வெம்பக்கோட்டை ரோட்டில் சத்திரப்பட்டி, கீழராஜகுலராமன், ஆலங்குளம் ராஜபாளையம் கிழக்கு பகுதி ரயில்வே மேம்பாலம் அடுத்து உள்ள பகுதிகளுக்கு இணைப்பு ரோடாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி வாகன போக்குவரத்து சாலையை ,மாநிலச்சாலையாகதரம்உயர்த்தினர்.ரயில்வேமேம்பாலம்முதல்பொன்னகரம்வரைஅதிககுடியிருப்புகளும், பள்ளி, கல்லுாரிகள், தொழிற்சாலைகள், உள்ள 1.5 கி.மீ தொலைவு போக்குவரத்தை கருத்தில் கொண்டு சாலையின் இரண்டு பக்கமும் இருந்த நிழல் தரும் மரங்களை அகற்றி வாகனங்கள் முந்துவதை தவிர்க்க சென்டர் மீடியன் அமைத்தனர். மக்கள் போக்குவரத்து நெரிசல் இன்றி சென்று வந்தனர்.இந்நிலையில் இப்பகுதியில் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புகள் கடைகளின் தாழ்வாரங்கள், வாகன நிறுத்தம், மண்மேடிட்டு அடைப்பு, கடைகளின் விளம்பர பலகை என சாலையின் அகலமே சுருங்கிவிட்டது. இதனால் கனரக வாகனங்கள் வரும்போது ஒதுங்க வழியின்றி பாதசாரிகள், டூவீலரில் செல்வோர் இன்னலுக்கு உள்ளாவது டன் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். கண்டுகொள்ளாத அதிகாரிகளால் ராஜபாளையம் வெம்பக்கோட்டை ரோடு தொடர் ஆக்கிரமிப்புகளால் அகலம் சுருங்கி வாகன ஓட் டிகள் தடுமாறும் நிலைக்கு மாறி உள்ளதுஆக்கிரமிப்புகளை அகற்றி அகலமான சாலையை மீட்க வேண்டும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரூ.3.40 கோடி மதிப்பில் மே 29ல் திறக்கப்பட்டுள்ளது. தினமும் 50 டவுன் பஸ்களுடன் 300க்கும் அதிகமான டிரிப்கள் வந்து செல்லும்.ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா கண்டு ஒன்பது நாள் ஆகியும் இதுவரை புறகாவல் நிலையம் செயல்பாட்டிற்கு வராமல் உள்ளது.சுற்றிலும் டாஸ்மார்க் கடைகளுடன் குடிமகன்கள் தொல்லை உள்ளதால் இரவு பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு கேள்விக் குறியாகி வருகிறது.தொடங்கி 9 நாட்கள் கடந்தும் பஸ் ஸ்டாண்ட் முன்பு அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையம் செயல்படாமல் பூட்டப் பட்டுள்ளது.இதனால் பெண் பயணிகள் குறிப்பாக இரவு நேரத்தில் அச்சத்திற்கு உள்ளாகின்றனர். விரைவில் செயல்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் ரூ.3 கோடி40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு மே29ல் திறக்கப்பட்டு குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல் லாததால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.2 ஆண்டுகளைக் கடந்து மே29ல் திறக்கப்பட்டது. இதில்23 கடைகள்,2 ஓட்டல்கள், பயணிகள் காத்திருப்பு அறை, போலீஸ் அவுட்போஸ்ட், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற் படுத்தப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் கூறியது.இந்நிலையில் தினமும்50க்கும் அதிகமான டவுன் பஸ்கள், ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்டில் கழிப்பறை, பயணிகள் அமர்வதற்கான இருக்கை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பாதுகாப்பிற்கு போலீஸ் என எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால் பயணிகள், பஸ் டிரைவர்கள் அலைக்கழிப்பிற்கு ஆளாகின்றனர்.பயணிகள் கூறுகை யில், இரண்டு ஆண்டுகள் காத்திருந்து விட்டோம். தற்போது எந்த வசதியும் செயல்படுத்தாமல் அவசர கதியில் திறந்திருப்பது யாரை திருப்திபடுத்த என தெரியவில்லை. தினமும் நுாற்றுக்கணக்கான பெண்கள், மாணவிகள் கழிப்பறை இல்லாமல் படும் சிரமத்தை அதிகாரிகள் எப்போது சரி செய்வார்கள் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம்ராஜபாளையம் தாலுகாவுக்கு உட் பட்ட சேத்தூர், தேவதானம், கோவிலூர், சாஸ்தாகோவில், அசையாமணி விளக்கு, சொக்கநாதன்புத்தூர்,சோலைசேரி, கிருஷ்ணாபுரம், மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் நெல் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தேவதானம், கோவிலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள10 ஆயிரம்ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் உள்ளன. இங்கு2 ஆயிரம் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். சில இடங்களில் விளைந்த நெற்பயிர் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்து வருகிறது.ஒரு சில இடங்களில் அறுவடைப்பணிகள்நடைபெற்று வருகிறது. நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என விவசாயிகள் மனு அளித்து எதிர்பார்த்துள்ளனர்.
