால், கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருப்பதோடு  சுவையும் கூடும்.முருங்கைக்கீரையைப் பொரியல் செய்யும்போது, ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்தால், கீரையின் இலைகள் ஒன்றோடொன்று ஒட்டாமல் உதிர் உதிராக இருக்கும்; கீரையும் ருசிக்கும்,மல்லி பூ பத்து நாள் ஆனாலும் மலராமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் அல்லது சில்வர் மூடி போட்ட பாக்ஸ் எடுத்து அதில் கொஞ்சம் பேப்பர் வைத்து எந்த பூவாக இருந்தாலும் சரி மல்லி ,முல்லை, பிச்சி பூ இப்படி வைத்து பிரிட்ஜில் வைத்து பாருங்க பூ அப்படியே பத்து நாள் ஆனாலும் மலரவே மலராது சாம்பார் கொதித்த பின் வெந்தயத்தை வறுத்து பொடி பண்ணி தூவி | இறக்கினால் சுவையான கல்யாண அய்யர் வீட்டு சாம்பார் போல் தெருவே மணக்கும்ரசம் சுவையாக இருக்க கொஞ்சம் துவரம் பருப்பு வேக வைத்த தண்ணி, சீரகம், மிளகு, வர மல்லி, கருவேப்பிலை போட்டு மிக்சியில் ஒரு சுத்து சுற்றி , பூண்டு போட்டு ஒரு சுத்து சுற்றி இறக்கி, தாளிக்கும் போது கடுகு ,வெந்தயம், வரமிளகாய் போட்டு தாளித்து, தக்காளி புளி கரைசல் ஊற்றி, நுரை வந்ததும் கருவேப்பிலை ,கொத்தமல்லி தூவி பெருங்காய தூள் சேர்த்து இறக்கினால் ரசம் ரெடி .இறக்கி வைத்து உப்பு சேர்க்கவும். இல்லாவிட்டால் ரசம் கடுத்து போய் விடும் .

Aug 09, 2023

சர்க்கரை வள்ளிக்கிழங்கை அடை செய்ய...

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேறு விதமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்து சாப்பிடலாம்.    மழை, குளிர் காலங்களில்வடகம் நமத்து நன்றாகப் பொரியாது வெறும் வாணலியை அடுப்பில் வைத்துச் சூடேற்றி ,அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப் புரட்டி எடுத்து விட்டு, எண் ணெயில் பொரித்தால்  நன்றாகப் பொரியும்..கருவாட்டை சிறிதளவு தண்ணீருடன் மண் சட்டியில் போட்டு உருட்ட வேண்டும். பின்சுடுதண்ணீரை ஊற்றி நன்றாக கழுவினால் கருவாட்டில் உள்ள அதிகமான உப்பு நீங்கிவிடும்.பாசிபருப்பு பாயாசம் செய்யும் போது வெல்லத்தை ,கெட்டிபாகாக காய்ந்தபின் செய்தால் ,பாயாசம் ரு சியாக இருக்கும். மறுநாள் இருத்தாலும், ஊசிப் போகாது.துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.

Aug 04, 2023

சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேறு விதமாக சமைத்து சாப்பிட விரும்புபவர்கள், சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து, அடைமாவில் சேர்த்துப் பிசைந்து அடை செய்து சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடைமழை, குளிர் காலங்களில்வடகம் நமத்துப் பொய் நன்றாகப் பொரியாது வெறும் வானலி யை அடுப்பில் வைத்துச் சூடேற்றி அதில் வடகத்தைப் போட்டு, சற்றுப்புரட்டி எடுத்து விட்டு எண் ணெயில் பொரித்தால்  நன்றாகப் பொரியும்.கருவாட்டை சிறிதளவு தண்ணீருடன் மண் சட்டியில் போட்டு உருட்ட வேண்டும். பின்சு டுதண்ணீரை ஊற்றி நன்றாக கழுவினால் கருவாட்டில் உள்ள அதிகமான உப்பு நீங்கிவிடும்.பாசிபருப்பு பாயாசம் செய்யும் போது வெல்லத்தை கெட்டிபாகாக காய்ந்தபின் செய்தால் பாயாசம் ரு சியாக இருக்கும். மறுநாள் இருத்தாலும் ஊசி போகாது.துவரம் பருப்பைவேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்தால் சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.கத்திரிக்காயைச் சமைக்கும்போது ஒரு ஸ்பூன் கெட்டித் தயிரை ஊற்றினால், கத்திரிக்காயின் நிறம் மாறாமல் இருப்பதோடு  சுவையும் கூடும்.

Aug 03, 2023

நேந்திரங்காய் வறுவல் நல்ல நிறம் கிடைக்க….

கீரைகளை செய்தித்தாளில் மடித்து வைத்தால் அவற்றின் பசுமை நிறம் மாறாது.  நேந்திரங்காய் வறுவலுக்கு சீவியதும் மஞ்சள் பொடி பிசிறி பிறகு பொரித்தால் நல்ல நிறம் கிடைக்கும். உடம்புக்கும் நல்லது.வாழைக்காய் நறுக்கியதும் தண்ணீரில் போட்டு வைத்தால் கருக்காமல் இருக்கும்.மீந்து போன சாதத்தில் தண்ணீர் ஊற்றினால், சாதம் ஊறி மாவு போல் கூழாகிவிடும். தண்ணீருடன் இரண்டு டீஸ்பூன் மோர் கலந்து விட்டுப் பாருங்கள். மறுநாளும் சாதம் மல்லிகைப் பூப்போல உதிர்  உதிராக இருக்கும்.வெயில் காலத் தில் இட்லி மாவு சீக்கிரத்தில்புளித்துவிடும் .இட்லி. தோசைக்கு அரிசி, பருப்பைக் கழுவி ஊ ற வைக்கும் போது, ஒரு மணிநேரத்தில் அந்தத் தண்ணீரை வடித்து விட்டு, வேறு புதிய தண்ணீரை ஊற்றவும்.. இப்படி இரண்டு(அ மூன்று முறை தன்ணீரை மாற்றி ஊறவைத்தால் மாவு சீக்கிரம்புளிக்காது. .

