பற்களின் மஞ்சள் நிறமானது சிரிப்பதற்கும், பாடுவதற்கும், பேசுவதற்கும் தயக்கத்தை ஏற்படுத்தும். பற்களை சரியாக கவனிக்காமல் இருப்பது, பற்களை சரியாக சுத்தம் செய்யாதது மற்றும் பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும் பொருட்களை சாப்பிடுவது போன்றவை தான் இந்த மஞ்சள் நிறத்திற்கு மிக முக்கிய காரணமாகும். பற்கள் படிதல் வாய் துர்நாற்றம், சர்க்கரை இருக்கும் பானங்களை குடிப்பது, பான் மசாலா சாப்பிடுவது மற்றும் புகையிலை, மருந்துகள் அல்லது சோடா குடிப்பது போன்றவற்றாலும் பற்கள் மஞ்சள் நிறமாக மாறும்..பற்கள் மஞ்சள் நிறமாக மாறியிருந்தால், வீட்டில் இருக்கும் இரண்டு பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த விஷயங்களில் ஒன்று பேக்கிங் சோடாமற்றும் மற்றொன்று எலுமிச்சை சாறு ஆகும். பேக்கிங் சோடா பெரும்பாலும் மஞ்சள் பற்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், எலுமிச்சை சாறு மஞ்சள் கரை மற்றும் பிளேக் நீக்க உதவுகிறது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு பாத்திரத்தில் பேக்கிங் சோடாவை எடுத்து அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். இந்தக் கலவையை பிரஷ்ஷில் எடுத்து பற்களில் தேய்க்கவும். இந்த வழியில், இரண்டு முதல் மூன்று பயன்பாடுகளால், நீங்கள் மஞ்சள் நிற பற்களில் இருந்து விடுபடலாம், மேலும் உங்கள் பற்கள் சுத்தமாக தோன்ற ஆரம்பிக்கும். ஸ்ட்ராபெர்ரிகளை நசுக்கி, பிரஷ் மூலம் பற்களில் தேய்ப்பது, பற்களில் படிந்து இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க உதவும்.உப்பு மற்றும் கடுகு எண்ணெயை (Mustard Oil) கலந்து பற்களில் தேய்த்து வந்தால் பற்கள் சுத்தமாகும். இந்த இயற்கை தீர்வை முயற்சிப்பதன் மூலம், நீங்கள் வாய் துர்நாற்றத்திலிருந்தும் (Bad Breath) விடுபடுவீர்கள்.மஞ்சள் பற்களை சுத்தம் செய்வதில் பயனுள்ள பல பழங்களின் தோல்களும் பயனுள்ளதாக இருக்கும். வாழைப்பழத் தோலின் உள் பகுதியை பற்களில் தேய்க்கலாம், ஆரஞ்சு தோலை உலர்த்தி அரைத்து பயன்படுத்தலாம், பற்களுக்கு டீத் ஒயிட்னிங் பவுடர் தயாரிக்கப்படும் போது அதன் விளைவு தெரியும். இந்தப் பொடியில் தண்ணீர் கலந்து பற்களை சுத்தம் செய்யலாம்..
