25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Jul 30, 2024

எளிமையான வீட்டில் கைபேசி கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும்,  ஸ்ரீ ராம் குரூப் நிறுவனர்  திரு , R. தியாகராஜன்

ஆடம்பர அம்பானிகளுக்கு நடுவில் நடுவில், தான் உழைத்து சேர்த்த 6000 கோடி சொத்து முழுவதையும் தன் நிறுவன ஊழியர்களுக்கும் Trustக்கும் வழங்கியவர்  shriram Groupன் நிறுவனர்  திரு R. Thyagarajan. ஏழை மக்கள் நேர்மையாளர்கள் அவர்களுக்கு கடன் கொடுப்பதற்கு எந்த  credit Scoreரும் தேவையில்லை என்று சென்னையில்  1974 ல் Shriram Groupயே  உருவாக்கிய இந்த நல்ல மனிதர், எந்த புகழ் வெளிச்சத்தையும் விரும்பாமல் எளிமையான வீட்டில் கைபேசி கூட இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். தமிழ்நாட்டின்  ஸ்ரீ ராம் குரூப், R. தியாகராஜன் உண்மையான நேர்மையாளரை ,பாராட்டியே ஆக வேண்டும்.  

Jul 29, 2024

350 வகையான கொசுக்கள்

மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே கொசுக்கள் பூமியில் இருந்தன என அறிவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொசு இனத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை காடுகளை தான் இருப்பிடமாக கொண்டுள்ளன. மனித வாழ்விடங்களை சார்ந்து வாழும் கொசு இனங்கள் மிக குறைவு. இந்த இனங்களின் பெண் கொசுக்கள் தான் மனிதனை கடித்து நோயை பரப்புகின்றன. உண்மையில், கொசுக்களின் முதன்மை உணவுரத்தம் அல்ல.அவை பல்வேறு வகையான பூக்களில் இருந்து தேனை உறிஞ்சும் குழாய் மூலம் உணவாக உட்கொள்கின்றன. இவ்வாறு உறிஞ்சும் போது மகரந்த தாள்களை அவற்றின் உடலில் ஒட்டிக்கொள்ள அனுமதிக்கிறது. அவை தொடர்ந்து தேனுக்காக மற்ற பூக்களுக்கு செல்லும்போது மகரந்தங்களை மற்ற பூக்களுக்கு கடத்துகின்றன.பொதுவாக கொசுக்கள் இனத்தின் பல வகைகளும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதாக கருதப்பட்டாலும் கொசுக்களின் சில இனங்கள் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களை பரப்பும். டயர்கள், குளங்கள், குட்டைகளில் கொசுக்கள் வாழும். பெண் கொசுக்கள் பொதுவாக தண்ணீரின் மீது அல்லது அருகில் முட்டையிடும். முட்டைகள் குஞ்சு பொரிக்கும் போது, அவை லார்வாக்கள் ஆகமாறிநீரில் உள்ள நுண்ணுயிரிகளை உண்ணும். லார்வா பியூபா நிலையில் இறக்கைகள் வளரும் வரை காத்தி ருக்கும். முழு வளர்ச்சியடைந்த பின், பியூபா நிலையில் இருந்து கொசுவாக மாறி தண்ணீரை விட்டுவிடும். வெப்பநிலை உயர் தொடங்கும் போது, வழக்கமாக வசந்த காலம் முதல் கோடை காலம் வரை, அவற்றின் இனப்பெருக்க காலம் தொடங்குகிறது. தண்ணீரை தேங்கவிட்டு கொசுக்கள் வாழ வழி ஏற்படுத்தி கொடுப்பது மனிதர்கள் தான். மழைக்காலத்தில் பழைய டயர்,சிரட்டை, பாட்டில்களை குப்பையில் வீசாமல் இருப்பதும், தண்ணீர் தேக்கங்களை சரியாக பராமரிப்பதும்  . கொசுக்கள் பெருகாமல் இருக்கும்.  

Jul 29, 2024

சென்சார்கள் பொருத்தப்பட்ட நாய் வடிவ ரோபோ

சீனாவில்  உள்ள ஷாங்காய் பல்கலை 6 கால்களை கொண்ட, சென்சார்கள் பொருத்தப்பட்ட நாய் வடிவ ரோபோ ஒன்றை உருவாக்கி உள்ளது. இது கண்பார்வை இல்லாதவர்களுக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.

Jul 27, 2024

காகம் தற்கொலை செய்து கொள்ளும்.!!!!

