.சருமத்தை பளபளப்பாக்கும் கீரை ஃபேஷியல்
சருமத்தில் படிந்துள்ள அழுக்கு, தூசி போன்றவற்றை அகற்றி.முகத்தை பளபளப்பாக மாற்றக்கூடிய கீரை ஃபேஷியல் பற்றி இங்கு விரிவாக காணலாம்
தேவையான பொருட்கள்- கீரை - ஒரு கைப்பிடி அளவு; தேன் - 1டீஸ்பூன்; தக்காளி - 1; சர்க்கரை - 1 டீஸ்பூன்
கீரை சருமத்தில் நீரேற்றத்தை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.இதன் காரணமாக, கோடுகள், சுருக்கங்கள் போன்ற வயதான தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.முகத்தில் தக்காளியை பயன்படுத்துவது மூலம் அதிகப்படியான எண்ணெய் நீக்குதல், இறந்த சரும செல்களை அகற்றுதல், முகத்தை பிரகாசமாக்குதல், சரும துளை அளவை குறைத்தல் என ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
செய்முறைமுதலில் கீரையை மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.பின் கீரை பேஸ்டில் தேனை மிக்ஸ் செய்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வர வேண்டும்இந்த கலவையை அப்ளை செய்யும் முன்பு, முகத்தை வாஷ் செய்ய வேண்டும். பின் தக்காளியுடன் சர்க்கரை சேர்த்து முகத்தில் தடவி ஸ்க்ரப் செய்ய வேண்டும்பின் கீரை கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்சுமார்15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இந்த பேஸ் பேக்கை தொடர்ச்சியாக அப்ளை செய்கையில், முகத்தில் நல்ல மாற்றத்தை காண
முடியும்.
0
Leave a Reply