ஆகாயத் தாமரையால் பாதிக்கப்படும் நீர்நிலைகள்
நம் நகரில் உள்ள, புதியாதிகுளம், பிரண்டைகுளம், கொண்டனேரி கண்மாய், புளியங்குளம், வேட்டை பெருமாள் கண்மாய் ஆகிய இடங்களில் அய்யனார் கோவிலில் இருந்து வரும் நீரின் வரத்துக்களால் நிரம்பப் பெற்று, பல்வேறு இடங்களில் நீராதாரத்தை பாதுகாத்து வரும். ஆனால் தற்பொழுது இக் கண்மாய்களில், கழிவு நீர் கலப்பதால் ,ஆகாயத் தாமரை செடிகள் அடர்த்தியாக வளர்ந்து, மீன் உள்ளிட்ட நீர் வாழ் பிராணிகள் , வாழ முடியாத ,கண்மாயாக மாறியுள்ளது. இவற்றுடன் நம் நகரில் உள்ள குளங்களும் இவற்றால் பாதிக்கப்பட்டு உள்ளன. இவற்றில் களைச் செடிகள் வளர்ந்து, பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நீர் நிலைகளைப் பாதுகாக்க, பல சமூக ஆர்வலர்கள் திரண்டாலும், மறுபடியும் ஆக்கிரமிக்கும் களைச் செடிகள், ஆகாயத் தாமரையால் ஒன்றும் செய்ய முடியாமல், நீராதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதை யார் கவனிப்பார்கள்?,
0
Leave a Reply