சிறு தூசி விழுந்ததும்,குளமே கலங்கியது அது என்ன?--கண்சட்டையைக் கழற்றினால் சத்துணவு. அது என்ன?—வாழைப்பழம்
வெயிலில் மலரும் காற்றில் உலரும். அது என்ன? - வியர்வைபூமியிலே பிறக்கும்,புகையாய்ப் போகும். அது என்ன? - பெட்ரோல்
அச்சு இல்லாத சக்கரம்,அழகு காட்டும் சக்கரம். அது என்ன? - வளையல்ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன? - கடிதம்
காலடியில் சுருண்டிருப்பாள். கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார்? மெட்டி.குண்டு குள்ளனுக்கு, குடுமி நிமிர்ந்தே இருக்கும். அவன் யார்?--கத்திரிக்காய்
அம்மா படுத்திருக்க, மகள் ஓடித்திரிவாள், அது என்ன? -அம்மி குளவி வயதான பலருக்கு ,புதிதாக ஒரு கை. அது என்ன?- வழுக்கை
அடி மலர்ந்து , நுனி மலராத பூ. அது என்ன? - வாழைப்பூஅடர்ந்த காட்டின் நடுவே, ஒரு பாதை அது என்ன? - தலை வகிடு
பார்க்கத்தான் கறுப்பு, ஆனால் உள்ளமோ சிவப்பு. நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு. அது என்ன? - தேயிலைகாதை திருகினால், பாட்டு பாடுவான் .அவன் யார்? - ரேடியோ
வால் நீண்ட குருவிக்கு, வாயுண்டு. வயிறில்லை. அது என்ன? அகப்பை
ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல. அது கடல் இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது.அது பட்டாசு
கையில்லாமல் நீந்துவான். கால் இல்லாமல் ஓடுவான். அவன் யார்?:படகு.எழுதி எழுதியே, தேய்ஞ்சு போனான். அவன் யார்? பென்சில்.