அக்ரூட் பருப்புகள் ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டி மட்டுமல்ல, அவை முடி ஆரோக்கியத்தை அதிகரிக்க ஒரு இயற்கைதீர்வாகவும் செயல்படுகின்றன.பாதாமில் மெக்னீசியம் நிறைந்துள்ளது, இது சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும், பொடுகு மற்றும் முடி சேதத்தைத் தடுக்கவும் உதவும்.தேங்காய் ஒரு இயற்கையான முடி பராமரிப்பு தீர்வாகும், இது உங்கள் தலைமுடியின் தரத்தை மேம்படுத்த உதவும்.பயோட்டின் நிறைந்த பிஸ்தா முடி உதிர்வை எதிர்த்துப் போராடவும், உலர்ந்த கூந்தலுக்கு ஊட்டமளிக்கவும் உதவும்.எள் விதைகளில் இரும்பு மற்றும் கொழுப்பு அமிலங்கள்நிறைந்துள்ளன, இது உங்கள் முடி வேர்களுக்கு ஊட்டமளித்து புதிய முடி வளர்ச்சியைத் தூண்டும்.சியா விதைகள் சிறந்த முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் மற்றும் முடி உதிர்வதைத் தடுக்கும்.
தலையில் முடி கொட்டினால்கொஞ்சம் சின்ன வெங்காயம் உரித்து |அதை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வடி கட்டி அதில் சாறு பிழிந்து எடுத்துதலையில் தேய்த்து ஒரு1/2 மணி நேரம் கழித்து குளிக்கலாம் இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால் கொட்டிய இடத்தில் புது முடி வளர ஆரம்பிக்கும் சின்ன வெங்காயம் உடம்புக்கு நல்ல குளிர்ச்சி தரும் இந்த மாதிரி செய்து பாருங்க முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும் முடி கொட்டுவது ஒரு முடி இரண்டாக பிளந்து இருக்கும் தலை சீவினால் குட்டி குட்டி முடி வணங்காமல் நிற்கும் இதற்கு காரணம் முடிக்கு சத்து இல்லை தலையில் பக்கு இருந்தால் முடி கொட்டும் இதற்கு வாரம் ஒருமுறை கொஞ்சம்தயிர் ,ஒரு எலுமிச்சம் பழச்சாறு எடுத்து கலக்கி தலையில் தேய்த்து குளிக்கலாம் .கரப்பான் இலை சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் வாரம் ஒருமுறை நல்ல எண்ணெய் தேய்த்து குளிக்கலாம் இப்படி செய்தால் ,முடி கொட்டுவது நின்று வளர ஆரம்பிக்கும்
கற்றாழை சரும நன்மைக்கு மிகவும் நன்மை பயக்கும் தேங்காய் எண்ணெய் (CoconutOil) சரும கறைகளை நீக்க பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.அத்தகைய சூழ்நிலையில், கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயைக்கலந்து சருமத்தில் தடவி வந்தால், அது சருமத்திற்கு ஒரு வரத்திற்குகுறைவில்லாமல் இருக்கும். இதனால் பருக்கள் மறைந்து பொலிவு வரும்.சருமத்தில் எப்படி பயன்படுத்த வேண்டும்.சம அளவு கற்றாழை ஜெல்லை இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் கலக்கவும். இந்த கலவையை நன்றாக கலந்து, தூங்கும் முன் முகம்மற்றும் கழுத்து முழுவதும் தடவி, இரவு முழுவதும் முகத்தில் விட்டு,காலையில் முகத்தை கழுவவும்.