Jul 31, 2023

இட்லி மல்லிகைப்பூ போல் இருக்க.....

பருப்பு வேக வைக்கும் போது கொஞ்சம் சீரகம் மஞ்சள் தூள் பெருங்காயம் ஒரு பல் பூண்டு சேர்த்து வேக வைக்கவும் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி காய் தக்காளி சேர்த்து வதக்கி சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைத்து பச்ச வாசனை போன பின் வேக வைத்த பருப்பை போட்டு ஒரு கொதி வந்ததும், கொத்த மல்லி தழை தூவி எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுத்தம்பருப்பு ,வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கி பரிமாறவும் சுவையான சாம்பார் ரெடிஆப்பம் மாவு அரைக்கும் போது ஒரு கை சாதம் போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும் முதலில் சாதத்தைபோட்டு அரைத்த பின், அரிசி போட்டு ஆட்டவும் மாவு புளித்த பின் ,ஆப்பம் சுடும் முன், தேங்காய் தண்ணி ஊற்றி கலக்கி சுட்டால் ஆப்பம் மிகவும் சுவையாக இருக்கும்சப்பாத்தி மாவில் கால் படிக்கு ஒரு வாழைப்பழம், ஒரு கரண்டி தயிர் சிறிதளவு நீர் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி ரொம்ப மிருதுவாக இருக்கும்.இட்லி மாவில் ஒரு கரண்டி நெய், அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அவித்தால், இட்லி மல்லிகைப்பூ போல் இருக்கும்.கறிவேப்பிலை கொத்தாக ஈரம் போக காய வைத்து வாணலியில் போட்டு லேசாக வறுத்தெடுத்து பெளடராக்கி கொண்டு உபயோகித்தால் ருசியும் சத்தும் கூடுதலாக கிடைக்கும்.

Jul 29, 2023

குருமா கெட்டியாகவும் வரும். சுவையாகவும் இருக்க....

குருமாவில் வேக வைத்த உருளைக்கிழங்கை நறுக்கி போடாமல், கையால் நசுக்கி உதிர்த்துப் போட்டால், குருமா கெட்டியாகவும் வரும். சுவையாகவும் இருக்கும்.சர்க்கரை வள்ளிக்கிழங்கை கழுவி தோல் சீவாமல் மெலிதாக சிப்ஸ் கட்டையில் சீவவும். எண்ணெயில் சிப்ஸாக பொரித்து எடுத்து மிளகுப் பொடி தூவவும். இனிப்பும் காரமும் கலந்த புதுவிதமான சிப்ஸ் தயார்.உருளைக்கிழங்கைச் சீவி ஒரு வெள்ளைத் துணியில் கட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் அமிழ்த்தி வைத்து எடுத்து பிறகு குளிர்ந்த உப்பு தண்ணீரில் போட்டு கொதிக்கும் எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்தால் வெள்ளை வெளேரென்று சிப்ஸ் கரகரப்பாக இருக்கும்பீட்ரூட்டில் அல்வா, பூரி, பாயாசம் போன்றவை செய்யும் முன் பீட்ரூட்டை வினிகரில் முக்கி எடுத்து நீரை வடிகட்டி நறுக்கினால் சிவப்பு நிறம் மாறாமல் இருக்கும்.உளுத்தம் பருப்பை கால் மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து ஒன்றும் இரண்டுமாய் நைசாக இல்லாமல் அரைக்கவும். அதில் பச்சை கடுகு சேர்த்து சிறு சிறு உருண்டை யாக்கி வெயிலில் காய வைத்து டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளவும் இதை எண்ணெயில் பொறித்து கூட்டு, பொரித்த குழம்பு ஆகியவற்றில் கலந்தால் செம ருசியாக இருக்கும்.கீரைகளை செய்தித்தாளில் மடித்து வைத்தால் அவற்றின் பசுமை நிறம் மாறாது.

Jul 28, 2023

தூள் பக்கோடா சுவையும் மனமும் வித்தியாசமாக இருக்க....

அதிக அளவு பாலாடை தேவைப்படுகிறவர்கள் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே' அதிக அளவுபாலாடை தோன்றிவிடும்.நெய்க்காக வெண்ணையைக் காய்ச்சும் போது அரை ஸ்பூன் வெந்தையத்தைப் போட்டு இறக்கினால் நெய் மணமாக இருக்கும்.இஞ்சி பூண்டு விழுது பெரும்பாலும் எல்லா ரெசிபிகளுக்கும் தேவைப்படும்.இஞ்சியின் அளவை குறைத்து பூண்டின் அளவை சற்று அதிகமாக எடுத்துக் கொண்டால் சமையல்  இன்னும் கமகமக்கும்.இஞ்சி பூண்டு பேஸ்டுடன்,  1 தேக்கரண்டி சூடான எண்ணெய்  கலந்து வைத்தால்  நீண்ட நாள்களுக்கு கெடாமல் இருக்கும்.தூள் பக்கோடா செய்யும் போது வாழைப்பூவை காம்பை மட்டும் ஆய்ந்து விட்டு மாவுடன் கலந்து போடுங்கள். பக்கோடா மொறு மொறுவென இருப்பதுடன் பார்க்கவும்நன்றாக இருக்கும். சுவையும் மனமும் வித்தியாசமாக இருக்கும்.

1 2 ... 11 12 13 14 15 16 17 ... 21 22

AD's



More News