25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மக்களின் எதிர்பார்ப்பு

Jun 18, 2024

ஒரே சமயத்தில் தொடங்கிய விவசாய பணிகளால் ஆட்கள் பற்றாக்குறை

இராஜபாளையம் சுற்றியுள்ள கலங்காபேரி, புதூர், அய்யனாபுரம், சத்திரப்பட்டி, பேயம்பட்டி, கீழராஜகுலராமன், சுந்தர்ராஜபுரம், நத்தம்பட்டி, புனல்வேலி, மீனாட்சிபுரம் பகுதிகளில் கோடை மழையை அடுத்து வெங்காய விவசாயத்தில் பரவலாக விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.கண்மாயை ஒட்டி நெல் விவசாயம், மற்றும் நீர் இருப்பை பொறத்து மிளகாய், வெங்காயம், மக்காச்சோளம் உள்ளிட்ட நீர் குறைவாக தேவைப்படும் பயிர் சாகபடி செய்வது வழக்கம்.2 வாரங்களுக்கு முன் தொடர்ந்த கோடை மழையின் காரணமாக இதற்கான ஆயத்த பணிகளான உழவு பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில் ஒரே சமயத்தில் தொடங்கிய விவசாய பணிகளால் ஆட்கள் பற்றாக்குறை அதிகரித்தது.வேலை ஆட்களுக்கான கூலி அதிகரித்தாலும், பற்றாக்குறை என்பது தொடர்ந்து வருகிறது. வேளாண் துறை அதிகாரிகள் மாற்ற தீர்வு காண வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Jun 17, 2024

சாலை ஓரத்தில் விவசாய கழிவுகள்

மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் கரும்பு, நெல், வாழை, போன்ற பயர்களில் நீர்வாய்ப்பு குறைவான பகுதிகளில் மானாவாரி பயிர்களான எள், உளுந்து, கம்பு போன்ற எண்ணெய வித்துக்களை விளைவிக்கின்றனர்.போதிய களம் இன்றி விவசாய பயிர்களைப் பிரித்து எடுப்பதற்காக கிராம சாலைகள், ரோட்டோர சாலைகளில் காயவைக்கின்றனர். பணி முடிந்தவுடன் விளை பொருட்களை மட்டும் எடுத்துவிட்டு கழிவுகளை ரோட்டோரம் குவித்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதால் கேட்பாரற்று கிடக்கும் இதன்மீது சிலர் தீ வைத்து இருக்கின்றனர்.விவசாய கழிவுகளை மாற்று பயன்பாட்டிற்கான முயற்சியில் வேளாண் துறைகள் ஈடுபடுவதோடு, புதிய களம் ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும். இதன் மூலம் சமூக ஆர்வலர்கள் இயற்கையால் பாதுகாத்து வளர்க்கப்பட்ட மரங்கள் தீயில் கருகி வீணாகிறது. வனத்துறை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டியது அவசியமாகும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Jun 15, 2024

இராஜபாளையத்தில் பாலப் பணிகளை விரைவு படுத்த வலியுறுத்தல்.

.இராஜபாளைமய் நகர் பகுதி தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக உள்ள டி.பி. மில்ஸ் ரோட்டில் இரண்டு சாக்கடை தரைப்பாலங்கள் வலுவிழந்த நிலையில் இருந்தன். ஒன்பது மாதங்களுக்கு முன் பணிகளுக்கான ஒப்புதல் வழங்கியும், தொடங்காமல் இருந்து வந்த நிலையில் , 1 மாதத்திற்கு முன் பணிகள் தொடங்கின. பள்ளி திறப்பிற்கு முன்பு நடைமுறைக்கு கொண்டு வர எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் பழைய பாலங்களை அகற்றிய வேகத்தில், பணிகள் நடைபெறாததால் மலையடிப்பட்டிக்கு இணைப்பு இன்றி வாகன ஒட்டிகள் நெரிசலுக்கு உள்ளாகி வருகின்றனர். சூழ்நிலை கருதி வேகமாக முடிக்க வேண்டிய பணிகள் தாமதத்தால், மாணவர்கள், பொதுமக்கள், வாகன ஒட்டிகள் உள்ளிட்ட அனைவருக்கும் சிரமம் ஏற்பட்டு வருவதை கருதி மாவட்ட நிர்வாகம் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Jun 07, 2024