உதடுகள் கருமையாவதற்கு மிக முக்கிய காரணம் சூரிய ஒளியின் தாக்கமாக இருக்கிறது. அதிகம் வெயிலில் சுற்றி திரிபவர்களுக்கு உதடு கருப்பாகத் தான் இருக்கும். கீமோதெரபி செய்பவர்கள், அனிமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், விட்டமின் பற்றாக்குறை உள்ளவர்கள், போன்றவர்களுக்கும் உதடுகள் கருமையாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.கற்றாழையில் இருக்கும் ஜெல்லை மட்டும் எடுத்து பேஸ்ட் போல ஆக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்டுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து உதடுகளில் லேசாக தடவி பத்திலிருந்து 15 நிமிடங்கள் அப்படியே உலர விட்டு விடுங்கள். அதன் பிறகு மெல்லிய ஈரத்துணியால் துடைத்துக் கொள்ளுங்கள். இதனால் உதடுகளில் மெலனின் உற்பத்தி குறைந்து கருமை நீங்கும்.தேன் மற்றும் பன்னீர் இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து உதடுகளில் தினமும் மசாஜ் செய்ய வேண்டும். தொடர்ந்து ஏழு நாட்கள் மென்மையாக மசாஜ் செய்து கொடுத்தால்,பட்டு போன்ற உதடுகள் உங்களுக்கு கிடைக்கும் வறண்ட தன்மையிலிருந்து மீண்டு ஈர பதத்துடன் இருக்கும். கருப்பான உதடுகளும் குழந்தையின் உதடுகள் போல மிருதுவாக மாறும்.மாதுளை மற்றும் பீட்ரூட் இவற்றின் சாறுகளை அடிக்கடி ஃபிரஷ் ஆக உதடுகளின் மீது தடவி உலர விட்டு விட வேண்டும். பிறகு ரோஸ் வாட்டர் கொண்டுஉதடுகளைமசாஜ் செய்யுங்கள். இது போல தொடர்ந்து செய்து வந்தால் உதடுகளின் கருமை மிக விரைவாகவே நீங்கும். மேலும் ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுப்பதாலும் உதடுகளின் வறண்ட தன்மையை நீங்கும்.
ஃபேசியல் என்பது தற்போது கெமிக்கல் கலந்த பொருட்களினால் செய்யப்பட்டு வருவதால் சில சமயம் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. துளசி போன்ற இயற்கையான பொருட்களை வைத்து ஃபேசியல் செய்தால் எந்தவித பக்க விளைவும் வராது .துளசி இலையில் ஆன்ட்டி செப்டிக் தன்மை இருப்பதால் அது சரும பிரச்சனைகளை தடுப்பதோடு முகத்தில் முகப்பருக்கள், தழும்புகள் இல்லாமல் செய்துவிடும். துளசி இலையை நன்றாக அரைத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து15 நிமிடம் முகத்தில் பூச வேண்டும் அதன் பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்குவதோடு முகம் பளபளப்பாக இருக்கும். மேலும் இதனால் எந்த விதமான பக்க விளைவும் இருக்காது .
தலைமுடி உயிரற்றதாகவும், வறண்டதாகவும், நீளம் அதிகரிக்காமலும் இருந்தால், நீங்கள் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதனால் கூந்தல் மிருதுவாகவும், பட்டுப் போலவும் இருக்கும். இதனுடன், முடி வலுவடைகிறது (Hair Growth) மற்றும் அவற்றின் வளர்ச்சியும் வேகமாக மாறும்.5 ஸ்பூன் கற்றாழை ஜெல்லில்3 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்துபேஸ்ட்டை தயார் செய்யவும். இப்போது முடியின் வேர்கள் முதல் நுனி வரை விரல்களின் உதவியுடன் இதை நன்கு மசாஜ் செய்யவும். நன்றாக தடவிய பின் ஷவர் கேப்பால் தலையை மூடி வைக்கவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு செய்யவும். இந்த ட்ரீட்மெண்ட்டை நீங்கள் வாரம் ஒரு முறை பயன்படுத்தலாம். இந்த கலவையானது கிட்டத்தட்ட அனைத்து முடி பிரச்சனைகளையும் தீர்க்க உதவும் ...உலர்ந்த மற்றும் உதிர்ந்த முடிமுடி வளர்ச்சி இல்லாமை,வழுக்கையை தடுக்கும் மற்றும் புதிய முடி வளரும்.முடி நரைப்பதை தடுக்கும்.முடியை அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் ஆக்கும்.முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, முடியை வலுவாக்கும்.பொடுகு நீக்க உதவுகிறது. (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.
