25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பழமொழி.

Mar 20, 2024

குறைக்கிற நாய் கடிக்காது

சொல்லப்படும் பொருள்:தெருவில் போகும் போது நாய் குரைத்து கொண்டே இருந்தால் அது நம்மை கடிக்காது. வெறும் வாய் பேச்சில் வீரர்கள், பெரிதாக ஏதும் செய்ய மாட்டார்கள்.உண்மையான விளக்கம்:குழைக்கிற நாய் கடிக்காது. நம்மிடம் பாசமாய் குழைந்து காலை நக்கும் நாய் நம்மை கடிக்காது. நம் மீது பாசம் உள்ளவர்கள் நமக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் என்பது தான் சரியான அர்த்தம்.

Mar 13, 2024

ஆமை  புகுந்த வீடு  விளங்காது

ஆமை   புகுந்த வீடு  விளங்காது  பொருள்:வீட்டுக்குள் ஆமை புகுந்தால் வீட்டில் நல்லது நடக்காது.கல்லாமை, இல்லாமை, முயலாமை, அறியாமை, பொறாமை முதலியவை வீட்டில் புகுந்தால் நல்லது நடக்காது என்பதற்காக சொன்னார்கள்.

Mar 06, 2024

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்

யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும்.சொல்லப்படும் பொருள்:நல்லவனுக்கு ஒரு காலம் வந்தால், தீயவனுக்கு ஒரு காலம் வரும். வலியவனுக்கு ஒரு காலம் வந்தால், எளியவனுக்கு ஒரு காலம் வரும் என்று சொல்வார்கள். உண்மையான விளக்கம்:'ஆ நெய்'- பசுவின் நெய் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் சத்து சேர்ந்து பருமனாக மாறமுடியும். அதே போல 'பூ நெய்' - பூவிலுள்ள தேனை சாப்பிட்டு வந்தால் உடலின் எடை குறையும்.

Feb 28, 2024

கோல் ஆட குரங்கு ஆடும்

கோல் ஆட குரங்கு ஆடும்சொல்லப்படும் பொருள்:குரங்காட்டி ஆடு என்று சொன்னால் குரங்கு ஆடாது. கோலை எடுத்து மிரட்டினால் தான் ஆடும்.உண்மையான விளக்கம்என்னதான் சிறு பிள்ளைகளுக்கு நல்லொழுக்கங்களை சொல்லி கொடுத்தாலும், கண்டித்து சொன்னாலொழிய மனதில் பதியாது.

Feb 21, 2024

பெண் புத்தி பின் புத்தி.

பெண் புத்தி பின் புத்தி.சொல்லப்படும் பொருள்:பெண்கள் எந்த ஒரு செயலையும் முன் யோசனை இல்லாமல் செய்து விடுவார்கள். அதற்கு பின் வருத்தப்படுவார்கள்.உண்மையான விளக்கம்:உங்கள் எந்த ஒரு முடிவாயினும், செயலாயினும் பின் விளைவுகளை யோசித்து அதற்கு ஏற்றார் போல முடிவு எடுப்பார்கள் என்பதே சரியான பொருள்.நாம் அதையே தலைகீழாக புரிந்து கொண்டு சொல்கிறோம்.

Feb 14, 2024

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல….சொல்லப்படும் பொருள்:தன் தகுதிக்கு மீறிய செயலை ஒருவர் செய்யும் போது இப்படி சொல்வார்கள்.உண்மையான விளக்கம்:முயலான் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல என்பதே சரியான பொருள்.கொம்பு தென் மலை உச்சியில் தான் இருக்கும். முயற்சி செய்யாமல், சோம்பி இருப்பவன் அதை அடைய முடியாது என்பதற்க்காக சொல்லப்பட்டது..

Feb 07, 2024

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்க கூடாது.

சொல்லப்படும் பொருள்:கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னத்தில் கை வைத்து கொண்டு உட்கார கூடாது.உண்மையான விளக்கம்:கப்பல் விடும் அளவிற்கு செல்வம் இருந்து, பின் கப்பலே கவிழ்ந்து நட்டமானாலும், கன்னமிடுதல் - திருட்டு (கன்னத்தில் கை ) கூடாது.

Jan 31, 2024

தை பிறந்தால் வழி பிறக்கும்.

தை பிறந்தால் வழி பிறக்கும்.சொல்லப்படும் பொருள்: தை மாதம் பிறந்தால் நல்ல வழி அல்லது நல்ல விஷயம் நடக்கும் .உண்மையான விளக்கம்:தை மாதத்தில் அறுவடை காலத்தில், விவசாயிகளின் கையில் பணவரவு இருக்கும். அதை வைத்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம்.இன்னொரு பொருள், வயலில் முளைத்து இருக்கும் நெல் மணிகள் வரப்பை அடைத்து கொண்டு வழியில்லாமல் வளர்ந்து நிற்கும். தை மாதம் பிறந்தவுடன் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, வரப்பில் நடக்க வழி கிடைக்கும்.  

Jan 24, 2024

ஏரி உடைவதற்கு முன்னால் அணை போட வேண்டும்

ஏரி உடைவதற்கு முன்னால் அணை போட வேண்டும் விளக்கம்: ஆடம்பர செலவுகளை அதிகமாய் செய்து குடும்பம் நடுத்தெருவிற்கு வருவதற்கு முன்பே செலவுகளை குறைத்து சிக்கனத்தை பெருக்கி வளமாக வாழ வேண்டும் எனும் எச்சரிக்கையை இப்பழமொழி செய்கிறது .வெள்ளம் வரும் முன்னே அணை போட வேண்டும் வருமுன் காப்பது நல்லது ,பொருள்: அணை போட வேண்டும்- காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

Jan 17, 2024

ஏழை சொல் அம்பலம் ஏறாது

ஏழை சொல் அம்பலம் ஏறாதுவிளக்கம்: ஏழையின் பக்கம் நீதி இருந்தாலும் அவன் பொருளில்லாதவன் என்னும் காரணத்தால் அவன் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள் என்பதை இப்ப பழமொழி விளக்குகிறது.பொருள்: அம்பலம் ஏறாது - செல்லுபடியாகாது.

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News