கருவளையத்தை மறைக்கும் 'தேங்காய் எண்ணெய்- மஞ்சள் பேக்!
தேங்காய் எண்ணெய், மஞ்சள் மற்றும் கற்றாழை கலவையில் ஒரே வாரத்தில் கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை மறைக்கிறது
தேவையான பொருட்கள்!
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன் | கற்றாழை ஜெல் - 1 ஸ்பூன் | மஞ்சள் - 4 ஸ்பூன் | பெட்ரோலியம் ஜெல்லி -1 ஸ்பூன்
செய்முறை ,முதலில் எடுத்துக்கொண்ட கற்றாழை ஜெல்லை ஒரு கோப்பையில் பெட்ரோலியம் ஜெல்லியுடன் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கரைக்கவும்.
தொடர்ந்து இதனுடன் மஞ்சள், தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள கருவளையம் போக்கும் பேக் ரெடிதயாராக உள்ள இந்த பேக்கினை சருமத்தில் அப்ளை செய்து- மசாஜ் செய்து15 நிமிடங்கள் வரை உலர விடவும். பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி சுத்தம் செய்துவிடவும்.மஞ்சள், தேங்காய் எண்ணெய் கலவையில் உண்டாகும் இந்த பேக் ஆனது, சருமத்தின் மேல் அடுக்கில் உள்ள இறந்த செல்களை நீக்கி சரும பொலிவை உறுதி செய்கிறது.
அந்த வகையில் இது கருவளையத்தை மறைக்கிறது
அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட மஞ்சள், கற்றாழை பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பேக் ஆனது, கண்களுக்கு கீழ் உள்ள வீக்கம், தடிப்புகளை கட்டுப்படுத்துகிறது.
சரும தளர்வுகளை தடுக்கும் பண்பு கொண்ட இந்த பேக் ஆனது, கண்களுக்கு அருகில் உள்ள சுருக்கங்களை மறைத்து இளமை தோற்றத்தை மீட்டு தருகிறது.
சருமத்தின் இயற்கை எண்ணெய் தக்க வைத்து, பொலிவான சருமம் பெற உதவும் இந்த பேக் ஆனது, சரும வறட்சி பிரச்சனையில் இருந்து தப்பிக்க உதவியாக உள்ளது.
0
Leave a Reply