25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சமையல் குறிப்பு

Oct 05, 2023

கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை வாடாமல் இருக்க...

பூண்டு கெட்டுப்போகாமல் இருக்க கொஞ்சம் கேழ்வரகை சேர்த்து வைத்தால் புழுக்காமல் ,நீண்ட நாட்கள் வரை இருக்கும்.வெங்காயத்தை நறுக்கி அதன் மீது வெண்ணெய் தடவி வைத்தால் வெங்காயம் வாடாமல் இருக்கும் .கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழையை வாங்கியவுடன் வாழைப்பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.தேங்காய் மூடியை தண்ணீரில் வைத்தால், அல்லது மூடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.உருளைக்கிழங்கு அரை மணி நேரம் உப்பு நீர் ஊறவைத்து பின் வேகவைத்தால் சீக்கிரம் வெந்து விடும்.சாம்பார் பொடி அரைக்கும். போது அத்துடன் ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து அரைத்தால் வண்டுகள். பூச்சிகள் வராது.சூடான எண்ணெயில் சிறிதளவு மைதா மாவு சேர்த்த பிறகு எதை பொரித்தாலும் வானலியில் ஒட்டாது..

Oct 04, 2023

சாம்பார்  ருசியாக .....

பருப்பு சாதத்திற்கு. பருப்பை வேக வைக்கும்போதே, முருங்கை காயின் நடுவில் உள்ள சதை பகுதியையும் எடுத்து வேக வைத்து, சாதத்துடன் சேர்த்தால் சுவையாக இருக்கும்துவரம்பருப்பை வேக வைக்கும்போது சிறிது  தேங்காய் துண்டை நறுக்கி போட்டால் பருப்பு விரைவில் வெந்து பக்குவமாக இருக்கும்.சாம்பார் பொடிஅரைக்கும்போது அதில் ஒருகைப்பிடி அளவு கல் உப்பு சேர்த்து அரைத்தால் பூச்சிகள் வராது.சாம்பார் புளித்தால் சிறு உருண்டை வெல்லம் சேருங்கள். புளிப்பு சுவை உடனே சரியாகிவிடும்.பருப்பு வேக வைக்கும் போது பருப்புடன் சிறிதளவு நெய் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.

Oct 03, 2023

வெண்பொங்கல் அருமையாக இருக்க...

பஜ்ஜி செய்யும் போது உப்பலாக வருவதற்கு ஒரு கரண்டி இட்லி மாவு சேர்த்து செய்தால் பஜ்ஜி நன்றாக உப்பி வரும் .பிரின்ஜி சாதம் அல்லது தக்காளி சாதம் செய்யும்போது ஒரு மூடிதேங்காய் அரைத்து வடிகட்டி தண்ணீருடன் சேர்த்து செய்யசாதம்சுவையாகவும்ஆரோக்கியமாகவும்இருக்கும்.வெண்பொங்கல்செய்யும் போது ஒரு கைப்பிடி பாசிப்பருப்பை நெய்யில் வறுத்துசேர்த்து செய்தால் சுவைஅருமையாக இருக்கும்.சேமியா பாயசம் செய்யும் போது முதலில்சேமியாவை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்துவைத்து கொண்டு,பின்னர் செய்தால்நன்றாக இருக்கும்.கொஞ்சம் தண்ணீர்பதமாக தான் செய்ய வேண்டும் சிறிது நேரத்தில் கெட்டிஆகிவிடும்.வாழைப்பூ பொரியல் செய்யும் போது ஒரு கைப்பிடி முருங்கை கீரை சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.வாழைப்பூ பொரியல் இறக்குவதற்கு ஒரு நிமிடம் முன்பாக சேர்த்தால் போதும், பின்னர் ஒரு தட்டு போட்டு மூடி வையுங்கள்.

Sep 29, 2023

சப்பாத்தியை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் எப்போதும் சூடாக இருக்கும்.

பூரிக்கிழங்கு செய்யும்போது அதில் பொட்டுக்கடலையோடு சோம்பு சேர்த்து அரைத்து கலந்தால் அதன் சுவையே தனி..ஆவிவரும் வரை சூடாக்கி பின்னர் குளிரவிட்டஎண்ணெய்யில் ஊறுகாய் போட்டால் எளிதில் பூஞ்சணம்  பிடிக்காது.வாழைக்காயை ஃபிரிட்ஜில் வைக்கும் போது, அப்படியே வைக்காமல் இரண்டாக நறுக்கி வைத்தால் கறுக்காமல் புதிது போல் இருக்கும்.சப்பாத்தியை சில்வர் பேப்பரில் சுற்றி வைத்தால் எப்போதும் சூடாக இருக்கும்.இஞ்சி, பூண்டு விழுது அரைக்கும்போது, அதனுடன், உப்பு துாள் ஒரு தேக்கரண்டி, சூடான எண்ணெய்யும் கலந்து வைத்தால், நீண்ட நாட்களுக்கு, 'ப்ரெஷ்' ஆக இருக்கும்.