ராஜபாளையத்தில் ரோட்டில் தெரியும் பராமரிப்பற்ற கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பதுடன் வாகன ஓட்டிகள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.ராஜபாளையம் முடங்கி யார் ரோடு, ரயில்வே பீடர் ரோடு, தென்காசி ரோடு, டி.பி மில்ஸ் ரோடு, சத்தி ரப்பட்டி ரோடு என முக் கிய சாலைகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை மாநில நெடுஞ்சாலை நகர்ப்புற உட்புற சாலை கள் அனைத்திலும் மாடுகள் திரிந்து வருகின்றன. பகல் இரவு என எந்த நேரமும் ,ரோட்டின் ஒரு பகுதியை தங்குமிடமாக மாற்றி உறங்குகின்றன. இதை அறியாமல் வேகமாக வரும் வாகன ஓட்டி கள் மோதி ,விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்.மாடுகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு வாகனங்களில், மோதுவதால் பாதிப்பு ஏற்படுகிறது. மாடுகளை முறையாக பராமரிக்காமல் சாலைகளில் அவிழ்த்துவிடும் ,உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டும், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் விட்டுள்ளனர். விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
ராஜபாளையம் நகர் நடுவே செயல்பட்ட பழைய பஸ் ஸ்டாண்ட் த் கட்டடம் சேதமடைந் ததால் நகர்ப்புற மேம் பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2.90 கோடிக்கு 2023 ஜன. மாதம் பணிகள் துவங்கியது.இதனால் கிராமங்களுக்கு சென்று வரும், பஸ்கள் மகப்பேறு மருத்துவமனை முன்பிருந்து தற்காலிகமாக இயக்கப் பட்டு வருகிறது. பழைய கட்டடம் இடிக்கப்பட்டு இரண்டு ஓட்டல்கள், புறக் காவல் நிலையம், சுகாதார வளாகம், 27 வணிக கடை கள் கட்டப்பட்டுள்ளது.சட்டசபை தொடரில் எம். எல். ஏ., தங்கபாண்டியன் பஸ் ஸ்டாண்ட் திறப்பிற்கு அமைச்சரின் வருகை தேதி ,கிடைக் காததால் பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா தள்ளிப் போகிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது . பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகளை கடந்து பணிகள் முடிந்துள்ள நிலையில் செயல் பாட்டிற்கு வராததால் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.பஸ் ஸ்டாண்ட் முன்பு தினமும் காத்திருக்கும் ஆயிரக்க ணக்கான பயணிகளுக்கு இருக்கை, கழிப்பறை, மழை வெயிலிலிருந்து ஒதுங்க வசதி இல்லை. எனவே பயணிகள் நலன் கருதி முடிவடைந்துள்ள, பழைய பஸ் ஸ்டாண்டை விரைந்து திறக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க் கின்றனர்.
ராஜபாளையத்தில் அதிக அளவில் தள்ளுவண்டி கடைகள், ஓட்டல்கள், பாஸ்ட் புட், டீ கடைகளில் உணவுப் பொருட்களில் பயன்ப டுத்த தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக், பயன் படுத்தப்பட்ட எண்ணெய், பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் தயாரிக்கப் பட்ட உணவுகள் நடை முறையில் உள்ளன.ராஜபாளையம், சுற்றுப் பகுதிகளில் செயல்படும் உணவு பொருள் விற்பனை கடைகளில் விதிமுறைமீறி பிளாஸ்டிக் பொருட்களை பார்சலுக்கு உபயோகப் படுத்துவதை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணிக்க எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி சுகாதார விதிமுறைகள் பின்பற்றாது காற்றில் பறக்கும் நிலையில், தடை செய்யப்பட்ட பாலித்தீன் உள்ளிட்ட ,பிளாஸ்டிக் பொருட்கள் வாழை இலைக்கு பதில் பார்சல் மற்றும் உணவு பரிமாறுவதில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஓட்டல்களில் குழம்புகளை, டீக்கடையில் கூட பிளாஸ்டிக் கவர்களிலும், கொதிநிலையில் கட்டி கொடுக்கின்றனர். இது தவிர பதப்படுத்தப்பட்ட இறைச்சியும், தடை செய்யப்பட்ட நிறமிகளும், மசாலாக்கள், உபயோகப்படுத்திய எண்ணெய் கொண்டு உணவு தயார் செய்யப்படுகிறது.பூ, இறைச்சி, ஓட்டல்களில் எந்த தடையும் இன்றி பிளாஸ்டிக் கவர்களில்பார்சல்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றனர். ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல், பாதிப்பு நீர் நிலைகளில் அடைப்பு போன்ற சிக்கல் ஏற்படுத்துவதால் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண் காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் பஞ்சவர்ணம் ரக மாம்பழத்திற்கு புவிசார் குறியீடு பெற முயற்சி எடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை கிடைக்காததால் ,விரைந்து புவி சார் குறியீடு பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் .