கண்ணாடி போல் ஜொலிக்கும் முகத்தைபெறுவது பெரும்பாலான பெண்களின் கனவாகவே உள்ளது.அதை பெற பல ஆயிரங்களில் பணத்தை செலவு செய்கின்றனர்.அவ்வளவு பணம் செலவு செய்வது என்பது நடுத்தரகுடும்பத்து பெண்களுக்குஇயலாது. எனவே வீட்டில்இருக்கும் பொருட்களை வைத்தே ஜொலிக்கும் முகத்தை பெறலாம். முதலில் அரிசியை 30 நிமிடங்களுக்கு ஊற வைத்து கொள்ளவும். பிறகு அதனை குழையவேக வைத்துகொள்ளவும். பிறகு வேக வைத்த அரிசியில் தேன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் இந்த மாஸ்க்கை சிறிது நேரம் முகத்தில் தடவி விட்டு கழுவி விட வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகம் கண்ணாடி போன்ற பொலிவை பெறும்.
உருளைக்கிழங்கு முகம் மற்றும் உடலின் மற்ற பகுதிகளில் உள்ள தோலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். உருளைக்கிழங்கை வேகவைத்து அரைத்து பசும்பாலில் கலந்து முகத்தில் பூசி ஒரு மணி நேரம் கழித்து முகத்தைக் கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய்ப் பசை நீங்கும். இது முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை முற்றிலும் தடுத்து முகத்திற்கு அழகு சேர்க்கிறது. முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைத் தடுத்து இளமைத் தோற்றத்தைத் தரும். சரும வறட்சியைத் தடுக்கிறது மற்றும் சருமத்தை ஈரப்பதமாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கும்
சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள் தடுத்து இளமை தோற்றம் பெற உதவும் மூலிகைகள். இலவங்கப்பட்டை மூலிகை சருமத்தில் நெகிழ்ச்சி இழப்பை தடுக்க உதவுகிறது. இது சருமத்தில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதோடு முகப்பருவுக்கு காரணமான பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறதுதுளசி இலைகள் வயதான அறிகுறிகளைத் தடுக்க செய்கிறது. குறிப்பாக, சூரிய ஒளியின் புறா ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறதுகிராம்பு ஃப்ரீ ரேடிக்கல் எதிர்க்கும் பண்புகளைக் கொண்டிருக்கும். அதிலுருக்கும் ஆன்ட்- ஆக்ஸிடண்ட் சுருக்கம் மற்றும் கோடுகளை குறைத்திட பெரிதும் உதவுகிறது.இஞ்சியில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல் உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் பினாலிக் கலவைகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் தவிர, அதிகளவு ஆக்ஸிஜனேற்றம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.குக்குலு சக்திவாய்ந்த மூலிகை சுருக்கங்கள் மற்றும் கோடுகளை தடுக்க உதவுகிறது. இதுதவிர, ஃப்ரீ ரேடிக்கல் எதிர்க்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.அஸ்வகந்தாவில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும் பண்புகள் உள்ளது. இதிலுள்ள ஆல்கலாய்டுகள், சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் மற்றும் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறதுஆர்கனோ ஆன்டிஆக்ஸிடண்ட்மற்றும் ஃபிளாவனாய்டுகள் அடங்கிய சக்தி வாய்ந்தமூலிகையாகும். இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தைத் தடுப்பதில் பெரிதும் உதவுகிறதுசேஜ் இலையில் பிளாவனாய்டுகள் போன்ற ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இவை சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகள் போன்ற வயதான அறிகுறிகளை மாற்ற பெரிதும் உதவுகிறது.
உடல் சூடு அதிகமாக உள்ளவர்கள் வெந்தயக் கீரையை அடிக்கடி சாப்பிடலாம். உடலை அழகாக வைத்துக் கொள்வதிலும், வனப்பை தக்க வைப்பதிலும், வெந்தயத்தின் பங்கு அலாதியானது.. தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் + சிறிது கொழுந்தாக இருக்கும் கறிவேப்பிலை இரண்டையும் உப்பு சேர்த்த தயிரில் கலந்து ஊற வைத்து, தினமும்சாப்பிட்டாலே தோலில் மினுமினுப்பு வரும். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் போட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பிறகு பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ/மோரிலோ கலந்து பயன்படுத்தலாம். தீக்காயங்கள்: இந்த கீரையை பச்சையாகவே, அரைத்து தீக்காயங்களுக்கு பற்றுப்போட்டால் காயம் குணமாவதோடு குளிர்ச்சியாகவும் இருக்கும்.நாள்பட்ட சொறி, சிரங்கு உள்ளிட்ட அனைத்து சரும பிரச்சனைகளுக்கும் இந்த கீரையை அரைத்து பற்று போடலாம்.