வழுக்கைத் தலையில் முடியை வளரச் செய்ய
ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி கொட்டுதல், வழுக்கை விழுதல் என்பது ஒரு பெரும் பிரசனையாக உள்ளது. இவை மனதளவிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கெமிக்கல் உபயோகங்கள் போன்றவை இருந்தால், ஒருசில இயற்கையான சிகிச்சைகளின் மூலம் வழுக்கைத் தலையிலும் முடியை வளரச் செய்யலாம்.
பட்டையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் மற்றும் இதர உட்பொருட்கள்,ஸ்கால்ப்பில் நிலையை மேம்படுத்தும். மேலும் இது பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்வதோடு, வலிமைப்படுத்துவதுடன், தலைமுடியின் வளர்ச்சியையும் தூண்டும்.
ஆலிவ் ஆயிலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தலைமுடியை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருட்கள், ஸ்கால்ப் மற்றும் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.
இதை செய்ய தேவையான பொருட்கள்: பட்டை, ஆலிவ் ஆயில், தேன் போதுமானது. இத்னை செய்ய முதலில் ஆலிவ் ஆயிலை சூடேற்றி, பின் அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பட்டை மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு தயாரித்து வைத்துள்ளதை, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து பின் தலையை அலச வேண்டும். இந்த மாஸ்க்கை அடிக்கடி ஸ்கால்ப்பில் தடவி வந்தால், ஸ்கால்ப்பில் உள்ள பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, தலைமுடியின் வளர்ச்சி விரைவில் தூண்டப்படுவதைக் காணலாம்.
இந்திய நெல்லிக்காய் என்றும் அழைக்கப்படும் ஆம்லா, வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. இது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது. கொலாஜன் உங்கள் முடியின் வேர்களை பலப்படுத்துகிறது மற்றும் உடைவதைத் தடுக்கிறது. கூடுதலாக, அம்லாவில் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை முன்கூட்டிய நரைமுடிக்கு காரணமான ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன. உங்கள் முடிபராமரிப்புவழக்கத்தில்நெல்லிக்காயைசேர்த்துக்கொள்வது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு அடர்த்தியான மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
0
Leave a Reply