இம்மாவட்டத்தில் வத்திராயிருப்பு, ராஜபாளையம் பகுதிகளில் 1000 முதல் 1500 எக்டேர் பரப்பில் பஞ்சவர்ணம் ரக மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. சுவையான அல்போன்சா, சப்பட்டை (பங்கனபள்ளி) மாம்பழ வகைகளுக்கு அடுத்தப்படியாக மே சீசனில் அதிகம் விற்பது பஞ்சவர்ணம் ரகம் தான்.மாவட்டத்தில் இருந்து மட்டும் ஆண்டு தோறும் 6 ஆயிரம் மெட்ரிக் டன் பஞ்சவர்ணம் ரக மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் சுவையால் தனித்துவம் பெற்றதாலும், ராஜபாளையம் பகுதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை யடிவாரத்தில் மட்டுமே அதிகம் சாகுபடி செய்யப்படுவதாலும், தோட்டக் கலைத்துறை உதவியுடன் மதுரை வேளாண் வணிக காப்பீட்டு மன்றம் சார்பில் புவிசார் குறியீடு பெற 2023 முதல் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றத்தால் இந்தாண்டு காய்ப்பு குறைந் துள்ளதாகவும், பஞ்சவர்ணம் மா விவசாயத்தை அதிகப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ,விரைந்து புவி சார் குறியீடு பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
.ராஜபாளையம் நகராட்சி யில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். 42 வார்டு களை கொண்ட நகராட்சி யில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்த நடவடிக்கை இல்லாததால் இவற்றின் எண்ணிக்கை பெருகி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.பராமரிப்பற்ற தெருநாய்களை கட்டுப்படுத்த கருத் தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள அரசு வழி காட்டுதல் இருந்து வரும்நிலையில் முறையான அமைப்பு இன்றி அறுவை அறுவை சிகிச்சை பணிகள் நடை பெறவில்லை.இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் ராஜபாளையம் கருத் தடை அறுவை சிகிச்சை மையத்தை ஆய்வு செய்த கால்நடை மருத்துவ குழுவினர் கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தினர். ஜன. மாதம் ராஜபாளையத்தில் பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த பயணிகள் 39 பேரை தெரு நாய் கடித்த சம்பவமும், ஏப்.3ல் சத்திரப்பட்டி பகுதியில் இருந்து 24 மணி நேரத்திற்குள் 6 மாணவர்கள் உட்பட 64 பேரைவெறி நாய் கடித்தது உள்ளிட்ட நிகழ்ச்சி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ராஜபாளையத்தில் ரூ.பல லட்சம் செலவில் புதுப்பித்தும் செயல்படாமல் உள்ள நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை கூடம்.2012ம் ஆண்டு கால் நடைத்துறை கெடுப்பின்படி கணக்கெடுப்பின்படி ராஜபாளையம் நகராட்சியில் மொத்தம் 611 தெரு நாய்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளாததால் நாய்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து உள்ளது.இதனால் பல லட்சம் செலவில் புதுப்பிக்கப் பட்ட ராஜபாளையம் நாய்கள் அறுவை மையத்தை கருத்தடை சிகிச்சை செயல் பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
ராஜபாளையம் சங்கரன் கோவில் மெயின் ரோட்டில் திருமங்கலம் கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து புது பஸ் ஸ்டாண்டிற்கு இந்த ரோடு வழியே தினமும் நூற்றுக் கணக்கான பஸ்கள் ஆயிரக்கணக்கில் டூவீலர்கள் கடந்து செல்கின்றன. ஏற்கனவே நகர் பகுதிக்கு இந்த மெயின் ரோட்டில் இருந்து தாமிரபரணி குடி நீர் குழாய் பதிக்கப்பட்டு இவற்றில் அடிக்கடி ஏற்படும் உடைப்புகளால் ரோடு சேதமாகி பின்பு சரி செய்வதும் மீண்டும் அழுத்தத்தால் உடைப்பு எடுப்பதும் என தொடர் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த 10 நாட்களாக புது பஸ் ஸ்டாண்ட் சங்கரன்கோயில் முக்கு இடையே உள்ள டாஸ்மாக் கடை எதிர்ப்பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகனங்கள் தடுமாறி வருகின்றன. இதை எச்சரிக்க பெரிய அளவிலான கற்களை சிலர் பள்ளத்தின் முன்பு வைத்துள்ளனர்.கடந்த ஒரு வாரத்திற்கு மேல் இதே நிலை உள்ளதால் பகல் நேரங் களில் ஒதுங்கும் வாகனங்களும் இரவு நேரங்களில் விளக்கொளியின்றி கற்கள் இருப்பது தெரியாமல் மோதி பலரும் விபத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.தொடரும் இப்பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என சமூக மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.