ரோடு சேதத்தால் கோபம் அடைந்த மக்கள்

இராஜபாளையம் மாடசாமி கோவில் தெரு அடுத்து அயோத்தி ராம் நகரில் 80 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆறு மாதங்களுக்கு முன் ரூ.10 லட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய பொது நிதிமூலம்புதியதார்சாலைஅமைக்கப்பட்டது.இந்நிலையில் குடியிருப்பு அருகே பிளாட்டுகளுக்கு மண் கொண்டு செல்கிறோம்.என்ற பெயரில் கனரக லாரிகளில் அளவுக்கு அதிகமாக கொண்டு சென்ற மண் எடை தாங்காமல் ரோடு சேதம் அடைந்தது. இதையடுத்து அப்பகுதி குடியிருப்பு வாசிகள் 3 டாரஸ் லாரி இரண்டு மண் அள்ளும் இயந்திரங்களை சிறை பிடித்தனர்.ரமேஷ் குடியிருப்பு சங்க நிர்வாகி 10 ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் தார் சாலை பெற்று உள்ளோம். இதன் அடுத்த பகுதியில் இதே காரணம் கூறி ரோட்டை பாழாக்கி விட்டனர். வடக்கு போலிசார் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பின் லாரிகளை விடுவித்தனர்.ஊராட்சி நிர்வாகத்திடம் பராமரிக்க கேட்டால் எங்கள் பொறுப்பில்லை என்கின்றனர். ரியல் எஸ்டேட் இடைத்தரகர்களின் பேராசைக்கு புதிய ரோடு சிதிலமடைந்து விட்டது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  

May 27, 2024

பிரண்டைகுளம் கண்மாய் நீர்த்தேக்க பகுதியில் ஆகாயதாமரை ஆக்கிரமிப்பு

இராஜபாளையம் முடங்கியாறு ரோட்டில் தாலுகா அலுவலகம் அருகே பிரண்டைகுளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் தற்போதைய மழையால் நீர்வரத்து காணப்பட்டு நிரம்பும் நிலையை எட்டி உள்ளது. ஆனால் நீரின் முழு பரப்பளவிலும் தெரியாத அளவிற்கு ஆகாயத்தாமரைச் செடிகள் வளர்ந்து போர்வை போல் மூடியுள்ளது.இதனால் நீரில் வாழும் மீன் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் தடுத்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுடன் நீரின் தரம் மாற்றமடைந்து பாதிப்பதாக தெரிவிக்கின்றனர்.தற்போது நெல் பயிரிட்டு, கோடையில் தண்ணீர் வரத்து உள்ளதால் மகிழ்ச்சியில் உள்ளோம். இருப்பினும் அடர்ந்து வளர்ந்துள்ள ஆகாய தாமரை நீரை வேகமாக ஆவி ஆக்குவதுடன் துர்நாற்றம் ஏற்படும் விதமாக மாற்றி விடுகிறது. இதில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள் நீரில் மூழ்கும் போது அழுகி துர்நாற்றம் வீசுகிறது. நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்காண்மாயில் தாமரைச் செடிகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

May 09, 2024

குடிநீருக்கு மழையை எதிர்பார்க்கும் இராஜபாளையம் நகராட்சி

 இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பெரிய அளவில் மழை பெய்யாததால் நீர் மட்டம் 12 அடியாக குறைந்து விட்டது. ஏற்கனவே வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளை நடைபெறுவதுடன், தாமிர பரணி கூட்டு குடிநீர் திட்ட சப்ளையை வைத்து சமாளித்து வருகின்றனர்.இது குறித்து அதிகாரிகள் தரப்பில், தாமிரபரணி குடிநீர் சப்ளை இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கான பணிகள் நடந்து வருகிறது. தற்போது 12 அடி இருப்பு உள்ளது. மலையில் ஒருமுறை பெரியமழை பெய்தாலும் சப்ளைக்கான தண்ணீர் வரத்து தேவையான அளவு கிடைத்து விடும், மீதி தேவைக்கு கூட்டுக் குடிநீரை வைத்து சமாளிக்க முடியும். கோடை மழையை இராஜபாளையம் நகராட்சியும், மக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Apr 02, 2024

