25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


தெரிந்து கொள்ளுங்கள்

Aug 23, 2024

Dr. A. P. J. அப்துல் கலாம் இன் பொன் வார்த்தைகள் .

கடந்த காலம் வீணான காகிதம். நிகழ்காலம் ஒரு செய்தித்தாள் .எதிர்காலம் ஒரு கேள்வித்தாள். எனவே கவனமாக படித்து எழுதுங்கள் இல்லையெனில் உங்கள் வாழ்க்கை ஒரு டிஷ்யூ பேப்பராக இருக்கும்.

Aug 23, 2024

நெருங்கிய தோழிக்காக சுந்தர் பிச்சை வேதனை

யூடியூப்நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சூசன் வோஜ்சிக்கி காலமானார்.அமெரிக்காவைச் சேர்ந்த சூசன் வோஜ்சிக்கி, கூகுள் வரலாற்றில் ஒரு முக்கிய நபராக இருந்தார் மற்றும் இணையத்தை வடிவமைப்பதில் ஒருகுறிப்பிடத்தக்க பாத்திரம் வகித்தார். அவர் 2014 முதல் 2023 வரை யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். இவருக்கு தற்போது 56 வயதாகிறது. சூசனின் மரணச் செய்தியை அவரது கணவர் Dennis Troper சமூக ஊடகங்கள் மூலம் உறுதிப்படுத்தினார்சூசனின் மரணச் செய்தியை அறிந்தGoogle தலைமை நிர்வாக அதிகாரி  . சுந்தர் பிச்சை அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.அவர் தனது ட்வீட்டில்,"புற்றுநோயுடன் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்த எனது அன்புத்தோழி@SusanWojcicki இழப்பால் நம்பமுடியாத வருத்தத்தில் இருக்கிறேன். அவள் யாரையும் போலல்லாமல் கூகிள் வரலாற்றின் முக்கிய மையமாக இருக்கிறாள், அவள் இல்லாத உலகத்தை கற்பனை செய்வது கடினம்.அவர் ஒரு வியக்கத்தக்க நபர், தலைவர் மற்றும் நண்பர், அவர் உலகில் மிகப்பாரிய தாக்கத்தை ஏற்படுத்தினார், மேலும் அவரைப் பற்றி நன்கு அறிந்துகொண்ட சிறந்த எண்ணற்ற கூகிளர்களில் நானும் ஒருவன்.நாங்கள் அவரை மிகவும் மிஸ் செய்வோம். சுந்தர் பிச்சை உணர்ச்சிகரமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்

Aug 21, 2024

பாலிதானா ஜெயின் கோவில் சிற்பங்கள்

ஒரு பெண் ஒரு கருவியில் வேலை செய்வது போலவும் இன்னொருவர்  கைப்பேசியில் பேசுவது போலவும் உள்ள இந்த சிற்பம் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது மொபைல்மற்றும்டேப்லெட்போன்றசாதனங்களை,எல்லாம்அன்றையசிற்பங்களில்மிகவும் துல்லியமாக உருவாக்கியிருக்கிறார்கள்,நமது முன்னோர்கள்.தமிழர்களின் வாழ்வியலை இரு பெண்கள் கைப்பேசியை உபயோகித்துக் கொண்டிருப்பது போல் உள்ள சிற்பங்கள்.

Aug 21, 2024

தமிழை அறவே மறந்தோம் !

மனைவியை ஒய்ஃப் என்றோம்.வாழ்க்கையை லைஃப் என்றோம். கத்தியை நைஃப் என்றோம். புத்தியை புதைத்தே நின்றோம் ! அத்தையை ஆன்ட்டி என்றோம்.அவள் மகளை ஸ்வீட்டி என்றோம்.கடமையை டுயூட்டி என்றோம்.காதலியை பியூட்டி என்றோம்! காதலை லவ்வென்றோம். பசுவை கவ்வென்றோம். ரசிப்பதை வாவ் என்றோம். இதைதானே தமிழாய் சொன்னோம்! முத்தத்தை கிஸ் என்றோம்.                                  பேருந்தை பஸ் என்றோம். அளவை சைஸ் என்றோம். அழகை நைஸ் என்றோம் ! மன்னிப்பை சாரி என்றோம். புடவையை சேரி என்றோம்.ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம். தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்! மடையனை லூசு என்றோம். வாய்ப்பை சான்சு என்றோம்.மோகத்தை ரொமான்ஸ் என்றோம். தமிழை அறவே மறந்தோம்! அமைதியை சைலன்ஸ் என்றோம். சண்டையை வயலன்ஸ் என்றோம்.தரத்தை ஒரிஜினல் என்றோம்.தாய் மொழியை முழுதும் கொன்றோம்