காகத்தின் ஆயுட்காலம் சுமார் 4 வருடம் மட்டுமே. பெண் காகம், ஆண் காகத்தை நேசித்து அதாவது அண்டங்காக்கையுடன் உறவு வைத்து கூடு கட்டி தனது முட்டைகளை அடை காக்கும்.அப்போது பெண் காகம் எக்காரணத்தை கொண்டும் கூட்டை விட்டு வெளியே போகாது. பெண் காகத்திற்கு ஆண் காகம்தான் உணவு கொடுக்கு ம். அடை காக்கும் அந்த நாற்பது நாட்களில் பெண் காக ம் தண்ணீரே குடிக்காது,முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் தனது துணையான காகத்தை பெண் காகம் வெறுக்க ஆரம்பிக்கும். குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கும் வரை அதற்கு பெண் காகம்தான் இரை கொடுக்கும்.ஆண் காகத்தை முழுமையாக வெறுத்து அதைகொத்தி கொத்தி விரட்டிவிடும். அதற்குப் பிறகு ஆண் காகத்துடன் சேரவே சேராது.இறுதியில் ஆண் காகத்திற்கு தனிமையே கிடைக்கும். தனிமையின் கொடுமையில் ,ஆண்காகம் மரக்கிளைகளில், அல்லது மின்சாரக் கம்பிகளில், வாகனங்களில் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டு இறந்து விடும்.

Jul 27, 2024

குறை பிரசவத்தில் பிறக்கும்  குழந்தைக்கு அபாயம் அதிகம்

குறைப்பிரசவத்தின் சிக்கல்களில் குழந்தை முன் கூட்டியே பிறக்கும். இது குழந்தைக்கு குறைந்த பிறப்பு எடை சுவாசிப்பதில் சிரமம், வளர்ச்சியடையாத உறுப்புகள் மற்றும் பார்வை பிரச்சனைகள் போன்றவற்றை உண்டு செய்யலாம். மேலும் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்கு பெருமுளை வாதம், கற்றல் குறைப்பாடுகள் மற்றும் நடத்தை சிக்கல்கள் ஆபத்துகள் அதிகம் உள்ளது. சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை  காட்டிலும் குறைபிரசவத்தில் பிறக்கும்  குழந்தைக்கு ஏற்படும் சிக்கல்கள் அதிகம்.

Jul 27, 2024

அதிக மின்சாரம் தரும்  புதிய தாது “'ஹைப் ரிட் பெரோவ்ஸ்க்கைட்'

புதைபடிவ எரிபொருட்களால் புவியில் மாசுபாடு அதிகரிக்கிறது. அதற்கு மாற்றாகவே சூரிய ஒளி மின்சாரம் முன்மொழியப்படுகிறது.சூரிய ஒளித் தகடுகள் பெரும்பாலும் சிலிக்கானால் தான் செய்யப்படுகின்றன. சில இடங்களில் சிலிக்கானுக்கு மாற்றாக பெரோவ்ஸ்க்கைட்   ( Perouskite )எனும் தாதுப்பொருளும் பயன்படுகிறது. இதில் கால்சியம், டைடானியம் ஆக்ஸைட் ஆகியவை இருக்கும்.இந்தத் தாதுவின் விலையும் கனமும் குறைவானது. அதிக வளையும் தன்மை கொண்டது. ஆனால் பிரச்னை என்னவென்றால், இது சுலபமாக உடைந்துவிடும். சூரிய ஒளியில், வெப்பத்தில் இருந்தால் பலவீனமாகி விடும். சீனாவில் உள்ள ஜீஜியாங் பல்கலை விஞ்ஞானிகள் இந்தத் தாதுவில் சிறிய மாற்றம் செய்து, ஒரு புது வகையை உரு வாக்கியுள்ளனர்.இதன் பெயர் 'ஹைப் ரிட் பெரோவ்ஸ்க்கைட்' இதில் ஒழுங்கற்ற கரிமப் படலங்களும், ஒழுங்கான கரிமமற்ற படலங்களும் உள்ளன.இதனால் வெயில், மழையைத் தாங்கும் ஆற்றலைப் பெறுகின் றன. 1000 மணி நேரம் சூரிய ஒளியில் இருந்தாலும் இவற்றின்  மின்சாரம் தயாரிக்கும்திறன் குறைய வில்லை. விரைவில் இது நல்ல வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jul 27, 2024

செவித்திறனை மீட்க…..

