சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான். –அலாரம். உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம் - அஞ்சல் பெட்டி
முதுகிலே சுமை தூக்கி, முனகாமல் அசைந்து வரும்.- நத்தை தண்ணீரில் மிதக்குது.கட்டழகிய வீடுகள். - கப்பல்கள்.
தலை இல்லாதவன், தலையை சுமப்பவன். அவன் யார்? - தலையணை அந்தரத்தில் தொங்குவது சொம்பும், தண்ணீரும். அது என்ன? - இளநீர்
அம்மா பின்னிய நூலை, அவிழ்த்தால் போச்சு. அது என்ன?- இடியாப்பம் அடிமேல் அடி வாங்கி, அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன? மிருதங்கம்
கடல் நீரில் வளர்ந்து, மழை நீரில் மடிவது என்ன?-- : உப்பு விரல் இல்லாமலே, ஒரு கை அது என்ன? - தும்பிக்கை
வால் உள்ள பையன்,காற்றில் பறக்கிறான். அது என்ன?*--பட்டம் வீட்டிலிருப்பான் காவலாளி, வெளியில் சுற்றுவான் அவன் கூட்டாளி, அவர்கள் யார்?--பூட்டும், சாவியும்.
வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல். அது என்ன?---முட்டை.உயிரில்லாதவனுக்கு. உடம்பெல்லாம் நரம்பு. அது என்ன?--பாய்.
சுற்றுவது தெரியாது.ஆனால், சுற்றிக் கொண்டிருப்பான். அவன் யார் ? - பூமி குதிரை ஓட ஓட வால் குறையும். அது என்ன? - ஊசி நூல்
எண்ணெய் குடித்துவிட்டு, ஏழு கடல் தாண்டுவான். அவன் யார்?--விமானம்ஒருவனுக்கு உணவளித்தால், ஊரையே கூட்டுவான்.அவன் யார்?--காகம்
கரைந்து போகுது வெள்ளி தட்டு. அது என்ன? — தேய்பிறை உரச உரச குழைவான், பூச பூச மனப்பான். அவன் யார்? - சந்தனம்