விண்வெளியில் சூரிய மின் நிலையம் அமைத்து, வயர்லெஸ் முறையில் பூமிக்கு மின்சாரம் அனுப்பும் 'Sun Chasing' திட்டத்தில் சீனா முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது.75 மீட்டர் உயர கோபுரம் மற்றும் சிறப்பு குவிமாடக் கண்ணாடி மூலம் சூரிய ஒளியை சேகரித்து, அதை மைக்ரோவேவ் அலைகளாக மாற்றி 100 மீட்டர் தூரத்திற்கு வயர்லெஸ் முறையில் மின்சாரம் அனுப்பும் தரைவழிச் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் இந்தியர்களை குறிவைத்து சிலர் இனவெறி முழக்கங்களை எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்தியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கூறியதுடன், இந்திய தேசியக் கொடியை அவமதித்த சம்பவமும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி, "அமெரிக்காவில் எந்த சமூகத்தினருக்கும் எதிரான வெறுப்புக்கும் இடமில்லை. இந்தியர்களுக்கு எதிரான இதுபோன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்று தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்தில் முன்னணி நாடாக திகழும் நெதர்லாந்து, "சைக்கிள்களின் நாடு" என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்நாட்டில் சுமார் 99 சதவீத மக்கள் சைக்கிளைப் பயன்படுத்துகின்றனர். மனிதர்களின் எண்ணிக்கையை விட சைக்கிள்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை பலரும் அன்றாட பயணத்திற்கு சைக்கிளையே பயன்படுத்துவது, எளிமை மற்றும் பசுமை வாழ்க்கை முறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறது.
மருத்துவத் துறையில் புதிய முன்னேற்றமாக, மனித உடலின் திசுக்களுடன் வேகமாக இணையும் திறன் கொண்ட புதிய வகை மருத்துவ இம்ப்ளான்ட்டை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. உலகிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொழில்நுட்பம், எலும்பு மற்றும் உறுப்பு அறுவை சிகிச்சைகளில் பக்கவிளைவுகளை குறைத்து, சிகிச்சை முறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
சீனாவில் வசிக்கும் வயதான பெண்மணி ஒருவர், சுமார் ரூ.4 கோடி மதிப்புள்ள சொகுசு காரில் வந்து வீடுகளில் பாத்திரம் கழுவும் வேலையைச் செய்வது சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது."நான் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவள். வீட்டில் சும்மா இருப்பதை விரும்பவில்லை. சுறுசுறுப்பாகவும், பயனுள்ள வகையிலும் நேரத்தை செலவிடவே இந்த வேலையை விருப்பத்துடன் செய்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார். பணம் மட்டுமல்ல, மனநிறைவும் வாழ்க்கையின் முக்கிய அங்கம் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
2026-ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 10-வது இடத்தைப் பிடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.அமெரிக்கா 11-வது இடத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியா 31-வது இடத்தைப் பெற்றுள்ளது.
சீனாவில் தனிமையில் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு துணையாக நபர்களை வாடகைக்கு எடுக்கும் புதிய தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது சுமார் 7.4 பில்லியன் டாலர் மதிப்புடைய இந்த சந்தை, இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. உணவகங்களுக்கு செல்வது, சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வது அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற தருணங்களில் தனிமையை தவிர்க்க பலர் பணம் கொடுத்து நண்பர்களை வாடகைக்கு அமர்த்துகின்றனர். சமூக வாழ்க்கையின் புதிய போக்காக இந்த சேவை உருவெடுத்து வருகிறது.
மூளை-கணினி இணைப்பு (BCI) தொழில்நுட்பத்தில் சீனா முக்கிய முன்னேற்றத்தை எட்டியுள்ளது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் கைகளை இயக்க உதவும். உலகின் முதல் வணிகரீதியான 'NEO' மூளை சிப் தொழில்நுட்பத்திற்கு அந்நாடு ஒப்புதல் வழங்கியுள்ளது. மூளையின் திசுக்களை பாதிக்காமல் பொருத்தப்படும் இந்த சிப், மனித எண்ணங்களைப் புரிந்து அதற்கேற்ப சிக்னல்களை அனுப்பும் திறன் கொண்டது. இதன் மூலம் ரோபோடிக் கையுறைகள் செயல்பட்டு, நோயாளிகள் மீண்டும் தங்களது கை அசைவுகளை கட்டுப்படுத்த உதவும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எதிர்கால தொழில்நுட்ப உலகை கருத்தில் கொண்டு, சீனா தனது கல்வி முறையில் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. புதிய விதிகளின்படி, 6 வயது முதல் பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் சிறு வயதிலிருந்தே நவீன தொழில்நுட்ப அறிவைப் பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஒவ்வொரு மாணவரும் குறைந்தபட்சம் 8 மணிநேரம் AI பாடங்களை கற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி, அமெரிக்காவின் முதலீட்டு முன்னுரிமைகளையே மாற்றி வருகிறது. பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகளை விட தற்போது AI டேட்டா சென்டர்கள் அமைப்பதற்கான செலவுகள் அதிகரித்துள்ளன. ஏப்ரல் மாத அரசின் புள்ளிவிவரங்களின்படி, டேட்டா சென்டர் கட்டுமானத்திற்கான ஆண்டு செலவு 50.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது பொதுப் போக்குவரத்து திட்டங்களுக்காக செலவிடப்படும் 49.3 பில்லியன் டாலரை விட அதிகமாகும். AI தொழில்நுட்பத்தின் எதிர்கால முக்கியத்துவத்தையும், டேட்டா சென்டர்களின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தையும் இந்த மாற்றம் வெளிப்படுத்துகிறது.