சொல்லப்படும் பொருள்:தை மாதம் பிறந்தால் நல்ல வழி அல்லது நல்ல விஷயம் நடக்கும் .உண்மையான விளக்கம்:தை மாதத்தில் அறுவடை காலத்தில், விவசாயிகளின் கையில் பணவரவு இருக்கும். அதை வைத்து கொண்டு அவர்களுக்கு வேண்டியதை செய்யலாம்.இன்னொரு பொருள், வயலில் முளைத்து இருக்கும் நெல் மணிகள் வரப்பை அடைத்து கொண்டு வழியில்லாமல் வளர்ந்து நிற்கும். தை மாதம் பிறந்தவுடன் கதிர்கள் அறுவடை செய்யப்பட்டு, வரப்பில் நடக்க வழி கிடைக்கும்.
மண் பானையில் இருப்பதை மாணிக்கப் பானையில் போட்டு மூடணும்.மாணிக்கப் பானை என்பது நமது வயிறு. அதாவது பாத்திரத்தில் இருக்கும் உணவை நமது வயிறு என்னும் பாத்திரத்தில் போட்டு மூடுவதை இவ்வாறாகக் கூறுகிறார்கள்.
அள்ளாம குறையாது, சொல்லாம வராது.எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தாமல் அது குறையாது. குறைந்திருக்கிறது என்றால், கண்டிப்பாக நாம் அதனைப் பயன்படுத்தியிருக்கிறோம் என்றுதான் அர்த்தம். அதுபோல, ஒரு செய்தி பரவுகிறது என்றால், அதை யாராவது சொல்லியிருந்தால்தானே வெளிவரும்.
பக்கத்து இலைக்கேன் பாயாசம் கேக்கற?அடுத்தவர்களுக்காகப் பரிந்து பேசி, பிறரிடம் பிரச்சினைக்குச் செல்பவர்களை இந்தப் பழமொழி வைத்துத் திட்டுவோம். ஒரு விருந்தில் அமர்ந்து சாப்பிடுகிறோம் என்றால், நமக்குப் பாயாசம் இன்னும் வரவில்லையென்று பரிமாறுபவரிடம் கேட்கலாம். ஆனால், அருகில் அமர்ந்து உண்பவருக்காகக் கேட்பது என்பது நம் வேலை இல்லை. அவருக்கு வாய் இருக்கிறது, அவர் கேட்டுக்கொள்வார். அதுபோலதான் வாழ்க்கையும்.
தனக்கே தகராறாம், தம்பிக்குத் தயிர் சோறாம்."தனக்கு மிஞ்சியதுதான் தானமும் தர்மமும்" என்பார்கள். தன்னுடைய குடும்பத்தையே கவனிக்காமல் மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களை இந்தப் பழமொழி குறிப்பிடுகிறது. அதாவது, உதவி செய்யக்கூட நாம் ஒரு நிலையில் இருக்க வேண்டும். மிகவும் ஏழ்மையானவர்கள் பிறருக்கு உதவி செய்ய என்னும்போது இப்படித்தான் சமுதாயம் அவர்களைக் கேலி செய்கிறது.
1.படை கொண்ட அரசருக்கும் இறுதியில் பிடி சாம்பல் தான் மிஞ்சும். 2. சிவன் சொத்து குல நாசம். 3. மக நட்சத்திர பெண் ஜெகத்தை ஆள்வார். 4 ஆடையின்றி குளிப்பது அறம் ஆகாது. 5. சஷ்டியில் விரதம் இருந்தால், அகப்பையில் பிள்ளை வரும். 6.ஆனியில் அடி கோளகூடாது. ஆடியில் குடி போக கூடாது. 7. வஸ்திரம் இன்றி குளிப்பதோ தூங்குவதோ கூடாது. 8 புரட்டாசியில் மண்ணுரிய மழை பெய்யும். பொன்னுரிய வெயில்' காயும். 9.மார்கழியில் மண்ணும் குளிரும், தையில் தரையும் குளிரும். 10.பூரம் மாப்பிள்ளை யோகத்தை தரும்.
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டதைப் போல.சொல்லப்படும் பொருள்:தன் தகுதிக்கு மீறிய செயலை ஒருவர் செய்யும் போது இப்படி சொல்வார்கள்.உண்மையான விளக்கம்:முயலான் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போல என்பதே சரியான பொருள்.கொம்பு தென் மலை உச்சியில் தான் இருக்கும். முயற்சி செய்யாமல், சோம்பி இருப்பவன் அதை அடைய முடியாது என்பதற்க்காக சொல்லப்பட்டது.
‘‘ ஆழ உழுவதை விட அகல உழுவதே மேல்’’என்று பழமொழியாகக் கூறுகின்றனர். நிலத்தில் அகலமாக உழுதால் பெய்யும்மழைநீர்நிலத்தில்தேங்கும், மண்ணரிப்பும், நிலத்தில் மேல் உள்ள சத்துக்களும் அடித்துச் செல்லப்படமாட்டாது என்ற உழவின்தொழில்நுட்பத்தைஇப்பழமொழியில்எடுத்தரைக்கின்றனர். தற்போதுவேளாண்விஞ்ஞானிகள்சரிவுக்குக்குறுக்கேஉழவேண்டும்என்றுகூறுவது அகல உழுவதையேஎன்பதுகுறிப்பிடத்தக்கதாகும்.
மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம். பொருள்: ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் என்று பொருள் வருகிறது,உண்மையான பொருள்:மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்,மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால் பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.
சங்கரா சங்கர என்றால் சாதம் வாயில் வந்து விழுமா?பொருள்: ஒரு செயலுக்குரிய முயற்சியில்லாமல் வெறும் வாய்ப்பேச்சு பயன் தராது.