புல்லட், குண்டுவெடிப்பின் சத்தத்தை கேட்டல் அல்லது தொடர்ந்து அதிக ஒலி இருக்கும் இடத்தில் பணிபுரிதல் ஆகிய காரணங்களால் ஏற்படுவது 'ஒலியால் ஏற் படும் செவித்திறன் இழப்பு (Noise induced Nearing loss -NTHL). தொழில்மயமாக்கம் காரணமாகத் தொழிற்சாலைகள் பெருகுவதால் இந்தக் குறைப்பாடு பலருக்கும் ஏற்படுகிறது. செவித்திறன் மேம்படுத்தும் கருவிகள் பொருத்தலாமே அன்றி, இதைச் சரிசெய்யவே முடியாது என்று நம்பப்பட்டு வந்தது. தற்போது சில சீன ஆய்வாளர்கள் பாரம்பரிய மருத்துவத்தையும், குடல் வாழ் உயிரினங்கள் பற்றிய தற்போதைய மருத்துவ அறிவையும் இணைத்து, இதற்குத் தீர்வு கண்டுள்ளனர். அதிக ஒலியால் குடல் நுண்ணியிரிகள் நலிவடைகின்றன. அவற்றுள் சில S1PR2 உள்ளிட்ட சில வகை கொழுப்புகளை உற்பத்தி செய்கின்றன. இந்தக் கொழுப்பு தான் கேட்கும் திறனைக் காக்கிறது. அயன் ஆக்ஸைட் நானோ துகள்கள் மீது செல்லுலோஸைப் பூசி எலிகளுக்கு வாய் வழியே கொடுத்தனர். இது குடலை அடைந்ததும் நல்ல நுண்ணுயிர்களை நலமடையச் செய்தது. இதனால் கேட்கும் திறன் மேம்பட்டது. இந்த மருந்து விரைவில் மனிதர்கள் மீது சோதிக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Jul 26, 2024

வெள்ளைக்காரனை பார்த்து பயந்தவன எல்லாம் சாதாரண சிறைல வச்சான்

வெள்ளைக்காரனை பார்த்து பயந்தவன எல்லாம் சாதாரண சிறைல வச்சான் வெள்ளக்காரனே பார்த்து பயந்த தியாகிகள் மட்டும் தான் அந்தமான் சிறைல வச்சான் காங்கிரஸ் உடம்பில் இந்தியன். ரத்தம் ஓடும் போது வெளியிட்ட தபால் தலை. இப்பொழுது இத்தாலி ரத்தம் ஓடுகிறது.

Jul 26, 2024

73 வயதில் 11 வகையான ஓட்டுனர் உரிமங்கள் வைத்திருக்கும் பாட்டி ராதாமணி அம்மா 

73 வயதில் 11 வகையான ஓட்டுனர் உரிமங்கள் வைத்திருக்கும் பாட்டி ராதாமணி அம்மா  .கேரளாவைச் சேர்ந்த 73 வயதான ராதாமணி அம்மா, ஜேசி பி & கிரேன் உட்பட 11 வாகன உரிமங்களைக் கொண்ட நாட்டிலேயே ஒரே பெண்மணி ஆவார்.

Jul 26, 2024

ஒன்பது காரட் தங்கத்துக்கு 'ஹால்மார்க்' வழங்க கோரிக்கை

 தங்கம் மற்றும் வெள்ளியின் வரலாறு காணாத விலை உயர்வை அடுத்து, 9 காரட் தங்கத்துக்கும் 'ஹால்மார்க் முத்திரை மற்றும் தனிப்பட்ட அடையாள எண்களை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை எழுந்து உள்ளது.தற்போது வரை 14, 18 மற்றும் 22 காரட் தங்கத்துக்கு மட்டுமே ஹால்மார்க் முத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இதுகுறித்துஆலோசிப்பதற்காக, ஐ.பி.ஜே.ஏ., எனும் இந்திய தங்கக் கட்டி மற்றும் நகை கடைக்காரர்கள் சங்கம், பி.ஐ.எஸ்., எனும் இந்திய தர நிர்ணய கழகத்தின் நிர்வாகிகளுடன் சமீபத்தில் ஆலோசனை மேற்கொண்டது. அப்போது, 9 காரட் தங்கத்துக்கும் ஹால்மார்க் சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. இது, இப்பிரிவு தங்கத்தில் முதலீடு மேற்கொள்ள, முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். நில வரப்படி, 10 கிராம் கொண்ட 9 காரட் தங்கத்தின் விலை 24,070 ரூபாய். இதுபோக, கூடுதலாக 3 சதவீத ஜி.எஸ்.டி... வசூலிக்கப்படும்.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 46 47

AD's



More News