அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு?அடுப்பூதும் பெண்ணுக்கு படி பூ எதற்கு?பொருள்: ஒரு படி பூவை தலையில் வைத்துக்கொண்டு அடுப்பை ஊதினால், நீ ஊதுற அந்த நேரத்தில் அடுப்பின் அனலுக்கு தலையில் வைத்த ஒரு படி பூவும் கருகி போகும். ஆகவே சமையல் முடித்து குளித்து பூவை சூடுங்கள் என்று அறிவுரை சொல்லுவார்கள்.
ஆலை இல்லா ஊருக்கு, இலுப்பைப்பூ சர்க்கரை.பொருள்:இலுப்பைப்பூ இனிப்புச்சுவை உடையது.பழங் காலத்தில் சர்க்கரை எனும் இனிப்புப் பொருளை கண்டு பிடிக்காத காலங்களில் இதனையே இனிப்புக்காக உண்டனர். இப்போதும் பழங்குடிகள் இனிப்புக்காக இலுப்பைப்பூவை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. இலுப்பையின் பூமட்டும் அல்ல இதன் இலை, பட்டை, காய், பழம், வேர் என அனைத்துமே மருத்துவ குணம் உடையது.தாகத்தைத் தீர்க்கும் மலச் சிக்கலைப் போக்கும். மருத்துவ குணம் நிறைந்த இலுப்பைப்பூவில் குளுக்கோஸ் அதிகம் என்பதாலேயே இனிப்புச்சுவை உருவாகிறது.
இந்த பழமொழியானது ,தற்காலத்தில் உழைக்காமல் சாப்பிடுபவர்களை, கேலி செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதன் உண்மை பொருள் யாதெனில், ஐப்பசி பௌர்ணமியில் சிவன் கோவில்களில் பச்சரிசி சாதத்தால் சிவனுக்கு அபிஷேகம் நடக்கும். அதை காண்பவருக்கு சொர்க்கம் கிட்டும் என்பதே இதன் பொருள்.
,இன்றைய தலைமுறையினரிடத்தில் இந்த பழமொழி இவ்வாறு கூறுவதை நாம் கேட்டிருப்போம் ஆனால் அன்று வயதானவர்கள் இந்த பழமொழி அவ்வாறு கூற வில்லை. அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரி- யிலும் கூட கொடை கொடுப்பான். இது தான் சரியான பழமொழி .அதாவது மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர்கள், நேரம் காலம் பார்க்காமல் எந்த நேரத்திலும் மற்றவர்களுக்கு உதவும் வள்ளல்களை குறித்து, நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்த பழமொழி. காலப்போக்கில் இவ்வாறு மறுவி விட்டது.
"அஞ்சு பெற்றால் அரசனேயானாலும் ஆண்டி ஆவான்" என்பதும்அதாவது 5 குழந்தைகளை பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்பதல்ல அர்த்தம் இந்த ஐந்து குணங்கள் குடும்பத்தில் இருந்தால் 1) ஆடம்பரமாக வளரும் தாய்2) பொறுப்பில்லா ஊதாரி தந்தை3) ஒமுக்கமற்ற துர்குணமுடைய மனைவி4) ஏமாற்றவும் துரோகமும் செய்யும் சுற்றத்தினர்/ உடன்பிறந்தோர்5) சொல் பேச்சு கேளாத பிடிவாத குணமுடைய பிள்ளைகள்(ஆணாணாலும்/பெண்ணாணாலும்)என இவை ஐந்தும் பெற்றவன் அரசனே ஆனாலும் ,ஆண்டி/ போண்டி ஆவான் .. காலம் மனிதனை மற்றுமல்ல .பழமொழிகளையும் மாற்றிவிடுகிறது.
“நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு”நல்லவன் வருகிறான் .செம்பை எடுத்து உள்ளே வை. என்பதை வஞ்சப்புகழ்ச்சியணியாக மாற்றி கொங்கு தேசத்தில் சொல்கிறார்கள்.
“.வாழைப்பழத்தை கொண்டு போனவ வாசப்படியில வாயைக் கொண்டு போனவ நடு ஊட்டுல”பொருள் இருப்பதால் மட்டும் மரியாதை கொடுத்து வீட்டிற்குள் அனுமதித்து விடமாட்டார்கள். நன்றாக பேசத்தெரிய வேண்டும். பொருளே இல்லாமல் இருந்தாலும் கூட ,வெறும் பேச்சு இருந்தால் சமாளித்துக் கொள்ளலாமாம்.
"எறும்பு தின்னா கண்ணு நன்னா தெரியும்" என்று காபி.,டீ., மோர்., இதில் எறும்பு இருந்து, அதை நாம் பருகினால் (தின்னால்) நமக்கு கண் தெரியாது .பழமொழிக்கு அர்த்தம் என்னவென்றால் கண்ணே கிடையாத, நுகர்வு சக்தி மூலம் ,தன் வாழ்க்கைக்கு தேவையான உணவை தேடும் எறும்புக்கு, நாம் போடும் அரிசிமாவினால் ஆன கோலத்தை, அந்த எறும்பு தின்றால் அதனால் ஆண்டவன் சந்தோஷமாகி , நமக்கு கண்பார்வை கோளாறுகளை வராதவாறு காப்பானாம் .(அதாவது எறும்புகள் கண் இல்லாத எங்களுக்கு ,உணவளித்த அந்த ஆத்மாவுக்கு ,இறைவனே நல்ல கண்ணை அருளி காப்பாற்றும், என வேண்டுமாம். அதனால் இறைவன் சந்தோஷமாவானாம்)எனவே தான் பெரியோர்கள் எறும்பு தின்னால் (நாம் போடும் அரிசிமா கோலத்தின் அரிசிமாவை) நமக்கு கண் நன்கு தெரியும் என்று கூறினர்.பெண்களே நீங்கள் வீட்டின் முகப்பில், வீட்டில் சாமி சன்னதி முன், இனியாவது அரிசி மா கோலமிடுங்கள். ஸ்டிக்கரை/ பெயிண்டை பயன்படுத்தாதீர்கள்.
“ஆனைக்கு ஒரு காலம் வந்தால் ,பூனைக்கு ஒரு காலம் வரும்”ஆ நெய் ( பசுவின் நெய்) சாப்பிட்டால் உடம்பு நன்றாகத் தேறி வரும்.இதற்கு இப்படி ஒரு காலம். என்றால், பூ நெய் (தேன்) சாப்பிட்டால் உடம்பு இளைத்து சரியான படி வைக்கும். இதற்கு ஒரு காலம்.
“பாத்திரம் அறிந்து பிச்சையிடு" "கோத்திரம் அறிந்து பெண்ணை கொடு”புலவர்கள் மன்னரிடம் பாடிப் பரிசை வாங்கிச் செல்வர். புலவர்கள் திறனை அறிந்து பிச்சையிடுங்கள் என்பது அர்த்தம் . கோ என்றல் அரசன். அரசனின் திறமையை அறிந்து பெண்ணை கொடு என்பது அர்த்தம்.