முதலில் குங்கிலியம் 20 கிராம், நல்லெண்ணெய் 100ml எடுத்து கொள்ளுங்கள். குங்கிலியத்தை இடித்து வைத்து கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வையுங்கள். அதில் 100ml நல்லெண்ணெய் ஊற்றவும். பின் இடித்த குங்கிலியத்தை எண்ணெயில் சேருங்கள். குங்கிலியம் நன்றாக கரைந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.. எண்ணெய் ஆறியதும் வடிக்கட்டி வைத்து கொள்ளுங்கள். அடுத்து ஒரு பாத்திரத்தில் 100ml தண்ணீர் ஊற்றவும். பிறகு இந்த தண்ணீரில் வடிகட்டி வைத்து இருக்கும் எண்ணையை சேருங்கள். பின் இரண்டு பொருட்களும் நன்றாக மிக்ஸ் செய்யவும். இப்போ ஒரு கிரீம் போல கிடைத்துவிடும். இந்த கிரீமை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து வைக்கலாம்.-இந்த கிரீமை இரவு தூங்குவதற்கு முன்பு பிக்மென்டேஷன் உள்ள இடத்தில் அப்ளை செய்யுங்கள் இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடுங்கள்.ஒரு கிண்ணத்தில் எலும்பிச்சை பழச்சாறு, பசும் பால் சேர்த்து கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸ் செய்யுங்கள் உங்களது முகத்தை நன்றாக கழுவி கொள்ளுங்கள். முகத்தில் ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள். பின் கலந்து வைத்த கலவையை முகத்தில் தேய்த்து கொள்ளுங்கள். முகத்தில் தடவி 15 நிமிடம் அப்படியே வைத்திருங்கள். பிறகு முகத்தை கழுவி விடுங்கள். அடுத்து பொடுதலை கீரையை கழுவி அரைத்து கொள்ளுங்கள். எலும்பிச்சை 1 தேக்கரண்டி பழச்சாறு எடுத்து கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.பின் கலந்து வைத்த பேஸ்ட்டை முகத்தில் பிக்மென்டேஷன் எங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் அப்ளை செய்யுங்கள். அப்ளை செய்து 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடுங்கள்..மேல் கூறப்பட்டுள்ள குறிப்பில் எதாவது ஒன்றை பயன்படுத்தினால் போதுமானது. இந்த குறிப்பை ஒரு வாரம் தொடர்ந்து அப்ளை செய்யுங்கள்..
இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்தி உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை நிரந்தரமாக போக்க உதவும்.ஆவாரம்பூ பொடி - 2 டேபிள் ஸ்பூன்.மைசூர் பருப்பு பொடி - 2 டேபிள் ஸ்பூன்பாதாம் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்உருளைக்கிழங்கு - 1/2 கிழங்குமிக்சி ஜாரை எடுத்து கொள்ளவும்:.முதலில் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1/2 உருளைக்கிழங்கினை அதனின் தோலினை நீக்கி சேர்த்து கொள்ளவும். இதனை நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.அதில் உள்ள சாற்றினை மட்டும் ஒரு கிண்ணத்தில் வடிக்கட்டி கொள்ளுங்கள்.பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் ஆவாரம்பூ பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.அடுத்துஅதில் 2 டேபிள் ஸ்பூன் மைசூர் பருப்பு பொடியை கலந்துகொள்ளுங்கள். அதில் நாம் எடுத்து வைத்திருந்த பாதாம் எண்ணெயை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.இறுதியாக அதில் நாம் எடுத்து வைத்துள்ள கற்றாழை ஜெல்லினையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மூடி போட்ட கண்ணாடி அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.இதனை தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்னால் உங்கள் கண்களை சுற்றி தடவி அடுத்த நாள் காலையில் நன்கு குளிர்ச்சியான தண்ணீரை பயன்படுத்தி உங்கள் முகத்தை கழுவி கொள்ளுங்கள்..இதனை ஒரு வாரத்திற்கு தொடர்ந்து செய்து வந்தாலே உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள் மறைய ஆரம்பிப்பதை காணலாம்.
சோற்றுக்கற்றாழையை நல்லெண்ணெய்விட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால், தலைமுடி நன்றாக வளர்வதோடு நல்ல தூக்கம் வரும். இதே எண்ணெயை உள்ளுக்கு சாப்பிடுவதால் கல்லீரல் நோய்களிலிருந்து விடுதலை கிடைப்பதோடு,நீண்டகால மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுதலை கிடைக்கும் மேலும் இந்த எண்ணெய் பெண்களுக்கு வரக்கூடிய மாதவிலக்கு கோளாறுகளை சரி செய்யும் வல்லமை படைத்தது.உடலுக்குத் தேவையான சக்தியை தருவதிலும், உடல் எடையை ஒழுங்குபடுத்துவதிலும் இதன் பங்கு அதிகம்.முகச்சுருக்கத்தை போக்கி முகத்துக்கு அழகுதரும், சோற்றுக்கற்றாழை.
