ஆயில் புல்லிங்
சுத்தமான நல்லெண்ணெய்10 மிலி அளவு எடுத்து, வாயில் ஊற்றி, வாய் முழுவதும் படும்படி கொப்பளிக்க வேண்டும். எண்ணெய் நுரைத்தவுடன் வெளியேற்றிவிட வேண்டும். தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும். ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும். பல் கூச்சம் சரியாகும்.மற்றும்பற்கள்என்றும்உறுதியாகஇருக்கும்.செரிமான பிரச்சனைகள் சரியாகும், அமைதியான நீண்ட உறக்கம் கிடைக்கும். நல்ல மனநிலை உண்டாகும். உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.
ஒற்றை தலைவலியால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணெய்யால் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் ஒற்றை தலைவலி சரியாகும். மேலும் சைனஸ் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த ஆயில் புல்லிங் முறையை தொடர்ந்து பின்பற்றி வர பிரச்சனைகள் சரியாகும்.தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தினமும் அல்லது வாரத்தில் இரண்டு முறை ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
பலரும் சந்திக்கின்ற ஒரு பிரச்சனையாக இருப்பது பார்வை கோளாறு. இந்த பார்வை கோளாறு சரியாக ஒரு சிறந்த முறை தான் ஆயில் புல்லிங். தினமும் ஆயில் புல்லிங் செய்து வர பார்வைக் கோளாறானது சரியாகும்.வயதானவர்களுக்கு பொதுவாக மூட்டுகளில் பிரச்சனை ஏற்படும், எனவே அவர்கள் தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளை குணப்படுத்தும்.
0
Leave a Reply