25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பங்குளம் மற்றும் செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில்,  கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அமைச்சர்  அவர்கள் திறந்து வைத்தார்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பங்குளம் மற்றும் செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில், கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அமைச்சர்  அவர்கள் திறந்து வைத்தார்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பங்குளம் மற்றும் செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில், ரூ.1.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்பு வீடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி.சங்கீதா இன்பம் அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில்,  (17.10.2024) நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.

அதன்படி, சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பங்குளம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.1.35 கோடி மதிப்பில் 6 தொகுப்புகளாக கட்டப்பட்டுள்ள 24 வீடுகளையும், செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், ரூ.44.88 இலட்சம் மதிப்பில் 2 தொகுப்புகளாக கட்டப்பட்டுள்ள 8 வீடுகளையும் என மொத்தம் ரூ.1.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்பு வீடுகள்  நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் வாழ்ந்து வரும்  இலங்கைத் தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பான கவுரவமான மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்துத் தருவதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு சட்டப் பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். முகாம்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ஆண்டுதோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பொறியியல்/வேளாண்/முதுநிலை பட்டப்படிப்பு மாணவ, மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல், வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி, சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி, மாதாந்திர பணக்கொடை உயர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு விலையில்லாமல் அரிசி, விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும் போன்ற சுமார் 300 கோடிக்கு மேல் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்கள்.

 இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய நம் உறவுகளை முகாம்களில் தங்கவைத்து, அகதிகள் முகாம் என்று இருந்ததை இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்தவர்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள். முகாம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்ததோடு, பத்திரிகையில் இலங்கை தமிழர் முகாம் சம்மந்தமாக ஒரு கட்டுரை வந்ததை படித்த முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்கள், உடனடியாக அமைச்சர்களை தமிழகத்தில் உள்ள முகாம்களுக்கு ஆய்வு செய்ய அனுப்பி அவர்களின் குறைகளை களைந்தார். அதன் வழிவந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று மறுவாழ்வு முகாம்களில் நிரந்தர வீடுகட்டவும் ஆணையிட்டுள்ளார்.மேலும் விருதுநகர் மாவட்டத்தில், உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கைத்தமிழர்களுக்கு பல்வேறு கட்டங்களாக குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வழங்கப்பட்டு  வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று அனுப்பங்குளம் மற்றும் செவலூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில், உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.1.80 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 32 குடியிருப்பு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் வாழக்கூடிய இந்த மறுவாழ்வு முகாமில், இருக்கக்கூடிய பழைய குடியிருப்புகளை எல்லாம் அகற்றி விட்டு, அவர்களுக்கு புதிய குடியிருப்புகளை வழங்கக்கூடிய இந்த திட்டம்,  தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளில் நமது மாவட்டத்திற்கு மூன்று கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது.இந்த மூன்று கட்டங்களில் ஏறத்தாழ 850 வீடுகளை நமது மாவட்டத்தில் மொத்தம் எட்டு இடங்களில் கட்டப்பட்டு வருகிறது. இந்த எட்டு இடங்களில் கட்டப்பட்டுள்ள வீடுகளில் சுமார் 200 வீடுகள் வரை பயனாளிகளுக்கு பல்வேறு கட்டங்களாக வழங்கப்பட்டுள்ளன.மேலும் பணிகள் நடைபெற்று இருக்கக்கூடிய ஏறத்தாழ 600 வீடுகள் வரக்கூடிய சில மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு, உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலமாக ஏறக்குறைய 900 குடும்பங்கள் பயனடையக்கூடிய வகையில் இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வீடுகளை சுற்றி இருக்கக்கூடிய உட்கட்டமைப்பு வசதிகளான சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்டவைகளை ஊரக வளர்ச்சித் துறையின் திட்டங்களோடு இணைந்து முழுமையாக செயல்படுத்துவதன் மூலமாக, அந்தப் பகுதிகளில் வீடுகளாக மட்டுமில்லாமல் அனைத்து வசதிகளும் இருக்கக்கூடிய  குடியிருப்பு பகுதிகளாக உருவாக்கப்படுவது தான் இந்த திட்டத்தினுடைய மைய நோக்கம்.அந்த நோக்கத்தை நிறைவேற்றக் கூடிய வகையில் நமது துறை சார்ந்த அலுவலர்கள் நிறைவேற்றி கொண்டிருக்கிறார்கள். எனவே மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இருக்க கூடிய மக்கள் எல்லாம் புத்துணர்வு பெறுவதற்கும், புது வாழ்வு பெறுவதற்கும் இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,I A S., சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி முத்துலட்சுமி, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ், சிவகாசி வட்டாட்சியர் திரு.லட்சம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News