இராஜபாளையம் நகரின் கடைசி பகுதியில் இருக்கும் கண்மாய்
இராஜபாளையம் புது பஸ்டாண்ட் எதிரே உள்ள பெரியாதிகுளம் கண்மாய், இராஜபாளையம் நகராட்சி எல்லை பகுதிக்குள் இருந்தும், இதன் நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. 20 ஆண்டுகள் முன்பு வரை கண்மாய் மூலம் தொடர்ச்சியாக இரு போக விளைச்சல் கண்ட விவசாய நிலங்களில், தற்போது பாதிக்கு மேல் தரிசாக மாறிவிட்டது. இதற்கு முக்கிய காரணமே நகரில் இருந்து வரும் கழிவு நீர் கலக்கமே, அம்பலபுளிபஜார், சஞ்சீவி மலை அடிவாரம் உள்ளிட்ட பகுதி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வடிகால் மூலம் இப்பகுதியை வந்தடைகிறது. சேர்ந்துள்ள கழிவுகள் வெளியேற வழி இல்லாததுடன், பல ஆண்டுகளாக தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளாததால், மண்மேவி மேடாகி விட்டது. இத்துடன் ஆகாய தாமரை வேறு ஆக்கிரமிக்க காண்மாய் நீர் மாசடைந்து காணப்படுகிறது.கண்மாயை துார்வாரி 50 ஆண்டுகளுக்கும் மேலானதால் நீர்பிடிப்பு பகுதி மேடாகிவிட்டது. ஏற்கனவே சேர்ந்துவரும் திடக்கழிவுகள் தொடர்ந்து தங்கி உள்ளதால், மழை காலங்களில் வந்து சேரும் தண்ணீர் கலிங்கல் வழியாக வெளியேறி விடுகிறது. கண்மாயை தூர் வாராவிட்டால் மீதம் உள்ள விவசாயிகளும் சாகுபடியை கைவிடும் நிலை ஏற்படும். ஆண்டாண்டு காலமாக சேர்ந்து வரும் சாக்கடை, சாயம், மனிதகழிவு, மருத்துவ கழிவு, ஆலை கழிவுகள், ரசாயன கழிவுகளை விவசாயத்திற்கு பாய்ச்ச வேண்டி உள்ளது. மடைகள் வழியாக தொடர்ந்து பாயும் இந்த கழிவு நீர், விவசாய மண்ணையும் சகதி ஆக்கிவிட்டது. சுகாதாரக்கேடு மிகுந்த இந்த நீரால்,விளை நிலங்கள் சதுப்பு நில காடுகள் போன்று மாறிவிட்டது. அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.இராஜபாளையம் நகரின் கடைசி பகுதியில் இருக்கும் இக்கண்மாய், சம்பந்தமே இல்லாமல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ளது. எந்த ஒரு அவசர காலத்திற்கும், அடிப்படை பிரச்சனைக்கும் அருகில் இருந்து தீர்வு காண முடியாத சூழல் அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள்தான் பாதிக்கின்றனர்.கண்மாய் அருகிலுள்ள விவசாயிகள் நீர் தேவையை சுலபமாக பெற்று வருவர். இதற்கு மாற்றாக எப்போதும் கழிவுநீர் சூழ்ந்து ஆகாயதாமரை, சீமைகருவேல மரங்கள், படர்ந்து நிற்பதால் மிகுந்த கவலையில் உள்ளோம். மீன் பாசி உள்ளிட்ட கண்மாய் வருவாய்க்கான எந்த வாய்ப்பும் இங்கு இல்லை. மடை அருகிலும், புதர் சூழ்ந்து பராமரிப்பற்ற நிலையில் உள்ளதால் வேதனையாக உள்ளது.ஸ்ரீவில்லிபுத்தூர் இராமமூர்த்தி பி.டி.ஒ. அவர்கள், விவசாயிகளின் கோரிக்கையை அரசுக்கு தெரியப்படுத்தி குடிமராமத்து பணிக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
0
Leave a Reply