25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பழமொழி.

Aug 23, 2023

இளைத்தவனுக்கு எள்ளும் கொழுத்தவனுக்கு கொள்ளு

 இதற்கு அர்த்தம்-உடல் மெலிந்து வலிமை இல்லாதவனுக்கு என்னை குடுத்தால் வலிமை பெறுவான் .உடல் எடை அதிகமாக எடையை குறைக்க வேண்டும் என்பவனுக்கு  கொள்ளு குடுத்தால் உடல் எடை குறையும் இதுதான் இந்த பழமொழியின் அர்த்தம்

Aug 16, 2023

.ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.

.ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளை ஒக்கும்.பொருள்: பலமுடையவர்கள் தங்கள் பலத்தால் ஒரு ஏழைக்கு தீங்குஇழைக்கும் போது, அவரால் எதிர்க்க முடியாமல் ,இயலாமையால் மனம் நோக அழ நேரிடும். அவ்வாறான மனம் நொந்து அழுத கண்ணீர், தீங்கிழைத்தவர்  எப்படிப்பட்டவர் ஆயினும், அவரை அழித்து விடும்.

Aug 09, 2023

ஆய்ந்து பாராதான் காரியந்தான் சாந்துயரந் தரும்.

ஆய்ந்து பாராதான் காரியந்தான் சாந்துயரந் தரும்.     பொருள்: ஒரு செயலை செய்யுமுன் அதை நன்கு ஆராய்ந்த பின்பே தொடங்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் துவங்கினால் அது   துயரத்தை  கொடுத்துவிடும். 

Aug 02, 2023

நல்ல மாட்டிற்கு ஒரு சூடு

 பொருள்: நல்ல மாட்டிற்கு ஒரு சுவடு என்பதே உண்மையான பழமொழி. இதில் சுவடு என்ற வார்த்தை மருவி சூடு ஆகி விட்டது. சுவடு என்றால் கால் தடம் என்று பொருள். அந்த காலத்தில் சந்தையில் மாடு வாங்கும்பொழுது எந்த மாட்டின் கால் தடம் நன்றாக(அழுத்தமாக) இருக்கிறதோ அதுவே பலம் பொருந்திய மாடு என்பதை அறிந்து அதை வாங்குவது வழக்கம்.

Jul 26, 2023

ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க

பொருள்: தாசில் என்ற வார்த்தைக்கு பொருள் அதிகாரம். எந்த ஒரு விடயத்தின் மீதும் அதிகாரம் செலுத்த ஆசைப்படுவதற்கு முன்பாக அதற்கான உழைப்பை போடவேண்டும். அதிஷ்டத்தை நம்பி இருந்தால் எதுவும் ஆகாது என்பதே இதன் பொருள்.

Jul 19, 2023

நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.

 நண்டு கொழுத்தால் வலையில் தங்காது.பொருள்:- பொதுவாக நண்டிற்கு தேவையான உணவு கிடைத்துவிட்டது என்றால் அவற்றை அது உண்டு நல்ல பலம் பெற்ற பிறகு இணைசேர்க்கைக்காக எதிர்பாலினத்தை தேடி வெளியில் வரும். அப்போது தான் பெரும்பாலும் அவை மற்ற பெரிய விலங்குகளிடம் சிக்கி மாண்டு போகும். இந்த பழமொழியை பெரும்பாலும் வீண் வம்பில் ஈடுபடுபவர்களை நோக்கி கூறும், ஒன்றாக தற்காலத்தில் வழக்கில் உள்ளது.

Jul 12, 2023

கடுகு சிறுத்தாலும் காரம்போகுமா?

கடுகு சிறுத்தாலும் காரம்போகுமா?பொருள்:கடுகு என்னதான் அளவில் சிறியதாக இருந்தாலும் அதன் வீரியம்-காரம்-என்பது போகாது. அதே போலவே யாரையும், எதையும் சிறியவை எனஎண்ணி ஒதுக்கிவிடாமல் இருந்தால் , பல நேரங்களில் மிகுந்த பலன் கிடைக்கும்.

Jul 05, 2023

பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.

பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.நாம் உண்ணக்கூடிய உணவு பால் என்றாலும் அதை குறிப்பிட்ட நேரத்தில்எடுத்துக் கொள்வதால் தான் நன்மைகள் ஏற்படும் காலம் தவறி உணவுஉண்பதால் உடலில் பல உபாதைகள் ஏற்படும். என்பதைத் தான் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்.

Jun 28, 2023

மருந்தும்விருந்தும் மூன்று வேளை.

மருந்தும்விருந்தும் மூன்று வேளை.தினசரி மூன்று வேளைக்கு மேல் மருந்தாய் இருந் தாலும் எடுக்கக்கூடாது. விருந்தாய் இருந்தாலும் உண்ணக்கூடாது என்பது இதன் பொருள்.விருந்துதானே என்று மூன்று வேளைகளுக்கு மேல் வெளுத்துக்கட்டினால் அதுவே வினையாகிவிடும். அஜீரணம் உருவாகும். அதுபோல்மருந்தை தின சரி மூன்று வேளை எனப் பிரித்து உண்டால்தான் நோய்எதிப்புச்சக்தி உடலில் பெருகி நோய் முழுமையாகக் கட்டுப்படும். ஒரேநேரத்தில் மொத்தமாக உண்டாலும் பலன் இல்லை. அதற்கு குறைவாய்பிரித்துப் பிரிந்து உண்டாலும் பலன் இல்லை. இதை விளக்கவே மருந்தும்,விருந்தும்மூன்று வேளை என்றார்கள்.

Jun 21, 2023

புண்பட்ட மனதை புகை விட்டு ஆத்து.

புண்பட்ட மனதை புகை விட்டுஆத்து.ஒருவரை நல்வழிப்படுத்துமே தவிர, தீய வழியை ஒருபோதும் காட்டாது.மனம் புண்பட்டால், புகை பிடிக்க வேண்டும் என்பது போல அனைவரும் அர்த்தம் புரிந்து கொள்கிறார்கள். உண்மையான அர்த்தம் அதுவல்ல."புண்பட்ட மனதைபுகவிட்டுஆற்று"என்பதுதான்உண்மையானபழமொழி.மனம்புண்பட்டிருக்கும் நேரம், துன்பத்தை எண்ணியெண்ணிவருந்திக் கொண்டிருக்காமல், மனதைத் திசை திருப்பித் துன்பத்தை போக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான் அதன் உண்மையான விளக்கம்.

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News