Sep 27, 2023

ஃப்ரூட் சாலட்  ருசியாக இருக்க....

நமர்த்த பிஸ்கட்டை ஒன்றிரண்டாக பொடித்து, பழங்களுடன் கலந்து ஃப்ரூட் சாலட் செய்தால் ருசியாக இருக்கும்.மிளகாயை அரைக்கும் போது சரியாகஅரைபடாது. அதனால், முதலில் மிளகாயுடன் சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால் நன்கு அரைபடும். ஒரு கப் கெட்டி அவல், 2 கிண்ணம் பச்சரிசி, சிறிது உளுந்தம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து அரைத்து ஊற்றினால் சுவையான தோசை தயார்.மோரில் ஊற வைத்த வாழைப்பூவை சிறிது வதக்கி, துவையல் செய்தால் ருசியாக இருக்கும். வெங்காய பஜ்ஜிக்கானவெங்காயத்தை தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டிவிட்டு. பிறகு தோலை உரித்தால் வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.முருங்கைக்கீரையை சமைக்கும்போது சிறிதளவு சர்க்கரையை கலந்து சமைத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாக இருக்கும்.

Sep 26, 2023

சப்பாத்தி நன்கு உப்பி வர....

சப்பாத்தி சாஃப்ட்டாக வருவதற்கு மாவு பிசையும் போது சிறிது பால் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.சப்பாத்திக்கு மாவுப் பிசையும்போது அதனுடன் இரண்டு கைப்பிடி அளவு கடலை மாவையும் சேர்த்துப் பிசைந்தால் சப்பாத்தி நிறமாகவும், மணமாகவும் இருக்கும்.சப்பாத்தி மாவு மீதமிருந்தால் மாவின் மீது எண்ணெய்  தடவி வைத்தால் கருப்பாக காய்ந்துபோகாமல் இருக்கும்.சப்பாத்தி சுடும்போது கல்சூடானதும் ஒரு முறை எண்ணெய் விடாமல் இருபுறமும் போட்டு எடுத்து பிறகு எண்ணெய் ஊற்றி சப்பாத்தி சுட்டால் மிருதுவாகவும், ருசியாகவும்இருக்கும்.சப்பாத்தியைநன்கு திரட்டி அதன் மேல் எண்ணெய் ஊற்றி நான்காக மடித்து மீண்டும் ஒரு முறை திரட்டினால், சப்பாத்தி நன்கு உப்பிவரும். மிருதுவாக இருக்கும் .

Sep 16, 2023

வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க

துர்நாற்றம் வீசும் கண்ணாடி பாட்டில்களில் கொஞ்சம் கடுகை போட்டு வெந்நீர் ஊற்றி சிறிது நேரம் கழித்து கழுவுங்கள். துர்நாற்றம் போய்விடும். பாட்டிலில் பிடித்துள்ள கரைகளும் நீங்கிவிடும்.வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம். காலிபிளவர் ,கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு சேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் ,அவற்றில் உள்ள புழு, மண் அடியில் தங்கிவிடும்.குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.அடுப்பு,சமையல் மேடை, அடுப்பின் பின்புறம் என எல்லா இடங்களிலும் எண்ணெய் அப்பிக் கொண்டிருக்கிறதா.  டைல்ஸ சாதாரணத் துணியாலோ அல்லது டிஷ்யூ பேப்பராலோ துடைத்து எடுத்து,பின்னர் வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சலவைச் சோடாவைக் கலந்து, பிசுக்கு பிடித்த இடங்களில் பூசிவிட்டு உலர்ந்த துணியால் துடைத்துப் பாருங்கள். "பளிச்' சென்று ஆகிவிடும்.

Sep 14, 2023

சமையலறை அலமாரிகளில் உலர்ந்த வெள்ளரிக்காய் தோலைப் போட்டு வைத்தால் எறும்புகள் வராது.

