25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


பழமொழி.

May 29, 2024

எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய்.

எரு கெட்டாருக்கும் எட்டே கடுக்காய், இளம்பிள்ளை தாய்க்கும் எட்டே கடுக்காய். பொருள்: இப்பழமொழி மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும். எரு கெட்டார் என்பது மலச்சிக்கல் கொண்டவர்களை குறிக்கிறது. கடுக்காய் மலச்சிக்கலுக்கு மிகவும் சிறந்த மலமிலக்கியாக பயன்படும். அதே போலவே பிள்ளை பெற்ற தாய்க்கும் பயன்படும்.

May 22, 2024

சருகைக் கண்டு தணலஞ்சுமா

சருகைக் கண்டு தணலஞ்சுமாபொருள்: உலர்ந்த இலையைச் சருகு என்பர். தணல் என்றால் தீ, உலர்ந்த இலைச் சருகை தீக்கணல் எளிதில் எரித்து விடும். எனவே சருகைக் கண்டுதணல் அஞ்சப்போவதில்லை. அதேபோலவே எளியவரைக்கண்டு வீரன் அஞ்சி ஓடமாட்டான் என்பதை விளக்கவே இப்பழமொழி கையாளப்படுகிறது.

May 15, 2024

ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல....

ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல பொருள்: வறட்டு பிடிவாதம் கொண்டவர்கள் தாங்கள் அறிந்ததே உண்மை. தாங்கள் செய்வதே சரி என எண்ணுவர். 

May 08, 2024

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது. பொருள்: பேறு பார்க்கும் மருத்துவ மகளிருக்கு(மருத்துவச்சி) கண்டிப்பாக கூலி கிடைத்தே தீரும். ஒருவேளை பிள்ளை இறந்தே பிறந்தாலும், பேரு பார்த்ததற்கான கூலி கிடைக்கும். 

May 01, 2024

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்

மாமியார் உடைத்தால் மண் குடம்; மருமகள் உடைத்தால் பொன் குடம்.பொருள்:ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால், வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால், அதை மாமியார் பெரிதுபடுத்திவிடுகிறார் எஎன்று பொருள் வருகிறது,உண்மையான பொருள்:மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம்,மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம் என்பது தான் உண்மையான பழமொழி. விவசாயி வீட்டில் மாமியாரும், மருமகளும் சேர்ந்து நிலத்தில் உழைத்தால், பொன்னும், பொருளும் சேரும் என்பது அர்த்தம்.

Apr 24, 2024

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு

ஆறிலும் சாவு; நூறிலும் சாவு.பொருள்:ஆறு வயதிலும் சாவு வரும்;நூறு வயதிலும் சாவு வரும்.உண்மையான பொருள்:மகாபாரதத்தில் கர்ணன், பஞ்ச பாண்டவர்கள்(ஐவர்) பக்கம் இருந்தாலும், கெளரவர்கள்(நூறு பேர்) பக்கம் நின்றாலும்,போரின் போது இறப்பு வரும். ஆதலால் துரியோதனன் மீதுள்ள நட்பின் காரணமாக கெளரவர்களிடமே இருக்கிறேன் என்று சொன்னது.

Apr 17, 2024

சட்டியில் இருந்தால் தான் , அகப்பையில் வரும்

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் பொருள்:சட்டியில் என்ன (சோறு) இருக்கிறதோ அது தான் நமக்கு கிடைக்கும்.உண்மையான பொருள்:சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்

Apr 10, 2024

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை. பொருள்:என்ன வேலைக்கு போவது என தெரியாமல் நிற்பவன் தான், போலிஸ் வேலைக்கு போவான்; வேறு வேலைக்கு போக வழி தெரியாதவன், வாத்தியார் வேலைக்கு போவான்.உண்மையான பொருள்:மற்றவருக்கு போக்கு கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை;வாக்கு கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பது சரியான பொருள்.

Apr 03, 2024

கழுதை கெட்டால் குட்டி சுவர்

கழுதை கெட்டால் குட்டி சுவர்/ கழுதைக்கு பரதேசம் குட்டிச்சுவர். சொல்லப்படும் பொருள்:கழுதை எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு குட்டி சுவத்திற்கு அருகே போய் நின்று கொண்டிருக்கும். அதுபோல ஒரு சிலர் அடிக்கடி ஒரே இடத்துக்கு போகும் போது இந்த பழமொழியை சொல்வார்கள். உண்மையான விளக்கம்:ஒருவர் எந்த முயற்சியும் செய்யாமல், சாதாரண விஷயம் கூட பரதேசம் போவது போல நினைத்து திருப்திப்பட்டு கொள்பவர்களுக்காக சொன்ன பழமொழி இது.

Mar 27, 2024

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

ஆற்றில் போட்டாலும் அளந்து போடுசொல்லப்படும் பொருள்:நாம்  தர்மம் செய்யும் போதோ, வேறு ஏதாவது செய்யும் போதோ அளவுடன் தான் கொடுக்க /  செய்ய  வேண்டும். உண்மையான விளக்கம்:அகத்தில் போட்டாலும் அளந்து போட வேண்டும் என்பது சரியான பொருள்.அகம் என்பது உடல். அதாவது என்ன சாப்பிட்டாலும் அளவுடன் தான் சாப்பிட வேண்டும். அப்போது தான் ஆரோக்கியமான  வாழ்வு  கிடைக்கும் என்பது,இதன் அர்த்தம்.

1 2 3 4 5 6 7 8 9 10

AD's



More News