25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


விடுகதை

Oct 06, 2024

கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்றுமகிழ்ந்தான். அவன் யார்?

கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ. அவன் யார்? -உப்புகந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்றுமகிழ்ந்தான். அவன் யார்?--சோளக்கதிர் 

Sep 29, 2024

.கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைச் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்?

.கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைச் கண்டு பதைபதைக்கிறான். அவன் யார்? நெருப்பு மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும்துவாரம், உள்ளிலும் துவாரம், வெளியிலும் துவாரம், இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன். நான் யார்?  பஞ்சு

Sep 22, 2024

.சுற்றும் போது மட்டும் சுகம் தரும். அது என்ன?

காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான். அவன் யார்? தென்னை மரம்.சுற்றும் போது மட்டும் சுகம் தரும். அது என்ன?மின் விசிறி .

Sep 15, 2024

வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன?

வாலிலே எண்ணெய், தலையிலே கொள்ளி. அது என்ன? -  விளக்குத்  திரிஆயிரம்பேர் அணி வகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவர்கள் யார்? - எறும்புக் கூட்டம்

Sep 08, 2024

.அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்?

மென்மையான உடம்புக்காரன், பாரம் சுமக்கும் கெட்டிக்காரன். அவன் யார்?  நத்தை.அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான். அவன் யார்? புகை

Sep 01, 2024

ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடுஇல்லை. அது என்ன?

ராஜா உண்டு, ராணி உண்டு, மந்திரியும் உண்டு. ஆனால் நாடுஇல்லை. அது என்ன? -  சீட்டு கட்டு  வகை வகையாய் தெரியும் வண்ணப்படம், கண்மூடிக் காணும்காட்சிப்படம். அது என்ன?  - கனவு

Aug 25, 2024

காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன?

காது பெரியது, ஆனால் கேளாது. வாய் பெரியது, ஆனால் பேசாது. வயிறு பெரியது, ஆனால் உண்ணாது. அது என்ன? - அண்டா  மேலே மேலே செல்லும், ஆனால் கீழே வராது. அது என்ன ? -  வயது

Aug 18, 2024

அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?

குட்டையான அழகிக்கு நெட்டையான ஜடை அது என்ன? - கத்தரிக்காய்.அடர்ந்த காட்டில் ஒற்றையடி பாதை. அது என்ன?- தலை வகிடு 

Aug 11, 2024

கடித்தால் புளிப்பு, தண்ணீர் குடித்தால் இனிப்பு அது என்ன? 

கடித்தால் புளிப்பு, தண்ணீர் குடித்தால் இனிப்பு அது என்ன? :- நெல்லிக்காய்  விரல் அளவு -உயரம் தான் ஆனால் முத்துக்களை பதுக்கி வைத்து இருப்பாள், அவள் யார்? - வெண்டைக்காய்

Aug 04, 2024

பச்சைப்பசேல் என்றிருக்கும், வாய் வைத்தால் கசக்கும், குழம்பு வைத்தால் ருசிக்கும் அது என்ன?

கல்லைச் சுமந்தவள், கறிக்கு ருசி அது என்ன? விடை:- புடலங்காய் பச்சைப்பசேல் என்றிருக்கும், வாய் வைத்தால் கசக்கும், குழம்பு வைத்தால் ருசிக்கும் அது என்ன? விடை:- பாகற்காய் 

1 2 3 4 5 6 7 8 9 10 11

AD's



More News