நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன். நான் யார்? - மணிக்கூடு. ஆள் இறங்காத குளத்தில், ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன? -மத்து
காட்டிலே பச்சை, கடையிலே கறுப்பு, வீட்டிலே சிவப்பு. அது என்ன? மரம்-கரி-நெருப்பு எண்ணெய் வேண்டா விளக்கு. எடுப்பான் கை விளக்கு. அது என்ன? மெழுகுவர்த்தி
காட்டிலே பச்சை, கடையிலே கறுப்பு, வீட்டிலே சிவப்பு. அது என்ன? - மரம்-கரி-நெருப்பு எண்ணெய் வேண்டா விளக்கு. எடுப்பான் கை விளக்கு. அது என்ன? - மெழுகுவர்த்தி
ஊரெல்லாம் ஒரே விளக்கு, அதற்கு ஒரு நாள் ஓய்வு. அது என்ன? சந்திரன் எடுக்க எடுக்க வளரும். எண்ணெயைக் கண்டால், படிந்துவிடும். அது என்ன?: முடி
ஒற்றைக் காலில் ஆடுவான். ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்? பம்பரம் அழுவேன்,சிரிப்பேன், அனைத்தும் செய்வேன்.நான் யார்? முகம் பார்க்கும் கண்ணாடி
மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம். அது என்ன? அன்னாசிப்பழம் . வேகாத வெயிலில், வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன? உப்பு
அடித்து நொறுக்கி, அணலில் போட்டால், ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன? சாம்பிராணி அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன? காற்று
வேகாத வெயிலில், வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன? - உப்புஅள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன? - காற்று
எட்டுப் பேர் நாங்க எங்க தலைவரைக் காப்பாத்த முன்னாலே போவோம் பின்னாலே வரமாட்டோம் நாங்கள் யார்?- செஸ் சிப்பாய் அறைகள் உண்டு இது வீடு அல்ல, சித்திரமும் அல்ல, காவலுக்கு ஆயிரம் வீரர்கள் உண்டு கோட்டையும் அல்ல அது - தேன் கூடு.
நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத் தண்ணீர் இல்லை - அச்சு வெல்லம். உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணிந்திருப்பான் - வெங்காயம்.