தெரு நாய்கள் தொல்லை

தெருக்களில் பெருகும் நாய்களை தடுக்க ,குறிப்பிட்ட இடைவெளிகளில் ஊசி போட்டு, கொல்லும் வழக்கம் இருந்து, நாய்கள் கட்டுபடுத்தப்பட்டன. விலங்கு நல ஆர்வலர்கள் நீதிமன்றத்தின் மூலம் நாய்களை கொல்லுவதற்கு தடை பெற்றுவிட்டனர். இதனால் தெரு நாய்களை கொல்லாமல் அவற்றை பிடித்து கருத்தடை செய்து விட்டு செல்லும் நடைமுறை வந்தது. ஆனால் நீதிமன்ற தடையை காரணம் காட்டி, மொத்தத்தில் நாய்கள் பெருக்கத்தை தடை செய்யும், எந்த பணியையும் உள்ளாட்சி நிர்வாகம் செய்யவில்லை.கடந்த 6 ஆண்டுகளில் இராஜபாளையம் தாலுகா முழுவதும் பல்வேறு பகுதகளில் பராமரிப்பற்ற தெருநாய்கள்  பெருகி, நோய் தொற்று பாதிப்பு ,விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. காலையில் நடைபயிற்சி செல்வோர், பள்ளி மாணவர்கள், புதிய ஆட்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நன்மை கருதி இப்பிரச்சனையில் கவனம் செலுத்த வேண்டும் என   மக்கள் எதிர்பார்த்துள்ளனர். 

Mar 04, 2024

அயன்கொல்லங்கொண்டான் பெரிய கண்மாய்,பழுதான ஷட்டர்களால் வீணாக வெளியேறும் நீர்

.அயன்கொல்லங்கொண்டான் பெரிய கண்மாய்,இராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலை அருகே 150 ஏக்கரில் அமைந்துள்ளது. அயன்கொல்லங்கொண்டான் பெரிய கண்மாய், அய்யனார்கோவில் ஆறு, சேத்தூர் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் ஆற்று நீரை பிரதானமாக கொண்டு மாவட்டத்தில் இரண்டாவது பெரிய கண்மாயாக இருந்து வருகிறது. நீர் நிரம்பியதும், ஐமீன் கொல்லங்கொண்டான், நக்கனேரி, சிரம்பராபுரம் வரை அடுத்தடுத்த கண்மாய்களுக்கும் நீர் தேங்குவதன் மூலம் 300 ஏக்கர் நேரடியாகவும் , ஆயிரகணக்கான ஏக்கர் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகின்றன. இதுதவிர பல்வேறு கிராமங்களுக்கும் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் கண்மாயின் பிரதான ஷட்டர்கள் சேதம் அடைந்துபல ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்காததால் தண்ணீர் வீணாகிறது. நிரந்தர தீர்வாக தண்ணீர் வற்றும் காலங்களில் இருந்தே ஷட்டர்களை தரமாக சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் .

Jan 29, 2024

அதிவேக ரயிலுக்கு இணைப்பு ரயில் கோரிக்கை

மதுரை, சென்னை செல்லும், அதிவேக விரைவு ரயில்களுக்கு நம் நகரிலிருந்து இணைப்பு ரயில் சேவை இருந்தால் முதியோர், குழந்தைகள், நோயாளிகள், தொழில், கல்வி உள்ளிட்ட பயணர்களுக்கு மிகவும் சௌகர்யமாக இருக்கும் என மக்கள் கூறுகின்றனர். இந்த ரயில் சேவை தென்காசியில் இருந்து நம் நகர் வழியே செல்வதற்கு நீண்ட காலமாக கோரிக்கை இருந்துவருகிறது. இக்கோரிக்கை என்ற நிறைவேறும் இக்கோரிக்கை என்று நிறைவேறும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Jan 26, 2024

இராஜபாளையத்தில் மா மரங்களை குத்தகைக்கு எடுக்க ஆட்கள் இல்லை

மேற்கு தொடர்ச்சி மலை தொடரை ஒட்டிய இராஜபாளையம் சுற்று வட்டார பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா, பருவநிலை மாற்றம் காரணமாக ,விளைச்சல் அதிகரித்து பருவம் தவறிய மழையினால் மாங்காய்களில் வங்கு பிரச்சனை காரணமாக விலையின்றி மரங்களிலேயே காய்கள் பறிக்காமல் விடும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் மா, குத்தகை விவசாயிகள் இடையே  கேள்வி இல்லாததால் ஒரு வருடத்திற்கு அடிக்க வேண்டிய தொடர் மருந்து பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மா மரங்களில் பூ பூப்பது குறைந்துள்ளது. இது குறித்து விவசாயி தினேஷ் சங்கர் பராமரிப்பு குறைவு தகுந்த விலை, தொடர்சந்தை தேவை காரணமாக மா விவசாயத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குத்தகை எடுத்த விவசாயிகள் கட்டுபாடியாகாத நிலையை கூறி தற்போது கேட்பாரற்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் அறிவித்தபடி இப்பகுதியில் மாம்பழ கூழ் தயாரிப்பு தொழிற்சாலை ஏற்படுத்தியிருந்தால் நஷ்டத்தை தவிர்த்திருக்கலாம் என்றார்.

1 2 3 4 5 6

AD's



More News