வெந்தயத்தில் தேநீர் தயாரித்து குடிப்பது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. வெந்தய டீயை தொடர்ந்து அருந்துவது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.வெந்தயத்தை தேநீராக தயாரிக்க தேவையான பொருட்கள்1 தேக்கரண்டி வெந்தயம்1 கப் தண்ணீர்1 தேக்கரண்டி தேன்ஒரு கைப்பிடி துளசி இலைகள்தேயிலை இலைகள் (டீத்தூள் வழக்கமாக பயன்படுத்துவது)வெந்தய தேநீர் தயாரிக்கும் முறைஒரு சிறிய ஸ்பூன் வெந்தயத்தை எடுத்து மிக்ஸியில் அரைத்து பொடி செய்து கொள்ளவும். இப்போது தண்ணீர், வெந்தய விதை தூள், துளசி இலைகள், டீத்தூளை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவைத்து, பின்னர் ஒரு கோப்பையில் வடிகட்டவும். இப்போது, இதில் தேனைக் கலந்து குடிக்கவும். இந்த தேநீரை சூடாக குடித்தால் அருமையாக இருக்கும்.இந்த தேநீரை தினசரி அருந்தினால், உணவுக் கட்டுப்பாடு இல்லாமலும் உடல் எடை குறையும் என்பது சிறப்பு. உடல் எடையை குறைக்க உதவும் இந்த வெந்தய டீ குடித்தால், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேறு பல நன்மைகளும் உண்டு.
அரிசி கழுவிய நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளையும் அகற்றும்.முகம் பளபளக்க புதினா சாறு, எலுமிச்சை சாறு இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை முகத்தில் ஆவி பிடித்தால் அழுக்குகள் அகன்று சுத்தமாகவும் வசீகரமாகவும் இருக்கும்.கசகசா ஒரு ஸ்பூன் எடுத்து தண்ணீருடன் கலந்து அரைத்து முகத்தில் பூசிக்கொண்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான வெந்நீரில் கழுவி வந்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.தினமும் சீரகத் தண்ணீர் குடித்து வந்தால் முகத்தில் பருக்கள் வராது.குளிர்ந்த நீர் சிறிதளவு அதனோடு பால் சேர்த்து துணியில் தொட்டு முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடவும். இதை தொடர்ந்து செய்வதால் முகம் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாறும்.
தலை முடி பளபள என்று இருக்க வெந்தயம் ஊற வைத்து அரைத்துஅரைக்கும் போது செம்பருத்திப் போட்டு அரைத்தால் இன்னும்முடி சாப்டாக இருக்கும்வாரம் ஒரு முறை இப்படி செய்து வந்தால் முடி கொட்டுவது நின்று வளரஆரம்பிக்கும். வெந்தயம் உடம்பில் சூட்டை தணிக்கும் முடியில் உள்ள பிளவு இருந்தால்சரியாகி விடும் தலையில் பொடுகு வராமல் தடுக்கும்.
வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.எனவே தான் இப்போதும். எந்த ஒரு அழகு நிலையங்களுக்கு சென்றாலும். முகத்திற்கு ஃபேஸ் மாஸ்க் போட்ட பின், கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை வைக்கின்றனர். எனவே கண் அழகை அதிகரிக்க தினமும் கண்களில் வெள்ளரிக்காயை வைத்து சிறிது நேரம் அப்படியே அமர்த்திருங்கள். பின்பு கண்களை கழுவிவிடுங்கள்.கண்களை பாதிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது சரியான தூக்கமின்மை. எனவே தினமும் குறைந்தது எட்டு மணி நேரம் தூங்குவது மிக முக்கியம்.கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டால் கண்களுக்கு நல்லது. பால் உணவுகள், கீரை, முட்டை, மஞ்சள், ஆரஞ்சி நிறப் பழங்கள் மற்றும் காய்கள், கண்களின் அழகை பராமரிக்கும் முக்கிய பொருட்கள். போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும் இது கண்களுக்கு புத்துணர்வை அளிக்கும்.
