சரும பொலிவுக்கு உதவும் ஆரஞ்சு குளியல் பொடி
சரும பொலிவுக்கு உதவும் குளியல் பொடி ஒன்றினை வீட்டிலேயே தயார் செய்யலாம்.
தேவையான பொருட்கள்!
ஆரஞ்சு பழம் - 2 | கடலை மாவு - 1 ஸ்பூன் | அதிமதுரம் - 2 துண்டு | மஞ்சள் - K ஸ்பூன் | ரோஜா இதழ்கள் கைப்பிடி | ரோஸ் வாட்டர் - போதுமான அளவுஆரஞ்சு பழத்தில் இருந்து தோலை மட்டும் பிரித்து எடுத்து சூரிய ஒளியில்2 நாட்களுக்கு நன்கு உலர வைக்கவும் இதனுடன் ரோஜா இதழ்களைய உலர வைக்கலாம். நன்கு உலர வைத்த அதிமதுர துண்டினை இடித்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவுக்கு தனியே தயாராக எடுத்து வைக்கவும் . மிக்ஸி ஜார் ஒன்றில் உலர வைத்த ஆரஞ்சு தோல் ரோஜா இதழ், அதிமதுரப் பொடி மஞ்சள் கடலை மாவு சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ள குளியல் பொடி தயார்
இந்த பொடியினை ரோஸ் வாட்டருடன் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்துசோப்புக்குமாற்றாகசருமத்திற்குதேய்த்துகுளித்துவரவும்.சருமத்தின் கூடுதல் எண்ணையை உறிஞ்சும் தன்மை கொண்ட இந்த குளியல் பொடி ஆனது, எண்ணெய் வடிதல் பிரச்சனையில் இருந்து தீர்வு காண உதவுகிறது.சரும துளைகளில் மறைந்திருக்கும் மாசுக்களை திறம்பட அகற்றும் பண்பு கொண்ட இந்த பொடி ஆனது, சரும துளைகளை சுத்தம் செய்வதோடு,இறந்த செல்களை நீக்கி பொலிவான சருமம் பெறவும் உதவுகிறது.
0
Leave a Reply