அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். -சாம்பிராணி . தலை இல்லாதவன் தலையை சுமப்பவன், - தலையணை
பூபூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. - வேர்கடலை கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்? - புகை
பட்டுப்பை நிறைய பவுண் காசு. அது என்ன? விடை: வத்தல் மிளகாய்இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன?விடை: மத்து
ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும். அது என்ன?- ஊதுபத்திஇருந்த இடத்தில் நகர்ந்தபடி *இரவும் பகலும் செல்வான். அவன் யார்? - கடிகாரம்
இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன? கடிகாரம்.ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீ ரங்கம் தூங்க,திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?மூச்சு.
இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும் அது என்ன? கடிகாரம்.ஆலமரம் தூங்க, அவனியெல்லாம் தூங்க, ஸ்ரீ ரங்கம் தூங்க,திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை. அவன் யார்?மூச்சு
தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் அது என்ன? கப்பல்கள் தொட்டால் மணக்கும். சுவைத்தால் புளிக்கும் அது என்ன? எலுமிச்சம்பழம்
வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?--கல்விஅம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு அது என்ன? - இடியாப்பம்
தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்க முடியாது. அது என்ன ? - முதுகுகலர்ப்பூ கொண்டைக்காரன் காலையில் எழுப்பிவிடுவான். அவன் யார்? - சேவல்
கடலில் கலக்காத நீர், எவரும் குடிக்காத நீர். அது என்ன? கண்ணீர் .கத்தி போல் இலை இருக்கும், கவரிமான் பூ பூக்கும், தின்ன பழம்கொடுக்கும், தின்னாத காய் கொடுக்கும். அது என்ன? வேம்பு