உங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம். யாராவது உங்களுக்கு அசௌகரியமாக நடந்துகொண்டாலோ, தவறான முறையில் தொட முயன்றாலோ அல்லது பயமுறுத்தினாலோ, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நினைவில் கொள்ள வேண்டியவை.யாராவது தவறாக நடந்துகொண்டால், "வேண்டாம்!" என்று சத்தமாக சொல்லுங்கள். அந்த இடத்திலிருந்து உடனடியாக விலகி, பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள். நடந்த விஷயத்தை அம்மா, அப்பா, ஆசிரியர் அல்லது நீங்கள் நம்பும் பெரியவரிடம் உடனே தெரிவியுங்கள். அவசர உதவி தேவைப்பட்டால் 100 அல்லது 1091 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. தவறு தவறாக நடந்துகொள்பவர்களுடையது. தவிர்க்க வேண்டியவைதெரிந்தவர் என்றாலும், அவர்களுடன் தனியாக செல்ல வேண்டாம்.யாராவது தவறாகத் தொட முயன்றால் அமைதியாக இருக்காதீர்கள்.பயம் அல்லது வெட்கம் காரணமாக நடந்ததை யாரிடமும் மறைக்காதீர்கள்.சாக்லேட், பரிசு, பணம் போன்றவற்றைக் கொடுத்து ஏமாற்ற முயற்சிப்பவர்களை நம்பாதீர்கள். தனியாக வெறிச்சோடிய அல்லது இருண்ட இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்கவும். நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை. உங்களை அன்புடன் கவனிக்கும் குடும்பத்தினரும், ஆசிரியர்களும், நண்பர்களும் இருக்கிறார்கள். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தைரியமாகப் பேசுங்கள்; மறைத்து வைக்காதீர்கள்.உதவி எண்கள்100 - போலிஸ்1091- பெண்கள் உதவி எண் (24x7)உங்கள் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.பாலியல் தொல்லை செய்பவர்கள் குற்றவாளிகள்!அவர்களைப் பற்றி, பயப்பட வேண்டாம்.துணிவுடன் எதிர்த்து, உதவி கேளுங்கள்.
பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களில் அளவுக்கு மீறி குழந்தைகள் பயணம் செய்வது குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளன.சில ஆட்டோக்களில் 10 முதல் 13 மாணவர்கள் வரை ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்லப்படுவது, மாணவர்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் விதிமீறலில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிப்பதுடன், தேவையான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தியில் அதிகளவில் தானியக்க முறைகளைப் பயன்படுத்தியதால் பல தொழில்நுட்பச் சிக்கல்கள் மற்றும் வாகன திரும்பப் பெறுதல் நடவடிக்கைகளை எதிர்கொண்டதாக ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அனுபவமிக்க பொறியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, மனித மேற்பார்வையுடன் கூடிய ஆட்டோமேஷன் முறையை நிறுவனம் மீண்டும் செயல்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இந்தியர்களை நோக்கி சிலர் இனவெறி முழக்கங்களை எழுப்பிய சம்பவம் ,பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒருவர் இந்திய தேசியக் கொடியை கிழித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, "இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் இதுபோன்ற வெறுப்புக்கு இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
நாய்களுக்கு சாக்லேட்: உயிருக்கே ஆபத்து. சாக்லேட்டில் உள்ள 'தியோப்ரோமைன்' (Theobromine) என்ற வேதிப்பொருள் நாய்களின் உடலால் செரிமானம் செய்ய முடியாது. இது அவற்றின் இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தைப் பாதித்து உயிருக்கே ஆபத்தாக முடியும். எனவே, செல்லப் பிராணிகளுக்குச் சாக்லேட் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
பால் கெட்டுப்போவதைத் தடுக்க மக்கள் அதில் ஒரு வெள்ளி நாணயத்தைப்போட்டு வந்தனர்! வெள்ளி ஒரு சக்திவாய்ந்த, இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு உலோகம்.அது பாலில் வளரும் பாக்டீரியாக்களை உடனடியாக அழித்து, பாலை நீண்ட காலத்திற்குப் புத்துணர்ச்சியுடனும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கிறது! இது ஒரு வியக்கத்தக்க உண்மை.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள UTQIAGVIK நகரத்தில் அடுத்த 84 நாட்களுக்கு சூரியன் மறையாது.'நள்ளிரவு சூரியன்' (MIDNIGHT SUN) எனப்படும் இந்த அபூர்வ நிகழ்வால் ஆகஸ்ட் 2 வரை அங்கு இரவே இருக்காது.கோடையில் 84 நாட்கள் பகலாக இருப்பது போலவே,குளிர்காலத்தில் இதே நகரம் சுமார் 65 நாட்களுக்கு சூரிய ஒளியே இல்லாத 'துருவ இரவு' (POLAR NIGHT) காலத்தையும் சந்திக்கிறது.
