.ஊதாரிக்கு பொன்னும் துரும்பு பொருள்: சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு, எவ்வளவு பெரிய செல்வமும் ,சிறு துரும்பாகவே தெரியும்.
உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது பொருள்: உறவினர்கள் வீட்டிற்கு செல்லாமல் இருந்தால் உறவு நீடிக்காது. கொடுத்த கடனை கேட்காமல் விட்டுவிட்டால் அதை திரும்ப பெற முடியாது.
கோழையான வீரன் ஆயுதத்தின் மீது குறை சொல்வான் பொருள்: தனது திறமையின்மையை மறைக்க பிறவற்றை சிலர் குறை கூறுவர். இதை கூறுவதே இந்த பழமொழியின் பொருள்.
.துணை போனாலும் பிணை போகாதே பொருள்: பிறருக்கு துணையாக இருப்பது நல்ல விடயம் என்றாலும் அதற்காக பிறரிடம் அவருக்காகப் பிணையாளியாக இருக்கக்கூடாது. உதரணமாக சொல்ல வேண்டும் என்றால்: யாரை நம்பியும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம் என்று சொல்லுவார்கள் அல்லவா அது போல.
யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே பொருள்: ஒரு விசயம் நடப்பதற்கு முன்பாகவே அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே நமக்கு தெரியும். உதாரணமாக தேர்தல் வருகிறது என்றால் உடனே சாலை போடுவது போல.
அடுக்கிற அருமை உடைக்கிற நாய்க்கு தெரியுமா ? NAIபொருள்: ஒன்றை கடினப்பட்டு உருவாக்குகின்ற அருமை, அதை துச்சமாக நினைப்பவர்களுக்கு தெரியாது.
உண்டவன் பாய் தேடுவான் உண்ணாதவன் இலை தேடுவான்.பொருள்: ஒருவனுக்கு தன் காரியம் வெற்றி பெற்று விட்டால் அதற்கு அடுத்தகட்ட காரியங்களை மேற்கொள்வான். அந்த காரியம் நடக்காத ஒருவன் அதற்காக தொடர்ந்து முயற்சிப்பான்.
ஊசியின் கண்ணிலே ஆகாயத்தை பார்த்தது போல பொருள்: வறட்டு பிடிவாதம் கொண்டவர்கள் தாங்கள் அறிந்ததே உண்மை, தாங்கள் செய்வதே சரி என எண்ணுவர்.
விளக்கம்-: நாம் துன்பப்படும் வேளையில் ஒருவர் நமக்கு உதவி செய்தார் என்றால் உதவியை பெற்று நாம் வாழ்வில் முன்னேறியவுடன் நமக்கு உதவி செய்தவரையே பகைவராய்க் கருதி அவருக்கு துன்பம் இழைக்கலாமா கூடவே கூடாது .அவ்வாறு செய்வது பாவம் என்பதை இப் பழமொழி விளக்குகிறது.
ஊதாரிக்கு பொன்னும் துரும்பு பொருள்: சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய செல்வமும் சிறு துரும்பாகவே தெரியும்.