நிழலின் அருமை வெயிலில் தெரியும். ஒன்றின் அருமை இன்னொரு சந்தர்ப்பத்தில் தெரியும். இளமையிற் கல்வி சிலை மேல் எழுத்து. இளம் வயதுக் கல்வி நிலைத்திருக்கும்.
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.மனச்சாட்சி உறுத்தும். சாண் ஏற முழம் சறுக்கும்.உயர்ச்சியை மிஞ்சிய தளர்ச்சி.
போதுமென்ற மனமே, பொன் செய்யும் மருந்து.மனநிறைவே ஒருவனுக்குச் சிறந்த செல்வமாகும். தொட்டில் பழக்கம், சுடுகாடு மட்டும்.இளமையில் பழகிய பழக்கம், வயதானாலும் வரும்.
. சிறு துரும்பும் பல் குத்த உதவும். எதையும் குறைவாக மதிப்பிடக் கூடாது . தன் வினை தன்னைச் சுடும். பிறருக்குச் செய்யும் தீங்கு தனக்கே தீங்காக முடியும்.
உப்பிட்டவரை உள்ளளவும் நினை - நன்றி மறவேல் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? - தகுதிக்கு மேல் எதையும் பெற முடியாது.
இரக்கப் போனாலும் சிறக்கப்போ,வறுமையிற் செம்மை . ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம். கோபம் சிந்தனைக்கு இடையூறு.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு---ஒற்றுமையே பலம். அன்பான சிநேகிதனை ஆபத்தில் அறிய---உத்தம நட்பு
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? - இளமையிற் செய் கடவுளை நம்பினோர் கைவிடப்படார் - நம்பிக்கை காக்கும்.
உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும் - உலோபங் கூடாது. எடுக்கிறது பிச்சை ,ஏறுவது பல்லாக்கு - வீண் பெருமை
இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை---திருப்திப்படாத மனம். இட்டுக் கெட்டார் எங்கும் இல்லை----தருமஞ் செய்.