விமான எரிபொருள் விலையேற்றத்தைச் சமாளிக்கவும், கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கவும் இண்டிகோ நிறுவனம் தனது ஏர்பஸ் விமானங்களில் 'ஆப்டிகிளைம்ப்' (OptiClimb) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைச் சோதனை அடிப்படையில் இன்று முதல் அறிமுகப்படுத்துகிறது.முக்கியப் புள்ளிகள்:செயல்பாடு: விமானம் புறப்பட்டு மேலேறும் போது (Climb phase) வழக்கமான சீரான வேகத்திற்குப் பதிலாக, AI பரிந்துரைக்கும் மாறுபட்ட வேகங்களைப் பயன்படுத்தி எரிபொருள் சேமிக்கப்படும்.இலக்கு: இதன் மூலம் ஒவ்வொரு முறை புறப்படும்போதும் 60-65 கிலோ எரிபொருள் சேமிக்கப்படும்.கூட்டணி: உலகின் முன்னணி விமான இயக்கத் தீர்வு நிறுவனமான 'சீட்டா' (SITA) உடன் இணைந்து இண்டிகோ இதனைச் செயல்படுத்துகிறது.பாதுகாப்பு: வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) விதிகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றியே இந்த AI தொழில்நுட்பம் இயக்கப்படும்.இந்தச் சோதனையின் முடிவுகளைப் பொறுத்து, தனது அனைத்து ஏர்பஸ் விமானங்களிலும் இதனை நிரந்தர அம்சமாக்க இண்டிகோ திட்டமிட்டுள்ளது.
FIR-ஐ மட்டுமே காரணமாகக் கொண்டு ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்க முடியாது; குற்ற வழக்கில் FIR பதிவு செய்யப்பட்டதால் அந்த நபருக்கு பாஸ்போர்ட் வழங்க தடையில்லை என மதுரை உச்ச நீதிமன்ற கிளை உத்தரவு.ஒரு நபரின் அடிப்படை உரிமையான வெளிநாடு செல்தும் உரிமையை, வெறும் FIR பதிவு செய்யப்பட்டதன் அடிப்படையில் மறுப்பது நியாயமல்ல என நீதிமன்றம் கருத்து.இது மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கும் முக்கியமான தீர்ப்பு.
வாஸ்லைனை (Vaseline) கண்டுபிடித்த ராபர்ட் செஸ்ப்ரோ, அதன் மருத்துவக் குணங்கள் மீதுஎவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார் தெரியுமா? தினமும் ஒரு ஸ்பூன்வாஸ்லைனைச் சாப்பிடுவதையும், உடல்நலக் குறைவின் போது உடல் முழுவதும் அதைத்தடவிக்கொள்வதையும் தனது வாழ்நாள் வழக்கமாகவே வைத்திருந்தார். பலதசாப்தங்களாக இந்த விசித்திரமான பழக்கத்தைப் பின்பற்றிய அவர், உடல்நல பாதிப்புகள் இன்றி தனது 96-வது வயது வரை வாழ்ந்து காட்டியது மருத்துவ வரலாற்றில் இன்றும் ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது. ஒரு தயாரிப்பின் மீது ஒருவர் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை எவ்வளவு தூரம் செல்கிறது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம். வாஸ்லைன் (பெட்ரோலியம் ஜெல்லி) ஆரோக்கியமானது என்று நம்பி ராபர்ட் செஸ்ப்ரோ சாப்பிட்டாலும், தற்கால மருத்துவ உலகம் இதை உணவாக உட்கொள்வதற்குப் பரிந்துரைப்பதில்லை.