தலைமுடி கொட்டுவது என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இதற்கென்று எளிய தீர்வுகள் ,முதலில், முடி கொட்டுவதற்கு என்ன காரணம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.. முடி கொட்ட பல காரணங்கள் இருக்கலாம். ஹார்மோன் குறைபாடுகள் முக்கிய காரணமாக திகழ வாய்ப்புள்ளது..அடர்த்தியான முடி: ஹார்மோன்கள் சரியாக இருந்தால், முடிகள் அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.. ஹீமோகுளோபின் அளவை சரியாக வைத்து கொள்ள வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் காரணமாகவும், முடி கொட்டலாம்.. இதற்கும், சத்தான உணவு சாப்பிடுவது அவசியம்..மன அழுத்தம் காரணமாகவும் முடி கொட்டலாம்.. அதேபோல, இளம்பெண்களுக்கு பிசிஓடி எனப்படும், நீர்க்கட்டிகள் பிரச்சனைகள் இருந்தாலும், முடி கொட்டலாம். இதனால், தலைமுடியின் வேர்க்கால்களும் பலவீனமாகிவிடும். அளவுக்கு அதிகமாக உடலில் உஷ்ணம் ஏற்பட்டுவிட்டாலும், முடி கொட்டலாம். நம்முடைய தலைமுடிக்கும், மனதுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. எனவே, ஆரோக்கியமான உணவு + மகிழ்வான மனநிலை + போதுமான உறக்கம் போன்றவையே தலைமுடி வளர்ச்சியை தீர்மானிக்கின்றன. இதில், கீரைகள் முதலிடத்தை பிடிக்கின்றன.. அதிலும் முருங்கைக்கீரையையும், கறிவேப்பிலையையும் எந்த காரணம் கொண்டும் தவிர்க்க கூடாது. எலுமிச்சம் சாறு: முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்.. அதேபோல, முருங்கையின் ஈர்க்குச்சியில் சூப் செய்து குடிக்கலாம்..கறிவேப்பிலையை எப்படி சாப்பிட்டாலும் நல்லதுதான். தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்கு தடவி வரலாம்.. செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமில்லாமல் அரைத்து, ஒரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், அதில், இந்த செம்பருத்தி விழுதை கொட்டி காய்ச்ச வேண்டும். சிறிது வெந்தயத்தை பொடி செய்து போட்டு, கொள்ளலாம். இந்த எண்ணெய்யை வடிகட்டி வைத்து தேய்த்து வந்தால், தலைமுடி கொட்டாது.
பற்களுக்கு இடையில் சிக்கிய உணவு மற்றும் பிளேக்கிலிருந்து விடுபட ஒரு நாளைக்கு ஒரு முறை பல் ஃப்ளோஸ் மூலம் ஃப்ளோஸ் செய்யுங்கள். பல் துலக்குவதற்கு முன் ஃப்ளோஸ் செய்வது அதிக பிளேக் நீக்குகிறது. மென்மையான முட்கள் கொண்ட பல் துலக்குதல் மற்றும் ஃவுளூரைடு பற்பசை மூலம் பற்களை இரண்டு நிமிடங்கள் துலக்கவும், ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது துலக்குவது நல்லது.சாப்பிட்ட அல்லது குடித்த உடனேயே துலக்க முடியாவிட்டால், சர்க்கரை இல்லாத பசையை பயன்படுத்துங்கள். முடிந்தவரை சர்க்கரை மற்றும் மாவுச்சத்துள்ள உணவுகள் மற்றும் பானங்களை கட்டுப்படுத்தவும் அல்லது தவிர்க்கவும். அதற்கு பதிலாக தயிர், பாலாடைக்கட்டி, பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுங்கள்.ஆயில் புல்லிங் என்பது ஒரு பாரம்பரிய தீர்வாகும். இது வாய்வழி சுகாதாரத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது. வாயில் எண்ணெய் வைத்து கொப்பளிப்பது மூலம் பிளேக்காக மாறும் பாக்டீரியாக்களை அகற்றி பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதை தடுக்கும்.ஆயில் புல்லிங் செய்ய மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் எண்ணெய் சூரியகாந்தி மற்றும் நல்லெண்ணெய் ஆகியவை.பேக்கிங் சோடா இயற்கையாகவே வெண்மையாக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இதனால் பற்பசையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலப்பொருளாக இது பயன்படுத்தப்படுகிறது. இது பற்களில் உள்ள கறைகளை துடைக்க முடியும். இது வாயில் கார சூழலை உருவாக்க உதவுகிறது. இது பாக்டீரியாக்களை வளரவிடாமல் தடுக்கிறது.