கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான் பொருள்: தனது திறமையின்மையை மறைக்க ,பிறவற்றை சிலர் குறை கூறுவர். இதை கூறுவதே இந்த பழமொழியின் பொருள்.
.தழைத்த மரத்திற்கு நிழல் உண்டுபொருள்: பக்குவம் பெற்ற ஒருவரால் எல்லோருக்கும் நன்மை ஏற்படும்சேர இருந்தால் செடியும் பகை பொருள்: எப்போதும் பிறருடன் அளவாக பழக வேண்டும். யாருடனும் அதிக நெருக்கத்துடன் இருந்தால் அங்கே பகை உண்டாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பொருள்: உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது.
செக்கை வளைய வரும் எருதுகள் போல பொருள்: செக்கு மாடுஒரே மாதிரி வளைந்து செல்கிறதோ,அதே போல எந்த ஒரு உத்வேகமும் இல்லாமல் ,ஒரே மாதிரியான செயல்களை செய்பவர்களை குறிப்பதே இந்த பழமொழி.
.இட்டு கெட்டாருமில்லை ஈயாமல் வாழ்ந்தாருமில்லைபொருள்: பிறருக்கு தான தர்மங்களை வழங்கி அழிந்தவருமில்லை, அவற்றை வழங்காமல் வாழ்ந்தவருமில்லை.
அடிநாக்கில் நஞ்சு நுனிநாக்கில் அமிர்தம் பொருள்: குணத்தால் தீயவர்களாக இருப்பவர்கள் வெளிப்புறத்தில் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொள்வதை உணர்த்துகிறது.
அப்பன் அருமை செத்தால் தெரியும்பொருள்: ஒரு குடும்பத்தில் தந்தை என்பவர் இறந்த பின்பு அக் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும். அது போல ஒரு விஷயத்தை நாம் இழக்கும் வரை அதன் அருமையை நாம் அறிவதில்லை.
.கடுகத்தனை நெருப்பானாலும் போரைக் கொளுத்திவிடும் பொருள்:: வைக்கோல் போன்றவற்றை ஒரு சேர கூட்டி வைத்தால் அவை‘வைக்கோல் போர்’ என்றும் போர் என்றும் அழைக்கப்படும். அதில் சிறு நெருப்பு பட்டுவிட்டாலும் காய்ந்து இருக்கும் போரானது எளிதில் தீ பற்றி முழுமையாக எறிந்துவிடும்.
.இலங்கையில் பிறந்தவனெல்லாம் ராவணனில்லைபொருள்: ஒரு விடயத்தை பற்றி நன்கு அறியாமல் ,அது இப்படி தான் என்று முன் கூட்டியே, ஒரு தீர்மானத்திற்கு வந்துவிடுவது தவறு.
"அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்" என்பதே சரி. ஏழை ஒருவன் பணக்காரன் ஆகும்போது, அவரிடம் யாரேனும் பண உதவிகேட்டு நள்ளிரவில் வந்தாலும் அவர்களுக்கு அவன் உதவி செய்வான்