Aug 20, 2024

சம்பளத்தில் 10-15% கழிக்கப்பட்டு,உங்கள் பெற்றோரின் கணக்கிற்கு மாற்றப்படும் அருமையான திட்டம்

நாட்டிலேயே முதல் மாநிலமாக அசாமில் உங்கள் பெற்றோரை நீங்கள் கவனிக்கவில்லை என்றால் உங்களின் சம்பளத்தில் 10-15% கழிக்கப்பட்டு,உங்கள் பெற்றோரின் கணக்கிற்கு மாற்றப்படும். அதனால் அவர்கள் வறுமையிலும் வாழலாம். இத்திட்டம் மற்ற மாநிலங்களிலும்  செயல்படுத்தப்பட முடியுமா? 

Aug 20, 2024

சுதந்திரத்திற்க்கு போராடிய துணிச்சல் பெண்மணி_ வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட நீரா ஆர்யா..!

நாட்டுக்காக கணவரை கொன்று, மார்பகங்களை இழந்து, போராடிய துணிச்சல் பெண்மணி_ வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்ட நீரா ஆர்யா..!நேதாஜி ராணுவத்தில் உளவு பிரிவில் பணியாற்றியவர் நேதாஜியின் உயிரை காக்க தன் கணவரான BRITISH அதிகாரியை கொன்று, சிறையில் சித்தரவதையால் தன் மார்புகளையும், நாட்டுக்காக தன் செல்வங்களையும் இழந்து, நம் இந்திய சுதந்திரத்திற்க்கு பிறகு, ரோட்டோரத்தில் குடிசை வீட்டில் வாழ்ந்து மறைந்தார்.இதுபோல் நேதாஜியுடன் இணைந்து போராடியவர்களுக்கு உரிய கவுரவம் கிடைக்கவில்லை.

Aug 20, 2024

நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை

பெற்றோரை விட யாரும் முக்கியமானவர்கள் இல்லை. செய்யும் தொழிலை விட காதல் முக்கியமானது இல்லை. வேலையில் திறமையை விட படித்த பட்டப்படிப்பு முக்கியமானது இல்லை. ஆரோக்கியத்தை விட பணத்தை சேர்ப்பது முக்கியமானது இல்லை.  மனது வலிமையாக இருப்பதை விட உணர்ச்சிகரமான முட்டாளாக இருப்பது முக்கியமானது இல்லை. உண்மையை விட கண்ணுக்கு எதிரில் தெரிவது முக்கியமானது இல்லை. அமைதியை விட ஆரவாரம் முக்கியமானது இல்லை. எளிமையை விட ஆடம்பரம் முக்கியமானது இல்லை. நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை. அக அழகை விட புற அழகு முக்கியமானது இல்லை.

