25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பழமொழி.

Mar 11, 2025

கெட்டவனுக்கு உற்றார் கிளையிலும் இல்லை

கெட்டவனுக்கு உற்றார் கிளையிலும் இல்லை. பொருள்: தீய குணம் மற்றும் நடத்தை கொண்டவனின் சொந்தம் என அவனது உறவுகள் கூட கூறிக்கொள்ள மாட்டார்கள். 

Mar 04, 2025

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

பொருள்: என்னதான் பணம் சம்பாதித்து பெரும் செல்வந்தன் ஆனாலும் ,அவனிடம் படிப்பு இல்லை என்றால் ,அவனிடம் ஞானம் இருக்காது என்பதே பொருள்.

Feb 25, 2025

இருகினால் களி இளகினால் கூழ்

இருகினால் களி இளகினால் கூழ்பொருள்: எந்த ஒரு விடயத்திலும் எவ்வகையிலாவது நமக்கு நன்மை உண்டு.

Feb 18, 2025

கல்லை கண்டால் நாயை காணோம், நாயை கண்டால் கல்லைக் காணோம்.

 பொருள் -"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனை கண்டால் கல்லைக் காணோம்" என்பதே சரி. நாயகன் என்பது இங்கு கடவுளை குறிக்கிறது. ஒரு கற்சிலையை கற்சிலையாக பார்த்தால் அதில் கடவுள் தெரியமாட்டார். அதே கற்சிலையை கடவுளாக பார்த்தால் அங்கு கல் தெரியாது.

Feb 11, 2025

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்..

.தவளை கத்தினால் மழை.அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாரம்.தும்பி பறந்தால் தூரத்தில் மழை.

Feb 04, 2025

ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே

ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே. பொருள் :என்ன தான் ஊரார் வீட்டில் நெய் விட்டு ருசியாக சமைத்திருந்தாலும் அது தன் மனைவியின் கை பக்குவத்திற்கு ஈடாகாது என்று கணவன் மார்கள் கூறும் பழமொழி இது.

Jan 28, 2025

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும். அகத்தில்  போட்டாலும் அளந்து போடணும் சரி  பொருள் : அகம் என்றால் மனம் என்று பொருள். எந்த ஒரு விடயத்தையும் மனதில் பதியவைக்கும் முன்பு அதை தெளிவாக ஆராய்ந்து அறிந்து பதியவைக்க வேண்டும்.

Jan 21, 2025

ஊதாரிக்கு பொன்னும் துரும்பு"

ஊதாரிக்கு பொன்னும் துரும்பு"சேமிக்காமல் செலவு செய்பவர்களுக்கு எவ்வளவு பெரிய செல்வமும் சிறு துரும்பாகவே தெரியும்.என்பதை குறிப்பதுதான் இந்த பழமொழி. 

Jan 14, 2025

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க!விளக்கம்: வாழ்க்கையில் 16 வகையானசெல்வங்களான உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம், ஒப்பற்ற அழகு, அழியாப் புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள்(ஆயுள்), எடுத்தக் காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி), மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வளமாக வாழுங்கள்

Jan 07, 2025

ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே.

ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே. பொருள் : என்ன தான் ஊரார் வீட்டில் நெய் விட்டு ருசியாக சமைத்திருந்தாலும், அது தன் மனைவியின் கை பக்குவத்திற்கு ஈடாகாது என்று கணவன் மார்கள் கூறும் பழமொழி இது.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 18 19

AD's



More News