25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


பழமொழி.

Dec 10, 2024

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்

ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும் என்பதே சரி ! பொருள் : முற்காலத்தில் ஆடி மாதத்தில் மழையுடன் சேர்ந்து சாரலும் வீசும்.. இதன் காரணமாக மனிதர்களின் உடலில் உள்ள சூடு தணிந்து அம்மை நோய் விலகும்.

Dec 03, 2024

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

 "நல்ல மாட்டுக்கு ஒரு சுவடு என்பதே சரி.  பொருள் : அந்த காலத்தில் சந்தையில் மாட்டை வாங்கும்போது மாட்டின் காலடி சுவடை வைத்து அதன் பலத்தைஅறிவதுண்டு. நடக்கும்போது அதன் காலடி சுவடு எந்த அளவிற்கு ஆழமாக உள்ளதே அந்த அளவிற்கு அந்த மாடு பலம் பொருந்தியதாக அறியப்படும்.

Nov 26, 2024

தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.

தன்வினை தன்னைச்சுடும், ஓட்டப்பம் வீட்டைச்சுடும்.பொருள்: ஒவ்வொருவருடையவினைகளும் அவரை நிச்சயம் பாதிக்கும், ஓடுமேல் உள்ள அப்பத்தால் வீடு பற்றி எறிவதுபோல.விளக்கம்: பட்டினத்தார் தன் செல்வச்செழிப்பான வாழ்க்கையை விட்டுத் துறவு பூண்டு தங்கள் எதிரிலேயே வீடுவீடாகப் பிச்சை எடுப்பது அவருடைய உறவினர்களுக்குப் பிடிக்காமல் அவரது சகோதரி மூலமாகஅவருக்கு நஞ்சுகலந்த அப்பம் ஒன்றை அனுப்பினர் கணபதி அருளால் இதனை அறிந்த பட்டினத்தார் அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணி, தன் சகோதரி வீட்டின் முன்நின்று அப்பத்தை வீட்டின் கூரையில் எறிந்துவிட்டுப் பாடிய பாடல்தான், இந்தப் பழமொழி. வீடு உடனே பற்றி எரிய அவர்கள் தம் தவறுணர்ந்து வருந்தியபோது, அவர் வேறொரு பாடல்பாட, நெருப்பு அணைந்தது.

Nov 19, 2024

.குடிப்பதோ கூழ் கொப்பளிப்பதோ பன்னீர்

.குடிப்பதோ கூழ் கொப்பளிப்பதோ பன்னீர் பொருள்: ஒரு சிலர் வறட்டு கௌரவத்திற்காக தாங்கள் செய்யும் சில செய்கைகளை குறிக்கிறது.

Nov 12, 2024

குறி வைக்கத் தப்பாது ராமசரம்

பழமொழி சரியானது: குறி வைக்கத் தப்பாது ராமசரம்பழமொழி தவறானது: குருவிக்குத் தக்கன ராமேஸ்வரம்விளக்கம்:அதென்ன குருவிக்கு தக்கன ராமேஸ்வரம், குருவிக்கும் ராமேஸ்வரத்துக்கும் என்ன சம்பந்தம், ஒரு சம்பந்தமும் இல்லை. குறி வைக்கத் தப்பாது ராமசரம் என்பதே உண்மையான பழமொழி, ஸ்ரீராமபிரானின் அம்பு (ராமசரம்) குறி வைத்துவிட்டால் தப்பாது இலக்கை அடையும் என்பதே இதன் அர்த்தம். இதுவே நாளடைவில் பேச்சுவழக்கில் குருவிக்கு தக்கன ராமேஸ்வரம் என்று கூறப்படுகிறது.நாமும் குறிக்கோளை நோக்கி, ஸ்ரீராமபிரானின் அம்பு போன்று தகுந்த முயற்சியுடன் கடினமாக உழைத்தால் இலக்கை அடையமுடியும் என்பதை இப்பழமொழி நமக்கு உணர்த்துகிறது.

Nov 05, 2024

.அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அரிவாள்

.அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் ஆயிரம் கதிர் அரிவாள் பொருள்: ஒரு விடயத்தை பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் ,அதை தெரிந்தவர் போல் காட்டிக் கொள்பவர்களை குறிக்கிறது.

Oct 29, 2024

சொல் அம்போவில் அம்போ?

மிதித்தாரை கடியாத பாம்புண்டோபொருள்: ஒரு செயலுக்கான எதிர்வினையை அனுபவிக்காதவர் என்று எவரும் இல்லை.சொல் அம்போவில் அம்போ? பொருள்: வில்லிலிருந்து புறப்பட்ட அம்பின் தாக்கத்தை விட, நமது நாவில் இருந்து வரும் வார்த்தையின் தாக்கம் அதிகம். எனவே வார்த்தைகளை மிக கவனமாக கையாள வேண்டும். 

Oct 22, 2024

கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா?

கர்மத்தினால் வந்தது தர்மத்தினால் தொலைய வேண்டும்.பொருள்: நாம் செய்த தீவினையை ஒரு நற்செயல் புரிவதன் மூலம் ஈடு செய்ய வேண்டும்.கழுதைக்கு வாக்கப்பட்டு உதைக்கு அஞ்சலாமா? பொருள்: ஒரு விடயத்தால் பயனில்லை எனத் தெரிந்த பின்பும் அதில் ஈடுபட்ட பிறகு பின்விளைவுகளுக்கு வருந்த கூடாது.

Oct 15, 2024

கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன்

.கரும்பும் எள்ளும் கசக்கினால் தான் பலன். பொருள்: எந்த ஒன்றையையும் எப்படி பயன்படுத்துகிறோமோ அதற்கு ஏற்றார் போலவே அதன் பயன் இருக்கும். நெடும்பகலுக்கும் உண்டு அஸ்தமனம் பொருள்: எல்லாவற்றிற்கும் ஒரு முடிவுண்டு. அதற்கான நேரம் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

Oct 08, 2024

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!

ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே!பொருள்:நன்மை நடப்பதும், தீமை நடப்பதும் பெண்கள் கையில் தான் இருக்கிறது.உண்மையான பொருள்:நன்மை நடப்பதும், தீமை அழிவதும் பெண்ணால் தான் நிகழ்கிறது என்று அர்த்தம் கொள்ள வேண்டும்

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 16 17

AD's



More News