Aug 19, 2024

யூனிவர்சல் 4G, 5G Sim-ஐ அறிமுகம் செய்யும் BSNL.,

 இந்திய அரசு டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) 4G மற்றும் 5G இணக்கமான ஓவர்-தி-ஏர் (OTA) மற்றும் யூனிவர்சல் சிம்(USIM) தளத்தை அறிமுகம் செய்ய உள்ளது.இந்த புதிய தளம் நாடு முழுவதும் உள்ளBSNL வாடிக்கையாளர்களுக்கு சிறந்த இணைப்பு மற்றும் சேவை தரத்தை வழங்கும்.BSNL நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஏ. ராபர்ட் ஜெரார்டு தலைமையில், ஆகஸ்ட்9 அன்று இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமான மொபைல் எண்ணை தேர்வு செய்யவும், புவியியல் தடைகள் இல்லாமல் சிம் மாற்றம் செய்யவும் முடியும்.BSNL4Gமற்றும்5G சேவைகளை பரிமாற்ற மையமாக கொண்டு, தமது டெலிகாம் சேவைகளில் புதுமைகளை அறிமுகப்படுத்தி, கிராமப்புறம் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் டிஜிட்டல் இடைவெளியை குறைக்க முயற்சித்து வருகிறது.BSNL நிறுவனம் இம்மாத இறுதிக்குள்80,000,4G டவர்களை அமைக்க திட்டமிட்டுள்ளது, மேலும்2025ஆம் ஆண்டுக்குள்21,000 டவர்களை அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய அரசு,BSNLக்கு89,047 கோடி ரூபாயை ஒதுக்கி,4G/5G ஸ்பெக்ட்ரங்களை வழங்கியுள்ளது. மேலும்,BSNLஇன் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை1,50,000 கோடி ரூபாயிலிருந்து2,10,000 கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளது.BSNL கடந்த சில ஆண்டுகளாக கடன் சிக்கல்களில் சிக்கி வருகிறது, இதை சமாளிக்க மத்திய அரசு முந்தைய மூன்று சீரமைப்பு தொகுப்புகளை ஏற்கனவே வழங்கியுள்ளது.இந்த புதிய நடவடிக்கைகளால், BSNL இன் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மறுசீரமைப்புக்கு உதவியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Aug 17, 2024

குழந்தை வளர்ப்பில்  பெற்றோர்களின் கடமை

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஒப்பிட்டுப் பேசக் கூடாது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உறவினர்கள். நண்பர்கள் முன் மட்டம் தட்டிப் பேசுவது, அடிப்பது கூடவே கூடாது.பொண்ணு எப்படிப் படிக்கிறா?, 'பையன் சேட்டை பண்ணுவானா?' என்று கேட்டால், 'அதை ஏன் கேட்கிறீங்க' என்று கூறாமல், 'நன்றாகப் படிக்கிறாள்/பொறுப்பாக இருக்கிறான். வளர வளர நிறைய மாற்றத்தை உணர்கிறோம்' என்று உயர்வாகப் பேசி குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும்.குழந்தைகள் சோகமாக இருக்கும்போது ஒரு நண்பன் போல பேசி, பிரச்னையை அறிந்து அதற்குத் தீர்வு காணவேண்டும் உங்கள் யூகங்களை அங்கே நிரப்பி அவர்களை இன்னும் தனிமையில் தள்ளக்கூடாது.குழந்தைகள் தினம் பள்ளி விட்டு வந்தவுடன் நண்பர்கள், பாடம், வகுப்பு, ஆசிரியர் என பள்ளியில் நடந்த விஷயங்களை பெற்றோர்களிடம் பகிர்ந்துகொள்ளும் வழக்கத்தை உருவாக்க வேண்டும்.குடும்பத்தில் உள்ள பிரச்னைகளை குழந்தைகள் முன் விவாதிப்பது சண்டை போடுவதை அறவே தவிர்க்க வேண்டும்'என் அப்பா, அம்மாதான்  உயர்ந்தவர்கள்.என் வீடு ரொம்ப சந்தோஷமான வீடு' என்று மகிழும், கொண்டாடும் பால்யத்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது, பெற்றோரின் கடமை!

Aug 17, 2024

இயற்கை மரணம் நிகழ்வதற்கு முன் தோன்றும் அறிகுறிகள்

மரணம் நெருங்கும் போது தோலானது காகிதம் போல, மெலிதாக மாறி நீலம் அல்லது ஊதா நிறத்தில் நிழல் போல மாறும்.  அணையும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல, தங்களுடைய வழக்கத்துக்கும் மீறி அதிக நேரம்  துங்குவார்கள்.  மரணத்தின் முதன்மையான அறிகுறியே ஒழுங்கற்ற முறைகள் தான்.  மரணத்தின் தருவாயில் இருப்பவர் ,தன்னுடைய சுவாசம் வேகமாக இருப்பது அல்லது மிகவும் குறைவாக இருப்பதை உணர முடியும். தன்னுடைய சொத்துக்கள் அல்லது உடைமைகளை விரும்பும் நபர்களுக்கு வழங்க தொடங்குவார்கள். 

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 46 47

AD's



More News