மிக்ஸி ஜாடியில் உள்ள பிளேடை கழற்ற இயலாமல் இருந்தால் அதை கழற்றுவதற்கு ஜாடியில் பிளேடு மூழ்கும் வரை வெண்ணீர் ஊற்றி சிறிது நேரம் வரை வைக்கவும் பினபு நீரை கீழே  ஊற்றி விட்டு பிளேடை கழற்றினால் எளிதில் கழற்றலாம்அடை மற்றும் வடை மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், ஒன்றிரண்டு டீஸ்பூன் கார்ன் பிளாக்ஸை பொடித்து சேர்த்தால் உடனடியாக ஊறி மாவு கெட்டியாவதுடன் சுவையும் அபாரமாக இருக்கும்..பாத்திரங்கள் அடிப்பிடித்துவிட்டால், வெங்காயத்தை நறுக்கி பாத்திரத்தில் போட்டு, சிறிது நீர் ஊற்றி வேக வைத்து, பிறகு தேய்த்துக் கழுவினால் அடிப்பிடித்த சுவடே தெரியாது.இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல் போடவும். 2 நாட்கள் ஆனாலும் மாவு புளிக்கமலும், கெடாமலும் இருக்கும்சமையலறை அலமாரிகளில் உலர்ந்த வெள்ளரிக்காய் தோலைப் போட்டு வைத்தால் எறும்புகள் வராது.

Sep 13, 2023

சுவையான கோதுமை பாயசம்

ஒரு கரண்டி கோதுமை மாவை நெய்யில் வாசனை வரும் வரை நன்கு வறுத்து, பின் தேவையான தண்ணீர் சேர்த்து வேக விடவும். பிறகு காய்ச்சின பால், சர்க்கரை, ஏலப்பொடி, வறுத்த முந்திரி சேர்க்க சுவையான, மணமான கோதுமை பாயசம் ரெடிசாம்பார் பொடிக்கு அரைக்கும் போது ஒரு கப் புழங்கலரிசி சேர்த்து அரைக்கலாம். இந்தப் பொடியைக் கொண்டு சமைக்கும் போது சாம்பார் குழைவாகவும், கெட்டியாகவும் வரும். இதனால், பருப்பு அதிகமாக சேர்க்க வேண்டிய அவசியமும் இருக்காது.வறுவல், கூட்டு ஆகியவற்றில் உப்போ, காரமோ அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் ஒரு ஸ்லைஸ் அல்லது இரண்டு ரஸ்க் துண்டுகளை மிக்ஸியில் போட்டு பொடித்து சிறிது தூவினால் சரியாகிவிடும். எந்த வகை சூப் செய்தாலும் கொதிக்கும் போது சிறிது பொட்டுக் கடலை மாவை நீரில் கலந்து சேர்த்தால் சூப் திக்காக இருக்கும்.வெண்டைக்காயை வதக்கும் போது புளித்த மோரைச் சேர்த்தால் மொறு மொறு வென இருக்கும்.. வத்தக் குழம்பு செய்யும் போது கடைசியாக மஞ்சள், மிளகுத் தூளைச் சேர்த்தால் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும்.துவரம் பருப்பை வேக வைக்கும் போது. பருப்புடன் ஒரு டீ ஸ்பூன் வெந்தயத்தையும் கலந்து வேக வைத்தால் சாம்பார் இரவு வரை ஊசிப் போகாமல் இருக்கும் ,உடம்புக்கும் நல்லது.

Sep 12, 2023

உளுந்து வடை சுவையாக இருக்க...

. ஃப்ளாஸ்க்கில் பால், காபி, டீ என எதை ஊற்றி வைத்தாலும், சர்க்கரை கலக்காமல் ஊற்றி வைப்பது தான் நல்லது. சர்க்கரை சேர்க்காததால் பல மணி நேரங்கள் ஆனாலும் பானங்கள் கெடாமல் இருக்கும். பச்சரிசியை வெந்நீரில் நனைத்து ஆப்பத்துக்கு அரைத்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.பால் அல்லது கஞ்சி ஆறினால் மேலே ஏடு படியும் லேசாகத் தண்ணீர் தெளித்து வைத்தால் ஏடு படியாது.இரண்டு டம்ளர் உளுந்துடன் ஒரு கரண்டி சாதம் சேர்த்து அரைத்து வடை தட்டினால் உளுந்து வடை சுவையாக இருக்கும். வெங்காயத்தை வெறும் வாணலியில் சிறிது வதக்கிவிட்டு பிறகு எண்ணெய்யில் வதக்கினால் சீக்கிரம் சிவந்து வதங்கிவிடும்.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 21 22

AD's



More News