25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


350 வகையான கொசுக்கள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

350 வகையான கொசுக்கள்

மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பே கொசுக்கள் பூமியில் இருந்தன என அறிவியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொசு இனத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை காடுகளை தான் இருப்பிடமாக கொண்டுள்ளன. மனித வாழ்விடங்களை சார்ந்து வாழும் கொசு இனங்கள் மிக குறைவு. இந்த இனங்களின் பெண் கொசுக்கள் தான் மனிதனை கடித்து நோயை பரப்புகின்றன. உண்மையில், கொசுக்களின் முதன்மை உணவுரத்தம் அல்ல.அவை பல்வேறு வகையான பூக்களில் இருந்து தேனை உறிஞ்சும் குழாய் மூலம் உணவாக உட்கொள்கின்றன. இவ்வாறு உறிஞ்சும் போது மகரந்த தாள்களை அவற்றின் உடலில் ஒட்டிக்கொள்ள அனுமதிக்கிறது. அவை தொடர்ந்து தேனுக்காக மற்ற பூக்களுக்கு செல்லும்போது மகரந்தங்களை மற்ற பூக்களுக்கு கடத்துகின்றன.

பொதுவாக கொசுக்கள் இனத்தின் பல வகைகளும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதாக கருதப்பட்டாலும் கொசுக்களின் சில இனங்கள் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களை பரப்பும். டயர்கள், குளங்கள், குட்டைகளில் கொசுக்கள் வாழும். பெண் கொசுக்கள் பொதுவாக தண்ணீரின் மீது அல்லது அருகில் முட்டையிடும். முட்டைகள் குஞ்சு பொரிக்கும் போது, அவை லார்வாக்கள் ஆகமாறிநீரில் உள்ள நுண்ணுயிரிகளை உண்ணும். லார்வா பியூபா நிலையில் இறக்கைகள் வளரும் வரை காத்தி ருக்கும். முழு வளர்ச்சியடைந்த பின், பியூபா நிலையில் இருந்து கொசுவாக மாறி தண்ணீரை விட்டுவிடும். வெப்பநிலை உயர் தொடங்கும் போது, வழக்கமாக வசந்த காலம் முதல் கோடை காலம் வரை, அவற்றின் இனப்பெருக்க காலம் தொடங்குகிறது. தண்ணீரை தேங்கவிட்டு கொசுக்கள் வாழ வழி ஏற்படுத்தி கொடுப்பது மனிதர்கள் தான். மழைக்காலத்தில் பழைய டயர்,சிரட்டை, பாட்டில்களை குப்பையில் வீசாமல் இருப்பதும், தண்ணீர் தேக்கங்களை சரியாக பராமரிப்பதும்  . கொசுக்கள் பெருகாமல் இருக்கும்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News